*சிருஷ்டிகர்த்தாவிடம்* *ஒப்படைக்க வேண்டும்*.

மணக்கால் அய்யம்பேட்டை | 11:11 AM | Best Blogger Tips

 May be an image of monument

ஒரு யுத்தத்தில் எதிரி நாட்டு இளவரசனை உயிரோடு பிடித்து இராஜாவின் முன்பு நிறுத்தினர். 
 
இளவரசன் தன் உயிருக்காகக் கெஞ்சி மன்றாடி தன்னை மன்னிக்கும்படியாக கேட்டுக்கொண்டான். 
 
அதற்கு ஒரு நிபந்தனை 
இருக்கிறது என்றார் வெற்றி பெற்ற ராஜா .
விளிம்புவரை தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரம் ஒன்று உனது கையில் தரப்படும்." 
 
அது முக்கிய சாலை ஒன்றின் வழியாக ஒரு சொட்டு தண்ணீர் கூட கீழே சிந்தாமல் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு மைல் தூரம் கொண்டு செல்ல வேண்டும். 
 
கூடவே உருவிய பட்டையத்தோடு எனது வீரர்கள் வந்துக்கொண்டு இருப்பார்கள். 
 
ஒருதுளி தண்ணீர் கீழே கொட்டினாலும் கூட அவர்களின் வாள் உன் தலையைச் சீவிவிடும்.
வெற்றியோடு முடித்துவிட்டால் விடுதலை"
என்று பேரரசர் தனது நிபந்தனையை விதித்தார்.
குறிப்பிட்ட நேரம் வந்தது. 
 
இலட்சக்கணக்கான மக்கள் அந்த சாலையின் இரு பகுதிகளிலும் குழுமியிருந்தனர்.
போர் வீரர்கள் சாலையை ஒழுங்கு செய்து கொடுத்தனர். 
 
பேரரசர் முன்னிலையில் முழுவதும் தண்ணீர் நிரப்பிய பாத்திரம் இளவரசனின் கைகளில் கொடுக்கப்பட்டது. 
 
ஒரு பகுதியில் இருந்த மக்கள் இளவரசனை ஊக்குவித்து உற்சாகப் படுத்தினர்.
மறுபக்கத்தில் இருந்தவர்களோ கேலியும் பரிகாசமும் செய்து கூச்சலிட்டனர். 
 
இளவரசனின் இருபுறமும் வீரர்கள் உருவிய வாளோடு தண்ணீர் சிந்துமானால் வெட்டும்படி கவனித்துக்கொண்டிருந்தனர். 
 
பாத்திரத்தை உறுதியாய் பிடித்துக்கொண்டான் இளவரசன் நடக்க சுற்றுப்புறத்திலிருந்து *கூச்சலும், பரிகாசமும்,* ஆர்ப்பாட்டங்களும் கேட்டுக்கொண்டே இருந்தது. 
 
எனினும் எதையும் பொருட்படுத்தாதபடி தண்ணீரிலே முழு கவனமும் வைத்து ஓட்டத்தை *வெற்றியோடு* ஓடி🏃 முடித்தான் இளவரசன் .
இளவரசனை பாராட்டிய பேரரசர்
இளவரசனே உன்னை கேலி செய்தவர்களுக்கு நீ தண்டனை வழங்கலாம். 
 
உன்னை உற்சாக படுத்தியவர்களுக்கு நன்றி சொல்லலாம். 
 
அவர்களை கவனித்து வைத்திருக்கிறாயா என்று கேட்டார்.?
 
என்னை போற்றுபவர்களை நான் கவனிக்கவில்லை,
 
தூற்றுபவர்களையும் நான் பார்க்கவில்லை.
"எனது கவனமெல்லாம் தண்ணீரில் அல்லவா இருந்தது." 
 
விடுதலையோடு கூட அரசர் ஒரு ஆலோசனை தந்தார். 
 
இளவரசனே
 
*பாத்திரத்தில் உள்ள தண்ணீர் தான் உன் சரீரத்தில் உள்ள *ஆன்மா*
 
*வாழும் நாட்களிலே உன் ஆத்மாவில் கண்ணும் கருத்துமாக இருந்து (எதற்காக படைக்கபட்டோமோ அதை முடித்து) கடைசியில் அதை *சிருஷ்டிகர்த்தாவிடம்* 
 
*ஒப்படைக்க வேண்டும்*.
(இறைவனடி சேரவேண்டும்)
 
போற்றுவோரைக் கண்டு பெருமை கொள்ளாதே.
தூற்றுவோரைக்கண்டு சோர்ந்துப் போகாதே.
ஆத்மாவில் கவனம் வை
 
(இறைவனால் இப்பிறவியில் உனக்கு கொடுக்கபட்ட வேலையில் கவனம் வை)
என்றார்.

 

🌷 🌷🌷 🌷  May be an image of 1 person, smiling and glasses 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹

உங்கள் மனைவியின் உணர்வுகளை

மணக்கால் அய்யம்பேட்டை | 11:04 AM | Best Blogger Tips

 No photo description available.

உங்கள் மனைவியின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் அவளைத் திருத்த 13 வழிகள்...✍🏾
 
1: உங்கள் குரலைக் குறைக்கவும்
Download Argue, Angry, Husband And Wife. Royalty-Free Stock Illustration  Image - Pixabay
அவளைப் பார்த்து கத்தாதே, அவள் உன் குழந்தை இல்லை. நீங்கள் சரி செய்யலாம், ஆம், ஆனால் ஏன் கத்துகிறீர்கள்?
 
2: காதலில் செய்யுங்கள்
 8 Things to Strengthen the Husband-Wife Relationship in Islam « BackToJannah
காதலில் திருத்தம் செய்ய வேண்டும். வேறு வழியில் செய்தால், அது விமர்சனமாகவும் கண்டனமாகவும் மாறும்.
 
3a: விமர்சிக்க வேண்டாம்
Relationship Connection: My husband humiliates me in public – St George News
அவளை விமர்சிப்பதை நிறுத்துங்கள், மாறாக காதலில் சரியானது. ஆக்கபூர்வமான விமர்சனம் என்று பெரும்பாலானோர் கூறுவார்கள். ஆனால் உண்மையில், இது பிழைகள் மற்றும் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் மறுப்பு என்று பொருள்.
 
திருத்தம் என்பது தவறுகளுக்கு சிறந்த விருப்பங்களை வழங்கும் செயலாகும்
திருத்தமும் விமர்சனமும் எப்போதும் ஒன்றல்ல
 Free Images : husband, wife, enjoyment, sky, sunset, sun, sunrise, sea,  silhouette, love, romance, morning, sunlight, afterglow, calm, horizon,  evening, happiness, fun, vacation, water, physical fitness, heat, ocean  3072x2048 - Mohamed Hassan -
3b: கணவர் A கூறுகிறார்
இது என்ன வகையான உணவு?
இது பாப்கார்னா அல்லது வறுத்த அரிசியா?
சிறந்த வீட்டுப் பயிற்சியுடன், சிறப்பாக சமைக்கக் கூடிய, விவேகமான மனைவியை நான் எப்படி மணந்து கொள்ள விரும்புகிறேன்.
கணவர் பி கூறுகிறார்
 
அன்பே இந்த அரிசியில் நேற்று நீங்கள் செய்ததைப் போலல்லாமல் இது மிகவும் காரம் மற்றும் உலர்ந்தது. நமது ஆரோக்கியம் காரணமாக உப்பை வேறு எந்த நேரத்திலும் குறைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
கணவன் ஏ விமர்சித்த போது கணவன் பி தன் மனைவியை காதலில் திருத்தினார்
உங்கள் மனைவியை விமர்சிப்பதை நிறுத்துங்கள்
 
4 எது சரியானது என்பதற்காக அவளைப் பாராட்டுங்கள்
நன்றாக செய்யாத போது திருத்துவது தவறாகும் நல்ல செயல்களுக்காக உங்கள் மனைவியைப் பாராட்டி பாராட்டும் பழக்கத்தை உருவாக்குங்கள்.
 
5 உங்கள் பிள்ளைகளுக்கு முன் அதைச் செய்யாதீர்கள்
Angry husband and wife fighting — Stock Photo © Dmyrto_Z #214142624
உங்கள் பிள்ளைகள் முன்னிலையில் உங்கள் மனைவியைத் திருத்துவதைத் தவிர்க்கவும். உங்கள் பிள்ளைகளுக்கு முன்பாக உங்கள் மனைவியை இடைவிடாமல் திருத்துவது அவர்கள் அவளை அவமதிக்கச் செய்யும்.
 
6 பொதுவில் அவளைத் திருத்த வேண்டாம்
உங்கள் மனைவியை பொதுவில் திருத்துவதைத் தவிர்க்கவும், அது உங்களை ஒரு நல்ல மனிதராகக் காட்டாது, மேலும் அவரது சுயமரியாதையை பாதிக்கும்.
 ME & MY THOUGHTS: 423. Husband and Wife chat as they walk in a Park!!!!!
7 கோபத்தில் திருத்தம் செய்வதைத் தவிர்க்கவும்
கோபத்தில் உங்கள் மனைவியைத் திருத்துவதையும், கூச்சலிடுவதையும், திட்டுவதையும், அடிப்பதையும், பிரச்சனை செய்வதையும் நிறுத்துங்கள். உண்மையான ஆண்கள் அப்படிச் செய்வதில்லை.
 
8 அவளை வேறு எந்தப் பெண்ணுடனும் ஒப்பிட வேண்டாம்
அவளைத் திருத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவளை மற்ற பெண்களுடன் ஒப்பிட்டுப் பார்த்திருக்கலாம்.
 
"உன் நண்பன் என்ன செய்கிறான் என்று பார்க்கவில்லையா?" எங்கள் பக்கத்து வீட்டு மனைவியிடமிருந்து உங்களால் கற்றுக்கொள்ள முடியவில்லையா?" "அப்படியா?"
 உங்கள் வாழ்க்கைத்துணையை தேர்வு செய்யும் போது இது முக்கியம்! – News18 தமிழ்
9 பழைய பிரச்சினைகளைக் குறிப்பிடுவதைத் தவிர்க்கவும்
விவாதிக்கப்பட்ட மற்றும் தீர்க்கப்பட்ட பிரச்சினைகளைக் குறிப்பிடுவதைத் தவிர்க்கவும். தற்போதைய பிரச்சினையில் ஒட்டிக்கொண்டு, பெரியவர்களைப் போல விவாதித்து, தொடரவும்.
 
10 அவள் பெண்ணைத் தாக்காதே
"மற்றும் நீ உன்னை ஒரு பெண் என்று சொல்கிறாயா?, நல்லொழுக்கமுள்ள பெண்கள் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள், நான் உன்னை மாற்றுவதற்கு முன் நீ மாறுவது நல்லது!" இது மிகவும் தவறு, செய்யாதீர்கள்
 
11 அவளுடைய கண்ணியத்தைத் தாக்காதே
நீங்கள் உணர்வுள்ள ஒருவரைப் போல நடந்து கொள்ளவில்லை, நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்கள் பள்ளிக்குச் சென்றதாகச் சொன்னீர்கள், அது எனக்கு சந்தேகம்."
 
நீங்களும் கல்லூரியை கடந்து செல்பவர் போல் பேசாமல் இருப்பது மிகவும் தவறு.
 
12 அமைதியான நேரத்தில் அதைச் செய்யுங்கள்
பெரும்பாலான கணவர்கள் கோபத்தின் உஷ்ணத்தில், தவறான புரிதலின் உச்சக்கட்டத்தில், கோபம் ஏற்கனவே கூரையைத் தாக்கியபோது, ​​​​சரிசெய்ய விரும்புகிறார்கள். சரி செய்ய இது சிறந்த நேரம் அல்ல, அது சிறிதளவு அல்லது பலனைத் தரும்.
 
13 உதவி கரம் கொடுங்கள்
சரிசெய்வதற்கான சிறந்த வழி, உதாரணத்திற்கு வழிநடத்துவது, உதவிக் கரம் கொடுக்க சமையலறைக்குள் நுழைந்து, சமையலறையில் நடப்பதைத் திருத்திக் கொண்டு தொலைக்காட்சியின் முன் அமர்ந்து விடாதீர்கள்.
 உங்கள் வாழ்க்கைத்துணையை தேர்வு செய்யும் போது இது முக்கியம்! – News18 தமிழ்
மனைவிகள் ஒரு சிறந்த வேலையைச் செய்கிறார்கள், உங்களுடையதைப் பாராட்டவும், சிறந்த மனைவியாகவும் தாயாகவும் இருக்க அவளுக்கு ஆதரவளிக்கவும்.
 
உங்கள் வாழ்க்கையில் உங்கள் மனைவி ஒரு தேவதையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால், நீங்கள் முதலில் அவளுக்காக ஒரு சொர்க்கத்தை உருவாக்க வேண்டும்.
 
முனைவர் ஸ்ரீவளர்ராஜென்
 

 

அவமானகரமான தொடர் தோல்விகளுக்குப் பின்னர் பெரும்...

மணக்கால் அய்யம்பேட்டை | 10:57 AM | Best Blogger Tips

 Soichiro Honda, Founder of Honda Motor Co | Honda Cars India

"பிழைக்கத் தெரியாத முட்டாள்" என்று 18 வயது இளைஞனை அவனது அப்பா திட்டினார்.
 May be an image of 4 people, motorcycle, dirt bike and text that says "You meet the nicest people on a Honda. Hondas like to branch out on their own. A price ahout $215* isn't much when you consider Honda's OHV 4-stroke engine. A AcT of dependability and advanced desien. And contrary to what you'll find elsewhere, the range models is large. 15 i all. With airtight warranties match. By the way, Honda has the largest parts and service network in the country this important you. Most owners rarely need it. Hondas hold up. Start with Honda. You'll Hay with Honda That's gocs. HONDA way 피번l에 ฟิงลักร cиRTb"
தோல்விக்கென்றே பிறப்பெடுத்த துரதிர்ஷ்டக்காரன் என்று கேலி பேசினார்கள் அவனது நண்பர்கள்.
 
அந்த இளைஞன் அடைந்த தொடர் தோல்விகளை உலகத்தில் வேறு யாராவது அனுபவித்திருந்தால், எப்போதோ தற்கொலை செய்துக் கொண்டிருப்பார்கள்.
 
அத்தனை தோல்விகளையும் உள்வாங்கி, கடைசியில் பிரமாண்டமான வெற்றியை தனதாக்கிய அந்த மாமனிதன் தான் “சாய்க்கிரோ ஹோண்டா”.
 
தனது வாழ்க்கை அனுபவத்தை சாறு பிழிந்து எடுப்பது போன்று “வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே” என்று அந்த இளைஞன் சொன்னார்.
Toyoto நிறுவனத்திற்கு piston (உந்துருளி) தயாரிக்கும் தொழிற்கூடம் உருவாக்க வேண்டும் என்பது மாணவர் சாய்க்கிரோ ஹோண்டாவின் கனவு.
 வெற்றி என்பது 99 சதவிகிதம் தோல்வி -சாய்க்கிரோ ஹோண்டா! - Mediyaan
யாருக்காகவும் அவன் காத்திருக்கவில்லை. அப்பாவின் திட்டு , சக மாணவர்களின் கேலிகளுக்கு இடையே, மாதிரி உலோகம் உருக்கும் கூடம் ஒன்றை 1928ஆம் ஆண்டு உருவாக்கினார்.
 
இதற்காக இரவு பகலாக உழைத்தார். ஓராண்டு காலமாக கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய, மாதிரி piston ஐ பெரும் எதிர்பார்ப்புடன் Toyoto நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார்.
 
எங்கள் எதிர்பார்ப்புக்குரிய தரத்தில் உனது piston இல்லை என்று நிராகரித்துவிட்டார்கள் பொறியியளாளர்கள்.
 
முதலாவது கனவுத் திட்டம் படுதோல்வி அடைந்தது. மனம் பாரமாக இருந்தது. திரட்டி வைத்த முதலீடு மொத்தமும் வீணாகியது. எல்லோரும் தங்களது கேலிகளை பொழிந்தார்கள்.
 
புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற மனப் பக்குவத்தோடு, ஹோண்டா மீண்டும் முயற்சித்தார்.
 Biography of Soichiro Honda | Simply Knowledge
மேலும் பல மாதங்கள் விடாப்பிடியாக உழைத்து அவர் உருவாக்கிய புதிய piston மாதிரியை Toyoto நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார். 
 
அருமை என்று பாராட்டிToyoto நிறுவனம் ஏற்றுக்கொண்டது. தயாரிப்புக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. 
 
மனதுக்குள் சிறிய வெற்றிக் களிப்பு கொண்ட சாய்க்கிரோ ஹோண்டா பெரிய தொழிற்கூடம் கட்டினால் தான் அவர்கள் கேட்கும் 
 
எண்ணிக்கையிலான piston தயாரிக்க முடியும்.
எனவே, கட்டடம் கட்டத் திட்டமிட்டார் ஹோண்டா. அப்போது ஜப்பான் நாடு உலகப் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்ததால், அங்கே வரலாறு காணாத சிமெண்ட் தட்டுப்பாடு.
 
எவ்வளவோ முயற்சி செய்தபோதும் 10 மூட்டை சிமெண்ட் கூட கிடைக்கவில்லை.
ஒழுங்காக ஏதாவது வேலையில் போய்ச் சேர்ந்துவிடு என அவரது அப்பா கூறினார், வாழ்க்கை முழுவதும் ரிஸ்க் எடுத்துக்கொண்டே இருப்பாயா என்றார் உயிர் நண்பன்.
 
இவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காது சிமெண்ட் கலவைக்கு இணையான மாற்றுக்கலவையை உருவாக்கும் முறையை கண்டுபிடித்தார் ஹோண்டா.
 CHRONICLE OF THE GOOD RASCALS - From an early age, Soichiro Honda's  entrepreneurship!!!...
ஆங்காங்கு கடன் வாங்கி சில மாதங்களிலேயே பெரிய தொழிற்சாலையை கட்டி முடித்தார்.
தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி piston தயாரிக்கும் தொழிலை அமர்க்களமாகத் தொடங்கினார். கூடவே இரண்டாம் உலகப்போரும் தொடங்கியது.
 
அமெரிக்கா போட்ட குண்டு, ஹோண்டாவின் தொழிற்சாலையில் பெரும் பகுதியை உடைத்து நாசமாக்கியது.
 
ஹோண்டாவின் வாழ்க்கை முடிந்தது என்று பேசிக் கொண்டார்கள் நண்பர்கள். ஆனால், தனது மொத்தத் தொழிலாளர்களையும் திரட்டிக்கொண்டு, தானே களமிறங்கி சேதங்களை சீர்செய்து, தொழிற்சாலையை மீண்டும் இயக்கிக் காட்டினார் ஹோண்டா.
ஜப்பான் நாட்டில் நிலநடுக்கங்கள் அதிகம். ஒரு நாள் திடீரெனத் தாக்கிய நிலநடுக்கம் ஹோண்டாவின் தொழிற்சாலையைத் தரைமட்டமாக்கி விட்டது.
 
மொத்தத் தொழிற்சாலையையும் திருப்பிக்கட்ட முடியாத நிலை. வேறு வழியின்றி உடைந்த கருவிகள், மற்றும் மூலப்பொருட்களைக் கிடைத்த விலைக்கு Toyoto நிறுவனத்திற்கு விற்பனை செய்தார் ஹோண்டா.
 
இப்படிப்பட்ட நிலைமையில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? எண்ணிப்பாருங்கள்.........
ஆனால், அப்போதைய நிலையில் ஹோண்டா கூறிய கருத்து.......
 
“நான் ஆசைப்பட்ட ஒரு திட்டம் தோல்வி அடைந்தால், துளி கூட கவலைப்பட மாட்டேன்… இருக்கிற நிலைமையை எப்படி மாற்றலாம் என்று தீவிரமாக சிந்திக்கத் தொடங்கிவிடுவேன்.”
 
இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த நேரம் ஜப்பானின் பொருளாதாரம் சாம்பலாக்கப்பட்ட காலக்கட்டம், ஜப்பான் முழுதும் பெட்ரோல் தட்டுப்பாடு. கார்கள் எல்லாம் முடங்கிவிட்டன.
எல்லோரும் நடக்கிறார்கள் அல்லது சைக்கிளில் செல்கின்றார்கள். சாய்க்கிரோ ஹோண்டா, வீட்டில் அமர்ந்திருந்தார். 
 
அருகில் சைக்கிள் நின்றது. சற்றுத் தொலைவில் புல்வெட்டும் இயந்திரம் இருந்தது.*
அந்தப் புல்வெட்டும் இயந்திரத்தில் உள்ள மோட்டாரைக் கழற்றி, இந்த சைக்கிளில் இணைத்தால் என்ன என்று ஹோண்டாவுக்கு ஒரு புத்தம் புது ஐடியா தோண்றியது.
 
அடுத்த நொடியில் காரியத்தில் இறங்கினார் ஹோண்டா. புல்வெட்டும் இயந்திர மோட்டாரைக் கழற்றி எடுத்து, தனது சைக்கிளில் அவர் பொருத்திய போது உலகின் முதல் மோட்டார் சைக்கிள் பிறந்துவிட்டது.
 
அதை எடுத்துக்கொண்டு ஆனந்தமாக சுற்றி வந்தார் ஹோண்டா. அதேபோன்று எங்களுக்கும் செய்துகொடு என்று மொய்க்கத் தொடங்கினர் மக்கள்.
 
அவரும் சளைக்காமல் செய்து கொடுத்தார். அதன் விளைவு என்ன ஆயிற்று????
அந்த ஊரில் மோட்டார் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. இதையே பெரிய தொழிலாக மாற்றினால் என்ன என்று சிந்தித்தார் ஹோண்டா.
 
கையில் பணமில்லை, வங்கிகள் கடன் தரத் தயாராகவில்லை. ஹோண்டா துரதிர்ஷ்டக்காரன் என்று எல்லோரும் கூறினார்கள்.
 
அப்போதும் கலங்கவில்லை ஹோண்டா. தனது தொழில் திட்டத்துக்கு பண உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து, ஜப்பானில் உள்ள 18 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்களுக்கு கடிதம் எழுதினார்.
 
முதலீடு செய்யும் சைக்கிள் கடைக்காரர்கள், மோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர்களாக நியமிக்கப்படுவார்கள் என உறுதி அளித்தார்.*
5 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்கள் முன்வந்து பண உதவி செய்தனர். ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் உதயமானது.*
 
முதலில் தயாரான மோட்டார் சைக்கிள் குறித்து விமர்சனங்கள் வந்தபோது, தானே உலோகம் உருக்கும் கூடத்தில் அமர்ந்து, அழகான வடிவமைப்புடன் அற்புதமான மோட்டார் சைக்கிள் வகைகளை கொண்டு வந்தார்.
 
அவமானகரமான தொடர் தோல்விகளுக்குப் பின்னர் பெரும் வெற்றி பெற்றார் சாய்க்கிரோ ஹோண்டா.
 
இப்போது ஹோண்டா நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 2 கோடி மோட்டார் வாகனங்களை தயாரிக்கிறது.
 
பகிர்வு
 
(கிராமத்தில் பழமொழி ஒன்று உண்டு
முள்ளை பிடிச்சா கூட, முழுசா பிடிக்கணும்...
அது இவருக்கு பொருந்தும்.)

 

🌷 🌷🌷 🌷  May be an image of 1 person and temple 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹

வாழ்க்கையில் காயப்படுத்தும் விஷயங்களே

மணக்கால் அய்யம்பேட்டை | 10:53 AM | Best Blogger Tips

 chinnuadhithya – Page 144 – A smile is a curve that straightens everything

தந்தை இறந்த பின் தன் தாயை கவனிக்க முடியாமல் முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார் மகன் .
 
மனைவியும் வேலைக்கு போவதால் தன் தாயை வீட்டில் கவனிக்க யாருமில்லை என்ற காரணத்திற்காக முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார். 
 Raja thatha's blogs: Old mother writes to her son
மாதத்திற்கு ஒரு முறை தன் தாயை அங்கு சென்று சந்தித்து வந்தார். 
 
வருடங்கள் கடந்தன.
 
ஒருநாள் அவருடைய தாய் ரொம்பவும் முடியாமல் இருப்பதாக தகவல் வந்தது. 
 
மகனும் உடனடியாக தன் தாயை சந்திக்கச் சென்றார். 
 
தாய் சாகும் தருவாயில் இருந்தார்கள்.
 
“உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?” என மகன் கேட்டார். 
 
“இந்த முதியவர் இல்லத்தில் மின் விசிறிகள் எதுவும் இல்லை. 
 
காற்று இல்லாமலும், கொசுக் கடித்தும் நிறைய நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன். 
 
இங்கு தரும் கெட்டுப் போன சாப்பாட்டை சாப்பிட முடியாமல் பல நாட்கள் சாப்பிடாமல் தூங்கியிருக்கிறேன். 
 
எனவே இந்த இல்லத்திற்கு சில மின் விசிறிகளும் , சாப்பாட்டை கெடாமல் பாதுகாத்து வைத்திருக்க ஒரு குளிர்சாதனப் பெட்டியும் வாங்கிக்கொடுப்பாயா?” என மெல்லிய குரலில் தாய் கேட்டார்.
 
மகன் ஆச்சரியப்பட்டான். 
 
“பல வருடங்களாக நான் உங்களை பார்க்க வருகிறேன். 
 
ஒருநாள் கூட இப்படி ஒரு குறையை சொல்லவில்லை. 
 
இப்போது மட்டும் ஏன் இதை கேட்கிறீர்கள்?” என கேட்ட மகனின் முகத்தை மெல்ல ஏறெடுத்துப் பார்த்தார்.
 
“மகனே இங்கு மின் விசிறி இல்லாமல் கொசுக்கடியை தாங்கிக் கொண்டு உறங்குவதற்கு நான் பழகிக்கொண்டேன். 
 
இங்குள்ள பசியையும், துன்பங்களையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியும்.
ஆனால் உனது குழந்தைகள் உன்னை இந்த இல்லத்திற்கு அனுப்பும் போது உன்னால் அவற்றை தாங்கிக்கொள்ள முடியாது என நினைத்து வருந்துகிறேன். 
 
அதனால் தான் இப்போது கேட்கிறேன்” என்றார்.
 
வாழ்க்கையில் காயப்படுத்தும் விஷயங்களே கற்றுக்கொடுக்கவும் செய்கின்றன.
 

 

மணக்கால் அய்யம்பேட்டை | 10:47 AM | Best Blogger Tips

Tamil Jokes (தமிழ் கடி ஜோக்ஸ் ) | Facebook

 

அதிகமாக பேசப்படும் பொய்...
 
1)டீக்கடைகாரர்: இப்ப போட்ட வடைதான் சார்..
 
2)மெடிக்கல் ஷாப்காரர்: பேறுதான் வேற, அதவிட இது நல்ல மருந்து சார்..
 
3)ரியல் எஸ்டேட் பிஸினஸ் மேன்: பத்தடி ஆழத்துல நல்ல தண்ணி, பக்கத்துல ரிங்ரோடு, ஐ.டி பார்க் வருது சார்....
 
4)காய்கறி கடைக்காரர்: காலைல பறிச்சது/வந்தது சார்...
 
5)சேல்ஸ் ரெப்: இன்னியோட இந்த ஆஃப்பர் முடியுது சார்...
 
6)கன்டக்டர்: வழில எங்கயும் நிக்காது சார்.. பாயின்ட் டூ பாயின்ட்சார்...
 
7)பள்ளிக்குழந்தை: வயிறு வலிக்குற மாதிரி இருக்கும்மா...
 
8)நண்பன்: கண்டிப்பா ட்ரீட் வைக்குறன்டா...
 
9)கணவன் மனைவியிடம் :உன் சமையல் சூப்பரா இருக்கு…!
 
10)மனைவி கணவனிடம்: உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்யலாம்னு…! நினைச்சேன்...