*மனித வாழ்க்கையின் உண்மை...!*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 7:34 | Best Blogger Tips

🐐 🐐 🐐 🐐 🐐 🐐

கடவுள் ஒரு நாள் *கழுதையை* படைத்து அதனிடம் சொன்னார்...!




நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும்

நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ

50 வருடங்களுக்கு வாழ்வாய்...!



*இதற்கு கழுதை சொன்னது*



நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்...!




கடவுள்

கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்...!




🐕 🐕 🐕 🐕 🐕 🐕




அடுத்து ஒரு *நாயை* படைத்து அதனிடம் சொன்னார்...!




நீ மனிதனின் வீட்டை காக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான்.

நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்...!




*இதற்கு நாய் கூறியது :*




கடவுளே ! 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு

15 வருஷம் போதும்...!




கடவுள்

நாயின் ஆசையை நிறைவேற்றினார்...!




🐒 🐒 🐒 🐒 🐒 🐒




அடுத்து கடவுள் *குரங்கை* படைத்து அதனிடம் சொன்னார்...!




நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும்.

நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய்.

நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்...!




*இதற்கு குரங்கு கூறியது :*




20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்...!




கடவுளும்

குரங்கின் ஆசையை நிறைவேற்றினார்...!




👴🏼 👴🏼 👴🏼 👴🏼 👴🏼 👴🏼




கடைசியாக *மனிதனை* படைத்து அவனிடம் சொன்னார்...!




*நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன்*

*நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ*

*20 வருடங்களுக்கு வாழ்வாய்...!*




*இதற்கு மனிதன் கூறினான் :*




20 வருஷம் ரொம்ப குறைவு...!

*கழுதை* வேண்டாம் என்ற

30 வருடங்களையும்

*நாய்* வேண்டாம் என்ற

15 வருடங்களையும்

*குரங்கு* வேண்டாம் என்ற

10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு...!




கடவுள்

மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்...!




அன்று முதல்

மனிதன் முதல்

*20 வருடங்களை*

ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக...!




கல்யாணம் செய்து கொண்டு அடுத்த

*30 வருடங்களை*

*கழுதை* போல் எல்லா சுமைகளை தாங்கி கொண்டு அல்லும் பகலும் உழைக்கிறான்...!




குழந்தைகள்

வளர்ந்தபிறகு அடுத்த

*15 வருடங்களுக்கு*

அவன் வீட்டின் *நாயாக* இருந்து அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான்.

மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான்...!




வயதாகி, Retire ஆன

பிறகு *குரங்கு* போல்

*10 வருடங்களுக்கு*

மகன் வீட்டிலிருந்து

மகள் வீட்டிற்கும்,

மகள் வீட்டிலிருந்து

மகன் வீட்டிற்கும் தாவி

பேரகுழந்தைகளுக்கு வித்தைகள் காட்டி மகிழ்வித்து மரணக்கின்றான்...!




*மனித வாழ்க்கையின் உண்மை...!*


நன்றி இணையம்




🤠 🤠 🤠 🤠 🤠 🤠