படித்தவர்கள் அனைவரும் புத்திசாலிகள் அல்ல. #கிராமத்தார் அனைவரும் முட்டாள்களும் அல்ல.

மணக்கால் அய்யம்பேட்டை | 3:45 PM | Best Blogger Tips

 இடி இடிக்கும்போது `அர்ஜுனா அர்ஜுனா' என்று சொல்வது ஏன் தெரியுமா? | ஆன்மிக  நம்பிக்கைகளின் பின்கதைகள் | Spiritual Stories: Why are we calling Arjuna  during the ...

#மழைபெய்யும் நேரங்களில் #இடி இடிக்கும்போது கிராமப்புற மக்கள் #அர்ஜுனா அர்ஜுனா என கூறுவார்கள்.

#அப்போது மெத்த படித்த #மேதாவிகள் அந்த கிராமத்தானை பார்த்து #அர்ஜுனனை கூப்பிட்டா அர்ஜுனன் #அம்புல இருந்து #வில் எய்து #இடியை தடுத்து நிறுத்திடவாபோறான்.

#முட்டாள் பயலே இடிதாங்கிதானே இடியை தடுக்கும் என #ஏளனம் செய்வார்கள்.

#உண்மை என்னவென்றால் இடி இடிக்கும்போது நமக்கு #காது அடைத்து காதில் #ங்கொய்யிங்னு சத்தம் கேட்கும்.
 Is Arjuna popular because of Kali Yuga? - Quora
[அர்+ஜு+னா=அர்ஜுனா]
#அர்-எனும்போது நாக்கு மடிந்து #மேல்தாடையை தொடும்.

#ஜு-எனும்போது வாய் #குவிந்து காற்று வெளியேறும்.

#னா-எனும்போது வாய் முழுமையாக திறந்து காற்று வெளியேறும்.

#அர்ஜுனா எனும்போது இப்படி காற்று வெளியேறுவதால் காது அடைப்பு காதில் இரைச்சல் ஏற்படாது.

#ஏளனவாதிகளே உங்களது இடிதாங்கியால் கட்டிடத்தை மட்டும்தான் காப்பாற்றமுடியும்.

#இடி இடிக்கும்போது காது அடைத்து #மாரடைப்பு ஏற்பட்டோ இறப்பவர்களை காப்பாற்ற முடியாது.

#இறந்தவர்களை புதைக்கத்தான் உங்களுக்கு தெரியும்.
இடி இடிக்கும் போது அர்ஜுனா அர்ஜுனா என கூறுவது ஏன் தெரியுமா - YouTube
#ஆனால் இடி இடித்து இறந்தவனின் கண்ணில் #வெற்றிலை,மிளகு ரசத்தை ஊற்றி இறந்தவனையும் #பிழைக்க வைக்கும் திறமை கிராமத்தானுக்கே உண்டு.

எவ்வளவு மழை #பெய்தாலும் இடி இடித்தாலும் நாங்கள் ஓடி ஒளியமாட்டோம்.

#பயமின்றி ஆடிப்பாடி நனைவோம்.

#இடியோ மழையோ எப்பேர்பட்ட ஆபத்தையும் #அசாத்தியமாக சமாளிக்கும் தைரியம் #கிராமத்து மக்களுக்கு மட்டுமே உண்டு.

#
படித்தவர்கள் அனைவரும் புத்திசாலிகள் அல்ல.


#
கிராமத்தார் அனைவரும் முட்டாள்களும் அல்ல.

#நகரத்தார் படித்த புத்திசாலிகள் எனகூறும்போது #கிராமத்து மக்கள் படிக்காத மேதைகள் என் மார்தட்டி கூறுவேன்.. 

 

🌷 🌷🌷 🌷  No photo description available.🌹 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

 

பெண் பிள்ளையை வைத்திருக்கும் பெற்றோர்களின்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:54 AM | Best Blogger Tips
May be an image of 1 person and henna
பெண் பிள்ளையை வைத்திருக்கும் பெற்றோர்களின் கவனத்திற்கு இந்த பதிவு.....
 
• புடவை எப்படி கட்டுறதுன்னு சொல்லி குடுங்க. செல்லம் குடுக்குறேன்னு சொல்லி ஒன்னும் சொல்லி தரதில்லை. எவ்வளவு நாள் தான் சுடிதார் போட்டுக்கிட்டே சுத்துவாங்க. 
 Painting reference | Female art painting, Amazing art painting, Painting of  girl
பொண்ணுங்களுக்கு புடவை கட்ட தெரியாதுன்னு ஊருக்கே தெரிஞ்சிருக்கு. அதான் இப்போலாம் ரெடிமேடாவே புடவை வந்துட்டு. ரெண்டு சுத்து சுத்திக்கிட்டா போதும்.
 தர்மம் #செய்வதற்கு தடையாக #இருப்பது #எது. | Indian paintings, Painting  workshop, Woman painting
• சமைக்க கத்து குடுங்க. சமைக்க தெரியாதுன்னு சொல்லுறதை ஏதோ பெருமையா நினைக்குறாங்க இந்த காலத்து பெண்கள். 
 40 Impossibly Brilliant Artwork Pictures | Indian paintings, Indian art  paintings, Beautiful oil paintings
ஆயகலைகளில் சமையலும் ஒரு கலைங்க. எப்படி நடனம் ஆட தெரியும், பாட தெரியும்ன்னு சொல்லுறது பெருமையோ அதே மாதிரி சமைக்க தெரியும்னு சொல்லுறதும் பெருமையே.
 Paintings of Traditional Tamil Girls by HeartHuntrz on DeviantArt
• ஆண்களே எல்லாம் செய்யணும். நான் அப்படி ஒரு மாப்பிள்ளையை திருமணம் செஞ்சிக்குறேன்னு பேக்கேஜ்ஜாக எல்லா தகுதியும் உடைய ஒருவன் வேணும்னு எதிர்ப்பாக்குறதை ஆதரிக்காதீங்க.
 Rural Indian Women Paintings 066
• கஷ்டம்னா என்னன்னு சொல்லி குடுங்க. பிரச்சனைகள் வந்தா எப்படி எதிர் கொள்ளணும்னு சொல்லி குடுங்க. 
 
சில வீடுகளில் பெண் குழந்தைகளுக்கு மட்டும் ஓவர் செல்லம் குடுப்பாங்க. எதுவும் தெரியாமல் வளர்த்துடுவாங்க. அதற்கான பலனை அந்த பெண் பின்னாடி அனுபவிக்கணும்.
 Pin by Gowri on painting | Indian art paintings, Woman painting, Indian art  gallery
• உங்க பெண்ணை திருமணம் செய்து குடுத்த உடன் உங்கள் கடமை முடியவில்லை. அதற்கு பிறகு தான் உங்கள் ஆதரவு அந்த பெண்ணுக்கு அதிகம் தேவை.
 
• அடம் பிடிச்சி காரியம் சாதிக்குறது, அழுது காரியம் சாதிப்பது முக்கியமா பெண் குழந்தையை இப்படி வளர்க்காதீங்க.
 The reader by Mahesh Soundatte Online | Mojarto
• கல்யாணத்துக்கு பிறகு எல்லாம் பண்ணிக்கோன்னு பெண் பிள்ளைகளுக்கு சமாதானம் சொல்லாதீங்க. அதுக்கு முடியாதுன்னு நேரடியாவே சொல்லிடலாம்.
 
• சிறகுகளை உடைக்காதீங்க. பறக்க விடுங்க. கூண்டுக்கிளிகளாக வளர்க்காதீங்க.
 Untitled by Mahesh Soundatte Online | Mojarto
• பெண் குழந்தைகளுக்கு தவறான ஆணின் பார்வை எப்படி இருக்கும்னு சொல்லி தரும் போது அப்படியே எல்லா ஆண்களும் தவறானவர்கள் இல்லைன்னும் சொல்லி தாங்க. ஆண்களையும் மதிக்க கத்து தாங்க.
 பெண்களைக் கவர்வதற்கான சிறந்த வழிமுறைகள் என்னென்ன? - Quora
• பெண்ணை பூமியுடன் ஒப்பிடுவார்கள் அவ்வளவு பொறுமையாக இருக்க வேண்டும் என்று. ஆனால் எல்லா சமயத்திலும் பொறுமையாக இருக்க சொல்லி தராதீங்க.
 
எல்லாத்தையும் பொறுத்துக்கோ ஏன்னா நீ பெண் என்று காரணம் சொல்லாதீர்கள்.
 
படம்: கூகுள்.
 

தமிழ் சினிமாவிற்குள் இயங்கிய பெரும் மேதை..

மணக்கால் அய்யம்பேட்டை | 10:49 AM | Best Blogger Tips

May be an image of 2 people

கண்ணதாசனுடைய தனிச் சிறப்புகளில் ஒன்று மரபான தமிழ் இலக்கியங்களின் சிந்தனைகளை எளிமைப்படுத்தி திரைப்பாடலில் தருவது..
 
இதன் அடிப்படையை சிலர் புரிந்து கொள்ளவில்லை.திரைப்படம் என்பது பல்வேறு கலைகள் இணைந்த பல கோடி மக்களைச் சென்றடைகிற வெகுஜன வடிவம்..பாரம்பர்யமாக சிலருக்கு மட்டுமே தெரிந்த கலைமரபுகளை எளிமைப்படுத்தி சினிமாவில் பயன்படுத்துவது தவறில்லை..சினிமாவின் தேவையே அதற்காகத்தான்...
 
மரபுக் கவிதை என்று வைத்துக் கொண்டாலும் கூட தாக்கம் ( impact), தூண்டுதல் ( stimulation) ,ஆதர்ஸனம் ( inspiration) ஆகியவற்றைத் தன் மொழியின் மரபான இலக்கியங்களிலிருந்து பெற்றுக் கொள்ளாமல் அந்தரத்தில் மிதப்பது மாதிரி எதையாவது எழுதுகிறவன் நல்ல படைப்பாளி அல்ல..
 
 
கம்பராமாயணத்தில் தாடகையை வென்று ராமன் விஸ்வாமித்ர முனிவரோடு திரும்பி வருகிற போது அவன் கால் பட்டு அகலிகை பெண்ணாகிற தருணத்தில் ,
 
" இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
இனியிந்த வுலகுக்கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர்
துயர் வண்ணம் உறுவதுண்டோ
மைவண்ணத்து அரக்கி போரில்
மழைவண்ணத்து அண்ணலே
உன் கை வண்ணம் அங்கு கண்டேன்
கால் வண்ணம் இங்கு கண்டேன் "
 
என்கிற பாடல் வரும்..
 
' வண்ணம் ' என்கிற ஒரே சொல் விதவிதமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும்..கண்ணதாசன் இதே உத்தியை திரைப்பாடலில் பயன்படுத்தியிருப்பார்..
 
" பால்வண்ணம் பருவம் கண்டு
வேல்வண்ணம் விழிகள் கண்டு
மான்வண்ணம் நான்கண்டுபாடுகிறேன்
கண்வண்ணம் அங்கே கண்டேன்
கைவண்ணம் இங்கே கண்டேன்
பெண்வண்ணம் நோய்
கொண்டு வாடுகிறேன்"
 
" யானோக்குங் காலை நிலனோக்கும் நோக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும் "
 
என்கிற குறளை 
 
" உன்னை நான் பார்த்த போது
மண்ணை நீ பார்க்கிறாயே
மண்ணை நான் பார்த்த போது
என்னை நீ பார்க்கிறாயே "
என்று எளிமைப்படுத்திப் பாடியிருப்பார்..
 
சில பாடல்களில் அவருடைய வழக்கமான குறும்புகளும் வெளிப்பட்டிருக்கின்றன.
 
" ஆட்டுவித்தால் ஆரொருவருவர் ஆடாதாரே
ஓட்டுவித்தால் ஆராரொருவரா ஓடாதாரே "
என்பது தேவாரத்தில் வருகிற அப்பர் பாடல் ,
இவர் 'கண்ண 'தாசனல்லவா ? தேவாரப் பாடலின் வரிகளைத் தூக்கிப் போய்,
" ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே
கண்ணா
 
ஆசையெனும் தொட்டிலிலே ஆடாதாரே
கண்ணா "
 
என்று 'வைணவத்திற்கு 'மதம் மாற்றியிருப்பார்..
பெரிய புராணத்தின் 'திருநீலகண்டர் புராணத்தில் ' கணவன் புறமாதரோடு உறவு கொண்டதால் வெகுண்ட நீலகண்டரின் மனைவி ' எம்மைத் தீண்டுவீராயின் திருநீலகண்டம் ' என்று சிவன் மீது ஆணையிட்டு அவர் தொடக் கூடாதென்று கட்டளையிடுவார் ..இந்தக் கருத்தை கண்ணதாசன் மிக அழகாகத் திரைப்பாடலில் பயன்படுத்தியிருப்பார்..சிவாஜியை மனைவி ஜெயலலிதா ' தொடக்கூடாது ' என்று சொல்லி விடுவார்..அப்போது பாடுகிற பாடலில்தான் பெரிய புராணம் இணைந்து கொள்ளும்,
 
" நிலவைப் பார்த்து வானம் சொன்னது
என்னைத் தொடாதே..
 
நிழலைப் பார்த்து பூமி சொன்னது
என்னைத் தொடாதே.. "
 
என்று தொடங்கி,
 
" புதியதல்லவே தீண்டாமை என்பது
புதுமையல்லவே அதை நீயும்சொன்னது
‌ சொன்ன வார்த்தையும் இரவல் தானது
திருநீலகண்டரின் மனைவி சொன்னது "
 
என்கிற வரிகள் வருகிற போது புராணம் எட்டிப் பார்ப்பதோடு மட்டுமில்லாமல் அதை வேறொரு பரிமாணத்தில் 
 
மாற்றியிருப்பார்..கண்ணதாசனின் குறும்புகள் அத்தோடு நிற்கவில்லை..
 
" ஆலயம் செய்தோம்
அதில் அனுமதி இல்லை
நீ அந்தக் கூட்டமே
இதில் அதிசயமில்லை "
என்று எழுதியிருப்பார்..இது கதைச் சூழலையும் தாண்டிய நுணுக்கமான 
 
குறும்பு..தீண்டாமைக்குக் காரணமான ஜாதி எது ? படத்தின் நாயகி ஜெயலலிதா யார் ? இந்த இரண்டையும் இணைத்து யோசித்து ' நீ அந்தக் கூட்டமே இதில் அதிசயமில்லை ' என்கிற வரிகளை வாசித்தால் கண்ணதாசனின் நுட்பமான கிண்டல் தெரியும் 
 
'குற்றாலக் குறவஞ்சி' என்று ஒரு இலக்கியம் இருக்கிறது..பொதுவாகக் குறவஞ்சியின் கதைக்கென்று சில விதிகள் உண்டு..உலா வருகிற தலைவனை ஏழு பருவத்து மகளிரும் கண்டு காதல் கொள்வார்கள்..தலைவிக்கும் காதல் வந்து உடல் மெலிவாள்..உடனே குறத்தி வந்து குறி சொல்வாள்..
 
இதுவரையிலான காட்சி எல்லா அக இலக்கியங்களிலும் வருவதுதான்..குறவஞ்சி அடுத்த கட்டத்துக்கு நகரும்..தலைவி குறத்திக்கு நகைகளைப் பரிசாகத் தருவாள்..
 
அதைப் போட்டுக் கொண்டு குறத்தி குறவனைப் பார்க்க வருவாள்..புதிய நகைகளோடு குறத்தியைக் கண்டதும் குறவனுக்குச் சந்தேகம் வந்து விடும் ' யார் தந்தார்கள் ?' என்று கோபமாகக் கேட்பான்..அதனால் குறத்தி ஊடி இருவரும் சமாதானமடைவதோடு குறவஞ்சி நிறைவுற்று விடும் ( நகை தந்த தலைவியின் காதலை புலவர்கள் அம்போவென்று இடையிலேயே விட்டு விடுவார்கள் )
இந்தப் பின்னணியை உள்வாங்கி அவர் திரையில் வடித்த பாடல்தான் ' நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன் '
 
அந்தப் பாடலில் காதலியிடம் காதலன் கேட்கக் கூடாத நான்கு கேள்விகளைக் கேட்பான் 
 
" நீ வரும் போது வழி மீது
யாருன்னைக் கண்டார் ?
உன் வளை கொஞ்சும் கை மீது
பரிசென்ன தந்தார் ?
உன் கருங்கூந்தல் அலைபாய
அவரென்ன சொன்னார் ?
‌ உன் வடிவான இதழ் மீது
சுவையென்ன தந்தார் ? "
 
அவளுடைய பதில் கற்பனாவாதம் நிறைந்தது..ஆனால் காதல் பெருகி வரும் அந்த நேரத்தில் விவாதம் செய்யாமல் முடித்து வைப்பதற்கு இதுவே 
 
பொருத்தமானது..முட்டாள்களிடம் யதார்த்தத்தின் திரை விரித்துக் காட்ட முடியாது..
 
" பொன் வண்டொன்று மலரென்று
முகத்தோடு மோத
நான் வளை கொண்ட கையாலே
மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி
மேகங்களாக‌
நான் பயந்தோடி வந்தேன்
உன்னிடம் உண்மை கூற "
''அடேய் முட்டாள் ! கூந்தல் கலைந்திருப்பதுதானே உன் சந்தேகம் ? வண்டு விரட்டுச்சு..ஓடி வந்தேன்..அதனால முடி கலைஞ்சிருச்சு போதுமாடா ? ''
 
அடம் பிடிக்கும் சின்னப் பிள்ளைக்குத் தருகிற ஆரஞ்சு மிட்டாய் இது..
கடைசியில்
 
" நீ இல்லாமல் யாரோடு
உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக
தனியாக வந்தேன் "
 
என்கிற இடத்தில் மிகத்துல்லியமாக தன் மனதையும் , அதிலிருக்கும் மாறாத காதலையும் சொல்லி விடுவாள்..
 
சந்தேகமே இல்லாமல் கண்ணதாசன் தமிழ் சினிமாவிற்குள் இயங்கிய பெரும் மேதை..
 
இந்த நாளில் அவர் புகழ் பெருகட்டும்..