ஆயுட்காலம் குறுகிக் கொண்டே

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:51 | Best Blogger Tips

 



📗❤‍🔥 மனிதனின் ஆயுட்காலம் குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள் 


📗❤‍🔥

1. உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை.


📗❤‍🔥

2. இரவில் கண் விழித்திருத்தல்.


📗❤‍🔥

3. காலை உணவை தவிர்த்தல்.


📗❤‍🔥

4. ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டம்.



📗❤‍🔥

5. பணத்தை நோக்கிய ஓட்டம்.


📗❤‍🔥

6. பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல்.


📗❤‍🔥

7. கவலைகளை கட்டிக் கொண்டு இருத்தல்.


📗❤‍🔥

வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள். உணவை தரமாக்குங்கள்.


📗❤‍🔥

கண்டதையும் கொட்ட நம் உடல் குப்பை தொட்டி அல்ல.


📗❤‍🔥

நேரத்துக்கு உறங்குங்கள். இரவு உறக்கத்தின் பொழுது தான் நம் உடல் தன்னை தானே சீராக்குகிறது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில்  சூடாக நீர் அருந்துங்கள்.


📗❤‍🔥

தினமும் ஒரு பழத்தையேனும் வெறும் வயிற்றில் உண்ணுங்கள்.


📗❤‍🔥

போதியளவு நீர் அருந்துங்கள்.


📗❤‍🔥

இளநீர் போன்றவை மிக நல்லது.


📗❤‍🔥

பச்சையாக உண்ணக்கூடிய தேங்காய், ஊற வைத்த நிலக்கடலை, வெள்ளரிப் பிஞ்சு, கேரட், சின்ன வெங்காயம், பழங்கள், நட்ஸ் போன்றவற்றில் முடிந்ததை தினமும்  உண்ணுங்கள்.


📗❤‍🔥

காலை உணவை தவிர்க்காது ஆரோக்கியமானதை தேர்வு செய்து உண்ணுங்கள்.



📗❤‍🔥

அளவாக உண்ணுங்கள்.

எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்.


📗❤‍🔥

தொடர்ந்து உட்கார்ந்து கொண்டு இருப்பதை குறையுங்கள்.


📗❤‍🔥

உடற்பயிற்சி உணவை போல் அத்தியாவசியமான ஒன்று.


📗❤‍🔥

மூன்று வேளை உண்பதால் இரண்டு வேளை அவசியம் 20 நிமிடம் நடை பயிற்சி செய்யுங்கள்.


📗❤‍🔥

இறுக்கமாக இருக்காது சிரித்து பேசி மகிழ்ச்சியாக இருங்கள்.


📗❤‍🔥

உங்கள் வட்டத்தை இயந்திரத்தோடு குறுக்கிக் கொள்ளாதீர்கள். 


📗❤‍🔥

அழுது வடியும் சீரியல்களை பார்த்து உங்கள் இதயத்தை வாட்டாமல், சிரிக்க வைக்கும் காட்சிகளை கண்டு களியுங்கள்.


📗❤‍🔥

ஆளைக் கொல்லும் கவலைகளைப்  புறந்தள்ளி ஆளுமையைத் தரும் தன்னம்பிக்கையை ஆடையாக அணியுங்கள்.



வாழ்க வளமுடன்





நன்றி இணையம்