அப்பத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்......

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:10 | Best Blogger Tips

அப்பத்தாவும் பாட்டியும் க்கான பட முடிவுஅப்பத்தாவும் பாட்டியும் க்கான பட முடிவு
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......
.........................................
கரியையும் சாம்பல்தூளையும்
கொடுத்து பல் விளக்கச் சொன்ன போது
பட்டிக்காடு என இளித்த பற்கள்
இன்று வேரற்று போனபோது
ஓடி நின்றேன் சர்வோதயா காதிகிராப்ட் என பல்பொடி வாங்க
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......
வெந்தயமும் சீகைக்காயும்
வடிதண்ணீரில் அரைத்து தேய்த்துக் குளி
என்றபோது பித்துக்குளிகள் என
எள்ளி நகையாடி சிக் ஷாம்புவை
சிக்கென பிடித்து இன்று வெண்கேசம்
வந்தபின்பு ஓடுகின்றேன்
சீகைக்காய் வாங்க
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......
பாசிப்பயறோ கடலைமாவோ
அரைத்துக்குளி என்ற போது
லிரில் லக்ஸ் சினிமா நட்சத்திரங்களின்
அழகு சோப் என அத்தரித்திரங்கள்
கைகாட்டிய கட்டிகளை எல்லாம்
போட்டு தோள் சுறுங்கி
வயோதிகம் தெரிந்த பின்பு
ஓடுகின்றேன் பயத்தமாவு அரைக்க
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......
இருமலோ தும்மலோ வந்த போது
துளசி தூதுவளை சுக்கு மிளகு
போட்டு கசாயம் தந்த போது
முகத்தை சுளித்து காஃப் சிரப்
குடித்து தைராய்டு வரை சென்ற பின்பு
ஓடுகின்றேன் துளசி தூதுவளைச்
செடி வளர்க்க
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......
வயிறு வலி என்ற போது
வெறும் வயிற்றில் வெந்தயக்களியோ
கற்றாழைச்சாறோ கொண்டு வந்து
தந்த போது தூக்கி எறிந்து சீறி
ப்ருபன்னும் பெயின்கில்லரும் போட்டு
கருப்பை பலுதடைந்த பின்பு
ஓடுகின்றேன் கற்றாழை வளர்க்க
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......
நல்லெண்ணெய் செக்கில் ஆட்டி
மனமாய் தந்தபோது
சன்புளவர் ஆயில் பார்
முகம் காட்டும் தூய்மை
எனக்கூறி முகத்தில் அரைய
பதிலுறைத்துவிட்டு இன்று
வாய்க்கு விளங்காத வாசமே இல்லாத
வாழ்வு வந்த பின்பு
செக்கு நோக்கி ஓடுகின்றேன்
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......
மண்பானை சமையல்
மண்பானை குளிர் நீரை எல்லாம்
மாற்றி விட்டு ஆர்வோ வாட்டர்
என புழு பூச்சி கூட வாழத்தகுதி
அற்ற நீரைக்குடித்து குடித்து
சவமானபின்பு ஓடுகின்றேன்
மண்பானை வாங்க
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.......
படித்த தலைமுறை எனும்
நாகரீகத்தில் திளைத்து
குருகுலக் கல்வியை
கோடிக்கணக்கான ரூபாய்
கல்வியாக்கி கொல்லைத்துளசி
வைத்தியம் மறந்து மாடி மாடியாய்
குளீருட்டப்பற்ற அறையில் லட்ச
லட்சமாய்க் கொட்டி பிணமாகவும்
வாழ்வில் ஏது சுதந்திரம்
ஏது சுகாதாரம் என்று
எங்கோ இருந்து
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.........
......................
சிந்தனைத்தமிழ்..
மூத்தோர்சொல் வார்த்தையும்
முதுநெல்லிக்காயும்
முன்னே கசக்கும்
பின்னே இனிக்கும்.

நன்றி இணையம்

சூட்சும சக்திகளும் நமது உடலும்!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:52 | Best Blogger Tips
சூட்சும சக்திகளும் நமது உடலும் க்கான பட முடிவு
1. நமது மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா? நாம் எதை நினைக்கிறோமோ அங்கு நமது மனம் செல்கிறது; அதற்கு தூரம் தடை இல்லை.
நாம் தீயவர்களை நினைக்கும்போது நமது சூட்சும சக்தி அவர்களுடன் இணைந்து நமது வலிமை குறைகிறது. இறைவனை எண்ணும்போது சூட்சும சக்தி வலிமை பெற்று நம்மை காக்கிறது.
2. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.
3. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.
4. ஒவ்வொரு மனிதனுக்கும்சூட்சும சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும்.
5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது.
6. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.
7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது.
8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது.
9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது.
10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.
11. மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல. அவனின் சூட்சுமசக்தி காந்தசக்தி போல அவனைச் சுற்றி பாதுகாத்து வருகிறது .
12. கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.
13. மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள தொடர்பின் பாதிப்பே ஆகும்.
14. சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெறுகும்.
15. நோயாளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.
16. மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.
17. மனிதன் தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.
18. நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஒருவித மொழியில் நம்முடன் பேசுகிறது.
19. ஒரு மனிதனை புண்படச் செய்வது நூதனமான கொலைக்கு சமம்.
20. மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.
21. நாம் விஞ்ஞான அறிவை மட்டும் பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.
22. நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.
23. வலி என்பது உடலின் மொழி.
அதை ஒரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.
24. நிகழ்கால உணர்வுடன் இருக்க பழகுங்கள்.
25. வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.
26. உடலின் உறுப்புக்கள் அனைத்தும் மனதுடன் சேர்ந்து இயங்குவதே ஆரோக்கியம். மனது நோயுற்ற பின்னரே உடல் நோயுறுகிறது.
27. விவசாய நிலத்தில் தாயின் கருவறையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.
28. நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.
29. நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.
30. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.
31. அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.
32. கடல்நீர் நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.
33. உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய சக்திகள் நீங்கும்.
34. கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.
35. மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரீரத்தின் கவசம் பலம் பெறுகிறது.
36. செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.
37. ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடக்கவும்.
38. பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.
39. ‪சூரிய ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.
40. மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரீரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.
41. மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.
42. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.
43. நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது.
44. நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.
45. தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும்.
46. தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.
47. பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு சுமையே.
48. போதை பொருள், நரம்பு மண்டலத்தை அழிக்கும்.
49. தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.
50. தூக்கம் என்பது,
விழிப்புணர்வு அற்ற தியானம்.
தியானம் என்பது,
விழிப்பணர்வுடன் கூடிய தூக்கம்.
சூட்சம விஞ்ஞானத்தை உணர்வோம்!
வாழ்வில் வளம் பெறுவோம்!
Bottom of Form

 நன்றி இணையம்