நாம் வாழ்வில் உயர எந்நாளும் சொல்வோம்!

மணக்கால் அய்யம்பேட்டை | 9:57 AM | Best Blogger Tips

 




* காலையில் எழுந்திருக்கும் போது -

அண்ணாமலை எம் அண்ணா போற்றி கண்ணார் அமுதக் கடலே போற்றி

* குளிக்கும் போது -

சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி

* கோபுர தரிசனம் காணும் போது

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

* வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது -

காவாய் கனகக் குன்றே போற்றிஆவா எந்தனக்கு அருளாய் போற்றி

* நண்பரைக் காணும் போது -

தோழா போற்றி துணைவா போற்றி

* கடை திறக்கும் போது -

வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி

* நிலத்தில் அமரும் போது -

பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி

* நீர் அருந்தும் போது -

நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

* அடுப்பு பற்ற வைக்கும் போது -

தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

* உணவு உண்ணும் போது -

தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி

இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி

* மனதில் அச்சம் ஏற்படும் போது -

அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி

* உறங்கும் போது -

ஆடக மதுரை அரசே போற்றி

கூடல் இலங்கு குருமணி போற்றி

இப்படி எங்கும் சிவம் எதிலும் சிவமே என்று வாழ்ந்தால் இப்பிறவியில் மட்டுமல்ல எப்பிறப்பிலும் நம்மை எந்த துன்பமும் அணுகாது.  

ஓம்🙏நமசிவய💚❤️

திருச்சிற்றம்பலம்.