ஆடிமாத பலிதர்ப்பணம்.

மணக்கால் அய்யம்பேட்டை | 3:16 PM | Best Blogger Tips

 ஆடி மாதம் 2024: ஆடிப் பிறப்பு முதல் வரலட்சுமி விரதம் வரை, ஆடி மாத விசேஷங்கள்


........................................................
எதற்காக பலிதர்ப்பணம் கொடுக்கப்படுகின்றது?
 
நம்முடைய சரீரத்தில் நம்முடைய பூர்வீக முன்னோர்களின் தொடர்புகள், உண்டு என்று வைத்தியசாஸ்த்ரத்திலும், 
தந்திரசாஸ்த்ரங்களிலும் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
 
உண்மையில் இறந்துபோனவர்களுக்கு போனவர்களுக்கு மட்டுமே செய்யப்படுவது அல்ல தர்ப்பணம்!
 
நமக்காகவும் நம்மில் உள்ள பூர்வீகர்களுக்காகவும், அவர்களின் தொடர்புகளுக்காகவும் செய்யப்படுவதுதான் கற்கிடமாதம் பலிதர்ப்பணம்.
 
நம்முடைய பௌதீகசரீரம் நமக்கு வழங்கியது,நம்முடைய பெற்றெடுத்த மாதாபிதாக்களின் அணுக்கள் நம்முடைய பௌதீகசரீரத்தில் இருந்துகொண்டு தான் இருக்கும்.
 
ஒவ்வொரு சரீரத்திலும் 32 தலைமுறையின் ஜீன்ஸ்கள் உண்டு பௌதீக சாஸ்திரம் சொல்கின்றது, அதில் ஏழுதலைமுறை ஜீன்கள் தற்போதும் தொடர்பில் இருந்துகொண்டேயிருக்கின்றது.
 
நாம் பலிதர்ப்பணம் செய்கின்றது நம்முடைய முன்னோர்களுக்கு மட்டுமல்ல,! நம்முடைய பின்தலைமுறைகளின் நல் ஜீவிதத்திற்கும்தான் செய்கின்றோம்! ,
 
நம்முடைய பூர்வீகமக்களின் தொடர்புகள் நம்மில் இருந்துகொண்டுதான் இருக்கின்றது என்பதை ஊர்ஜிதம் செய்வதற்காகவும் தான் பலிதர்ப்பணம் செய்யப்படுகின்றது.
யாரெல்லாம் பலிதர்ப்பணம் செய்யலாம்?
எல்லாவரும் செய்யலாம்!
 
மாதாபிதாக்களை நஷ்டப்பட்டுபோனவர்கள் மட்டுமல்ல, நம்முடைய முன்னோர்களுக்கு வேண்டி செய்யும்போது எல்லாவருமே செய்யலாம்!
 
ஏன் கற்கிடமாதம் என்கிற ஆடிமாத அமாவாசைக்கு மட்டும் ப்ரதானுத்துவம் கொடுக்கப்படுகின்றது?
 
அயனங்கள் இரண்டு உண்டு, உத்திராயண காலம், தக்ஷிணாயகாலம்.
 
உத்திராயண காலத்தில் நல்ல சல்கர்ம்மங்கள் செய்யப்படுகின்ற காலம் அது காரணம் தேவன்மார்கள் விழித்துகொண்டு இருக்கும்காலம்.
 
தக்ஷிணாயகாலத்தில்
இதுபோன்ற கர்ம்மங்கள் செய்யப்படுகின்றது .
கற்கிடமாதம் என்பது தக்ஷிணாயகாலத்தில் முதல் அமாவாசை முதல் என்பதால்தான் கற்கிடமாதம் அமாவாசைக்கு ப்ரதானுத்துவம் கொடுக்கப்படுகின்றது.
 
ஏகதேசம் சூரியனும், சந்திரனும் ஒரே ஒரே ரேகையில் வருவது அமாவாசை திதி அன்றுதான்.
 
பூமியின் நிழல் சந்திரனில் விழுகின்ற காலம் அமாவாசை திதியில் தான்!
 
நம்முடைய சரீரத்தில் உள்ள அக்னி அக்னி ஸோம மண்டலங்களோடு தொடர்பு உண்டு.
இட பிங்கள சூஷ்ம நாடிகள் சரீரபாகத்தில் இந்த மண்டலங்களோடு தொடர்பு உண்டு,
 
ஆகையினால் பிரபஞ்சத்தில் உண்டாகின்ற மாற்றங்கள் சரீரத்திலும் காட்டுகின்றது!
சந்திரன் மனோகாரகன்
ஆகையினால், சந்திரனால் உண்டாகின்ற
மாற்றங்கள் மனுஷ்ய மனசிலும் மாற்றங்களை உண்டாகின்றது .
 
பித்ருதர்ப்பபலி ப்ரார்த்தனை!
...............................................................
ஆ ப்ரம்மணோ யே
பித்ரூ வம்ஸ ஜாதா,
மாத்ரூ ததா வம்ஸ பவா மதீயா வம்ஸ!
த்யுருஸ்மின் மம தாஸ பூத பூத்ய ததைவ ஆஸ்த்திர ஸேவாகாஞ்ச :
மித்ராணி ஸங்யா வசவஞ்ச வ்யக்ஷா த்ருயஷாஞ்சதுஷ்யாஞ்ச
க்ருத்யதோபகார ஜென்மாந்தேரே யே மம"
ஸம்கதாஞ்ச தேப்யா ஸ்யம் பிண்ட பலிம் ததாமி மாத்யூ வம்ஸே ம்யூதாயேஞ்ச பித்ரூம்ஸே ததைவ ச , குரு ஸ்யசூர பந்துனாம் யே சானேய்ய பாந்த வாம்ம்யத்த யே கூலே லூப்த!
பிண்ட புத்ர தாரா விவர்ஜிதா க்ரியா லோபா ஹதாஞ்வ ஜாத்யஞ்சா பங்க வஸ்தததா விரூபா ஆமகர் பாஞ்ச ஜ்ஞ்தாதஞ்சாதா குலே மம பூமௌ தத்தென!
 
பலினா த்யுப்தானாயுந்து பராம் கதிம் ஆதீத கூல கூடினாம் ஸப்த த்யூப நிவாஸானாம் ப்ராணீனாம், உதகம் தத்தம் அக்ஷ்யம் உப்திஷ்டுது "
 
விளக்கம் :
என் தந்தையின், தாயின் வம்சத்தில் ஜெனித்தவர்கள், என்னோடு நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்பு உடையவர்களும்,
என்னுடை ஜென்மாந்திர தாசன்மார்களுக்காகவும்,
என்னை நம்பி வாழ்ந்துவர்களுக்கும், எனக்கு உதவிகள் செய்தவர்களுக்கும், எனது நட்புகளுக்கும் , என்னை தொடர்பு உடைய ப்ரபஞ்சத்தின் ஜீவஜாலங்களுக்கும் ,
எனக்கு நேரிடையாகவும், மறைமுகமாகவும் உதவிகள் செய்தவர்களுக்கும் ,தற்போதைய அந்த மறைந்துபோன ஆத்மாக்களுக்கு வேண்டி அன்னமும், ஜலமும், புஷ்பமும் ப்ரார்த்தனையும் சமர்பிக்கின்றேன்.
 
எனது மாதாவின் குலத்திலிருந்து, பூமியில் இருந்து விடைசொன்ன ஆத்மாக்களுக்கும் , எனது பிதாவின் குலத்திலிருந்து பூமியில் இருந்து விடைசொன்ன ஆத்மாக்களுக்கும் ,
எனது குருவின் குலத்திலிருந்து போனவர்களுக்கும் ,
 
முடிந்த காலத்தில் பிண்டதர்ப்பணம் ஏற்றுக்கொள்ள முடியாதநிலையில் இருந்திருந்த ஆத்மாக்களுக்கும் , பிள்ளைகளோ! மனைவியோ! கணவனோ! இல்லாதவர்கள் அதன்காரணமாக கவலைப்பட்ட ஆத்மாக்களுக்கும் ,
 
பல்வேறுவிதமான காரணங்கள் கொண்டு மற்றவர்களுக்கு நன்மைகள் செய்ய முடியாத ஆத்மாக்களுக்கும் ,பட்டினியால் இறந்துபோன ஆத்மாக்களுக்கும்,
 
ரோகத்தால் பீடிக்கப்பட்டும் ,பூமியை பார்க்காமல் கர்ப்பபாத்திரத்திலேயே மரணம் அடைந்த மனுஷ்யஜீவிகளுக்கும்,
இந்த நாளில் அன்னமும் ஜலமும்,புஷ்பமும் சமர்பிக்கின்றேன்.
 
அஜய்குமார்