வாசியோகம்!(பகுதி3)

மணக்கால் அய்யம்பேட்டை | PM 11:36 | Best Blogger Tips
வாசியோகம்!(பகுதி3)
நமது மனித சரீரத்தில் இருமூக்குத் துவாரங்களின் மூலமாக மனித உடம்பினுள்ளும் வெளியிலும் சென்று வரும் மூச்சுக் காற்றாகும்.இவ் வாயுவானது தாயின் கற்பத்தில் சிசு தரித்த கணம் முதல் இறப்பு வரை இயல்பாகவே நடந்து வருதலாகும்.

இம்மூச்சு நின்று விட்டால் உயிர் போய் இறப்பு நிலை உண்டாகி விடும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.இத்தகைய ஆற்றல் மிக்க பிராணவாயுவானது கட்டுப்பட்டு நிற்பதற்கே பிராணாயாமம் என்று பெயராகும்.

பிராணன்-ஆயாமம்---பிராணாயாமம் ஆகும்.பிராணன் என்றால் வாசியாகிய மூச்சுக் காற்று என்றும் ஆயாமம் என்றால் கட்டுப் படுத்துதல் என்றும் பொருள் படும்.எனவே தான் இப்பயிற்சியைப் பிராணாயாமம் என்று சொல்லி உள்ளனர்.

நமது மனித உடம்பில் இப்பிராண வாயுவானது தத்துவார்த்த ரீதியாக லலாட மத்தியாகிய புருவ மத்தியில் தோன்றி ஒவ் என்று மூலாதாரத்திற் குதித்து அவ் என்று நாபித் தானத்தில் முட்டி சவ் என்று இடை பிங்கலைகளின் வழியிலோடி நாசியிற் 12அங்குலம் புறப்பட்டு 4அங்குலம் களன்று (பாழாகப் பாய்ந்து)8அங்குலம் மீண்டும் வந்து இவ் உடம்பினுள் புகுந்து நிற்பதாகும்.

இது; 60 நாழிகையாகிய ஒரு நாளைக்கு 360-60-21600சுவாசம் இயங்குகிறது.இந்த 21600 நாழிகையே ஒரு வருடம் ஆகும்.21600ஐ80ஆல் பெருக்க (21600-80-1728000)வரும் தொகையே கிரேதாயுகமாகும்.
இதை60ஆல் பெருக்க(21600-

இதுவும் நாழிகை 1க்கு 360 சுவாசம் வீதம1296000)வருவது திரேதாயுகமாகும்.40ஆல் பெருக்க வரும் தொகை (21600-40-864000)துவாரபரயுகமாகும்.20ஆல் பெருக்க வரும் தொகை (21600-20-432000)கலியுகமாகும் எனச் சித்தர் பெருமக்கள் அனுபவப் ப+ர்வாங்கமாகச் சொல்லியருளி உள்ளனர்.

இவைகள் ஜோதிட சாஸ்திரத்திற்கு வித்தாகும்.இதை மையமாக வைத்தே பஞ்சப+தத் தத்துவ அடிப்படையில் நாடி ஜோதிடக் கிரந்தங்களும்,பிற ஜோதிட நூல்களும் அவற்றின் பலாபலன்களும் ஞானிகளால் நமக்காகக் கண்டறிந்து சொல்லப் பட்டுள்ள பொக்கிசங்களாகும்.

 இது பற்றிப் பின்னால் தெளிவாக விளக்கி எழுதுகிறோம்.இப்படி 21600 சுவாசத்தில் 7200சுவாசம் 4அங்குல அளவில் பாழாகப் பாய்ந்து14400
சுவாசம் உள்ளே புகும்.

இதில் மூலாதாரத்தில் 600 சுவாசம்,சுவாதி~;டானத்தில் 6000சுவாசம்,மணிப+ரகத்தில் 6000 சுவாசம், அநாகதத்தில் 6000 சுவாசம்,விசுத்தியில் 1000 சுவாசம்,ஆக்ஞையில்1000 சுவாசம்,
நாதாந்தத்தில்1000 ஆக 21600 சுவாசம் இயங்குகிறது.இதில் பாழாகப் பாய்ந்து போகிற 7200சுவாசத்தை மீண்டும் இச் சரீரத்தில் புகச் 
செய்யும் முறையே இவ் வி,J யோகத்தின் முக்கியக் குறிக்கோளாகும்.

பற்றியே சிவவாக்கியச் சித்தர் தமது நூலில் மிகத் தெளிவாகக் கூறிஉள்ளார்.

  “உருத் தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக் 
  கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லிரேல்
  விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும் 
  அருட்தரித்த அப்பனாணை அம்மையாணை உண்மையே.”

 இதன்படிச் சூரிய சந்திர கலைளாகிய இரு நாடிகளையும் ஒன்று சேர்த்து மூலாதாரத்திற் சென்று முட்டுகிற போது வாயுவானது கபாலத்தைப் பற்றி நின்று அக்கினி உண்டாகி யோக ககி கூடும் போது வயது நிறைந்த முதியவரும் குமரனாகி அளவில்லாத ஆயுட் பேற்றை அடைந்து யோக சித்தி பெறுவர்.
நமது மனித சரீரத்தில் இருமூக்குத் துவாரங்களின் மூலமாக மனித உடம்பினுள்ளும் வெளியிலும் சென்று வரும் மூச்சுக் காற்றாகும்.இவ் வாயுவானது தாயின் கற்பத்தில் சிசு தரித்த கணம் முதல் இறப்பு வரை இயல்பாகவே நடந்து வருதலாகும்.

இம்மூச்சு நின்று விட்டால் உயிர் போய் இறப்பு நிலை உண்டாகி விடும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.இத்தகைய ஆற்றல் மிக்க பிராணவாயுவானது கட்டுப்பட்டு நிற்பதற்கே பிராணாயாமம் என்று பெயராகும்.

பிராணன்-ஆயாமம்---பிராணாயாமம் ஆகும்.பிராணன் என்றால் வாசியாகிய மூச்சுக் காற்று என்றும் ஆயாமம் என்றால் கட்டுப் படுத்துதல் என்றும் பொருள் படும்.எனவே தான் இப்பயிற்சியைப் பிராணாயாமம் என்று சொல்லி உள்ளனர்.

நமது மனித உடம்பில் இப்பிராண வாயுவானது தத்துவார்த்த ரீதியாக லலாட மத்தியாகிய புருவ மத்தியில் தோன்றி ஒவ் என்று மூலாதாரத்திற் குதித்து அவ் என்று நாபித் தானத்தில் முட்டி சவ் என்று இடை பிங்கலைகளின் வழியிலோடி நாசியிற் 12அங்குலம் புறப்பட்டு 4அங்குலம் களன்று (பாழாகப் பாய்ந்து)8அங்குலம் மீண்டும் வந்து இவ் உடம்பினுள் புகுந்து நிற்பதாகும்.

இது; 60 நாழிகையாகிய ஒரு நாளைக்கு 360-60-21600சுவாசம் இயங்குகிறது.இந்த 21600 நாழிகையே ஒரு வருடம் ஆகும்.21600ஐ80ஆல் பெருக்க (21600-80-1728000)வரும் தொகையே கிரேதாயுகமாகும்.
இதை60ஆல் பெருக்க(21600-

இதுவும் நாழிகை 1க்கு 360 சுவாசம் வீதம1296000)வருவது திரேதாயுகமாகும்.40ஆல் பெருக்க வரும் தொகை (21600-40-864000)துவாரபரயுகமாகும்.20ஆல் பெருக்க வரும் தொகை (21600-20-432000)கலியுகமாகும் எனச் சித்தர் பெருமக்கள் அனுபவப் ப+ர்வாங்கமாகச் சொல்லியருளி உள்ளனர்.

இவைகள் ஜோதிட சாஸ்திரத்திற்கு வித்தாகும்.இதை மையமாக வைத்தே பஞ்சப+தத் தத்துவ அடிப்படையில் நாடி ஜோதிடக் கிரந்தங்களும்,பிற ஜோதிட நூல்களும் அவற்றின் பலாபலன்களும் ஞானிகளால் நமக்காகக் கண்டறிந்து சொல்லப் பட்டுள்ள பொக்கிசங்களாகும்.

இது பற்றிப் பின்னால் தெளிவாக விளக்கி எழுதுகிறோம்.இப்படி 21600 சுவாசத்தில் 7200சுவாசம் 4அங்குல அளவில் பாழாகப் பாய்ந்து14400
சுவாசம் உள்ளே புகும்.

இதில் மூலாதாரத்தில் 600 சுவாசம்,சுவாதி~;டானத்தில் 6000சுவாசம்,மணிப+ரகத்தில் 6000 சுவாசம், அநாகதத்தில் 6000 சுவாசம்,விசுத்தியில் 1000 சுவாசம்,ஆக்ஞையில்1000 சுவாசம்,
நாதாந்தத்தில்1000 ஆக 21600 சுவாசம் இயங்குகிறது.இதில் பாழாகப் பாய்ந்து போகிற 7200சுவாசத்தை மீண்டும் இச் சரீரத்தில் புகச்
செய்யும் முறையே இவ் வி,J யோகத்தின் முக்கியக் குறிக்கோளாகும்.

பற்றியே சிவவாக்கியச் சித்தர் தமது நூலில் மிகத் தெளிவாகக் கூறிஉள்ளார்.

“உருத் தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருட்தரித்த அப்பனாணை அம்மையாணை உண்மையே.”

இதன்படிச் சூரிய சந்திர கலைளாகிய இரு நாடிகளையும் ஒன்று சேர்த்து மூலாதாரத்திற் சென்று முட்டுகிற போது வாயுவானது கபாலத்தைப் பற்றி நின்று அக்கினி உண்டாகி யோக ககி கூடும் போது வயது நிறைந்த முதியவரும் குமரனாகி அளவில்லாத ஆயுட் பேற்றை அடைந்து யோக சித்தி பெறுவர்.