ஹோரை : செய்யற வேலைகளை உருப்படியா முடிக்கிறதுக்கு ஒரு குட்டி யோசனை...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:33 | Best Blogger Tips

வாசக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

ஒரு ஜோதிடராக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் " ஹோரையும் " ஒன்று.

ஜோதிடராக இருப்பதை விட்டுத் தள்ளுங்கள். அன்றாட நடைமுறையில் , இது உங்களுக்கு அளப்பரிய பலன்கள் தரும். ஹோரை அறிந்து நடப்பவனை . யாரும் ஜெயிக்க முடியாது என்பது சித்தர்கள் வாக்கு. அப்படிப் பட்ட ஒரு மகத்தான விஷயம் பற்றி நாம் இன்று பார்க்க விருக்கிறோம்.

ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஓரை கிடையாது.

பூமத்திய ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை நமது முன்னோர்கள் எப்படி உருவாக்கினார்களோ அதேபோல்தான் ஓரைகளும் உருவாக்கப்பட்டன. சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள், தொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி, அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள் ஓரைகளை கணக்கிட்டுள்ளனர்.

சூரியன் மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின் அமைப்பைக் கொண்டு வானவியல் அறிஞர்கள் ஓரைகளை உருவாக்கினர். இதன்படி வாரத்தின் முதல் நாளான ஞாயிறன்று முதல் ஓரையை சூரியனுக்கு அளித்தனர்.

அதற்கு அடுத்து சுக்கிரன் , அதற்கு அடுத்து புதன் ஓரை , 4வது இடம் சந்திரனுக்கும், 5வது இடம் சனிக்கும், 6வது இடம் குருவுக்கும், 7வது இடம் செவ்வாய்க்கும் வழங்கினர்.

இதற்கு சுற்றுப்பாதை, கிரகங்களின் கதிர் வீச்சுதான் காரணம்.
இவற்றில் சுக்கிரன் ஓரை, புதன் ஓரை, குரு ஓரை ஆகிய மூன்றும் நல்ல ஓரைகள் எனப்படுகிறது. எந்த ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமென்றாலும் - இந்த ஹோரைகளில் துவங்கலாம்.


ஓரை என்பது சூரிய உதயத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. அந்த நாளின் கிழமை அதன் முதல் ஓரையாக கொள்ளப்படுகிறது. உதாரணமாக ஞாயிறு காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஓரை.

இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன் ஓரை, 8-9 மணி வரை புதன் ஓரை, 9-10 வரை சந்திரன் ஓரை, 10-11 வரை சனி ஓரை, 11-12 மணி வரை குரு ஓரை, 12-1 மணி வரை செவ்வாய் ஓரை. இதையடுத்து மீண்டும் சூரியன் ஓரை துவங்கும்.

இதேபோல் செவ்வாய்க்கிழமை என்றால் அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஒரை, புதன் கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஓரை, அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் மேலே கூறப்பட்டுள்ள வரிசைப்படி ஓரை கணக்கிடப்படும்.

பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஓரைகள் கணக்கிடப்படுகின்றன.


6 - 1- 8 - 3
இந்த வரிசையை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். காலை 6 மணிக்கு வரும் ஓரை , திரும்பவும் மதியம் 1 மணிக்கும், இரவு 8 மணிக்கும் , பின்பு அதிகாலை 3 மணிக்கும் வரும்.

சூரிய ஓரை :

சூரியன் ஓரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விடயங்கள் மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும். உங்கள் மேலதிகாரிகளை சந்தித்தல், போன்ற பெருந்தலைகளை சந்திக்கும் காரியம் செய்யலாம்.

இந்த நேரத்தில் புதிதாக எந்த அலுவல்களையோ உடன் பாடுகளையோ செய்வது நல்லதல்ல, சுபகாரியங்கள் செய்யயவும் இந்த ஓரை ஏற்றதல்ல. இந்த ஓரை நடக்கும் நேரத்தில் பொருள் ஏதேனும் காணாமல் போனால் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைக்குமானால் மிகவும் தாமதித்து அப்பொருளின் நினைவு மறைந்தபின் கிழக்கு திசையில் கிடைக்கலாம்.இந்த நேரத்தில் உயில் சாசனம் எழுதலாம்.

சுக்கிர ஓரை :
சகல சுப காரியங்களுக்கு வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை ஆபரணம் வாங்கவும் மிகவும் ஏற்றது. குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட சகல காரியங்களிலும் நன்மை ஏற்படும். விவசாய்த்திற்கும், பயணங்கள் செய்யும் நல்லது. இந்த ஓரையில் காணாமல் போன பொருள் மேற்கு திசையில் சில நாள்களில் கிடைக்கும்.

புதன் ஓரை :
கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம். சுப காரியங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேர உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளவும் செய்யலாம்.இந்த ஓரையில் காணாமல் போகும் பொருள் விரைவில் அதிக சிரமமின்றி கிடைத்து விடும்.

சந்திர ஓரை :
வளர்பிறை காலத்தில் சந்திரன் ஓரையும் நல்ல ஓரையாகவே கருதப்படுகிறது.
இந்த ஓரைகளில் திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல் ஆகியற்றைச் செய்யலாம். இந்த ஓரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம்.குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட காரியங்களையும் மிகவும் ஏற்றது. வியாபார விஷயமாகவோ அல்லது புனித யாத்திரையாகவோ பயணம் செய்ய ஏற்றது.பிறரைச் சந்தித்துப் பேசவும் செய்யலாம். இந்த ஓரையில் எந்தப்பொருள் காணாமல் போனாலும் கிடைக்காது.

சனி ஓரை :

இதில் சனி ஓரை ஒரு சில காரியங்களுக்கு நன்றான பலனைத் தரும். கடனை அடைப்பதற்கு ஏற்ற ஓரையாக சனி ஓரை கருதப்படுகிறது.
உதாரணமாக சனி ஓரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, ஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது, பாத யாத்திரை , நடைபயணம் துவங்குவது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல், அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஓரை சிறப்பானது.


குரு ஓரை : எல்லாவகை சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம், வியாபாரம், விவசாயம் செய்ய நல்லது. ஆடை ஆபரணப் பொருள்கள் வாங்கவும், வீடு மனை வாங்கவோ,விற்கவோ ஏற்றது.எதுவும் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் புறம்பான காரியமாக இருக்கக்கூடாது. கப்பற்பயணம் செய்வதற்கு இந்த ஓரை சிலாக்கிய்மானது அல்ல. இந்த நேரத்தில் காணாமல் போனபொருள்களைப் பற்றி வெளியில் சொன்னாலே போதும் . உடனே கிடைத்து விடும்.


செவ்வாய் ஓரை
செவ்வாய் ஓரை நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/பங்காளி பிரச்சனைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம். இந்த ஓரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால் சக்தி வாய்ந்ததாக இருக்கும். செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம் . அதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள் கொண்டு வரக் கூடியது செவ்வாய். எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல. இருப்பினும் தெய்வீகத் தொடர்பான விஷய்ங்களையோ, சண்டை சச்சரவுக்கான் விஷயங்களையோ பற்றிய் பேசலாம். இருப்பினும் இந்த ஓரையை தவிர்ப்பது நல்லது. இந்த ஓரை நேரத்தில் பொருள்கள் காணாமல் போனால் உடனே முயன்றால் தெற்கு திசையில் கிடைத்துவிடும்.தாமதித்தால் கிடைக்காது.



===================================================

ஒரு சிறந்த ஜோதிடராக நீங்கள் ஹோரை சம்பந்தமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயமும் உண்டு. நவ கிரகங்களில் - ஒன்றுக்கொன்று கடும் பகை கிரகங்களும் உண்டு. அல்லவா ? அதையும் நீங்கள் மனதில் கொண்டு , ஹோரை தேர்ந்தெடுங்கள். என்னதான் குரு ஓரை சுப ஓரை என்றாலும், வெள்ளிக் கிழமை - குரு ஹோரை தேர்ந்தெடுக்க வேண்டாம்.
ஏன்..? அதுதான் உங்களுக்கு தெரியுமே..?

சரி, நிஜமாகவே இந்த ஹோரையின் செயல்பாடு அறிய - நீங்களே ஒரு சில விஷயங்களில் , துவங்கிப் பாருங்கள். வியந்து போவீர்கள். மனித வாழ்வில் ஓரைகளின் பங்களிப்பு முக்கியமானது. நம்மை அறியாமலேயே ஓரைகளின் கதிர்வீச்சை உணர முடியும். அதை உணர்ந்து நடந்தால் நலம் பெறுவீர்கள்.

குறிப்பாக கணவன் , மனைவி ஏதாவது வாக்குவாதம் செய்யத் துவங்கினால் , செவ்வாய் அல்லது சனி ஓரை வந்தால், அடக்கி வாசியுங்கள். அது மிகப் பெரிய சண்டையாகிவிடும். கணவன் . மனைவி என்றில்லை. மற்றவருக்கும் பொருந்தும். ஆதலால் , காலத்தின் இந்த ரகசிய கணக்கு - நீங்களும் தெரிந்து வைத்திருப்பதில் தவறில்லை...

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் - மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும். 
என்னையா... அவசரமா பஞ்சாயத்து கூட்டி இருக்கீங்க.. என்ன சமாச்சாரம்... ?
ஐயா... இந்த ஹோரை சம்பந்தமா.... கொஞ்சம் சொல்லிக் கொடுத்தீங்கன்னா...
ஏற்கனவே சொல்லி இருக்கிறோமேயா .... திரும்ப திரும்ப கேட்குறே.. நீ.. திரும்ப திரும்ப கேட்குறே நீ ......

"ஏ... ராசு...இன்னுமா தூங்குறே.... வேலைக்கு இன்னைக்கு போகலையா?"
"அய்யய்யே... எல்லாம் கனவா!"
"யம்மா... இந்தா ரெடி ஆகணும்மா"... கண்ணைக் கசக்கிவிட்டு எழுந்து உட்கார்ந்தேன்... ஆமா... ஹோரைனா என்ன? நாம ஏற்கனவே எழுதி இருக்கிறோம்ல.... அப்புறம் என்ன? சரி, திரும்ப படிச்சுப் பார்ப்போம்ன்னு உட்கார்ந்தேன்யா... ஒரு விஷயம் சொன்னா , நல்ல இருக்கும்னு தோணுச்சு... அதுக்குத் தான் இந்த பதிவு..... வாங்க பார்ப்போம்...!
====================================================

ஹோரை : நமது ஜோதிட பாடங்கள் படித்தவர்கள் - இதை நன்றாக அறிவீர்கள்... ஹோரை என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன என்று..!
படிக்காதவன் படத்தில - மலேசியா வாசுதேவன் சார் குரல்ல - ரஜினி பாடுவாரே.. "சொல்லி அடிப்பேனடி ... அடிச்சேனுன்னா நெத்தி அடிதானடி"ன்னு ... அந்த பாட்டு மாதிரி....

ஹோரை பார்த்து நீங்க செய்ற எல்லாவேலையும் - சும்மா நச்சு நச்சுன்னு முடிக்கலாம்....

ஹோரை அட்டவணை :


மணி-முதல்
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
6.00 - 7.00
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
7.00 - 8.00
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
8.00 - 9.00
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
9.00 -10.00
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
10.00 -11.00
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
11.00 -12.00
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
12.00 -01.00
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
01.00 -02.00
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
02.00- 03.00
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
03.00-04.00
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
04.00-05.00
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
05.00-06.00
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
06.00 -07.00
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
07.00 -08.00
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
08.00 -09.00
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
09.00 -10.00
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
10.00 -11.00
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
11.00 -12.00
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
12.00 -01.00
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
01.00 -02.00
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
02.00- 03.00
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
03.00-04.00
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
04.00-05.00
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
05.00-06.00
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்


சரி, அட்டவணையை கையில வைச்சுக்கிட்டே இருக்கவும் முடியாது... சுலபமா ஞாபகம் வைச்சுக்க என்ன வழி ன்னு நம்ம நண்பர் ஒருத்தர் கேட்டு இருந்தார்...

அந்த நாளைக்கு உரிய ஹோரை முதல்ல வரும், காலை 6 மணிக்கு. ஒரு மணி நேரத்துக்கு பிறகு அடுத்த ஹோரை ஆரம்பிக்கும். செவ்வாய் கிழமைன்னு வைச்சுக்கோங்க... முதல் ஹோரை செவ்வாய் ஹோரை - காலை ஆறு மணியில் இருந்து ஏழு மணி வரைக்கும் வரும்..

மதியம் ஒரு மணிக்கு திரும்ப செவ்வாய் ஹோரை வரும். அதே மாதிரி இரவு எட்டு மணிக்கு வரும்.

Cycle time : 6 - 1 - 8 - 3

சரி, முதல் ஹோரை தெரிய வந்திடுச்சு , இரண்டாவது எப்படி கண்டு பிடிக்க?

நிஜமா, நாம் இப்போ சொல்லப் போறது, எனக்கு யாருமே சொல்லிக் கொடுக்கலை.. நானா கண்டு பிடிச்சது , சுலபமா எப்படி ஞாபகம் வைச்சுக்கிடாம்னு ... எப்படின்னு பாருங்க..... ( உனக்கு வேற வேலையே இல்லையா... இப்படியா லூசு மாதிரி இருப்பேன்னு , நீங்க அக்கறையோட கேட்குறது , எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு பாஸூ...)

ஞாயிறு - சூரியன்
திங்கள் - சந்திரன்
செவ்வாய்
புதன்
வியாழன் - குரு
வெள்ளி - சுக்கிரன்
சனி

வரிசைப்படுத்திக்கிட்டோமா ?

இப்போ , reverse ல - ஒன்னு விட்டு ஒன்னு போகணும்....

செவ்வாய் ஹோரைக்கு அடுத்து , சூரியன், அடுத்து சுக்கிரன், அடுத்து புதன், அடுத்து சந்திரன் , அடுத்து சனி , அடுத்து குரு , அடுத்து திரும்ப செவ்வாய்....

சொல்ல வந்த விஷயம் தெளிவா புரியுதா?
ஏன்யா .. நான் கரெக்டா பேசுறனா.. ன்னு சங்கிலி முருகன் மாதிரி புலம்ப வைச்சுடாதீங்க.... (கையைப் பிடிச்சு இழுத்தியா... கையைப் பிடிச்சு இழுத்தியாடா......)

எனக்கு ஜோதிடம் சொல்லிக் கொடுத்த என்னோட குருநாதர் - குரு ஹோரை வர்றப்போ.. கரெக்டா ஆரம்பிப்பார்.... செவ்வாய் ஹோரை வரும்போது படக்குன்னு நிறுத்திடுவார் ... செவ்வாய் ஹோரை தேவையில்லாத வாக்கு வாதம், சண்டைன்னு கொண்டு போகும்....
திரும்ப திரும்ப பேசுற நீ...
ஒரு பெரிய பிரச்னை வர்ற மாதிரி இருக்கும்னா, செவ்வாய் ஹோரை அந்த நேரத்துல வந்தா... தயவு செஞ்சு வாயை மூடிக்கிட்டு , கம்முன்னு இருங்க...

வீட்டுக்கார அம்மணி கூட, ஏதாவது சண்டை வந்து , கொஞ்சம் நேரம் கழிச்சு சமாதானம் ஆகும் பாருங்க.. அதுல கூட ஹோரை யோட கைங்கர்யம் இருக்கலாம்...

காலம் அறிந்து நடவாதவன் , கோலம் அழிந்து குரங்காவான் னு பழமொழி இருக்கு தெரியும் இல்லை...

ரொம்ப பெரிய காரியம் ஒன்னு தொடங்கணுமா, நல்ல சுப ஹோரைகள் ல தொடங்குங்க.... சூப்பரா வரும்...

கோவில்ல சாமி கும்பிடனுமா... குரு ஹோரைல செய்யுங்க... நல்ல பலன் கிடைக்கும்....