குளிக்கும் போது நிகழும் "அதிசயத்தை" பாருங்கள்.!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:20 AM | Best Blogger Tips

 அழகுநிலா இணையம்: ஆரோக்கியக் குளியல்

மோதிர விரலால் "ஓம்" என்று எழுதுங்கள். குளிக்கும் போது நிகழும் "அதிசயத்தை" பாருங்கள்.!
 
🔯 குளிக்கும் போது ஒரு சில விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்பது ஐதீகம். 
 
☸ குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்க வேண்டும். 
 
👿 கர்மம் செய்த பின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம். 
தினமும் குளிப்பதில் இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா.! இத்தனை நாள் தெரியாமே  போச்சே..
 
❇ மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் நோவு வரும்.
 
🔯 தினமும் கங்கா ஸ்நானம் செய்ய முடியும். 
 
👿 குளிக்கும் முன் ஒரு குவளை தண்ணீரில் மோதிர விரலால் ஓம் என்று தியானம் செய்து எழுதுங்கள்.
 
🐷 அந்த நீர் அப்போது முதல் கங்கை நீராக மாறிவிடும். ஒரு நிமிட தியானத்தில் "இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து, இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்று கொள்ளுங்கள்" என்று இறையிடம் வேண்டி கொண்டு குளித்தால், உள்பூசையின் அங்கமாக இறைவனுக்கு அபிஷேகமும் ஆகிவிடும். 
 
🖲 அக்னி எப்போதும் மேல்நோக்கியே பயணிக்கும்.
 
🐻 உடலுக்குள் இருக்கும் அக்னி கீழிருந்து மேல் ஏறுவதுதான் சரி.
 
🚀 தண்ணீரை கால் முதல் மேல் நோக்கி நனைத்து வந்து கடைசியில் தலையில் ஊற்றி கொள்ள வேண்டும்.
 
❇ நமது மண்டை ஓடுக்கு எப்படிப்பட்ட அக்னியின் வேகத்தையும் தாங்குகிற சக்தி உண்டு. 
 
🐿 காலில் இருந்து பரவும் குளிர்ச்சி மேல் நோக்கி பயணிக்கும் போது உள் அக்னியானது தலையை நோக்கி பயணிக்கும். அதுவே சரியான முறை.
 
☸ தலை முதல் கால் வரை உள்ள பின் பாகத்தை "பிரஷ்டம்" என்பர்.
 
🔮 அதில் நம் முதுகு பாகம் தான் மிகப்பெரியது. அங்கு தான் அக்னியின் வீச்சம் கூடுதல் வேகமாக பரவும். 
 
🏵 ஆதலால், குளித்து முடித்தவுடன், முதலில் முதுகு பாகத்தைதான் துவட்ட வேண்டும்.
 
🖲 குளிக்கும் நீரிலே டவலை நனைத்து பிழிந்து துவட்டுவது தான் உத்தமம்.
 
🐒 அனேகமாக, அனைவரும் ஈரம் படாத துண்டைத்தான் உபயோகிப்பீர்கள். 
 
🐻 உலர்ந்த துணியானது உள் சூட்டை வேகமாக பரவ செய்து பல வித உள் நோவுகளை உருவாக்கும்.
 
🐿 பிறருடன் வாய் திறந்து பேச கூடாத மூன்று நேரங்களில் ஒன்று குளிக்கும் நேரம்.
 
🔯 மௌனத்தை கடைபிடிக்கலாம், அல்லது மனதளவில் தெரிந்த ஜெபத்தை செய்யலாம்.
 
🥁 குளிப்பதினால், பஞ்ச இந்த்ரியகளால் செய்த தவறுகளினால் நமக்குள் சேர்த்து வைத்துள்ள கர்மாக்கள் களைய பெறுகிறது. 
 
🐯 குளிக்கும் போது, வாயில் கொள்ளளவு நீரை வைத்து குளித்தபின் துப்புவதால், கண்டத்துக்குமேல் (கழுத்துக்கு) வருகிற நீர் சம்பந்தமான கட்டுகளை, நோய்களை தவிர்க்கலாம். 
 
🗣 வாயில் இருக்கும் நீர் மேல் நோக்கி எழும்பும் அக்னியின் வேகத்தை எடுத்துவிடும்.
 
✳ நீர் நிலைகள், குளம், ஆறு, கடல் இவைகளில் எல்லா தேவதைகளும், பெரியவர்களும் அரூபமாக ஸ்நானம் செய்வதாக கூறுகிறார்கள். 
 
🦊 நாரம் என்கிற தண்ணீரில் நாராயணன் வாசம் செய்வதாகவும் சொல்வார்கள்.
 
🏀 ஆதலால், ஓடி சென்று அதில் குதிக்காமல், கரையில் நின்று, சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்தபின், நீர் கலங்காமல், ஒரு இலை நீரில் விழுகிற வேகத்தில் மெதுவாக இறங்கி சென்று குளிக்க வேண்டும்.
 
🗣 நீரில் காரி உமிழ்வதோ, துப்புவதோ கூடாது.
 
🐷 நீரின்றி ஒரு உயிரும் இல்லை.நீரை விரயம் செய்ய கடன் அதிகரிக்கும்.
 
🙊 உப்பு நீர் ஸ்நானம் திருஷ்டி தோஷங்களை அறுக்கும்.
 
🚀 மேற்குறிப்பிட்ட அனைத்தும் குளிக்கும் போது நாம் பயன்படுத்த கூடிய நல்ல முறைகள் என்பது குறிப்பிடத் தக்கது.✍🏼🌹