காலம்,தேசம், அண்டம் என்ற பரிமாணங்களைத் தாண்டியவர்கள் சித்தர்கள்!(உலக அதிசயத்தில் சித்தர்கள்) World History is one of the Amazing Creation

மணக்கால் அய்யம்பேட்டை | 11:59 AM | Best Blogger Tips

Picture


உலகம் தோன்றியது எப்போது?                                                                  
 நாம் வசிக்கும் உலகம் ஏறக்குறைய 4.57 பில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.உலகம் தோன்றிய பொழுது சுற்றுசூழலில் ஆக்ஸிஜன் கிடையாது.கிட்டதட்ட 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் சுற்றுசூழலில் 0.01% ஆக்ஸிஜன் இருந்தது. 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் 0.1% ஆக உயர்ந்தது.மனிதன் உயிர் வாழ சுற்றுசூழலில் 7% ஆக்ஸிஜன் என்பது குறைந்தபட்ச தேவை. ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு 17-18% ஆக்ஸிஜன் தேவை.ஒரு காலத்தில் 36-38% வரை ஆக்ஸிஜன் இருந்துள்ளது. இந்த உயர்ச்சிக்கு காரணம் தாவரங்கள். தற்பொழுது சுற்றுசூழலில் 20-21% ஆக்ஸிஜன் உள்ளது. அதாவது நாம் கிட்டதட்ட 50% சதவீதம் ஆக்ஸிஜனை அழித்துள்ளோம். சில நகரங்களில் சில தொழிற்சாலை இடங்களில் இது 9% சதவீதமாகக் கூட உள்ளது.சராசரியாக ஒரு மனிதனுக்கு ஒரு மணி நேரத்துக்கு 53லிட்டர் ஆக்ஸிஜன் சுவாசிப்பின் மூலம் தேவைப்படுகிறது. சராசரியாக ஓர் இலையால் 5மில்லி ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும்.நன்கு விளைந்த இரண்டு மரங்களால் நான்கு உறுப்பினர் கொண்ட குடும்பத்திற்கு ஓராண்டுக்கு தேவையான ஆக்ஸிஜன் கொடுக்க முடியும்.26000 மைல் ஓடும் கார் கக்கும் கார்பனை ஒரு மரத்தால் ஒரு வருடத்தில் உறிஞ்சிக்கொள்ள முடியும்.

                              நீர், உணவு, காற்று நமது அத்தியாவசிய தேவைகள்; இயற்கை நமக்கு அள்ளிக் கொடுக்கும் விலைமதிக்க முடியாத செல்வங்கள். இப்பொழுது பார்த்தால் நாம் ஒவ்வொன்றுக்கும் விலை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
நீர்:நகரங்களில் ஏற்கனவே குடிநீர் என்றால் மினரல் வாட்டர் என்றாகிவிட்டது. வீட்டிற்கொரு மினரல் வாட்டர் கேனோ, அல்லது மினரல் வாட்டராக்கும் சாதனமோ இருக்கின்றது. அதாவது இயற்கையாக சுத்தமான குடிதண்ணீர் காசு கொடுத்தாலும் கிடைக்குமா என்று தெரியவில்லை.
 உணவு:இயற்கை உரத்துடன் மட்டுமே வரும் விளைச்சல்களை "ஆர்கானிக்" என்று விற்கிறார்கள். இதன் விலை சாதாரண விளைபொருட்களை விட மூன்று மடங்கு. ஆக நல்ல இயற்கை உணவு வேண்டுமென்றால் நிறைய காசு கொடுக்க வேண்டும். காற்று:காற்றை நாம் மாசுபடுத்திக் கொண்டிருக்கிறோம். சமீபத்தில் கேட்ட செய்தி நல்ல "ஆக்ஸிஜன்" சுவாசிக்க வேண்டுமெனில் ஆக்ஸிஜன் பார்லர் உண்டு. நீங்கள் கொடுக்கும் காசைப் பொறுத்து சில மணி நேரம் ஆக்ஸிஜனை விரும்பும் மணத்துடன் சுவாசிக்கலாம். அப்படி எனில் நல்ல சுவாசிப்பும் இப்பொழுது காசுக்கு கிடைக்கிறது.

உலகம் தோன்றிய கதை

Picture
அண்டம்.அண்டம் (Universe)  உருவானது குறித்து பல கதைகள் கூறபட்டாலும், இயற்பியலின்படி அது சில பொருட்களின் மோதலினால் உருவானது என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும் இந்த அண்டம் முதலும் முடிவும் இல்லாததாக நமக்கு விளங்கி வருகிறது. ஆதலினால் அண்டம் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.அண்டம் என்ற சொல்லானது, பொதுவாக அனைத்தையும் கொண்டுள்ளது என்று வரையறுக்கப்படுகிறது. இருப்பினும், மாறுபட்ட வரையறையைப் பயன்படுத்தி, "அண்டம்" என்பது மொத்தமாக பல்லண்டம் என்று அழைக்கப்படும் பல தொடர்பற்ற "அண்டங்களில்" ஒன்று என நம்பப்படுகிறது. எடுத்துக்காட்டாக, குமிழ் அண்டக் கொள்கையில், எண்ணிலா வெவ்வேறுவிதமான "அண்டங்கள்" உள்ளன, அவை ஒன்றுக்கொன்று வேறுபட்ட இயற்பியல் மாறிலிகளைக் கொண்டிருக்கின்றன. இதேபோல், பல உலகங்கள் கருதுகோளில், ஒவ்வொரு குவாண்டம் அளவீட்டிலும் புதிய "அண்டங்கள்" தோற்றுவிக்கப்படுகின்றன. பொதுவாக இந்த அண்டங்கள் நமது அண்டத்திலிருந்து முழுமையாக தொடர்பில்லாமல் இருப்பதாகக் கருதப்படுவதால், அவற்றை சோதனையின் மூலம் கண்டறிய இயலாது.தற்போதைய வானியல் ஆய்வுகளின்படி, அண்டத்தின் வயது 13.73 (± 0.12) பில்லியன் ஆண்டுகள் என்றும், காணக்கூடிய அண்டத்தின் விட்டம் குறைந்தது 93 பில்லியன் ஒளி ஆண்டுகள் அல்லது 8.80 ×1026மீட்டர்கள் எனவும் அறியப்படுகிறது. (எந்தவொரு பருப்பொருளும் வரையறுக்கப்பட்ட காலவெளியில் ஒளியின் வேகத்தை விட அதிகமான வேகத்தில் செல்லமுடியாது என்று சிறப்பு சார்புக்கொள்கை குறிப்பிடுவதால், 13 பில்லியன் ஆண்டுகளில் 93 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இரண்டு விண்மீன் திரள்கள் பிரிந்து சென்றிருக்கிறது என்பது முரண்பாடாகத் தோன்றலாம். இருப்பினும் பொது சார்பு கொள்கையின் படி, விண்வெளியானது உள்ளார்ந்த வரம்பின்றி அதன் வீதத்தில் விரிவடையலாம்; ஆகவே இரண்டு விண்மீன் திரள்கள், அவற்றுக்கு இடையேயான இடைவெளி அதிகரிக்கும் பட்சத்தில் ஒளியின் வேகத்தை விட மிகவேகமாகப் பிரியலாம்.) அண்டத்தின் அளவானது முடிவுள்ளதா அல்லது முடிவற்றதா என்பது உறுதியற்றதாக உள்ளது.ஓர் உயிர் உருவாகும் மூலத்தை தான் நாம் ‘அண்டம்’ என அழைக்கிறோம். எனவே தான் உயிரை உருவாக்கும் கரு முட்டைக்குக்கூட அறிவியலில் அண்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.                                  பல கோடி உயிர்களைக் கொண்ட புவியையும், விண்மீன்களையும், கோள்களையும், விண்மீன் கூட்டங்களையும், வெற்றிடங்களையும் தனக்குள்ளே வைத்திருக்கும் பிரபஞ்சத்தை கூட நாம் அண்டம் என்றே அழைக்கிறோம். அண்டம் என்ற பெயருக்கு ஏற்ப அது அகண்டும் இருக்கிறது.ஒளி ஆண்டு உலகிலேயே மிகவும் வேகமாக பயணம் செய்யும் ஆற்றல் பெற்றவை ஒளிக்கதிர்கள் மட்டும்தான். ஓர் ஒளிக்கற்றை ஓர் ஆண்டில் பயணம் செய்து கடக்கின்ற தூரம் தான் ஓர் ஒளியாண்டு என அழைக்கப்படுகிறது. அப்படியானால் ஒளி ஒரு வினாடி நேரத்தில் பயணம் செய்யும் தொலைவு என்ன? ஒளி ஒரு வினாடி நேரத்தில் 3,00,000 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்கிறது (1,86,000 மைல்கள்). வினாடி கணக்கை நாம் அப்படியே ஓர் ஆண்டுக்கு மாற்றலாம்.ஒரு வினாடிக்கு ஒளி பயணம் செய்யும் வேகம் 3 x 108 என்ற அளவீட்டால் குறிக்கப்படுகிறது. இந்த அளவீட்டுடன் நாம் ஓர் ஆண்டின் மொத்த நாட்களையும், ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரத்தையும், ஒரு மணி நேரத்தின் அறுபது நிமிடங்களையும், ஒரு நிமிடத்தின் அறுபது வினாடிகளையும் சேர்த்து பெருக்கிக் கொள்ளலாம்.ஓர் ஒளி ஆண்டு 3 x 108 x 365 x 24 x 60 x 60 விடை என்ன தெரியுமா? 7.46 மில்லியன் (ஒரு மில்லியன் = 10 லட்சம்) கிலோ மீட்டர் (5.88 மில்லியன் மைல்கள்). இவ்வளவு வேகமாகப் பயணம் செய்யும் ஒளியே, நாம் வாழும் புவியும் சூரியனும் இடம் பெற்றுள்ள பால்வெளி என்கிற விண்மீன் திரளை கடக்க பல ஆயிரம் ஆண்டுகள் பயணம் செய்யவேண்டும். பால் வெளியின் தூரம் சுமார் 1,00,000 ஒளி ஆண்டுகள் ஆகும்.பூமி தட்டையானது. சூரியன்தான் பூமியைச் சுற்றி வருகிறது என்று ஒரு காலத்தில் நம்பப்பட்டு வந்தது. ஆனால் இன்று இந்தக் கருத்து தவறு என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.இன்று சூரியன், பூமி, மற்ற கோள்கள், சந்திரன்கள் ஆகியவற்றின் எடை, விட்டம், தூரம், அவற்றின் தன்மை, நட்சத்திரங்கள் எவற்றால் ஆனவை. பிரபஞ்சம் என்பது என்ன? போன்ற பல கேள்விகளுக்கும் விடை கிடைத்திருக்கிறது. நிலவுக்கு மனிதன் போய்வந்த கதை  இன்று செவ்வாய் கிரகத்துக்கு ஒரு ஜாலி ட்ரிப் போய்வர முடியுமா என்று விஞ்ஞான உலகம் ஆராயத் தொடங்கிவிட்டது. நமது சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ள வேறு பல சூரியன்களும் அவற்றின் குடும்பங்களும் நம் டெலஸ்கோப்களில்  அறிவியல் அசத்திக்கொண்டிருக்கும் காலம் இது. முதலில் நம் உலகம் எப்படித் தோன்றியது என்பதைத் தெரிந்துகொண்டுவிடவேண்டும். அப்புறம்தான் மற்ற உலகங்களுக்குள் புகுந்து புறப்படமுடியும்.

                      அண்டமானது அதன் அளவு மற்றும் வரலாறு முழுவதும் ஒத்த இயற்பியல் விதிகளாலும் மாறிலிகளாலும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என சோதனைகளும் ஆய்வுகளும் கூறுகின்றன. அண்டவியல் தொலைவில் ஈர்ப்பு விசையே முதன்மையான விசையாகும், மேலும் தற்போது பொது சார்பு கொள்கையே புவியீர்ப்புக் கோட்பாடுகளுக்கான மிகத்துல்லியமானது ஆகும். மீதமுள்ள மூன்று அடிப்படை விசைகள் மற்றும் அவ்விசைகள் செயல்படும், அறியப்பட்ட அனைத்துத் துகள்கள் ஆகியவை தரநிலை மாதிரியின் மூலம் விவரிக்கப்படுகின்றன. அண்டமானது, குறைந்தபட்சம், வெளியின் மூன்று பரிமாணங்களையும் காலத்தின் ஒரு பரிமாணத்தையும் கொண்டுள்ளது, இருந்தபோதிலும் மிகச்சிறிய கூடுதல் பரிமாணங்களையும் கருத்தில் கொள்ளாமல் விட இயலாது. காலவெளி அமைப்பு, மென்மையாகவும் எளிதாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் தோன்றுகிறது. விண்வெளி மிகச்சிறிய சராசரியான வளவைக் கொண்டுள்ளது. ஆகவே அண்டம் முழுமைக்குமான சராசரியை யூக்ளிடியன் வடிவியல் துல்லியமாகக் கணக்கிடுகிறது. மாறாக, குவாண்டம் அளவில் காலவெளி அமைப்பு மிகவும் சீரற்றதாக உள்ளது.

                               பதிவுசெய்யப்பட்ட வரலாறு முழுவதிலும், சில அண்டவியல்கள் மற்றும் அண்டவியலாளர்கள் அண்டம் பற்றிய கருத்துக்களைக் கூற முயன்று வந்துள்ளனர். முந்தைய அளவுசார்ந்த புவிமைய மாதிரிகளை பண்டைய கிரேக்கர்கள் உருவாக்கியிருந்தனர். அவர்கள் அண்டமானது முடிவிலா வெளியை எப்போதும் கொண்டிருக்கிறது, ஆனால் ஒரு பொதுமையம் கொண்ட அளவிடமுடிந்த கோளங்களை உள்ளடக்கியது எனவும் – நிலையான நட்சத்திரங்களைப் பொறுத்து சூரியன் மற்றும் பல்வேறு கோள்கள் – சுற்றி வருகின்றன ஆனால் பூமி நிலையானது, நகராமல் உள்ளது எனவும் முன்மொழிந்தனர். பல நூற்றாண்டுகளாக, மேலும் துல்லியமான ஆய்வுகளும் மேம்படுத்தப்பட்ட புவியீர்ப்புக் கொள்கைகளும் வந்ததன் காரணமாக, முறையே கோபர்நிக்கஸின் சூரியமைய மாதிரியும் நியூட்டனின் சூரியக்குடும்ப மாதிரியும் உருவாகின. வானவியலில் குறிப்பிட்ட முன்னேற்றங்கள் பால்வழித்திரளின் பண்புரு விளக்கத்திற்கும், விண்மீன் திரள்கள் கண்டுபிடிப்புக்கும் மேலும் நுண்ணலை பின்புலக் கதிரியக்கத்திற்கும் வழிகோளியது; விண்மீன் திரள்கள் மற்றும் அவற்றின் நிறமாலை வரிகளின் பரவல் பங்கீடு பற்றிய கவனமான ஆய்வுகள் நவீன அண்டவியல் வளர்ச்சிக்கு மிகுந்த பங்காற்றியது.

அண்டம் (அண்டவியல்) மற்றும் அதன் தோற்றம்

Picture
அண்டத்தைப் பற்றிய பரந்த வரையறை, இடைக்கால தத்துவ அறிஞர் ஜொஹான்னெஸ் ஸ்காட்டஸ் எர்யுஜெனா என்பவரின் De divisione naturae என்ற பிரபலமான புத்தகத்தில் காணப்படுகிறது, அவர் அதை, அனைத்தும் என வரையறுக்கிறார்: இருக்கும் அனைத்தும் மற்றும் இல்லாத அனைத்தும். எர்யுஜெனாவின் வரையறையில் காலம் கருத்தில் கொள்ளப்படவில்லை; எனவே அவரது வரையறையில், இப்போது இருக்கும் அனைத்தும், இதுவரை இருந்த அனைத்தும் மற்றும் இனி இருக்கப்போகும் அனைத்தும் மற்றும் அதே போல, இப்போது இல்லாத அனைத்தும், இதுவரை இல்லாத அனைத்தும் மற்றும் இனி எதிர்காலத்திலும் இல்லாதவை அனைத்தும் என அனைத்தும் அடங்கும். அனைத்தையும் உள்ளடக்கிய இந்த வரையறையை, பின்னாளில் வந்த தத்துவ அறிஞர்கள் பலர் ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால் முழுவதும் வேறுபடாத ஒன்று குவாண்டம் இயற்பியலில் மீண்டும் உருவானது, அது பெரும்பாலும் ஃபெய்மெனின் பாதை-தொகுப்பு சமன்பாட்டில் உள்ளதாகும்.ச் சமன்பாட்டின் படி, அமைப்பின் தொடக்க நிலை முழுமையாக வரையறுக்கப்பட்ட நிலையில் நிகழ்த்தப்படும் சோதனைகளின் பல முடிவுகளின் நிகழ்தகவு வீச்சுகளானது, அந்த அமைப்பானது தொடக்க நிலையிலிருந்து இறுதி நிலைக்குச் செல்வதற்கு வாய்ப்புள்ள அனைத்துப் பாதைகளின் கூடுதலால் நிர்ணயிக்கப்படுகிறது. இயல்பாக, ஒரு சோதனைக்கு ஒரு முடிவே இருக்க முடியும்; வேறு விதமாகக் கூறுவதானால், இந்த அண்டத்தில் அலைச் சார்பின் தொகுப்பு எனப்படும் குவாண்டம் அளவீட்டின் மூலம் உண்மையான ஒரு முடிவே கிடைக்கச் சாத்தியக்கூறுள்ளது.

                                              நன்கு வரையறுக்கப்பட்ட இந்தக் கணித விளக்கப்படி, இல்லாத ஒன்றும் கூட (சாத்தியக்கூறுள்ள அனைத்துப் பாதைகள்) இறுதியில் என்ன இருக்கும் (சோதனையின் முடிவு) என்பதைத் தீர்மானிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். குறிப்பிடும்படியான எடுத்துக்காட்டாக, ஒவ்வொரு எலக்ட்ரானும் மற்ற அனைத்து எலக்ட்ரான்களுடன் உள்ளார்ந்தப் பண்பில் ஒத்தவையாக உள்ளன; இதனால், சமச்சீர் பரிமாற்றம் எனப்படுகின்ற, அவை தங்கள் நிலையைப் பரிமாறிக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளையும் கருத்தில் கொண்டே நிகழ்தகவு வீச்சுகள் கணக்கிடப்பட வேண்டும். அண்டம் பற்றிய இக்கருத்து, இருப்பவற்றையும் இல்லாதவற்றையும் ஒருங்கே முன்வைக்கிறது, இது புத்த மதத்தின் தத்துவங்களான ஷூன்யத்தா, மெய்ம்மையின் சார்பற்ற உருவாக்கம், காட்ஃப்ரைட் லெய்ப்னிஸின் தற்செயல் நிகழ்வு மற்றும் உணர முடியாதவற்றின் அடையாளம் போன்ற நவீனக் கருத்துக்களுக்கும் இணையாக உள்ளது. பெரும்பாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்தின் படி, அண்டம் என்பது இருக்கும், இருந்த மற்றும் இருக்கப் போகும் அனைத்தையும் உள்ளடக்கியது என வரையறுக்கப்படுகிறது. இந்த வரையறை மற்றும் நமது தற்காலப் புரிதல் ஆகியவற்றைப் பொறுத்தவரை, அண்டமானது பின்வரும் மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது: வெளி மற்றும் காலம், இரண்டும் சேர்த்து கால-வெளி அல்லது வெற்றிடம் என அழைக்கப்படும்; பருப்பொருள் மற்றும் ஆற்றலின் பல வடிவங்கள் மற்றும் கால-வெளியை நிரப்பிக்கொள்ளும் உந்தம்; மற்றும் முதல் இரண்டையும் நிர்வகிக்கும் இயற்பியல் விதிகள். இந்தக் கூறுகளை பின்னர் கீழே உள்ள பகுதிகளில் விளக்கமாகக் காணலாம். அண்டம் என்ற சொல்லின் மற்றொரு தொடர்புடைய வரையறை, தற்போது என்பது போன்ற அண்டவியல் காலத்தின், ஒரு கணத்தில் இருக்கும் அனைத்துமாகும், அதாவது "அண்டம் இப்போது மைக்ரோ அலைகள் கதிர்வீச்சில் சீராகக் குளித்தது" என்ற சொற்றொடரில் உள்ளதைப் போன்று.

                              அண்டத்தின் முன்று கூறுகளும் (காலவெளி, பருப்பொருள்-ஆற்றல் மற்றும் இயற்பியல் விதிகள் ஆகியவை) ஓரளவு அரிஸ்டாட்டில் கருத்துக்களுடன் ஒத்துப் போகின்றன. அரிஸ்டாட்டிலின் The Physics ("பிசிக்ஸ்" என்ற சொல்லை நாம் பெற்றது Φυσικης என்னும் இந்தச் சொல்லிலிருந்தே) என்ற புத்தகத்தில், அவர் το παν ஐ (அனைத்தையும்) ஒத்த மூன்று கூறுகளாகப் பிரித்துள்ளார் அவை: பருப்பொருள் (அண்டம் உருவாக்கப்பட்டிருக்கும் பொருள்), வடிவம் (வெளியில் அந்தப் பருப்பொருளின் அமைப்பு) மற்றும் மாற்றம் (பருப்பொருளானது எவ்வாறு உருவாகிறது, அழிக்கப்படுகிறது அல்லது அதன் குணங்கள் எவ்வாறு மாறுகிறது மற்றும் அதேபோல் வடிவமானது எவ்வாறு மாற்றப்படுகிறது). இயற்பியல் விதிகள் எனப்படுபவை, பருப்பொருளின் பண்புகள், வடிவம் மற்றும் அவற்றின் மாற்றங்களை நிர்வகிக்கும் விதிகள் என அறியப்படுகின்றன. பிற்கால தத்துவ அறிஞர்களான லுக்ரிடியஸ், அவரோயீஸ், அவிசென்னா மற்றும் பேரக் ஸ்பினோஸா போன்றோர், இந்தப் பகுப்பை மாற்றியமைத்தார்கள் அல்லது சீர்ப்படுத்தினார்கள்; எடுத்துக்காட்டாக, அவரோயீஸும் ஸ்பினோஸாவும் நேச்சுரா நேச்சுரன்ஸ் (அண்டத்தை நிர்வகிக்கும் தற்போதைய கொள்கைகளை) முந்தைய செயலிலாக் கூறுகளின்மீது செயல்படும் நேச்சுரா நேச்சுராட்டா எனப்படும் கூறுகளை வேறுபடுத்தினர்.

                                அண்டமானது மிகப் பெரியதும் அளவில் முடிவிலாததுமாகும்; நாம் காணக்கூடிய பருப்பொருளானது குறைந்தபட்சம் 93 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவிற்குப் பரவியுள்ளன. இதனுடன் ஒப்பிடுகையில், ஒரு சராசரி விண்மீன் திரளின் விட்டம் வெறும் 30,000 ஒளியாண்டுகளே, மேலும் அடுத்தடுத்துள்ள உள்ள இரு விண்மீன் திரள்களுக்கிடையே உள்ள தொலைவு வெறும் 3 மில்லியன் ஒளியாண்டுகளே. எடுத்துக்காட்டில் உள்ளது போல நமது பால் வெளி திரளானது தோராயமாக 100,000 ஒளியாண்டுகள் விட்டத்தைக் கொண்டுள்ளது, மேலும் நமது அருகாமையிலுள்ள விண்மீன் திரளான ஆந்த்ரோமெடா விண்மீன் திரளானது, தோராயமாக நமது விண்மீன் திரளிலிருந்து 2.5 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.நமது காணக்கூடிய அண்டத்தில், தோராயமாக 100 பில்லியன் (1011) விண்மீன் திரள்கள் உள்ளன . இவற்றில், தோராயமாக பத்து மில்லியன் (107) நட்சத்திரங்களைக் கொண்டிருக்கும் குள்ளர்கள் எனப்படும் திரள்கள் முதல் ஒரு ட்ரில்லியன்(1012) நட்சத்திரங்களைக் கொண்டிருக்கும் பூதங்கள் எனப்படும் திரள்கள் வரையிலான அளவில் மாறுபடும் பல விண்மீன் திரள்கள் உள்ளன, இவை அனைத்தும் விண்மீன் திரளின் நிறை மையத்தைச் சுற்றி வருகின்றன.நாம் காணக்கூடிய பருப்பொருள், அண்டம் முழுவதும் சீராக (ஒருபடித்தானதாகப் ) பரவியுள்ளது, இந்தப் பரவலின் சராசரித் தொலைவு 300 மில்லியன் ஒளியாண்டுகளுக்கும் அதிகம். இருப்பினும் குறைந்த நீள-அளவீடுகளில் பருப்பொருளானது "தொகுப்புகளாக" இருப்பதாக அறியப்படுகிறது, அதாவது வரிசைவாரியான தொகுப்பாக உள்ளது; பல அணுக்கள் சேர்ந்து நட்சத்திரங்களாகவும் பல நட்சத்திரங்கள் சேர்ந்து விண்மீன் திரள்களாகவும், பல விண்மீன் திரள்கள் சேர்ந்து தொகுப்புகளாகவும், மீத்தொகுப்புகளாகவும் மேலும் இறுதியாக மிகப் பெரிய அளவிலான அமைப்பான விண்மீன் திரள் பெருஞ்சுவராகவும் அமைந்துள்ளன. அண்டத்தின் காணக்கூடிய பருப்பொருள், திசை ஒருமியதாகவும் பரவியுள்ளது, அதாவது நாம் காணக்கூடிய எந்த ஒரு திசையும் பிற திசையிலிருந்து வேறுபடுவதில்லை; விண்வெளியின் ஒவ்வொரு பகுதியும் தோராயமாக ஒரே உள்ளடக்கத்தையே கொண்டுள்ளது. அண்டமானது தோராயமாக 2.725 கெல்வின் வெப்பநிலையிலுள்ள ஒரு வெப்பச் சமநிலையிலுள்ள கரும்பொருள் நிறமாலையைச் சார்ந்து, மிக அதிக அளவில் திசை ஒருமிய மைக்ரோ அலை கதிர்வீச்சிலும் குளித்துள்ளது . இவ்வாறு பெரிய அளவீட்டைப் பொறுத்த அண்டமானது ஒருபடித்தானதாகவும் திசை ஒருமியதாகவும் இருக்கிறது என்ற கருதுகோள், அண்டவியல் கொள்கை, எனப்படுகிறது. இது விண்ணியல் ஆய்வுகளாலும் ஆதரிக்கப்படுகிறது.

                          அண்டத்தின் தற்போதைய ஒட்டுமொத்த அடர்த்தி மிகவும் குறைவானது, தோராயமாக இதன் அளவு 9.9 × 10−30 கிராம்கள்/கன செண்டிமீட்டர் ஆகும். இந்த நிறை-ஆற்றலானது 73% அறியப்படாத ஆற்றலையும் 23% குளிர்ந்த அறியப்படாத பருப்பொருளையும் 4% இயல்பான பருப்பொருளையும் கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. இவ்வாறு, அணுக்களின் அடர்த்தியானது ஒவ்வொரு நான்கு கன மீட்டர் பருமனுக்கும், ஒற்றை ஹைட்ரஜன் அணுவின் மடங்கின் வரிசையில் உள்ளது.அறியப்படாத பருப்பொருள் மற்றும் அறியப்படாத ஆற்றலின் குணங்கள் பெரும்பாலும் அறியப்படாததாகவே உள்ளது. அறியப்படாத பருப்பொருளும் இயல்பான பருப்பொருள் போலவே ஈர்ப்பு விசைக்குட்படுகிறது, மேலும் இது அண்டத்தின் விரிவாக்கத்தின் வேகத்தைக் குறைக்கிறது; மாறாக அறியப்படாத ஆற்றலானது அதன் விரிவாக்கத்தை முடுக்குகிறது.அண்டமானது மிகப் பழமையானது மற்றும் வளர்ந்துகொண்டே இருப்பது. அண்டத்தின் வயதைக் கூறும் அதிகபட்சத் துல்லியமான மதிப்பீடு 13.73±0.12 பில்லியன் ஆண்டுகளாகும், இது அண்டவியல் மைக்ரோ அலைப் பின்புலக் கதிர்வீச்சின் அடிப்படையிலானது.தனிச்சார்புள்ள மதிப்பீடுகள் (ரேடியோக் கதிர்வீச்சு வயது கணிப்பு போன்ற முறைகளின் அடிப்படையில்) அதிகத் துல்லியமாக இல்லாவிட்டாலும், அவை அண்டத்தின் வயது 11–20 பில்லியன் ஆண்டுகள்[51] முதல் 13–15 பில்லியன் ஆண்டுகள் வரை என ஒப்புக்கொள்கின்றன. அண்டமானது வரலாறு முழுவதும் ஒரே விதமாக இருக்கவில்லை; எடுத்துக்காட்டுக்கு, குவாசார்கள் மற்றும் விண்மீன் திரள்கள் ஆகியவை மாறிவிட்டன மேலும் வெளியும் விரிவடைந்துள்ளதாகத் தெரிகிறது. 30 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஒரு விண்மீன் திரளிலிருந்து வரும் ஒளியானது 13 பில்லியன் ஆண்டுகள் மட்டுமே பயணித்திருந்தாலும் பூமியிலுள்ள விஞ்ஞானிகள் அதை எப்படி அறிய முடியும் என்பதை இந்த விரிவாக்கமே விளக்குகிறது; அவற்றுக்கிடையே உள்ள வெளியானது விரிவடைந்துள்ளது. தொலைவிலுள்ள விண்மீன் திரள்களிலிருந்து வரும் ஒளியானது சிவப்பு நகர்வுக்குட்படுகிறது; அதாவது ஒளியின் பயணத்தின் போது, உமிழப்பட்ட போட்டான்களின் அலை நீளங்கள் அதிகரிக்கின்றது மற்றும் அதிர்வெண் குறைகின்றது என்ற கருத்தின் படி, இந்த விரிவாக்கமானது இசைவுள்ளதாக அறியப்படுகிறது. இந்த வெளியின் விரிவாக்கமானது முடுக்கப்படும் வீதமானது, டைப் லா சூப்பர் நோவா பற்றிய ஆய்வுகளின் அடிப்படையிலும் பிற தரவுகளின் ஆதரிப்பிலும் உள்ளது.

அண்டத்தின் பரிமாணங்கள்

Picture
                             அண்டம் உருவாக்கப்பட்டுள்ள அடிப்படை மூலத் துகள்கள். ஆறு லெப்டான்களும் ஆறு குவார்க்குகளும் பல பருப்பொருளைக் கொண்டுள்ளன; எடுத்துக்காட்டாக, அணுக்கருவின் புரோட்டான்களும் நியூட்ரான்களும் குவார்க்குகளால் ஆனவை, எங்கும் பரவியுள்ள எலக்ட்ரான் ஒரு லெப்டானாகும். இந்தத் துகள்கள், நடு வரிசையில் காண்பிக்கப்படும் காஜ் போஸான்களின் வழியே தொடர்புகொள்கின்றன, இவை ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட வகை காஜ் சமச்சீர்மையைக் கொடுள்ளன. ஹிக்ஸ் போஸான் (இதுவரையிலான ஆய்வுகளின்படி) அதனோடு தொடர்புடைய துகள்களின் மீது நிறை உடையவை என்றே நம்பப்படுகிறது. ஈர்ப்பியலுக்கான காஜ் போஸானான ஈர்ப்பியல் இதில் காண்பிக்கப்படவில்லை.வெவ்வேறு வேதியியல் தனிமங்களின் குறிப்பாக ஹைட்ரஜன், டியூட்ரியம் மற்றும் ஹீலியம் போன்றவற்றின் ஒப்புமை விகிதங்கள் அண்டம் முழுவதும், அதே வேளையில் அவற்றின் அறியக்கூடிய வரலாறு முழுவதும் ஒரே சீராக ஒத்தவையாக உள்ளன.அண்டமானது எதிர்ப்பொருளை விட அதிக அளவு பருப்பொருளையே கொண்டுள்ளது இது CP மீறலின் ஆய்வுகளுக்குத் தொடர்புடைய சாத்தியக்கூறுள்ள ஒரு சமச்சீரின்மையாகும். அண்டத்திற்கு நிகர மின் சுமை இல்லை என அறியப்படுகிறது, மேலும் இதனால் அண்டவியல் நீள அளவீடுகளில் ஈர்ப்பு விசையே முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. அண்டத்திற்கு நிகர உந்தமும் கோண உந்தமும் இருப்பதாகத் தெரிகிறது. அண்டமானது வரையறுக்கப்பட்டதெனில், நிகர மின் சுமை இல்லாமல் இருப்பதும், உந்தமும் ஒப்புக்கொள்ளப்பட்ட இயற்பியல் விதிகளைப் (முறையே காஸ் விதி மற்றும் தகைவு-ஆற்றல்-உந்த சூடோபண்புருவின் விரிவற்றக் கொள்கை) பின்பற்ற வேண்டும்.

                             அண்டமானது மென்மையான காலவெளித் தொடர்பத்தைக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது, இது வெளி சார்ந்த மூன்று பரிமாணங்களையும் காலம் சார்ந்த ஒரு (காலப்) பரிமாணத்தையும் கொண்டுள்ளது. சராசரியாக வெளியானது மிகத் தட்டையானதாக இருப்பதாக அறியப்படுகிறது (கிட்டத்தட்ட பூச்சிய வளைவு கொண்டுள்ளது), அதாவது யூக்ளிடியன் வடிவியலே அண்டத்தின் பெரும்பாலான அளவீடுகளில் சோதனை முறைகளில் அதிகபட்சத் துல்லியமான கொள்கையாக உள்ளது.காலவெளியும், குறைந்தது காணக்கூடிய அண்டத்தின் நீள அளவீட்டில் ஒரு எளிதாக இணைக்கப்பட்ட பிரதேசவியலைக் கொண்டுள்ளது. இருப்பினும், தற்கால ஆய்வு முடிவுகள், அண்டம் பல பரிமாணங்களைக் கொண்டிருப்பதற்கும் அதன் காலவெளியானது உருளை அல்லது முடிவிலாச் சுருளின் இரு பரிமாண வெளியின் அமைப்பை ஒத்து, பலப்படித்தான இணைக்கப்பட்ட ஒட்டுமொத்த பிரதேசவியலைக் கொண்டிருப்பதற்குமான சாத்தியக்கூறுகளைப் புறக்கணிக்க முடியாது என்பதைக் காட்டுகின்றன.அண்டமானது முழுவதும் ஒத்த இயற்பியல் விதிகள் மற்றும் இயற்பியல் மாறிலிகளால் நிர்வகிக்கப்படுகிறதாகத் தெரிகிறது.பெரும்பாலான இயற்பியலின் நிலையான மாதிரிகளின் படி, அனைத்துப் பருப்பொருளும் லெப்டான்கள் மற்றும் குவார்க்குகள் மற்றும் அவற்றைக் கொண்டுள்ள ஃபெர்மினான்கள் ஆகிய மூன்று கூறுகளால் ஆனது. இந்த அடிப்படைத் துகள்கள் அதிகபட்சம் அடிப்படைத் தொடர்புகளின் மூலம் தொடர்பு கொள்கின்றன: அவை மின்காந்தவியல் மற்றும் வலுவிலா அணுக்கரு விசை ஆகியவற்றை உள்ளடக்கிய மின்-வலுவிலா தொடர்பு; குவாண்டம் குரோமோடைனமிக்ஸ் விவரிக்கும் வலுவான அணுக்கரு விசை; மற்றும் தற்காலத்தில் பொது சார்பு கொள்கையின் மூலம் சிறப்பாக விவரிக்கப்படும் ஈர்ப்பியல் ஆகியனவாகும். முதல் இரண்டு தொடர்புகளும் மறு-சீர்ப்படுத்தப்பட்ட குவாண்டம் புலக் கொள்கையால் விவரிக்கப்படக்கூடும், மேலும் குறிப்பிட்ட வகை காஜ் சமச்சீர்மைக்கு உரிய காஜ் போஸோன்கள் இவற்றுக்கு இடை ஊடகமாக இருக்கக்கூடும். சரக் கொள்கையின் பல வடிவங்கள் நமக்கு நம்பிக்கை ஏற்படுத்தினாலும், பொது சார்பு கொள்கையின் மறு-சீர்ப்படுத்தப்பட்ட குவாண்டம் புலக் கொள்கை ஒன்று இதுவரை உருவாக்கப்படவில்லை. வெளி மற்றும் காலம் சார்ந்த நீள அளவீடுகள் போதுமான அளவு சிறியதாக இருக்கும்பட்சத்தில் சிறப்பு சார்பியல் கொள்கையானது அண்டம் முழுமைக்கும் பொருந்துவதாக நம்பப்படுகிறது; அவ்வாறு இல்லாவிட்டால் பொது சார்பியல் கொள்கையின் பொதுவான கொள்கையே பயன்படுத்தப்பட வேண்டும். பிளாங்கின் மாறிலியான h அல்லது புவியீர்ப்பு மாறிலியான G போன்ற இயற்பியல் மாறிலிகள் அண்டம் முழுவதிலும் கொண்டிருக்கும் குறிப்பிட்ட மதிப்புகளுக்கான விளக்கம் ஏதும் இல்லை. மின்சுமை, உந்தம், கோண உந்தம் மற்றும் ஆற்றல் ஆகியவற்றின் அழிவின்மை விதிகள் போன்ற பல அழிவின்மை விதிகள் காணப்படுகின்றன; பெரும்பாலும் இந்த அழிவின்மை விதிகள் சமச்சீர்மை அல்லது கணிதவியல் ஒப்புமைகள் ஆகியவற்றுடன் தொடர்புள்ளவை எனக் கூற முடியும்.

                            அண்டம் (அண்டவியல்) மற்றும் அதன் தோற்றம் குறித்து பல மாதிரிகள் முன்மொழியப்பட்டுள்ளன, அந்த மாதிரிகள் அவை உருவான காலத்தில் கிடைத்த தரவு மற்றும் அண்டத்தின் ஆய்வுகளை அடிப்படையாக வைத்து அமைந்திருந்தன. வரலாற்றின் படி அண்டவியல் மற்றும் அண்ட உற்பத்தியியல் ஆகியவற்றின் கொள்கைகள் பல விதமான கடவுள்களின் செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து அமைந்திருந்தன. இயற்பியல் விதிகளால் நிர்வகிக்கப்படும், அண்டத்தின் நடுநிலையான கொள்கைகளை முதலில் கிரேக்கர்களும் இந்தியர்களும் முன்மொழிந்தனர். பல நூற்றாண்டுகளாக நடைபெற்ற விண்வெளி ஆய்வுகள் மற்றும் இயக்கம் மற்றும் ஈர்ப்பியல் கொள்கைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக நமக்கு அண்டத்தின் மிகத் துல்லியமான விளக்கங்கள் கிடைத்துள்ளன. அண்டவியலின் நவீன சகாப்தம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் 1915 இல் வெளிவந்த பொது சார்புக் கொள்கையுடன் தொடங்கியது, அது மொத்த அண்டத்தின் தோற்றம், வளர்ச்சி மற்றும் முடிவு ஆகியவற்றை அளவிடும் தன்மையில் கணிப்பதைச் சாத்தியமாக்கியது. ஒப்புக்கொள்ளப்பட்ட மிக நவீன அண்டவியல் கொள்கைகள் பொது சார்புக் கொள்கையின் அடிப்படையில் அமைந்தவை, அதிலும் குறிப்பாக, கணிக்கப்பட்ட பெரு வெடிப்புக் கொள்கை; இருப்பினும் எந்தக் கொள்கை சரியானது என்பதைத் தீர்மானிக்க கூடுதல் கவனமான அளவிடுகள் தேவை.அண்டத்தின் முற்கால தத்துவவியல் மாதிரிகள் இந்தியத் தத்துவம் மற்றும் இந்து சமயத் தத்துவம் ஆகியவற்றின் நூல்களான வேதங்களில் காணப்படுகின்றன. இவை கடந்த கி.மு. 2 ஆம் ஆயிரமாண்டைச்(வெண்கலக் காலத்தின் இடைக் காலம் முதல் இறுதிக்காலம் வரை) சேர்ந்தவை. அவை விவரிக்கும் பண்டைய இந்து அண்டவியலில், அண்டமானது உருவாவதும் அழிவதும் தொடர்ந்து ஒரு சுழற்சியாக நிகழ்ந்துகொண்டே உள்ளது, மேலும் இந்த ஒவ்வொரு சுழற்சிக்குமான காலம் 4,320,000 ஆண்டுகளாகும். Hinduபழங்கால இந்து மற்றும் புத்தமதத் தத்துவவாதிகளும் ஐந்து பூதங்களின்(அடிப்படைக் கூறுகள்) அடிப்படையிலான கொள்கையை வழங்கினர் அவை, வாயு (காற்று), அப் (நீர்), அக்னி (நெருப்பு), ப்ரித்வி/பூமி (புவி) மற்றும் ஆகாஷா (வெளி) ஆகியவனவாகும். கி.பி. 6ஆம் நூற்றாண்டில், வைஷேஷிகா பள்ளியின் நிறுவனரான கானடா என்பவர்அணுவியல்(ஆட்டோமிசம்) என்ற கொள்கையை உருவாக்கினார், அதில் ஒளி மற்றும் வெப்பம் ஆகியவை ஒரே பொருளின் இரு வகைகளே என முன்மொழிந்தார்.கி.பி. 5ஆம் நூற்றாண்டில், புத்த அணுவியல் தத்துவவாதியான டிக்னாகா என்பவர் அணுக்கள் புள்ளியளவிலானவை, காலவரம்பற்றவை மற்றும் ஆற்றலால் ஆனவை என முன்மொழிந்தார். அவர்கள் உண்மையான பருப்பொருள் இருப்பதை மறுத்தனர், மேலும் இந்த நகர்வானது தொடர்ச்சியான ஆற்றலின் கண நேரப் பிரவாகத்தால்தான் நிகழ்கிறது என முன்மொழிந்தனர்.

                              பல கலாச்சாரங்களில் உலகத்தின் தோற்றத்தை விளக்கும் கதைகள் உள்ளன அவற்றை பொதுவான சில வகைகளில் பிரிக்கலாம். அப்படி ஒரு வகைக் கதையில் உலகமானது ஒரு உலக முட்டையிலிருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது; இது போன்ற கதைகளில் ஃபின்லாந்தின் காப்பியச் செய்யுளான கலேவாலா , சீனாவின் பாங்குவின் கதை அல்லது இந்தியாவின் பிரம்மானந்த புராணம் ஆகியவை அடங்கும். ஒன்றுக்கொன்று தொடர்புடைய கதைகளில், உலகின் தோற்றமானது ஒற்றை முழுமையிலிருந்து தோற்றுவிக்கப்படுகிறது அல்லது உருவாக்கப்படுகிறது. திபெத்தின் ஆதி புத்தா என்ற கருத்திலும், பண்டைய கிரேக்கத்தின் கையா (பூமித் தாய்) என்ற கதையிலும், ஆஜ்டெக் கடவுளான கோட்ளிக்கியூ அல்லது பண்டைய எகிப்திய கடவுள் ஆட்டம் ஆகிய கதைகளிலும் உலகின் தோற்றம் இவ்வாறே விளக்கப்பட்டுள்ளது. மற்றொரு வகைக் கதையில், உலகமானது மாவோரி கதையில்வரும் ராங்கியும் பாப்பாவும் போன்ற ஆண் மற்றும் பெண் கடவுளின் சேர்க்கையால் உண்டானது எனக் கூறப்படுகிறது. பிற கதைகளில், அண்டமானது கடவுளின் பிணம் போன்ற, அதற்கு முன்பே இருந்த பொருட்களிலிருந்து உருவாக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, பாபிலோனியக் காப்பியமான எனுமா எலிஷ் என்பதில் உள்ள டயாமட் என்னும் கடவுளிடமிருந்து அல்லது ஸ்காண்டிநேவிய புராணத்தில் ஈமிர் என்ற பூதத்திடமிருந்து அல்லது ஜப்பானிய புராணத்தில் உள்ள இஸனாகீ மற்றும் ஈஸனாமி போன்ற தெய்வங்களிடமிருந்து உருவானது. மற்றொரு வகைக் கதை ஒன்றில், ஒரு தெய்வத்தின் கட்டளையால் உலகம் உருவாக்கப்பட்டது எனக்கூறப்படுகிறது. இக்கருத்து, ப்டா என்ற பழங்கால எகிப்தியக் கதையிலும் விவிலியத்தின் ஆதியாகமத்தில் உள்ள விளக்கங்களிலும் உள்ளதைப் போன்றது. பிற கதைகளில் அண்டமானது பிரம்மன் மற்றும் ப்ரக்ருததி அல்லது தாவோ மார்க்கத்தின் இயின் மற்றும் யாங் போன்ற அடிப்படைக் கொள்கைகளிலிருந்து உருவானதாகக் கூறப்படுகிறது.

திருமூலர் செய்த சித்து அதிசயங்கள்

Picture
                                    ஒருமுறை திருமூலர் ஆகாய மார்க்கமாகப் பறந்து அண்டம் (உதாரணமாக மில்கிவே என்பது நமது அண்டம்.நமக்கு அருகில் இருக்கும் அண்டத்தின் பெயர் அண்ட்ரோமேடா.நம்மிடமிருந்து 2000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கிறது.அதாவது விநாடிக்கு 3 லட்சம் கி.மீ.வேகத்தில் செல்லும் ராக்கெட்டில் இங்கிருந்து புறப்பட்டால், அங்கே செல்ல 2000 வருடங்கள் தான் ஆகும்.நாம் வாழும் சூரியக்குடும்பம் இருப்பது பால்வழித்திரள் எனப்படும் மில்கிவே அண்டத்தில் அதாவது கேலக்ஸியில்.நமது வீடான பால்வழித்திரளின் அகலம் 1,00,000 ஒளி ஆண்டுகள் தான்.நமது பால்வழித்திரளின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு ஒளிவேகத்தில் பயணித்தால் 1,00,000 ஆண்டுகள்தான் ஆகும்.பிரமிப்பாக இருக்கிறதா? இந்தத்தகவல்களை மதிப்பிட்டுக்கூறியிருப்பது நமது வானியல் விஞ்ஞானிகள். ஆக இந்த விஞ்ஞானிகளையும் உங்களையும் என்னையும் படைத்த கடவுள் எப்பேர்ப்பட்டவராக இருப்பார்!?!)விட்டு அண்டம் செல்ல உதவும் ‘சொரூப மணி’ என்னும் பாதரஸ மணியினை வாயிலும், ‘கமலி’ என்ற மணியினைக் கையிலும் எடுத்துக் கொண்டு ஜோதியே வடிவான அண்டவெளியில் பாய்ந்தாராம்.பலப் பல அண்டங்களில் பலப் பல சித்தர்கள் வாழ்வதைப் பார்த்து வியந்து அவர்களிடம் ஆசி பெற்றுச் செல்லும் போது ஒரு சம்பவம் நடந்தது.

                         ஒரு அண்டத்தில் இருந்த சித்தர்களில் ஒருவர் திருமூலரின் கவுனமணிக் குளிகையைப் பார்த்துவிட்டுத் தருவதாகக் கேட்டிருக்கிறார்.திருமூலரும் அதை நம்பி அவரிடம் கவுனமணிக்குளிகையைத் தந்தார்.அவர் அதைப் பயன்படுத்தி பல அண்டங்களுக்கு ஓடி மறைய முயன்றார்.திருமூலரும் தன்னிடமிருக்கும் மற்றொரு குளிகைமூலமாக மிகவும் சிரமப்பட்டு விரட்டிப் பிடித்து அந்த கவுனமணிக் குளிகையை திரும்பப் பெற்றார்.அவரை அந்த அண்டத்திலேயே விட்டுவிட்டுத் திரும்பிவிட்டார்.திருமூலர் தான் பயணித்த அண்டங்களைப் பற்றி பல பாடல்களில் விவரிக்கிறார்.ஒரு அண்டத்தில் பல சித்தர்களைக் கண்டிருக்கிறார்.அவர்களைக் கையால் தொட்டால் கைகளில் தட்டாமல் கை உடலுக்குள் சென்று வந்திருக்கிறது.மற்றொரு அண்டத்தில் உள்ளவர்கள் வெண்சங்கு நிறத்தில் இருக்கிறார்கள்.இன்னொரு அண்டத்தில் தண்ணீருக்குள் வாழ்ந்து வருகிறார்கள்.இவ்வளவு அண்டங்களையும் சுற்றிப்பார்த்த திருமூலர் நமது பூமியில் ஜீவசமாதியானது நாம் செய்த புண்ணியமே!

                           திருமூலர் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம் ஆடுதுறைக்கு அருகில் இருக்கும் சாத்தனூர் என்ற இடத்தில் உள்ள ஐயனார் கோவிலில் அமர்ந்திருந்தார்.அங்கிருக்கும் அரசமரத்தடியில் அமர்ந்து திருமந்திரம் எழுதியுள்ளார்.இந்தக் கோவிலின் பின்புறம் ஜீவசமாதியாகியுள்ளார்.இவ்விடத்தைப் புதுப்பிக்க சில அன்பர்கள் முயன்றபோது,பூமியின் உள்ளே தண்ணீர் நிரப்பப் பட்ட கமண்டலம் ஒன்றும்,யோக தண்டம் ஒன்றும்,ருத்ராட்ச மாலை ஒன்றும் இருந்ததாகவும் கூறுகிறார்கள்.தற்போது இந்த இடத்தில் சில அன்பர்கள் தியான மண்டபம் கட்ட முயன்றுவருகிறார்கள்.திருமூலர் புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தார்.இவரது குருநாதர் நந்தீசர்.இவரது சீடர் போகர்.

அண்டத்தின் தத்துவவியல்

Picture
                                         கி.மு. 6ஆம் நூற்றாண்டிலிருந்து சாக்ரட்டீஸிற்கு முந்தைய கிரேக்கத் தத்துவவாதிகள், மேற்கத்திய உலகில் முற்காலத்தில் அறியப்பட்ட அண்டத்தின் தத்துவவியல் மாதிரிகளை உருவாக்கினர். முற்கால கிரேக்கத் தத்துவவாதிகள் நாம் காணும் தோற்றம் தவறாக இருக்கலாம் என்று கருதினர், ஆகவே தோற்றத்திற்குப் பின்னாலுள்ள அடிப்படை உண்மையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தனர். குறிப்பாக, பருப்பொருளானது வடிவம் மாறக்கூடிய (எ.கா., பனிக் கட்டியிலிருந்து நீர், நீரிலிருந்து நீராவி என) திறனைப் பெற்றுள்ளதை அவர்கள் கவனித்தனர், மேலும் சில தத்துவவாதிகள் உலகிலுள்ள (மரம், உலோகம் போன்ற) அனைத்துப் பொருள்களும் தோற்றத்தில் வெவ்வேறு போலத் தெரிந்தாலும் அவை அனைத்தும் ஆர்ச்சே எனப்படும் ஒற்றைப் பொருளின் பல்வேறு வடிவங்களே ஆகும் என முன்மொழிந்தனர். முதலில் இவ்வாறு செய்தவர் தாலேஸ் என்பவராவார் அவர் அந்தப் பொருளை நீர் என அழைத்தார். அவரைத் தொடர்ந்து, அனாக்ஸிமெனீஸ் அதைக் காற்று என அழைத்தார், மேலும் ஆர்ச்சே துகளானது பல்வேறு வடிவங்களில் ஒன்றுபட்டு வேறுபட்டு இருப்பதற்குக் காரணமாக கவர்ச்சி மற்றும் விலக்கு விசைகள் இருக்க வேண்டும் எனக் கூறினார். எம்படாக்ளீஸ் என்பவர், அண்டத்தின் வேறுபட்ட தன்மையை விளக்க ஒன்றுக்கும் மேற்பட்ட அடிப்படைப் பொருள்களின் கருத்து அவசியம் என முன்மொழிந்தார், மேலும் அனைத்து நான்கு அடிப்படைக் கூறுகளும் (பூமி, காற்று, நெருப்பு மற்றும் நீர்) இருந்ததாகவும் ஆனாலும் அவை வெவ்வேறு சேர்க்கை மற்றும் வடிவங்களில் இருந்ததாகவும் முன்மொழிந்தார். இந்த நான்கு-பூதக் கொள்கையை அவரைத் தொடர்ந்த பல தத்துவவாதிகளும் ஏற்றுக்கொண்டனர்.

                                    எம்படாக்ளீஸுக்கு முந்தைய சில தத்துவவாதிகள் ஆர்ச்சேவானது குறைவான பொருள்களைக் கொண்டுள்ளது எனப் பரிந்துரைத்தனர்; ஹிராக்ளிட்டஸ் லோகோஸ் என்ற கருத்தை வலியுறுத்தினார், பித்தாகோரஸ் அனைத்துப் பொருள்களும் எண்களால் ஆனவை என்றும், தாலேஸின் மாணவாரன அனாக்ஸிமண்டர் எல்லாப் பொருளும் அப்பெய்ரான் எனும் கண்ணுக்குப் புலப்படாத பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது என முன்மொழிந்தார், இது ஓரளவு குவாண்டம் ஃபோம் என்ற தற்காலக் கருத்தை ஒத்துள்ளது. அப்பெய்ரான் கொள்கையில் பல்வேறு மாற்றங்கள் முன்மொழியப்பட்டன, அவற்றில் பிரபலமானது அனாக்ஸகோரஸ் என்பவரின் கொள்கையாகும், அது உலகிலுள்ள பல்வேறுபட்ட பொருள்கள் அனைத்தும் வேகமாகச் சுழலும் அப்பெய்ரானிலிருந்து தோற்றுவிக்கப்பட்டன, அதன் இயக்கமானது நவுஸ் (மனம்) கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது என முன்மொழிந்தது. இன்னும் சில பிற தத்துவவாதிகள் — குறிப்பாக லியூஸிப்பஸ் மற்றும் டிமாக்ரிட்டஸ் போன்றோர் — அண்டமானது வெற்றிடம் எனப்படும் வெளியில் நகரக்கூடிய மற்றும் பகுக்க முடியாத அணுக்களால் உருவாக்கப்பட்டுள்ளது; இயக்கத்திற்கான தடையானது அடர்த்திக்கு நேர் விகிதத்திலிருக்கும், ஆகவே வெற்றிடத்தில் இயக்கத்திற்குத் தடை எதுவும் இருக்காது, எனவே முடிவிலா வேகத்தில் பொருட்கள் நகரும் என்ற கருத்தின் அடிப்படையில் இக்கருத்தை ("இயற்கையானது வெற்றிடத்தைப் புறக்கணிக்கிறது") அரிஸ்டாட்டில் எதிர்த்தார்.ஹிராக்ளிட்டஸ் ஒரு உள்ளார்ந்த மாற்றத்தைக் குறித்து விவாதித்தாலும், அவரது சம காலத்தவரான பார்மெனிடீஸ், புரட்சிகரமான ஒரு கருத்தை முன்வைத்தார், அதில் அனைத்து மாற்றங்களும் தோற்றமே, அடிப்படை உண்மையானது மாறாமலும் ஒற்றை இயல்புள்ளதாகவுமே உள்ளது என கூறினார். பார்மெனிடீஸ், இக்கருத்தை το εν (ஒன்று) எனக் குறிப்பிட்டார். பார்மெனிடெஸின் கொள்கை பல கிரேக்கர்களுக்குக் உண்மையற்றதாகத் தோன்றியது, ஆனால் அவரது மாணவரான ஜெனோ ஆஃப் இலீ பல பிரபலமான முரண்பாடுகளை முன்வைத்து அவர்களுக்குச் சவால் விடுத்தார். இந்த முரண்பாடுகளை அரிஸ்டாட்டில், முடிவிலா பகுப்புக்குட்படும் தொடர்பகத்தை விளக்கி, அதனை வெளிக்கும் காலத்திற்கும் பொருத்தி விளக்கினார்.

                                     அண்டமானது தொடக்கமற்ற முடிவிலாக் கடந்த காலத்தைக் கொண்டுள்ளது என நம்பிய கிரேக்கத் தத்துவவாதிகளுக்கு முரணாக, இடைக்கால தத்துவவாதிகளும் சமயவியலாளர்களும் அண்டமானது தொடக்கத்துடன் கூடிய ஒரு வரையறுக்கப்பட்ட கடந்த காலத்தைக் கொண்டுள்ளது என்ற கருத்தை உருவாக்கினர். இந்தக் கருத்தானது யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமியம் ஆகிய மூன்று ஆப்ரஹாமிய சமயங்களின் உருவாக்கக் கருத்துக்களிலிருந்து உருவானவை. கிறிஸ்தவ தத்துவவாதியான ஜான் ஃபிலோப்பனஸ் என்பவர், முடிவிலாக் கடந்த காலம் என்ற பண்டைய கிரேக்கக் கருத்துக்கு எதிரான இப்படிப்பட்ட முதல் விவாதத்தை முன்வைத்தார். இருப்பினும், முடிவிலாக் கடந்த காலத்திற்கு எதிரான நுட்பமான விவாதங்கள் பண்டைய இஸ்லாமிய தத்துவவாதி, அல்-கிண்டி (அல்கிண்டஸ்); யூத தத்துவவாதி, சாடியா கோன் (சாடியா பென் ஜோஸப்); மற்றும் இஸ்லாமிய சமயவியலாளர், அல்-கஸாலி (அல்கஸேல்) போன்றோரால் உருவாக்கப்பட்டன. அவர்கள் முடிவிலாக் கடந்த காலத்திற்கு எதிராக இரண்டு தர்க்கரீதியான விவாதங்களை உருவாக்கினர், முதலாவது "உண்மையில் முடிவிலாததான ஒன்றின் இருப்பு சாத்தியமற்றது என்பதை அடிப்படையாகக் கொண்ட விவாதம்", அது இவ்வாறு கூறுகிறது.

பல்லண்டம்

Picture
                                                     சில ஊகத்தின் அடிப்படையிலான கொள்கைகள், அண்டம் என்பது, பல்லண்டம் என்று குறிப்பிடப்படுகின்ற, வெவ்வேறாக பிரிந்திருந்த அண்டங்களின் தொகுப்பு என்று கூறின, இது அண்டம் எல்லாவற்றையும் உள்ளடக்கியது என்ற கருத்தை மாற்றுவனவாக இருந்தன.தை வரையறுக்கையில், ஒரு அண்டத்தில் உள்ள எதுவும் மற்றொரு அண்டத்தைப் பாதிக்க எந்தவொரு வாய்ப்பும் இல்லை; அப்படி இரண்டு "அண்டங்கள்" ஒன்றை ஒன்று பாதிக்க முடிந்தால், அவை ஒரே அண்டத்தின் பகுதிகளாகவே இருக்கக்கூடும் எனவும் எடுத்துரைக்கின்றது. இவ்வாறு, மேலும் சில கதைகளில் வரும் பாத்திரங்கள் கற்பனை உலகங்களிடையே பயணிப்பதாகக் கூறப்படும், சரியாகச் சொன்னால், அண்டம் என்னும் வார்த்தை இங்கு முற்றிலும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. பிரிந்திருந்த அண்டங்கள் இயற்பியல்ரீதியாக, ஒவ்வொன்றும் அதற்கே உரிய வெளி மற்றும் நேரத்தையும், பருப்பொருள் மற்றும் ஆற்றலையும் மற்றும் அதற்கே உரிய இயற்பியல் விதிகளையும் கொண்டிருக்க வேண்டும் மற்றும் அவை ஒவ்வொன்றும் இந்த அண்டங்கள் (அவற்றுக்கே உரிய தனி காலத்தைக் கொண்டிருப்பதால்) ஒத்திசைவில் இல்லாததால் அல்லது இவற்றுக்கிடையே (வெவ்வேறு அண்டங்களின் வெளி சார்ந்த நிலைகளுக்கிடையே எந்தத் தொடர்பும் இல்லை என்பதால்) வடிவியல்ரீதியாக இணைத் தன்மையுள்ளதாக இல்லாததாலும், அவற்றின் இணைத் தன்மைக்குச் சவாலாக அமைந்தன. இத்தகைய இயற்பியல் ரீதியாகப் பிரிந்திருக்கும் அண்டங்கள், அறிநிலையின் வெவ்வேறு தளங்கள் என்னும் மெட்டா இயற்பியலின் கருத்திலிருந்து வேறுபடுத்தப்படவேண்டும், இவை இயல்பான இடங்களைக் குறிப்பவையல்ல, இவை தகவல்கள் மூலமாக ஒன்றிணைக்கப்பட்ட தளங்கள். பிரிந்திருந்த அண்டங்களான பல்லண்டம் பற்றிய கருத்து மிகப் பழமையானது; எடுத்துக்காட்டாக, 1277ஆம் ஆண்டில் பாரிசின் தலைமை குருவான ஈடீனி டெம்பயர் என்பவர், கடவுளால் அவர் விரும்புமளவு பல அண்டங்களை உருவாக்க முடியும் என்று கூறினார், இதைப் பற்றி பிரான்சு சமய அறிஞர்களிடையே சூடான விவாதங்கள் எழுந்தன.

                           பல்லண்டங்களைப் பற்றிய விளக்கத்தை வழங்கும் இரண்டு விதமான அறிவியல் கோணங்கள் உள்ளன.முதலில், துண்டிக்கப்பட்ட காலவெளித் தொடர்பமானது இருந்திருக்கலாம்; அனைத்து நிலைகளிலுள்ள பருப்பொருள் மற்றும் ஆற்றல் ஆகியவை ஒன்றிணைந்து அண்டத்தில் இருக்கலாம் மற்றும் அவை ஒன்றை ஒன்று "துளைக்க" முடியாது. முந்தைய அண்டத்தின் முறையற்ற வீக்க மாதிரி, இது போன்ற கொள்கைக்கான ஒரு எடுத்துக்காட்டாகும்.[64] இரண்டாவது, பல உலகங்கள் கருதுகோளின்படி, ஒவ்வொரு குவாண்டம் அளவிலும் ஒரு இணை அண்டம் பிறக்கிறது; அண்டம் பல நகல்களாகப் "பிரிகிறது", அவை ஒவ்வொன்றும் குவாண்டம் அளவின் வெவ்வேறு வெளியீடுகளுக்கு உரியன. இருப்பினும், "பல்லண்டம்" என்ற இந்தச் சொல்லின் இரண்டு புரிதல்களுமே ஊகத்தின் அடிப்படையிலானவை மேலும் அவற்றை அறிவியலடிப்படையற்றவை என்றே கருதலாம்; ஓர் அண்டத்தில் நிகழ்த்தப்படும் எந்த சோதனையும் அதனோடு தொடர்பில்லாத மற்றோர் அண்டம் இருப்பதையோ அல்லது அதன் குணங்களையோ உறுதிப்படுத்த முடியாது.ஏழு "குமிழி" அண்டங்களைக் கொண்டுள்ள ஒரு பல்லண்டத்தின் சித்தரிப்பு, இதில் ஒவ்வொன்றும் தனித்தனி காலவெளித் தொடர்பம், வெவ்வேறு இயற்பியல் விதிகள், இயற்பியல் மாறிலிகளைக் கொண்டவை, இவை ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு எண்ணிக்கையிலான பரிமாணங்கள் அல்லது காலவெளித்தன்மையையும் கொண்டிருக்கலாம்.இருக்கின்ற, ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்ள முடியாத, தொடர்பில்லாத கால-வெளிகளைக் கருதுவது சாத்தியமானதே. எளிதான உருவகப்படுத்தலுக்கு, தனித்தனி சோப்புக் குமிழ்களின் தொகுப்பைக் கருதுவது எளிதாகும், இதில் ஒரு சோப்புக் குமிழின் மேல் இருக்கும் பார்வையாளரால் பிற குமிழ்களின் மீது இருக்கும் பார்வையாளர்களுடன் தொடர்பு கொள்ள முடியாது, கொள்கையளவிலும் கூட. ஒரு பொதுவான சொல்லியலின் படி, கால-வெளியின் ஒவ்வொரு "சோப்புக் குமிழும்" ஒரு அண்டமாகக் குறிக்கப்படுகிறது, இதில் நமது குறிப்பிட்ட கால-வெளியானது அண்டம் எனக் குறிக்கப்படுகிறது, இது நாம் நமது நிலாவை நிலா என அழைப்பது போலவே. இந்தத் தனித்தனி கால-வெளிகளின் மொத்தத் தொகுதியானது பல்லண்டம் எனக் குறிக்கப்படுகிறது. கொள்கையின் படி, தொடர்பில்லாத பிற அண்டங்கள் கால-வெளியின் வேறுபட்ட பரிமாணவியல்களையும் பிரதேசவியல்களையும், பருப்பொருள் மற்றும் ஆற்றஇணைப்புத் தலைப்புல் ஆற்றலின் பல்வேறு வடிவங்களையும் மற்றும் வேறுபட்ட இயற்பியல் விதிகளையும் மற்றும் இயற்பியல் மாறிலிகளையும் கொண்டிருக்கலாம், எனினும் இதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது உண்மையின் அடிப்படையில் இல்லை

                                       இன்னுமொரு கட்டுப்படுத்தப்பட்ட வரையறையின் படி, அண்டம் என்பது நமது இணைக்கப்பட்ட கால-வெளியில் உள்ள அனைத்துமாகும், இதில் அதுவும் நாமும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ள முடியும். பொது சார்பு கொள்கையின் படி, வெளியின் சில பகுதிகள் நமது பகுதிகளுடன் அண்டத்தின் ஆயுள் முழுவதிலும் கூட எப்போதும் தொடர்பு கொள்வதில்லை, இதற்கு வரையறுக்கப்பட்ட ஒளியின் வேகமும் தொடர்ச்சியாக நிகழும் வெளியின் விரிவாக்கமுமே காரணம். எடுத்துக்காட்டுக்கு, அண்டமானது எப்போதும் அழியாமல் இருந்தாலும் கூட, பூமியிலிருந்து அனுப்பப்படும் ரேடியோ செய்திகள் வெளியின் சில பகுதிகளை ஒருபோதும் அடையாது; ஒளியானது வெளியில் பயணிக்கும் வேகத்தை விட மிக அதிகமான வேகத்தில், வெளியானது விரிந்துகொண்டே இருக்கலாம். இங்கு, வெளியின் அந்தக் குறிப்பிட்ட பகுதிகள் இருப்பவையாகவும் மேலும் நமது இருப்பைப் போலவே உண்மையாகவே இருப்பதன் ஒரு பகுதியாகவும் இருக்கலாம்; ஆனாலும் நாம் அவற்றோடு என்றும் தொடர்பு கொள்ள முடியாது என்பதை அழுத்தமாகப் புரிந்துகொள்ள வேண்டும். வெளியில், நம்மால் பாதிக்கப்படக்கூடிய மற்றும் நம்மைப் பாதிக்கக்கூடிய பகுதியே காணக்கூடிய அண்டம் எனக் குறிக்கப்படுகிறது. சரியாகக் கூறினால், காணக்கூடிய அண்டமானது பார்வையாளரின் இருப்பிடத்தைப் பொறுத்தது. பயணிக்கும் ஒரு பார்வையாளர், நிலையாக இருக்கும் பார்வையாளரை விட அதிகமான கால-வெளிப் பகுதியோடு தொடர்பு கொள்கிறார், இதனால் பயணிப்பவர் காணக்கூடிய அண்டமானது நிலையானவர் காணக்கூடிய அண்டத்தை விடப் பெரியதாக இருக்கும். இருப்பினும், அதி வேகமாகப் பயணிக்கும் பயணரால் கூட வெளியின் அனைத்துப் பகுதிகளுடனும் தொடர்பு கொள்ள முடியாது. உண்மையில், காணக்கூடிய அண்டம் என்பது நமது பால்வெளி விண்மீன் திரளில் உள்ள, காண்பதற்கு ஏற்ற ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து நம்மால் அறியக்கூடிய அண்டத்தையே குறிக்கிறது.

பிரபஞ்சம் தோன்றியது எப்படி?

Picture
                                   இந்தப் பிரபஞ்சம் எங்கிருந்து தோன்றியது? எப்படி தோன்றியது? என்பதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் பல்வேறு காரணங்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் கூறி வந்தனர். இறுதியாக பிக் பாங் எனப்படும் பெருவெடிப்பின் மூலம் தான் இப்பிரபஞ்சம் உருவானது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.சில மில்லி மீட்டர் அளவில் ஒன்று திரண்டிருந்த அணுக்கள் திடீரென பயங்கர வேகத்துடன் வெடித்துச் சிதறியது. ஒவ்வொரு விநாடியும் பல மடங்காக இது விரிவடைந்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு விரிவடைந்த போது வெப்பம் தனிந்த வாயுக்கள் தான் நட்சத்திரங்களாகவும் கோள்களாவும் உருவாயின என்பது தான் பெருவெடிப்புக் கொள்கை. இது 14 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) ஆண்டுகளுக்கு முன்னர் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.அணு மோதலால் வெடித்துச் சிதறி இம்மாபெரும் பேரண்டம் உருவானது என்றால் செயற்கையாக அணு மோதலை ஏற்படுத்தி வெடிக்கச் செய்தால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்று கண்டறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கினர்இப்பிரபஞ்சம் உருவாகக் காரணமான அணு ஆற்றலுடனும்  இப்பிரபஞ்சம் உருவாக்குவதற்கான அணு மோதலுடனும் இதை ஒப்பிடவே முடியாது. பூமி உருண்டை என்பதைச் சொல்லிக் காட்டும் போது ஒரு கடுகை எடுத்துக் காட்டி இது போல் பூமி உருண்டையானது என்று சொல்வது போல் தான் இந்தச் சோதனை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.கடுகுக்கும் பூமிக்கும் அளவில் எவ்வளவு வித்தியாசம் உள்ளது என்பது நமக்குத் தெரிகிறது.இரயில் வண்டியின் செயல்பாட்டை பொம்மை ரயில் மூலம் விளக்குவது போன்றது தான் இந்தச் சோதனைஇப்பிரபஞ்சம் உருவாகும் போது வெடித்த அணுவின் ஆற்றல் மற்றும் அதன் வெப்பம் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது இந்த செயற்கை அணு மோதல் உதாரணம் சொல்லிக் காட்ட முடியாத அளவுக்குச் சிறியதாகும்.இவர்கள் சோதித்த செயற்கை அணு மோதல் விரிவடைந்ததும் மீண்டும் சுருங்கி பழைய நிலைக்கு திரும்பியதும் சில நாட்களில் முடிந்து விட்டன. ஆனால் 14 பில்லியன் ஆண்டுக்கு முன் நிகழ்ந்த பெரு வெடிப்பின் காரணமாக ஏற்பட்ட விரிவடைதல் இன்னும் நிற்கவில்லை. விரிவடைந்து கொண்டே உள்ளது. அதன் பின்னர் தான் விரிவடைதல் நின்று பழைய நிலைக்குத் திரும்பும்.

                    நாம் வாழும் இந்த பிரபஞ்சம் பெருவெடிப்பு எனும் நிகழ்விலிருந்து துவங்கியதாக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். விண்மீன்கள், கோள்கள், துணைக்கோள்கள், விண்கற்கள், எரிமீன்கள், கருந்துளைகள், நெபுலாக்கள், பால்வீதிகள் என்று எண்ணிலடங்கா பொருட்கள் எண்ணிலடங்கா எண்ணிக்கையில் நிறைந்துள்ள  இந்த பிரபஞ்சத்தின் மொத்த அளவு தற்போதைய அளவுகோல்களின் படி 2500 கோடி ஒளியாண்டுகள். ஒரு ஒளியாண்டு என்பது ஒளியானது தொடர்ந்து ஒரு ஆண்டு பயணம் செய்தால் எவ்வளவு தூரம் பயணப்பட்டிருக்குமோ அவ்வளவு. ஒளியின் வேகம் ஒரு வினாடிக்கு மூன்று லட்சம் கிமீ. இவ்வளவு வேகம் கொண்ட ஒளி ஒருமுனையிலிருந்து மறுமுனையை அடைய 2500 கோடி ஆண்டுகள் ஆகும் என்றால் நம் பிரபஞ்சத்தின் அளவுகளை நீங்கள் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இந்த அளவு இப்படியே இருக்குமா? அல்ல இன்னும் விரிந்து கொண்டிருக்கிறது. இந்த பிரபஞ்சம் ஒன்றுமில்லாத ஒரு ஒருமையிலிருந்து வெடித்துப்பரவியதில் தொடங்கியது, அதைத்தான் பெருவெடிப்பு கொள்கை என்கிறார்கள்.
           
                         ஒவ்வொரு மஹாகும்பம் (பில்லியன்) சித்துவிற்கும் ஒரு மஹாகும்பம் (பில்லியன்) + ஒரு அசித்துத் துகள்கள் பிறக்க தொடங்கியது. இப்படி இருந்த அகிலமானது தொடர்ந்து குளிர்ச்சி அடைந்தபோது மந்த-மின்விசைகள் இரண்டாகப் பிரிந்து மின்காந்த விசையாகவும், மந்த அணுகரு விசையாகவும் ஆகி நாம் இன்று நன்கு அறிந்த நான்கு வேறுபட்ட விசைகள் முழுமை அடைந்தது. இந்நேரத்திலே நுண்ஒளியின் (Photon) ஆற்றல் குறையத் தொடங்கி சித்து மற்றும் அசித்து என்ற இரட்டைத் துகள்கள் அதனிடத்தில் இருந்து தோன்றுவது நின்றுவிட்டது. கொஞ்சநஞ்சம் ஒட்டி இருந்த இவ்விரட்டைத் துகள்களும் துரிதமாகவே நிர்மூலமாகியது.இதனால் பிரபஞ்சத்தில் ஒவ்வொரு பில்லியன் போட்டான்களுக்கும் ஒரு சாதாரண அசித்துவின் (matter) தனித் துகள் மட்டும் இருந்து சித்து (Antimatter) என்பதே இல்லாமல் போனது.அசித்துவிற்கும் சித்துவிற்கும் இடையே ஆன ஒத்ததன்மை அற்ற நிலை ஏற்படாமல் இருந்து இருந்தால் இன்று விரிந்துகொண்டே இருக்கும் பிரபஞ்சம் ஆனது ஒளியால் தொகுக்கப்பட்ட, நம் அறிவுக்கு எட்டாத ஏதோ ஒன்றாக இருந்திருக்கும். அப்போது வான்-இயற்பியலாளர்கள் தேவைப்பட்டிருக்க மாட்டார்கள்.இவ்வாறு சித்து இல்லாமல் போன மூன்று விநாடிகளில் நிர்மூலமானவற்றில் இருந்த கழிவான ப்ரோடான்களும் நியூட்ரான்களும் சேர்ந்து எளிமையான அணுகருவாக உருவெடுத்தது. இந்த நேரத்திலே, இருந்த நுண்ஒளிகளை இங்கும் அங்கும் சிதற செய்துகொண்டிருந்த எலெக்ட்ரான்களானது உருவான பருப்பொருள் மற்றும் ஆற்றலின் கூட்டுக் கலவையாக இருந்த ஒளி ஊடுருவ முடியாத அணுக்கருக்களின் குழம்பை அடைந்தது. இங்கே நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். அதாவது இது நடந்த சமயத்தில் பிரபஞ்சத்தின் வெப்பம் குறைந்து கொண்டே வந்ததையும் அவ்வாறு குறைந்த வெப்பம் குழம்பாக அலைந்து கொண்டிருந்த அணுக்கருக்களிடம் எலெக்ட்ரான்களைக் கொண்டுசென்று சுற்றச் செய்ய, பளுவற்ற ஹைட்ரஜன், ஹீலியம் மற்றும் லித்தியம் ஆகிய முன்றின் முழுஅணுக்கள் முழுமை பெற்றதையும்.

பிரபஞ்சத்தின் துவக்கம்.

Picture
                                           சுமார் 1350 கோடி வருடங்களுக்கு முன் சிங்குலாரிட்டி(Singularity)என்ற ஒருமை புள்ளியில் இருந்து வெடித்டுதுவங்கியது இந்த பிரபஞ்சம். அந்த வெடிப்பு கணத்தின்போது தான் காலமும், இடமும் பிறந்தன. அதற்க்கு முன்மேட்டர் / என்டி மேட்டர் இரண்டும் சம அளவில் இருந்து பாலன்ஸ் செய்துகொண்டனவாம்.அந்த ஒருமை புள்ளி கணத்தில் இருந்து வெடித்து சிதறிஇன்றும் ஒரு ஊதப்படும் பலூன் போல இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே போகிறது.அந்த ஒருமை புள்ளி கணத்திற்க்கு முன் 'ஒன்றுமே' இல்லை. காலம், இடம்இரண்டும் இல்லை. அவை இரண்டும் இல்ல நிலை பற்றி புரிந்து கொள்வது மிக கடினம்.அதவாது வெற்றிடமும் இல்லை. இடமேஇல்லா நிலை பற்றி புரிந்து கொள்ள முயற்ச்சிப்போம்.Steven Weinberg's classic "The First Three Minutes." என்ற மிகமுக்கிய புத்தகம் அந்த ஆரம்ப 3 நிமிடங்களை விவரிக்கின்றது.வேறு விதமாக‌ விள‌க்க‌ முய‌ற்சிக்கிறேன் : நாம் முப்ப‌ரிணாம‌ உல‌கில்வாழ்ந்து ப‌ழ‌கிவிட்டோம். நான்காவ‌து ப‌ரிமாண‌ம்(நேர‌ம்) ப‌ற்றி அய்ன்ஸ்டினின் ரிலெடிவிட்டி திய‌ரி பேசுகிற‌து.ந‌ம்மால் க‌ற்ப‌னை செய்து புரிந்து கொள்வ‌து க‌டின‌ம்.ஒரு இர‌ண்டு ப‌ரிமான‌ உல‌கை க‌ற்ப‌னை செய்து கொள்ளுங்க‌ள் : அதாவாது ஒரு மிக‌ப்பெரிய‌ த‌ட்டையான‌ மேஜைதான் உல‌க‌ம். அதில் இர‌ண்டு ப‌ரிமாணங்க‌ளே உள்ள‌ கோடு,வட்ட‌‌ம், செவ்வ‌க‌ம், சதுரம் போன்ற 'ஜீவன்கள்' வாழ்வதாக வைத்துக்கொள்வோம். அவைநீளம், அகலம் என்ற இரண்டே பரிமாணங்களைத்தான் அறியும், புரிந்து கொள்ளும்.அவற்றிடம் உயரம் என்ற மூன்றாவது பரிமாணம் ஒன்று உள்ளது. மூன்று பரிமானங்கள்உள்ள உலகில் உருண்டை, ப்ரிஸம், உருளை போன்ற 'ஜீவன்கள்' எடை மற்றும்அடர்த்தியுடன் வாழ்கின்றன என்று விளக்க முயற்ச்சித்தால், அந்த இரு பரிமாண'ஜீவன்களுக்கு' புரியாது அல்லவா. அதே போல்தாம் மனிதர்களுகு நான்காவது பரிமாணம்பற்றி கற்பனை செய்வது இயலாது..அதே போல்தான் சிங்குலாரிட்டி எனப்படும் ஒருமைபுள்ளி என்ற ஆரம்ப கணத்தின் முன்'ஒன்றுமே' இல்லா நிலை. காலமும், இடமும் இல்லா நிலை.ஹப்புள் என்ற விஞ்ஞானி ரெட் ஷிஃப்ட் என்ற விசயத்தை கண்டுபிடித்தார்.அதவாது நம் புமியிலிருந்து ஒரு கால்க்ஸி எத்தனை துரத்தில் உள்ளதோ அந்ததூரத்திற்க்கு நேர்விகிதத்தில் அவற்றின் (ப‌ரப்ஞ்சத்தின்மைப்புள்ளியிலிருந்து விரிவடையும்) விலகிச் செல்லும் வேகம் உள்ளது.அதிலிருந்து வெளிப்படும் ரேடியோ கதிர்வீச்சு அகச்சிவப்பு கதிர்களின் அலகைநோக்கின் 'நகர்ந்துள்ளது'.1964இல் பென்ஸியாஸ், வில்சன் என்ற இரு விஞ்ஞானிகள் 'காஸ்மிக்பாக்கரவுண்ட் மைக்ரோவேவ் ரேடியேஸன்' (Cosmic microwave backgroundradiation)என்ற பிரபஞ்சம் முழுவதும் விரவியிருக்கும் சிற்றலை (ஒரு வகைவெப்ப அலை)பற்றி எதேச்சயாக கண்டுபிடித்தனர். அதற்காக நோபல் பரிசுவென்றனர். அந்த கண்டுபிடிப்பு பிக் பாங் தியரியை உறுதி செய்தது. ஆரம்ப கணவெடிப்பு சிதறல் போது உருவான வெப்ப அலைகளின் தற்போதை வடிவம் பிரபஞ்சம்முழுவதும் சம அளவில் பரவி உள்ளது.ஒரு சிங்குலாரிடியிலிருந்து வெடித்து விரிவடைந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்தின் பெருவெடிப்புக்கொள்கையின் எந்த சாயலும் இல்லாத மேற்கண்ட இரண்டு வசனங்களும் இன்னொன்றையும் தெளிவாக்குகிறது. வானமும் பூமியும் முன்னர் இணந்திருந்தது இப்போது பிரிந்திருக்கிறது என்பதை மேற்கண்ட வசனங்களின் மூலம் அறியலாம். ஆனால் வானம் என்பது மேலே தெரியும் நீல நிற பின்னணி மட்டுமல்ல எந்தக்கோளின் எல்லையிலிருந்தும் வானம் தொடங்கிவிடுகிறது. இன்னும் தெளிவாகச்சொன்னால் சூழ இருக்கும் வானத்தில் கோள்கள் குறை மூழ்கலில் கிடக்கின்றன. அதாவது நீர் நிரப்பிய பாத்திரத்தில் ஒரு பந்து முழுவதும் மூழ்கி தரை தட்டிவிடாமலும் நீரின் மேற்பரப்பில் மிதக்காமலும் நடுவில் இருப்பதைப்போல் கோள்களின் பூமியின் அனைத்து திசைகளிலும் வானம் சூழ்ந்திருக்கிறது.

                          பூமி உள்ளிட்ட கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவை பிரபஞ்சத்தில் எப்படி பிறந்தன என்பது குறித்து அறிந்து கொள்ள உலகில் உள்ள விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அவர்கள் அறிந்து கொண்டது மிக சிறிதளவே. எனவே, மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, அணுவை மோத விட்டு பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தை அறியும் மிகப்பெரிய முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சுவிட்சர்லாந்து, ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இவர்களுக்கு உதவியாக இந்தியா, கனடா, சீனா உள்ளிட்ட விஞ்ஞானிகளும் பணியாற்றினர். இதற்காக, சுவிட்சர் லாந்தில் ஜெனீவா நகருக்கு வெளியே 45 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் “செர்ன்’ என்ற இயற்பியல் சோதனைக்கூடம் அமைக்கப்பட்டது. அமெரிக்காவில் சிகாகோ நகருக்கு அருகேயும் இதே போன்று சிறியளவில் “டெவட்ரான்’ என்ற இயற்பியல் சோதனை கூடம் அமைக்கப்பட்டது. சோதனைக்கூடத்தில் அணு உற்பத்தி செய்யும் இயந்திரம் மிகுந்த பாதுகாப்புடன் வைத்து, உற்பத்தி செய்யப்பட்ட அணுக்கள் பலமுறை சுற்றி அதிக திசைவேகத்துடன் ஒன்றின் மீது ஒன்று மோதும் படி செய்து, ஏற்படும் விளைவுகள் குறித்து அறிந்து கொள்வதால் பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்ற ரகசியம் வெளிவரும் என்று விஞ்ஞானிகள் கருதினர்.சுவிஸ் – பிரான்ஸ் எல்லையில் பூமிக்கடியில் “ஜீரோ’ டிகிரி வெப்பநிலையில் சுரங்க அமைப்பில் கட்டப்பட்ட பரிசோதனை கூடத்தில் முதல் வெடிப்பு நடத்தப் பட்டது. 27 கி.மீ., தூரத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு முனைகளிலிருந்து மின்காந்த விசையின் மூலம் சுழற்றி அனுப்பப்பட்ட புரோட்டான்கள் மிக வேகமாக வந்து மோதின. அப்போது மனிதனால் உருவாக்கப்பட்ட மிகச்சிறிய அணுவிலிருந்து 7 டிரில்லியன் “எலக்ட்ரான் ஓல்ட்’ ஆற்றல் ஏற்பட்டது. “செரன்’ அமைப்பின் தலைவர் ரால்ப்ஹியூர் கூறுகையில், “பிரபஞ்சம் எப்படி உண்டானது என்பது குறித்து கண்டறிவதில் விஞ்ஞானிகள் சிறிதளவு முன்னேற்றம் அடைந்துள்ளனர். இது பாராட்ட வேண்டிய, மகிழ்ச்சியான செய்தி.

                          இங்கு அமைக்கப் பட்டுள்ள இயந்திரம் விண்வெளி ஆய்வில் புதிய சகாப்தத்தை தோற்றுவித்துள்ளது. மேலும், இரண்டு வித்தியாசமான அணுக்கள் மோதும் போது தோன்றும் அதிக சக்தியை அறிந்து கொள்ள, தற்போது உள்ளதை விட நவீன இயற்பியல் சோதனைக்கூடம் தேவை. சமீபத்தில் நடந்த சோதனைகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து “செரன்’ தலைவர் ரால்ப்ஹியூர் வெளியிட்ட முடிவுகளை பாரிஸ் நகரில் நடந்த “இயற்பியல் உயர் சக்தி’ என்ற சர்வதேச மாநாட்டில் குழுமியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இயற்பியல் விஞ்ஞானிகள் அறிந்து கொண்டனர்.தற்போதுள்ள சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் செய்த சோதனையில் பிரபஞ்சம் எப்படி உண்டானது என்பது குறித்து ஒரளவிற்கு தெரிந்தது கொள்ள முடிகிறது. ஆயிரத்து 400 கோடி ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பெரு வெடிப்பு காரணமாக பிரபஞ்சம் பிறந்தது என்பதை கொள்கையளவில் விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அடுத்ததாக 57 ஆயிரத்து 825 கோடி ரூபாய் செலவில் 50 மைல் நீளத்திற்கு சர்வதேச இயற்பியல் கூடம் அமைத்து சோதனைகள் செய்ய திட்டமிடப் பட்டுள்ளது. இந்த சோதனை சர்வதேச ஒத்துழைப்புடன் செய்யப்படும். “செரன்’ சோதனை கூடத்தின் நோக்கம் உயர் சக்தி குறித்த ஆய்வு. ஆனால், ஹம்பர்க்கில் துவக்கப்படவுள்ள சர்வதேச பரிசோதனை கூடம் அதிக தொழில்நுட்பம் கொண்டதாக இருக்கும்’ என்றார்.“கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பரில் அணுக்கள் மோதும் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், சில பிரச்னைகள் ஏற்பட்டதால் அது நவம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின், வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அது முதல் வெற்றி தான் தொடர்கிறது. முன்பு புரோட்டான்களுக்கிடையே மோதல் ஏற்பட வைத்து சோதனை செய்யப்பட்டது. ஆனால், சர்வதேச பரிசோதனை கூடத்தில் இனி நடைபெறவுள்ள சோதனையின் போது, எலக்ட்ரான் மற்றும் பாசிட்ரான் எதிரெதிரானவைகளை மோத விட்டு நடைபெறும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்’ என்கிறார் அணு இயற்பியல் அறிஞரான கே வார்ம்செர்.

பிரபஞ்ச பொருட்களின் தோற்றம்

Picture
                                   இப்போது பிரபஞ்சத்தில் முதன்முறையாக, தளதளவென கண்ணுக்குப் புலப்படும் ஒளி தெரிந்தது. இந்த அதி சுதந்திர நுண்ஒளி ஆனது இன்று நாம் பரமாகாச (Cosmic) நுண்அலைகளின் பின்னணியில் காணலாம். முதல் 100 கோடி ஆண்டுகளில் அகிலம் தொடர்ந்து விரிவாகி இன்னும் கொஞ்சம் வெப்பம் தணிய, பருப்பொருட்கள், ஈர்ப்பு விசையினாலே பெரும்திரளாகக் குவிந்து இன்று நாம் அண்டங்கள் (Galaxies) என்று சொல்லும் நிலையை அடைந்தது. இப்படி நூற்றுக்கும் அதிகமான மகாகும்ப (பில்லியன்) அண்டங்கள் உருவாகி அதில் ஒவ்வொன்றிலும் பல மகாகும்ப எண்ணிகையில் ஆன நட்சத்திரங்களைக் கொண்டிருந்தது. இந்நட்சத்திரங்களின் உள்ளகத்தில் வெப்பம்சார்ந்த அணுப்பினைவுகள் நடந்துகொண்டு இருந்தது. நம் சூரியனைக் காட்டிலும் 10 மடங்கு அதிகமான அடர்த்தியும் பருமையும் கொண்டிருந்த இந்த நட்சத்திரங்களில் போதுமான அழுத்தமும் வெப்பமும் அதன் உள்ளகத்தில் (Core) உருவாகி அந்த நட்சத்திரங்களில் அதிகமாக இருந்த ஹைட்ரசனைக் காட்டிலும் பளு நிறைந்த 12 வேறு தனிமங்களைத் தயாரித்தது. இந்த 12 வேறுபட்ட தனிமங்களே கிரகங்களையும் அதன்மேல் உயிரினத்தையும் இயற்ற வழிவகுத்தது. இந்தத் தனிமங்கள் வரவிருக்கும் எல்லாத் தொல்லைகளுக்கும் காரணமாக இருந்தது. இவைகள் அந்த நட்சத்திரங்களுக்கு உள்ளேயே இருந்திருந்தால் இன்று எனக்கும் இதை எழுதவேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது. நீங்களும் இதைப் படித்து, தலை கிறுக்குப்பிடிக்க வேண்டிய அவசியமும் இல்லாமல் போய் இருக்கும்.ஆனால் நம் துரதிர்ஷ்டம் இந்த மாபெரும் நட்சத்திரங்கள் பயங்கரமாக வெடித்து அதன் வேதியியலாக செறிவூட்டப்பட்ட ஆண்மையை (தனிமங்களை) அண்டமெலாம் சிந்தச் (சிதறச்) செய்தது. இப்படிச் செறிவூட்டப்பட்டு சிந்தியவற்றில் இருந்து அவ்வளவாக கௌரவிக்கபடாத ஒரு நட்சத்திரம் (நம் சூரியன்) கத்தி உடைய மனிதனின் கை போன்று அமைப்புடைய விண்மீன் கூட்டத்தின் ஒரு பகுதியில், பால்வெளி என்ற அண்டத்தின் ஒரு மினுமினுக்கும் வைரமாக, பேரண்டத்தின் ஒரு மூலையில் (கன்னி என்று அழைக்கபடுகிற பிரபஞ்சத்தின் மேம்பட்ட நட்சத்திரக் கூட்டத்தின் புறஎல்லையில்) மின்னியது.எந்த வாயுக்களின் மேகத்தில் இருந்து நம் சூரியன் பிறந்ததோ அதிலேயே 9 கிரகங்களும் ஆயிரகணக்கான வால் நட்சத்திரங்களும் கோடிக்கணக்கான விண்கற்களையும் பெற்றெடுப்பதற்கான கடினமான தனிமங்களும் சூல் கொண்டு இருந்தது. இந்த நட்சத்திர முறை உருவான சமயத்தில் குறிப்பிடத் தக்க அளவிலான பருப்பொருட்கள் வெகுவாக சுருக்கப்பட்டு முதன்மை வாயுக்களின் மேகத்தில் இருந்து- அதாவது உருவான சூரியனைச் சுற்றிக்கொண்டிருந்த பளு மிகுந்த மேகத்தை விட்டு வெளியே வீசி எறியப்பட்டது. இது போன்று எறியப்பட்டவைகள், சூரியன் உருவாகி மீதம் இருந்த கழிவுகளே எனக் கொள்ளலாம். இந்தக் கழிவுகள் அதிவேகமான வால்நட்சத்திரங்களாகவும் விண்கற்களாகவும் பல நூறு லட்சம் ஆண்டுகள் வானில் ஒன்றுடன் ஒன்று மிதமிஞ்சிய வேகத்தில் மோத, உருகிய நிலையில் ஆன பாறைக் கோளங்கள் உருவாகி கிரகங்களின் அடிப்படைக் கட்டுமான வேலைகள் ஜரூராகத் தயாரானது. இந்தக் கழிவுப் பொருள்களின் அளவு குறையக் குறைய, கிரகங்களின் மீது இவைகள் மோதுதலும் குறைய ஆரம்பிக்க, கிரகங்களின் சூடும் குறையத் தொடங்கியது

                         பூமி என்று நாம் குறிப்பிடும் ஒன்று; அதன் கடலானது நீர்த் தன்மையில் இருக்கும் வண்ணமான சூரிய மண்டலத்தின் சரியான பகுதியில் மேற்சொன்ன நிகழ்வின் முடிவில் அமையப்பெற்று இருந்தது. இந்த பூமி சூரியனுக்கு இன்னும் கொஞ்சம் அருகில் போயிருந்தால் இந்த நீர்த் தன்மை கடலானது ஆவியாகி வறண்ட பாலைக்கிரகம் எனப் பெயர் பெற்று இருக்கும். அதுபோல் இல்லாமல் பூமி இப்போது இருக்கும் இடத்தைவிட்டு இன்னும் சற்று பின்னால் அமைய நேர்ந்து இருந்தால் அதில் இருக்கும் கடல் உறைந்துபோய் பனிக்கிரகம் ஆகி இருக்கும். இதில் எது நடந்து இருந்தாலும் நாம் இன்று அறிந்து இருக்கிற உயிரினங்கள் உருவாகி இருக்காது. இந்த நீர்க் கடலினில் இருந்த செழிப்பான வேதியியலால் நாம் இது வரை அறிந்து கொள்ள முடியாத நுட்பத்தின் விளைவால் எளிமையான மற்றும் பிராண வாயு தேவைப்படாத பாக்டீரியாக்கள் கிளம்பி, அன்று பூமியின் முக்கிய அல்லது மட்டுமே இருந்த கரியமில வாயு (கார்பன் டை ஆக்சைடு) சுற்றுப்புறத்தை போதுமான அளவுக்குத் தேவையான பிராண வாயு (ஆக்ஸிஜன்) கொண்ட சூழ்நிலைக்கு மாற்றியது. இதனால் பிராண வாயு தேவைப்படும் ஜீவராசிகள் தோன்றி கடலையும் மண்ணையும் ஆதிக்கம் செய்ய ஆரம்பித்தன. இதே சாதாரணமாக இரட்டை அணுக்களாகக் (O2) காணப்படும் ஆக்ஸிஜன் ஆனது முன்றாகச் (O3) சேர்ந்து ஓசோன் எனப் பெயர்பெற்று பூமியின் மேல் வளிமண்டலத்தில் குடிகொண்டு நம்மை, சூரியனில் இருந்து வரும் பூமியின் மூலக்கூறுகளுக்கு விரோதமான புற ஊதாக் கதிர்களில் இருந்து காத்தும் வருகிறது. பூமியில் உள்ள விதவிதமான உயிரினங்களும் நாம் இந்தப் பிரபஞ்சத்தில் வேறெங்கேனும் இருக்கலாம் என்று நினைத்துகொண்டிருக்கும் உயிரினங்களும் பரமாகாசத்தில் மிகுதியாக உள்ள கார்பனுக்கும் அதனில் இருந்து உருவான எண்ணில் அடங்கா எளிய மற்றும் சிக்கலான மூலக்கூறுகளுக்கும் நன்றிக்கடன் பட்டவைகளாக உள்ளன.நிறைய விதமான கார்பன் அடிப்படையிலான மூலக்கூறுகள் இருக்கும் போது எப்படி நீங்கள் மற்ற ஒட்டுமொத்த மூலக்கூறுகளை விவாதிக்கப் போகிறீர்கள்?ஆனால் வாழ்கை நொறுங்கிவிடக்கூடியது. வெகுமுன்னர் விண்கற்கள் பூமியை விட்டு விட்டு தாக்கி, அதன் சூழ்நிலை அமைப்பை சேதாரம் செய்தது அல்லது மாற்றி அமைத்தது. இந்த விண்கற்கள், நாம் சற்று முன்னம் கூறியதுபோல சூரியனும் மற்ற கிரகங்களும் உருவாகி மீதம் இருந்த வஸ்துக்கள். வெறும் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் (பூமியின் இதுவரை வாழ்நாள் காலத்தில் 2 சதவிகிதத்துக்கும் குறைவு அது) ஒரு 10000 கோடி டன் எடை கொண்ட பெரு விண்கல் ஒன்று Yucatan Peninsula-வில் விழுந்தது.அதன் காரணமாக அன்று பூமியில் இருந்த 90 சதவிகித விலங்குகளும் தாவரங்களும் அழிந்தது. அதில் அழிந்தவை தான்  நிலவாழ் விலங்குகளாக இருந்த டினோசர்களும். இப்படி நேர்ந்த சூழ்நிலையியல் துன்பத்தால் டினோசர்களின் இடத்தை அன்று தப்பித்த பாலூட்டிகள் எடுத்துக்கொள்ள வழி பிறந்தது. இந்தப் பாலூட்டிகளில் ஒரு கிளையாக பெரிய மூளையுடன் ஒன்று இருந்தது. அது கூட்டம் கூட்டமாக வாழும் விலங்கினமாக இருந்து, ஹோமோ சாபின்ஸ் என்கிற ஒரு வகை மனித இனமாக உருவெடுத்து, அது அறிவு என்ற ஒன்றினை பெருக்கி அறிவியல் முறைகளையும் கருவிகளையும் கண்டுபிடித்து, வான் இயற்பியலையும் கண்டுபிடித்து, பிரபஞ்சத்தின் ஆரம்பத்தையும் அதன் பரிணாம வளர்ச்சியையும் ஊகித்து உணரத் தொடங்கியது.ஆம், பிரபஞ்சத்திற்குத் தொடக்கம் உண்டு! ஆம், பிரபஞ்சம் தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைகிறது! ஆம், நம் ஒவ்வொருவருடைய உடம்பின் அணுக்களையும் பிரபஞ்சத்தின் தொடக்கமான பெருவெடிப்பின் உள்ளேயும், மாபெரும் நட்சத்திரங்களின் உள்ளக அதிவெப்ப அணுக்கரு உலைகளிலும் துப்பறியலாம்! நாம் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கிறோம் என்பது மட்டும் உண்மை இல்லை, அதன் ஒரு பகுதியாகவும் இருக்கிறோம் என்பதே அதி உண்மை. நாம் பிரபஞ்சத்தில் இருந்து பிறந்தோம். இன்னும் நீங்கள் சொல்லலாம், பிரபஞ்சம் தன்னை வெளிப்படுத்த நமக்கு அதிகாரமும் ஆற்றலும் தந்துள்ளது என்பதையும்; நாம் இப்போதே தொடங்கி இருக்கிறோம், எல்லை இல்லா பயணத்தை என்பதையும்!

அந்த அடிப்படையில் இப்பிரபஞ்சப் பொருட்களின் தோற்றம் எப்படித் தோன்றியது? என்று பல்வேறு அறிஞர் பெருமக்கள் தமது ஆராய்ச்சி மூலம் கருத்துகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.பிரபஞ்சம் உருவான கட்டத்தில் மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்; அப்படி ஏற்பட்ட வெடிப்பின் மூலம் சிதறி ஓடப்பெற்ற பொருட்கள் இந்த நிமிடம் வரை விண்வெளியில் தொடர் ஓட்டமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று கூறுகிறார் பெல்ஜிய வான ஆராய்ச்சியாளர் ஷேர்த் லேமாத்ரே (Georges Lemaitre) என்ற அறிஞர்.நினைத்துப் பார்க்க முடியாத அமுக்கத்தில்; அதாவது, ஒரு தேக்கரண்டி அளவுள்ள பொருள் கிட்டத்தட்ட 10 கோடி டன் எடையுள்ளதாக இருந்தால் எந்த அளவுக்கு அமுக்கம் நிறைந்திருக்குமோ அந்த அளவு திணிவு கொண்ட பொருளாக இருந்து, “பெரும் டமார்” என்ற சத்தத்துடன் வெடித்துச் சிதறியிருக்க வேண்டும்; என்று கூறும் அவர்,இந்நிகழ்வு ஏற்பட்டு கிட்டத்தட்ட எழுநூறு கோடி ஆண்டுகள் கடந்திருக்கும் என்கிறார்.பிரபஞ்சம் மேலும் மேலும் பெரிதாகி வரும் நிகழ்வினை கவனிக்கிற போது, அது புறப்பட்ட ஆரம்பம் என்று ஒன்று இருந்து அதிலிருந்து தொடர் ஓட்டமாக விரிந்துகொண்டே செல்கிறது என்று கூறுகிறார்.பிரபஞ்சம் உருவாகி எழுநூறு கோடி ஆண்டுகள் இருக்கலாம், என்ற இக்கருத்தில் சில தவறுகள் தொக்கிக் கொண்டிருக்கின்றன.திணிவு மிக்க மொத்தை உருவம் ஒன்று வெடித்துச் சிதறி, ஓடியதின் தொடரில் தான் பிரபஞ்சப் பொருள் அனைத்தும் உருவாகியிருக்க வேண்டும் என்ற இக்கருத்து அமெரிக்கப் பவுதீக விஞ்ஞானி ஜார்ஜ் காமோவ் (George Gamow) என்பவரும் ஒப்புக்கொள்கிறார்.இன்று காணப்படும் பிரபஞ்சப் பொருள் அனைத்தும் அடர்த்திக்கொண்ட மொத்தையாக ஒரு கட்டத்தில் இருந்திருக்கிறது.இந்த மொத்தை 2500 கோடி டிகிரி பாரன்ஹைட் வெப்பத்தில் வெடித்துச் சிதறியிருக்கிறது.வெப்ப நிலை 50 லட்சம் டிகிரி பாரன்ஹைட்டாகக் குறைந்து மூலகங்கள் உருவாகி இருக்கிறது.வாயு நிலையில் இந்த பொருட்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து, ஈர்த்து, முகில்களாகப் பிரியச் செய்து நட்சத்திரங்களாகவும், கிரகங்களாகவும் உருப்பெற்றிருக்கின்றன என்ற இக்கருத்தை ஜார்ஜ் காமோவும் ஒப்புக்கொள்கிறார்.பெரும் பிண்டம் வெடித்துச் சிதறியதன் மூலம் அண்டங்கள் விரிவடைகின்றன என்ற கருத்தை ஒப்புக் கொள்வதாக இருந்தால், வெடித்துச் சிதறியதற்கு முந்தைய கட்டம் மற்றும் ஆரம்ப இடம் எங்கிருக்கிறது என்ற வினா எழுகிறது.நட்சத்திரங்களாகவும், கிரகங்களாகவும் உருப்பெற்றிருக்கலாம் என்ற கருத்தை முன் வைக்கின்றனர்.அறிவியல் வளர்ச்சியின் வேகம் புதிர்களுக்கு விடை காண்பதுதான் என்பதிலே பெருமை கொள்வோம்.

                         நாம் வாழும் இந்த பிரபஞ்சம் பெருவெடிப்பு எனும் நிகழ்விலிருந்து துவங்கியதாக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். விண்மீன்கள், கோள்கள், துணைக்கோள்கள், விண்கற்கள், எரிமீன்கள், கருந்துளைகள், நெபுலாக்கள், பால்வீதிகள் என்று எண்ணிலடங்கா பொருட்கள் எண்ணிலடங்கா எண்ணிக்கையில் நிறைந்துள்ள  இந்த பிரபஞ்சத்தின் மொத்த அளவு தற்போதைய அளவுகோல்களின் படி 2500 கோடி ஒளியாண்டுகள். ஒரு ஒளியாண்டு என்பது ஒளியானது தொடர்ந்து ஒரு ஆண்டு பயணம் செய்தால் எவ்வளவு தூரம் பயணப்பட்டிருக்குமோ அவ்வளவு. ஒளியின் வேகம் ஒரு வினாடிக்கு மூன்று லட்சம் கிமீ. இவ்வளவு வேகம் கொண்ட ஒளி ஒருமுனையிலிருந்து மறுமுனையை அடைய 2500 கோடி ஆண்டுகள் ஆகும் என்றால் நம் பிரபஞ்சத்தின் அளவுகளை நீங்கள் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இந்த அளவு இப்படியே இருக்குமா? அல்ல இன்னும் விரிந்து கொண்டிருக்கிறது. இந்த பிரபஞ்சம் ஒன்றுமில்லாத ஒரு ஒருமையிலிருந்து வெடித்துப்பரவியதில் தொடங்கியது, அதைத்தான் பெருவெடிப்பு கொள்கை என்கிறார்கள்.  

பிரபஞ்சம்: (மஹாகும்பம்)

Picture
                                    தொடக்கத்தில், அதாவது ஒரு 12 அல்லது 16 பில்லியன் (மஹாகும்பம்) ஆண்டுகளுக்கு முன்னால் நாம் இன்று அறிந்தும் அறியாமலும் இருக்கிற பிரபஞ்சத்தின் எல்லா இடமும் வஸ்துவும் மற்றும் எல்லா சக்தியும் ஒரு ஊசிமுனையின் ட்ரில்லியன்-ல் ஒரு பாக அளவில் அடக்கப்பட்டதாக இருந்தது. இந்தச் சமயத்தில் நாம் கற்பனை செய்ய முடியாத அளவில் அது வெப்பமுடையதாகவும் நாம் எண்ணிப் பார்க்க முடியாத இயற்கையின் ஈட்டமும் மிக்கதாகவும் இருந்தது. அப்போதுதான் அது அகிலம் ஒன்று என்பதை நிருபிப்பது போல இருந்தது.இன்னும் காரணங்கள் அறிவியல்பூர்வமாக அறியப்படவில்லை; ஆனால் அது அப்போது திடீரென விரிவடையத் தொடங்கிது. இச்சமயத்திலே பிரபஞ்சத்தின் வெப்பம் 1030 டிகிரி செல்சியஸ் ஆகவும் அதன் வயது 10-43 நொடிகளாகவும் இருந்தபோது வஸ்துக்களை குறித்த நமது சமர்த்திதல்களும், அவதிஞானம் (The Knowledge about Space and Time) குறித்த நமது தற்போதைய அறிவும் அர்த்தமற்றவைகளாக இருந்தன. பின்னர் சிறிது காலத்தில் கருந்துவாரங்கள் உருவாகுதலும் மறைதலும் பின்னர் மீண்டும் ஒருங்கிணைந்த ஆற்றலின் வெளிப்பாடாக உருவாகுதலும் நடந்தது.இந்த அதிசீதமான நிலையில் நாம் பொதுவாக ஒத்துக்கொண்ட ஊக இயற்பியலின்படி பச்சிளம் பிரபஞ்சத்தின் பஞ்சு போன்ற மெத்தென இருந்த தொடக்கக் குமிழிகளின் அமைப்பால் இடத்துக்கும் காலத்துக்குமான வளைவு மிகவும் நெருங்கி அமைந்தது.

                              இந்தச் சகாப்தத்தின் போது ஐன்ஸ்டீன் அவர்களால் விளக்கப்பட்ட பொது சார்புநிலைக் கோட்பாடுத் தோற்றமும் (நவீன ஈர்ப்பு விசைத் தேற்றம்) க்வாண்டம் இயக்கவியலும் (பருப்பொருளின் மிக சிறிய அளவுகளால் விளக்கப்படுதல்) தனியாகப் பிரித்து அறிய முடியாததாக இருந்தது.தொடர்ந்து அகிலமானது விரிவடைந்து அதன் வெப்பம் சிறிது தணிந்து குளிர்ச்சி அடைந்தபோது ஈர்ப்பு விசை ஆனது குழந்தைப் பிரபஞ்சத்தின் மற்ற விசைகளில் இருந்து பிரிய ஆரம்பித்தது. அதன் பின்னர் விரைவிலேயே பலமான நியூக்ளியர் விசையும் மந்தமான மின் விசையும் ஒன்றில் இருந்து ஒன்று பிரிய நேர்ந்தது. இதனால், இதனுடன் சேர்ந்து சேமித்து வைக்கப்பட்டு இருந்த மாபெரும், குறிப்பிட்டு இது தான் என்று சொல்லமுடியாத சக்தியின் மிகபெரிய வெளியேற்றமும் அகிலத்தின் பரிமாணத்தை 3000000 ஒளி ஆண்டுகளாக குறுகிய காலத்தில் பெருக்கச் செய்தது.இது மாதிரி வெளியேற்றப்பட்ட சக்தி ஆனது ஒரு வஸ்து அதன் அதி வெப்ப நிலையில் இருந்து அதன் விறைத்துப் போன குளிர்ச்சிக்குச் செல்லும்போது வெளியேற்றப்படும் வெப்பஆற்றலின் சக்திக்கு இணையானதாகக் கொள்ளலாம். இது மாதிரி வெளியேற்றப்படும் வெப்பம் (Latent Heat) மறைந்திருந்த வெப்பம் என்று சொல்லப்படுகிறது.அதாவது கொடுக்க பட்ட வெப்பத்தின் போது பூஜியம் டிகிரியில் உள்ள ஒரு கிராம் நீரில் சேமித்து வைக்கப்படும் வெப்ப ஆற்றல் ஆனது அதே வெப்பத்தை ஒரு கிராம் பனிகட்டிக்குத் தரும்போது அதனுள் சேமித்து வைக்கப்படும் வெப்ப ஆற்றலைக் காட்டிலும் அதிகம் ஆகும். இது மாதிரியாக நீருக்கும் அதன் பனிகட்டிக்கும் ஆன வெப்ப ஆற்றல் சேமிக்கும் வித்யாசமே நீரின் latent (மறைந்திருந்த) வெப்பம் எனப்படுகிறது.இந்தத் தொடர்ச்சியான பிரபஞ்சத்தின் விரிவாக்கமே, அகிலத்தின் வீக்க சகாப்தம் எனப்படுகிறது. இத்தருணத்தில் பரமாகாசத்தில் வஸ்துக்களும் சக்தியும் சமமான அடர்த்தியில் விநியோகிக்கப் படுதல் நடந்தேறியது. அப்படியே அதில் பிரதேச வேறுபாடுகள் இருந்திருப்பினும் அது ஒரு லட்சத்தில் ஒரு பங்காகவே இருந்திருக்கும். இன்று சோதனைச்சாலையில் ஆய்வு செய்து உறுதி செய்யப்பட்ட இயற்பியலின்படி, அன்றைய பிரபஞ்சத்தின் நுண்ஒளிகள் (Photons) ஆனது இருந்த போதுமான வெப்பத்தின் விளைவாக அதன் சக்தியை சித்தாகவும் (Antimatter) அசித்தாகவும் (Matter) இரு துகள்களாக தானாகவே மாற்றியது. ஆனால் உடனடியாக இவ்விரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதி நிர்மூலமாகி அதன் சக்தி மறுபடியும் நுண்ஒளிக்குள் இணைந்தது. சித்துவிற்கும் அசித்துவிற்கும் இடையே ஆன ஒத்த தன்மை இவ்விரண்டும் பிரிவதற்கு முன்னால் உடைந்துபோனது. இதனால் சித்தை விட அசித்து சொற்ப அளவில் அதிகமாகியது. இதற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. இது மாதிரி மிகச்சிறிய அளவில் ஒத்ததன்மை இல்லாமல் போனதே எதிர்காலப் பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சிக்கு மிக மிக முக்கியமான காரணமாக அமைந்தது.

அறிவியலாளர்களின் பார்வையில் பிரபஞ்சம்.

Picture
பிரபஞ்சத்தின் கரும் ஈர்ப்பு மையங்கள் 
                                   சாதாரண மனிதரிலிருந்து விஞ்ஞானிகள் வரை மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்துப் புதிரென்று ஒன்றிருந்தால் அது இந்தக் கருந்துளைகள் (Black Holes) தான். உண்மையில் இவற்றைத் தமிழில் கருந்துளைகள் என மொழிபெயர்ப்பதை விடக் 'கரும் ஈர்ப்பு மையங்கள் ' என மொழி பெயர்ப்பதே மிகவும் பொருத்தமாகவிருக்குமெனக்கருதுகின்றேன்.சாதாரண மனிதரிலிருந்து விஞ்ஞானிகள் வரை மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்துப் புதிரென்று ஒன்றிருந்தால் அது இந்தக் கருந்துளைகள் (Black Holes) தான். உண்மையில் இவற்றைத் தமிழில் கருந்துளைகள் என மொழிபெயர்ப்பதை விடக் 'கரும் ஈர்ப்பு மையங்கள் ' என மொழி பெயர்ப்பதே மிகவும் பொருத்தமாகவிருக்குமெனக் கருதுகின்றேன். ஏனெனில் இவை மிகவும் ஈர்ப்புச் சக்தி மிக்கவை. ஒளிக்கதிர்களையே வெளியேற முடியாத அளவிற்கு ஈர்ப்புச் சக்தி மிக்கவையான இவற்றை கரும் ஈர்ப்பு மையங்களென அழைப்பதே சரியென்றெனக்குப் படுவதால் இவை இனி கரும் ஈர்ப்பு மையங்கள் என்றே அழைக்கப் படும்.ஒளிக்கதிர்களையே தப்பியோட விடாது சிறைப்பிடித்துவிடுமளவிற்கு ஈர்ப்புச் சக்தி மிக்கவையாக இவை இருப்பதால் இவை மிகவும் விந்தையானவை. இரகசியமானவை. புதிரானவை. இவற்றை நேரடியாகப் பார்க்கும் வல்லமை படைத்தவர்கள் இருப்பார்களேயானால் அவர்களால் தாங்கள் கண்டதை எமக்குத் தெரிவிப்பதற்குக் கூட முடியாது. ஊகங்கள், பக்க விளைவுகள் இவற்றைக் கொண்டு மட்டும் தான் இவற்றைப் பற்றி அறிந்து கொள்ள, அனுமானித்துக் கொள்ளக் கூடியதாகவுள்ளது.கரும் ஈர்ப்பு மையங்கள் உண்மையில் மிகவும் சக்தி வாய்ந்த நட்சத்திரங்களே. விண்ணில் நாம் காணும் நட்சத்திரங்களை அவற்றின் திணிவினை சூரியனின் திணிவுடன் ஒப்பிட்டுப் பிரிக்க முடியும். இவ்விதம் பெறப்படும் திணிவு சூரிய திணிவு (Solar Mass) என அழைக்கப் படும்.நட்சத்திரங்களின் திணிவானது ஒரு குறிப்பிட்ட சூரியத் திணிவிலும் அதிகாக இருக்கும் பொழுது அந் நட்சத்திரம் கரும் ஈர்ப்பு மையமாக உருவாகும் வாய்ப்பு உண்டு. இத்திணிவுக்கும் நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானிகளிலொருவரான சந்திரசேகருக்கும் மிக முக்கியமானதொரு தொடர்பு உண்டு. அதுவென்ன என்பதை இக்கட்டுரையின் இறுதியில் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

                                 ஐன்ஸ்டனின் பொதுச் சார்பியற் கோட்பாடானது (General Theory Of Relativity) இத்தகைய கரும் ஈர்ப்பு மையங்கள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை எதிர்வு கூறிய போதும் , சுமார் 200 வருடங்களுக்கு முன்னரே ஆங்கிலேயரொருவரும் பிரெஞ்சுக்காரரொருவரும் இத்தகைய பொருட்கள் இப்பிரபஞ்சத்தில் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றிக் கூறியுள்ளார்களென்பதும் வியப்பிற்குரியது. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜோன் மைக்கல் என்பவரால் 1783 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப் பட்ட ஆய்வுக் கட்டுரையொன்றில் மிகவும் ஈர்ப்புச் சக்தி கூடிய நட்சத்திரங்கள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜோன் மைக்கலின் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்ட சில வருடங்களின் பின்னர் பிரெஞ்சு விஞ்ஞானியான 'மார்கிள் டி லாப்பிளாஸ் ' என்பவர் தான் எழுதிய 'இவ்வுலகின் அமைப்பு முறை ' பற்றிய நூலிலும் இது போன்ற கருதுகோள்களை முன்வைத்திருந்தாரென அறியக் கிடக்கின்றது. ஆனால் ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பியற் கோட்பாடே முதன் முதலாகக் கணிதச் சூத்திரங்கள் அடிப்படையில் கரும் ஈர்ப்பு மையங்கள் பற்றித் தற்போது அறியப் பட்ட அர்த்தத்தில் எதிர்வு கூறின. உண்மையில் ஐன்ஸ்டைனின் சார்பியற் கோட்பாடுகளுக்குக் கிடைத்த இன்னுமொரு வெற்றியென்றே இதனைக் கூறலாம். அதே சமயம் 'வெளி ', 'நேரம் ' என்பவை சுயாதீனமற்றவை. சார்பானவை என்பதை முதன் முதலாக ஐன்ஸ்டைனின் சிறப்புச் சார்பியற் கோட்பாடு இவ்வுலகிற்கறிவித்ததும் குறிப்பிடத் தக்கது.ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பியற் கோட்பாட்டின்படி மிகமிக அதிகமான ஈர்ப்புச் சக்தி மிக்க நட்சத்திரங்கள் தம்மைச் சுற்றியுள்ள வெளியினை அதிகமாக வளைத்து விடுகின்றன. இவ்வளைவிற்குள் அகப்படும் எவற்றையும் அவை உறுஞ்சி ஏப்பம் விட்டு விடுகின்றன. மிகவும் சிக்கலான விசயம் என்னவென்றால், சாதாரண மனித அனுபவத்தைக் கொண்டு வெளி வளைகிறதென்பதைக் கற்பனை செய்து பார்ப்பதே சிரமமாக நம்ப முடியாததாகவிருக்கின்றது. இந்நிலையில் கரும் ஈர்ப்பு மையங்களைக் கூடக் கண்ணால் பார்க்க முடியாத நிலைமையிருக்கையில், இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் கரும் ஈர்ப்பு மையங்கள் வெளியினை வளைப்பதை எப்படி நம்புவது ?


                                   நட்சத்திரங்கள் பிரபஞ்சத்தில் பரந்து காணப்படும் தூசு, வாயு, ஆகியன ஒன்று சேர்வதன் விளைவாக உருவாகின்றன. இவ்விதமாகத் தம்மிடையிலான ஈர்ப்புச் சக்தியின் விளைவாக ஒன்று சேரும் வாயு அணுக்களில் சுய அசைவு பெருமளவு காணப்படும். இதனால் ஐதரசன் அணுக்கள் தமக்குள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதிக் கொள்ளத் தொடங்கும். இறுதியில் இவ்விதம் மோதிக் கொள்ளூம் ஐதரசன் அணுக்களிடையில் வெப்ப நிலை அதிகரிக்க அதிகரிக்க மோதலின் விளைவாக அவை அழிந்து ஹீலியம் அணுக்களை அவை உருவாக்கும். இவ்விதம் ஐதரசன் அணுக்களின் அழிந்து ஹீலியம் அணுக்கள் உருவாகும் போது ஐதரசன் அணுக்களின் திணிவினொரு பகுதி சக்தியாக மாறுகின்றது. இச்சக்தி மிகவும் அதிகமானது. பொருளானது அழிந்து உருவாகும் சக்தியின் அளவு எத்தனையோ கோடிக்கணக்கான யூல்களிலிருக்கும். இதனையே ஐன்ஸ்டைனின் மிகவும் புகழ் பெற்ற சூத்திரமான E = MC ^2 நிரூபிக்கின்றது. சிறிய திணிஅவு கூட ஒளி வேகத்தின் வர்க்கத்தினால் பெருக்கப் படுவதன் காரணமாக மிகவும் அதிகமான அளவிலிருந்து விடுகின்றது. இத்தகைய தாக்கங்களே ஐதரசன் குண்டுகள் தயாரிக்கவும் பயன்படுத்தப் படுகின்றன. உண்மையில் நட்சத்திரங்களை மாபெரும் ஐதரசன் குண்டுகளென்று கூடக் கூறலாம்.இவ்விதமாக நட்சத்திரங்களில் சக்தி வெளிப்படும் போது உருவாகும் வெளிப்புறம் நோக்கிய அமுக்கமும், அவற்றின் அணுக்களிற்கிடையில் காணப்படும் உட்புறம் நோக்கிய ஈர்ப்புச் சக்தியும் ஒன்றினையொன்று ஈடு படுத்துவதால் நட்சத்திரங்கள் நீண்ட காலத்திற்கு நிலையாக ஒளிரும் ஆற்றலினைப் பெறுகின்றன. நட்சத்திரங்களின் திணிவிற்கேற்ப மேற்படி சுடர்களின் ஒளிரும் காலகட்டமும் வேறுபடுகின்றன. திணிவு கூடிய நட்சத்திரங்கள் அவற்றில் காணப்படும் ஈர்ப்புச் சக்தியின் அதிக அளவு காரணமாகக் கூடிய தாக்குதல் வேகத்தினைக் கொண்டிருப்பதால் விரைவில் எரிந்து விடுகின்றன. நமது சூரியனைப் பொறுத்தவரையில் இவ்விதம் நிலையாக இருக்கக் கூடிய காலகட்டம் சுமார் பத்து பில்லியன் வருடங்கள். ஏற்கனவே ஐந்து பில்லியன் வருடங்கள் கழிந்து விட்டன. இன்னும் ஐந்து பில்லியன் வருடங்கள் மீதி இருக்கின்றன. அச்சமயம் மனித இனம் வேறு சுடர்க் கூட்டங்களிலுள்ள கோள்களிலொன்றில் அல்லது தானே உருவாக்குமொரு பிரமாண்டமான செயற்கைக் கோளொன்றில் தங்குவதற்குாிய ஆற்றலினைக் கொண்டிருக்க வேண்டும்.
  
                        இவ்விதமாக எரியும் நட்சத்திரங்கள் ஒரு நிலையில் எரிவதற்குரிய எரிபொருள் முடிவடைந்த நிலையில் குளிர்ந்து சுருங்கத் தொடங்கும். இவ்விதமாகச் சுருங்கும் சுடர்களின் எஞ்சியுள்ள திணிவின் அளவிற்கேற்ப அவற்றின் முடிவும் அமைந்து விடுகின்றன. இவ்விதமாக எரிந்த நிலையிலுள்ள நட்சத்திரங்களின் திணிவானது 1.44 சூரிய திணிவிற்கும் (Solar Mass) குறைவாகயிருப்பின் அந்நட்சத்திரங்கள் 'வெண் குள்ளர் ' (White Dwarf ) என்னும் நிலையினை அடைந்து விடுகின்றன. மேற்படி திணிவானது 1.44ற்கும் 3ற்குமிடையிலான சூரிய திணிவினைக் கொண்டிருந்தால் அவை 'நியூத்திரன் நட்சத்திரங்களாகவும், 3 சூரிய திணிவிற்குமதிகமானவையாக இருப்பின் அவ்விதமான நட்சத்திரங்கள் 'கரும் ஈர்ப்பு மையங்கள் ' ஆகவும் மாறிவிடுகின்றன. இந்தத் தொடர்பினைக் கண்டு பிடித்தவர் இந்திய விஞ்ஞானியான சந்திரசேகர். இதனால் தான் மேற்படி எல்லை 'சந்திரசேகர் எல்லை' ( Chandrasekhar Limit) எனக் கூறப்படுகின்றது. இதற்காகவே பல வருடங்களின் பின்னால் நோபல் பரிசும் வழங்கப் பட்டது.
எந்தவொரு பொருளினையும் குறிப்பிட்ட அளவிற்கு அமுக்கிச் சிறுக்க வைப்பதன் மூலமும் கரும் ஈர்ப்பு மையங்களை உருவாக்க முடியுமென ஐன்ஸ்டனின் சூத்திரங்களின் உதவியுடன் கண்டறிந்து கூறியவர் ஜேர்மன் விஞ்ஞானியான 'கார்ல் சுவார்ஸ்சைல்ட்' ( Karal Schwarzschild ) என்பவர். இவரது ஆய்வின் படி நமது சூரியனை மூன்று கிலோ மீற்றர் ஆரையுள்ளதொரு கோளமாக ஆக்குமளவுக்கு அழுத்ததினைப் பிரயோகித்தால், அது போல் நமது பூமியினை 0.9 மீற்றர் அளவுள்ள கோளமாக மாற்றும் வகையில் அழுத்ததினைப் பிரயோகித்தால் சூரியனும் பூமியும் கூடக் கரும் ஈர்ப்பு மையங்களாக மாறிவிடுமென்பதை இவரது ஆய்வுகள் புலப்படுத்துகின்றன.கரும் ஈர்ப்பு மையங்களிற்குள் அகப்பட்ட எவையும் திரும்பி வரமுடியாமலிருப்பதால் அவற்றை அறிவதற்கு அவற்றிற்கு அண்மையிலிருக்கும் ஏனைய நட்சத்திரங்களில் அவை ஏற்படுத்தும் தாக்கங்களைக் கொண்டு அறிய முடியும்மென விஞ்ஞானிகளின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நமது பிரபஞ்சத்தில் அதிகமாகக் காணப்படும் 'இணை நட்சத்திரங்கள் ' ( Binari Stars ) இவ்விடயத்தில் உதவுகின்றன. இவ்விதமானதொரு இணை நட்சத்திரமான 'சைனஸ் ' நட்சத்திரக் கூட்டத்திலிருந்து பெருமளவில் x கதிர்கள் வருவது அவதானிக்கபட்டது. பிரபல விஞ்ஞானியான 'ஸ்டீபன் ஹார்கின்ஸ்'சின் ஆய்வுகளின்படி மேற்படி 'சைனஸ் ' இணை நட்சத்திரங்களிலுள்ள ஒரு நட்சத்திரமானது கரும் ஈர்ப்பு மையமாகும். அதன் ஈர்ப்பினால் அவ்விணையின் மற்ற நட்சத்திரத்திலிருந்து பொருளானது கரும் ஈர்ப்பு மையத்தினை நோக்கி ஈர்க்கபடுகின்றது. இதன் விளைவாக பொருளானது சூடேறி வெளிப்படும் கதிர்களே அவதானிக்கப்பட்ட x கதிர்களாகும். மேற்படி x கதிர்களின் இயல்பிலிருந்து ஈர்க்கும் நட்சத்திரத்தின் திணிவு ஆறு சூரிய திணிவு எனக் கணக்கிடப்பட்டது. 'சந்திரசேகரின் எல்லையின்' படி  இந்நட்சத்திரம் ஒரு கரும் ஈர்ப்பு மையமாகவிருக்கலாமெனக் கருதப்படுகின்றது.
                    
                        இத்தகைய கரும் ஈர்ப்பு மையங்களின் அபரிதமான ஈர்ப்பு ஆற்றலினால் ஈர்க்கப்படும் பொருளானது இறுதியில் சிதைந்து அதனையுள்ளடக்கியுள்ள வெளிகூட இல்லாதொழிந்து விடுகின்றது. இந்நிலையில் கரும் ஈர்ப்பு மையத்தினுள் நமது பிரபஞ்சத்துப் பெளதிக விதிகள் எல்லாமே செயலிழந்து விடுகின்றன. கரும் ஈர்ப்பு மையங்களை ஐன்ஸ்டைனின் கணிதச் சூத்திரங்கள் எதிர்வு கூறுவதைப் போல் கரும் ஈர்ப்பு மையங்களிற்கு எதிரான 'வெண் துளைக 'ளினையும் (Whit Holes) எதிர்வு கூறுகின்றன. மேற்படி கரும் ஈர்ப்பு மையங்களையும் வெண்துளைகளையும் இணைக்கும் அமைப்புகளும் பிரபஞ்சத்தில் காணப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக பெளதிக வானியல் விஞ்ஞானிகளின் ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. இவற்றை Worm Holes ' எனவும் அழைக்கின்றனர். தற்போதைய நிலையில் பிரபஞ்சத்தின் பிரமாண்டமான அளவு காரணமாகவும், மனித வாழ்வின் குறுகிய காலகட்டம் காரணமாகவும் பிரபஞ்சத்தினூடு ஊடறுத்து பல ஒளி வருடங்களைக் கடந்து பயணிப்பது முடியாத காரியமாகவிருந்து விடுகின்றது. இந்நிலையில் மேற்படி 'புழுத் துளைகள் ' பிரபஞ்சத்தின் தொலைவினை மனித இனமானது தனது வாழ்நாளிலேயே கடப்பதற்கான சாதனமோவெனவும் விஞ்ஞானிகள் ஐயுறுகின்றார்கள். பூமியின் ஈர்ப்புச் சக்தியினையும் மீறும் ' தப்பும் வேகத்தில் ' ( Escape Velocity ) செல்லும் ராக்கட்டினுள் பிரயாணிக்கும் மனிதர், தற்போதைய நிலையில் அசாத்தியமாகக் கருதப்படும் 'கரும் ஈர்ப்பு மையங்களி 'னூடான பயணம் சாத்தியமாகும் பட்சத்தில் மேற்படி 'புழுத் துளைகள் ' மூலம் பிரபஞ்சம் முழுவதும் பயணம் செய்யும் காலம் வருமோவென வானியற் பெளதிகவியலாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கின்றார்கள்.

                   
                                    ஆனால் இதுவரையிலான ஆய்வுகளின்படி கண்டுபிடிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் பொருள் அடர்த்தி மிகமிகச் சிறியதாகத்தானிருக்கிறது. நம் கண் முன்னால் விரிந்து கிடக்கும் இப்பிரபஞ்சத்தின் பொருள் அடர்த்தி , பொருட் செறிவு இவ்வளவு சிறியதா? நம்பவே முடியவில்லையல்லவா? பெளதிக வானியல் அறிஞர்களாலும் இதனை நம்பத்தான் முடியவில்லை. அதனால் தான் அவர்கள் இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளின் பெரும்பான்மையான பகுதி நமது கண்களுக்குப் புலப்படாத வகையில் இன்னுமொரு வடிவிலிருக்க வேண்டுமென நம்புகின்றார்கள். இவ்வகையான பொருளினை 'இருண்ட பொருள்' (Dark Matter) என அவர்கள் பெயரிட்டு ஆராய்ச்சிகள் நடத்துகின்றார்கள். அப்படியானால் இவ்வகையான கரும்பொருள் எங்கே ஒளிந்துள்ளது? இவ்வகையான பொருள் ஒளிந்திருக்கச் சாத்தியமான இடங்களில் ஒன்று 'கருந்தொளை'கள் (Black Holes)அல்லது 'கரும் ஈர்ப்பு மையங்க'ளாகும். இத்தகைய கருந்தொளைகளிலிருந்து ஒளியே வெளியேறுவதில்லை என்பதனால், இவற்றினுள் ஒளிந்திருக்கும் பொருளின் அளவை அறிவது கூடத் தற்போதைய நிலைமையில் சிரமமாகத் தானிருக்கின்றது.

அறிவியலாளர்களின் பார்வையில் பிரபஞ்சம்.(தொடர்ச்சி…)

Picture
பெரு வெடிப்புக்' (Big Bang) கோட்பாடு

                                           தற்போது நிலவும் கோட்பாடுகளின்படி மிகப் பிரபல்யமாக விளங்கும் கோட்பாடு 'பெரு வெடிப்புக்' (Big Bang) கோட்பாடு என அழைக்கப்படுகிறது. இதன்படி இப்பிரபஞ்சமானது ஆரம்பத்தில் ஓரிடத்தில் குவிந்திருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் அதனுள் நிலவிய ஈர்ப்புச் சக்தியின் அளவுன் அதிகரித்து, வெப்பநிலை உயர்ந்து வெடித்திருக்க வேண்டும். அவ்வெடிப்பிலிருந்து உருவானதே தற்போது காணப்படும் இப்பிரபஞ்சம் என விளக்குகிறது இக்கோட்பாடு. நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆராய்ச்சி முடிவுகளெல்லாம் இக்கோட்பட்டிற்குச் சாதகமாகவேயிருக்கின்றன. இதற்கு ஆதாரமாகப் பின்வருவனவற்றைக் கூறலாம்.உதாரணமாக 'இப்பிரபஞ்சமானது பெருவெடிப்பின் மூலம் உருவாகியிருக்கும் பட்சத்தில் ஆரம்பத்தில் அவ்வெடிப்புடன் சேர்ந்து வெளியான பெருமலவு கதிரியக்கம் இன்றும் கூட மிகக் குறைந்த அளவிலேனும் பரவியிருக்க வேண்டும்' என ரஷ்ய விஞ்ஞானியான ஜோர்ஜ் கமாவ் என்பவர் கருதினார். இதனை 'பின்னணிக் கதிரியக்கம்' (Background Radiation) என அழைத்தார்கள். இது 1965ஆம் ஆண்டில், அமெரிக்காவின் நியுஜேர்ஸி மாநிலத்தில் அமைந்துள்ள 'பெல்' ஆய்வுக்கூடத்தில் 'ஆர்னோ பென்ஷியாஸ்' (Arno Penzias) மற்றும் ரொபேர்ட் வில்சன்' (Robert Wilson) ஆகியோரால் ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.பெருவெடிப்புக் கோட்பாட்டிற்கு ஆதாரமான இன்னுமொரு விடயம் என்னவென்றால்..அதுதான் நமது பிரபஞ்சத்தின் விரியும் தன்மை. நமது பிரபஞ்சம் ஒவ்வொரு கணமும் விரிந்து கொண்டிருக்கின்றது என்ற உண்மையினை அமெரிக்க வானியல் அறிஞரான 'எட்வின் ஹபிள்' என்பவர் கண்டு பிடித்தார். இதன்படி விரியும் பிரபஞ்சத்தின் வேகம் கண்டு பிடிக்கப்பட்டது. அவ்வேகத்திலிருந்து இப்பிரபஞ்சமானது சுமார் 15 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஓரிடத்தில் குவிந்து செறிந்திருக்க வேண்டுமென்பதும் அறியப்பட்டுள்ளது. இக்கண்டு பிடிப்பு பெருவெடிப்புக் கோட்பாட்டிற்கு ஆதரவாகவுள்ளது. அதே சமயம் நம் மனதில் பல கேள்விகள் எழாமலில்லை. அப்படியானால் இவ்விதமான பொருட்களெல்லாம் ஆரமப்த்தில் எவ்விதம் உருவாகின? பெருவெடிப்புக்கு முன்னர் இருந்ததென்ன? நமது பிரபஞ்சம் போன்று வேறும் பல்கோடிப் பிரபஞ்சங்கள் தமது பாதைகளில் விரிந்து கொண்டிருக்கின்றனவா? அப்படியானால் இன்னுமொரு விரிந்து கொண்டிருக்கும் பிரபஞ்சமொன்றுடன் நமது பிரபஞ்சம் மோதுவதற்குச் சாத்தியங்களுண்டா? இவ்விதம் பலப் பல வினாக்கள் எழுகின்றன அல்லவா?

                            பெருவெடிப்புக்' கோட்பாடு போல் இப்பிரபஞ்சம் பற்றிய வேறு சில கோட்பாடுகளும் நிலவத்தான் செய்கின்றன. அவற்றிலொன்றுதான் 'உறுதி நிலைக்' கோட்பாடு. இகோட்பாட்டினை 1948இல் பிரிட்டிஷ் வானவியல் அறிஞரான 'பிரட் ஹொய்ல்' (Fred Hoyle) மற்றும் ஆஸ்திரியர்களான 'தோமஸ் கோல்ட்' (Thomas Gold) மற்றும் 'ஹெர்மன் பாண்டி' (Hermann Bondi) என்பவர்கள் முன் வைத்தனர். இப்பிரபஞ்சமானது தற்போது எவ்விதம் காணப்படுகிறதோ அவ்விதமே இது வரை காலமும் இருந்து வந்துள்ளது. இனியும் இருக்கும். இந்நிலையில் இதன் தோற்றம் பற்றியெல்லாம் கவலைப் படுவதில் அர்த்தமேயில்லை. ஏனெனில் இப்பிரபஞ்சமானது எப்பொழுதுமே இருந்து வந்துள்ளது. இதற்கு ஆரம்பமேயில்லை. இக்கோட்பாடு பிரபஞ்சம் விரியும் தன்மையினை ஒத்துக் கொள்கிறது. ஆனால் பிரபஞ்சம் விரிவதால் அடர்த்தி குறைகிறது என்பதை இக்கோட்பாடு ஏற்றுக் கொள்ளவில்லை. இக்கோட்பாட்டின்படி வெற்றிடத்திலிருந்து எந்நேரமும் பொருளானது உற்பத்தியாகிக் கொண்டேயிருப்பதால், விரிவடைந்த போதும், பிரபஞ்சத்தின் அடர்த்தி குறைவதேயில்லை. ஆனால் இக்கோட்பாட்டினால் 'பின்னணிக் கதிரியக்க'த்தினை விளங்கப்படுத்த முடியவில்லை.
இன்னுமொரு சுவீடன் நாட்டைச் சேர்ந்த பெளதிக/வானியல் அறிஞரான 'ஹான்ஸ் அல்வென்'(Hannes Alfven) என்பவரின் கருத்துப்படி நமது பிரபஞ்சமானது இன்னுமொரு மாபெரும் பிரபஞ்சமொன்றின் சிறு பகுதியொன்றில் ஏற்பட்ட வெடிப்பின் விளைவுதான். இவரது கணிப்பின்படி நமது பிரபஞ்சமானது சம அளவிலான பொருளையும் எதிர்ப்பொருளினையும் கொண்டுள்ளதாகவிருக்க வேண்டும். பொருளுக்கும் எதிர்ப்பொருளுக்கும் இடையிலான மோதலின் விளைவாக உருவான பெருவெடிப்பே நம் பிரபஞ்சத்தின் விரிவுக்குக் காரணம். இவ்விதமாக பொருளும் எதிர்ப்பொருளும் ஒன்றுடனொன்று மோதும் போது அவை முற்றாக அழிந்து (Annihilation) விடுகின்றன. அவ்விதம் அழியும் போது புரோட்டான்களும், இலத்திரன்களும் உருவாகின்றன. இதனால் அழிவு நடைபெறும் இடத்திற்கண்மையில் விரைவான அதிகரிப்பு (Rapid Expansion) ஏற்படுகின்றது. ஆனால் இவ்விதம் 'அழிவு' (Annihilation) ஏற்படும் போது கட்டாயம் காமாக் கதிர்கள் உருவாகியிருக்க வேண்டும். அவற்றை மிக இலகுவாகக் காமாத் தூரதரிசினிகளால் (Gamma Telescope) அவதானிக்கக் கூடியதாகவிருக்க வேண்டும். ஆனால் அவ்விதமான அவதானிப்பெதனையும் இதுவரையில் அறியமுடியவில்லையென்பது 'ஹான்ஸ் அல்வென்'வின் கோட்பாட்டிற்கு ஏற்பட்ட பின்னடைவுகளிலொன்று.

                                    இதற்கு 'ஹான்ஸ் அல்வென்' 'நாமிருக்கும் பொருட்குமிழியானது அவதானிக்கப் படக்கூடிய பிரபஞ்சத்திலும் அதிகமாயிருப்பதே இதற்குக் காரணம்' என்றொரு வாதத்தை முன்வைத்தார். அவ்விதமாயின் இவ்வாதம் இன்னுமொரு எதிர்வாதத்தினை முன் வைத்துவிடும் அபாயமிருக்கிறது. அது 'இக்கோட்பாடு எதிர்வு கூறும் பிரபஞ்ச அமைப்பினை அவதானிக்க முடியாதென்றால் அதனை பரிசோதிப்பதெவ்விதம்' என்பதுதான் அது.பிரிட்டிஷ் பெளதிகவியல்/வானியல் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹார்கின்ஸ்ஸின் (Stephen Hawking) கருத்து என்னவென்றால்...நமது பிரபஞ்சத்தின் இருப்பானது மூடிய நேர வளையத்தை ஒத்தது. இவரது கருத்துப்படி பெருவெடிப்பில் உருவாகும் பிரபஞ்சமானது இறுதியில் ஒரு குறிப்பிட்ட நிலையில், அதாவது பிரபஞ்சத்தின் விரிவடையும் வேகமானது அதியுயர் நிலையினை அடைந்ததும் அதுவரையில் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்த நேரமானது பின்னோக்கி செல்லத் தொடங்கும். எதுவரை இவ்விதமாக நேரமானது பின்னோக்கிச் செல்லுமென்றால் இன்னுமொரு பெருவெடிப்பு ஏற்படும் வரையில்தான். அதன் பின்னர் நேரமானது மீண்டும் முன்னோக்கி நகரத் தொடங்கும். இவ்விதமாக இப்பிரபஞ்சமானது மீண்டும் மீண்டும் வெடித்துக் கொண்டேயிருக்கும். உண்மையில் இத்தகைய பிரபஞ்சத்தில் வசிக்கும் ஒருவருக்கு நேரம் முன்னோக்கிச் செல்கிறதா அல்லது பின்னோக்கிச் செல்கிறதா என்பது கூடத் தெரியாது. ஏனெனில் அவரால் நேரம் முன்னோக்கிச் செல்வதாக மட்டும் தான் உணர முடியும். உண்மையில் தற்போது நேரம் முன்னோக்கிச் செல்கிறதா அல்லது பின்னோக்கிச் செல்கிறதா என்பது கூடச் சரியாகத் தெரியாது. இவ்விதமாக இருக்கிறது ஸ்டீபன் ஹார்கின்ஸ்ஸின் சிந்தனையின் போக்கு. இன்னும் சில கோட்பாடுகளோ ஆரம்பத்தில் ஒரு பெரு வெடிப்பல்ல பல பெருவெடிப்புகள் ஏற்பட்டிருக்க வேண்டுமெனத் தெரிவிக்கின்றன.

அறிவியலாளர்களின் பார்வையில் பிரபஞ்சம்.(முடிவு)

Picture
புழுத்துளை' (Wormhole) கோட்பாடுகள் மிஷியோ ஹகு'வின் 'ஹைபர் ஸ்பேஸ்'!

                                
நாம் வாழும் இந்த உலகம், வான், மதி, சுடர், இவற்றையெல்லாம் உள்ளடக்கிய நமது பிரபஞ்சம் இவை யாவுமே பெரும் பிரமிப்பினையும், பல்வேறு வகைப்பட்ட வினாக்களையும் ஏற்படுத்தி விடுவது வழக்கம். முப்பரிமாண உலகினுள் கைதிகளாக வளைய வந்துகொண்டிருக்கும் நாம், இம்மண்ணில் நாமே உருவாக்கிய அமைப்புகள் ஏற்படுத்தும் தாக்கங்களுக்குள் சிக்கி, அவற்றுக்கு ஈடுகொடுத்துத் தப்பிப் பிழைப்பதிலேயே எம் வாழ்நாளைக் கழித்து முடிந்து விடுகின்றோம். இத்தகையதொரு நிலையில் இப்பிரபஞ்சத்தின் தோற்றம், அமைப்பு, முடிவு பற்றிய வினாக்கள், அவை பற்றிய நினைவுகள், எண்ணங்கள் எல்லாமே எப்பொழுதுமே என் நெஞ்சில் ஒருவித தண்மையான உணர்வினை ஏற்படுத்தி விடுவது வழக்கம். சகல விதமான மன அழுத்தங்களிலிருந்தும் என்னை விடுபட இவை பெரிதும் உதவுகின்றன. இதற்காகவே நகரவாழ்வின், நாகரிக வாழ்வின் இறுக்கத்தினிலிருந்தும் விடுபடுவதற்காக நேரம் கிடைக்கும் போதிலெல்லாம் இரவினில் தொலைவினில் சிரிக்கும் நட்சத்திரக் கன்னியரின் கண்சிமிட்டலில், வெண்மதிப் பெண்ணின் பேரழகில் என்னை மறந்து விடுவேன். அவர்களுடன் கழிக்கும் என் பொழுதுகள் என்னைப் பொறுத்தவரையில் அற்புதமானவை. அவர்களைப் பற்றிய நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள் இவை யாவுமே எனக்கு மிகவும் உவப்பானவை. அண்மையில் நம் இருப்பு, பிரபஞ்ச அமைப்பு பற்றியெல்லாம் புதியதொரு கோட்பாட்டளவில் விளக்குமொரு நல்லதொரு , வான் - இயற்பியல் (Astro-Physics) சம்பந்தமான நூலொன்றினை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

                      முன்பொருமுறை ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனின் 'சிறப்புச், சார்பியற்' கோட்பாடுகளை, அறிவுத்தாகமெடுத்த சாதாரண வாசகரொருவர் விளங்கும் வகையில் 'எரிக் சைய்சன்' (Eric Chaission) எழுதிய 'Relatively Speaking' வாசித்ததன் பின்னர், 'ஸ்டீபன் ஹார்கின்ஸ்'சின் 'காலத்தின் சுருக்கமான வரலாறு' (A Brief History Of Time) வாசித்ததன் பின்னர், என்னை மிகவும் கவர்ந்த நூலிது. நியுயோர்க்கில் 'City College'இல் தத்துவ இயற்பியலில் பேராசிரியராகப் பணிபுரியும் 'மிஷியொ ஹகு' (Michio kaku) எழுதிய 'ஹைபர் ஸ்பேஸ்' (Hyperspace) என்னும் நூல் பற்றித்தான் குறிப்பிடுகின்றேன். இந்தக் கட்டுரை இந்நூல் பற்றிய விமர்சனக் கட்டுரையோ அல்லது மதிப்புரையோ அல்ல. அவ்விதமானதொரு கட்டுரையினைப் பின்னொரு சமயம் எழுதும் எண்ணமுண்டு. ஆனால் இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள சில விடயங்களைப் பற்றிய சிறியதொரு விபரிப்பே, ஏற்பட்ட என் எண்ணங்களின் பாதிப்பே எனது இச்சிறு கட்டுரை.
மிஷியோ ஹகு'முப்பரிமாணங்களுக்குள் சிக்கியிருப்பதால் தான் எம்மால் இயற்கையில் நிகழும் பல்வேறு நிகழ்வுகளைப் பற்றியெல்லாம் பூரணமாக விபரிக்க முடியாதிருக்கிறது. இதனால்தான் ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனால் கூட இறுதிவரை இயற்கையின் நான்கு விதிகளையும் ஒன்றுபடுத்தி விபரிக்கும் வகையிலான கோட்பாடொன்றினைக் கண்டறியமுடியாது போய்விட்டது. கணிதத்தில் புலமை வாய்ந்த அறிஞர்கள் அணுகத் தொடங்கி விட்டார்கள். இவை சம்பந்தமான கோட்பாடுகள் இன்னும் கோட்பாட்டளவிலேயே இருந்தாலும் எதிர்காலத்தில் அக்கோட்பாடுகள் நடைமுறைக்குச் சாத்தியமாவதற்குச் சாத்தியங்களிலாமலில்லை. உதாரணமாக ஒளி எப்பொழுதும் எம்மைப் பிரமிக்க வைத்துவிடுமொன்று. துகளாக, அலையாக விளங்குமிதன் இருப்பு புதிரானது. வெற்றிடத்தினூடாகப் பயணப்படக்கூடிய இதனியல்பு ஆச்சரியத்தைத் தருவது. ஒளியின் இவ்வியல்பினை நடைமுறையிலுள்ள கோட்பாடுகள் மூலம் விளக்க முடியாது. இது போல் விரிந்து கொண்டிருக்கும் நமது பிரபஞ்சத்தின் அளவு நம்மைப் பிரமிப்பின் உச்சத்துக்கே கொண்டு சென்று விடுகிறது. ஒளி வேகத்தில் சென்றால் கூட, எத்தனையோ பில்லியன் ஆண்டுகள் தேவையுள்ள பயணங்களைக் கொண்ட தொலைவுள்ள இடங்களைக் கொண்டது நமது பிரபஞ்சம்.

                      இத்தகைய பிரமாண்டமான தொலைவுகளை நமது வாழ்நாளில் கடப்பதென்பது நினைத்துப் பார்க்க முடியாது. நமது சூரியமண்டலம் தனது அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்குமொன்று. ஒருநாளில் அழிந்து போய்விடும். விஞ்ஞானிகளின் ஆய்வுகளின்படி இன்னுமொரு ஐந்து பில்லியன் வருடங்களில் நமது சூரியன் 'வெண்குள்ளர்' (white dwarf) என்னும் நிலையினை அடைந்துவிடும். ஆனால் அதற்கு முன்னரே சூரிய மண்டலத்திலுள்ள கோள்களையெல்லாம் 'சிவப்பு அரக்கர்' (Red Giant) நிலையினை அடைந்த நமது சூரியன் விழுங்கி விடும். ஒருவேளை நமது கதிர் அழிவதற்கிடையில், எம்மால் வாழுதற்குரியதொரு கோளினையுள்ளடக்கிய இன்னுமொரு சூரியமண்டலத்தைக் கண்டுபிடிக்க முடிகின்றதென்று வைத்துக் கொள்வோம். ஆனால் அதே சமயம் விரிந்து கொண்டிருக்கும் நமது பிரபஞ்சம் ஒரு சமயம் விரியும் இயல்பினை மாற்றிச் சுருங்க ஆரம்பிக்கின்றதென்று வைத்துக் கொள்வோம். அவ்வாறானதொரு நிலையில் 'பெருவெடிப்பில்' (Big Bang) ஆரம்பித்த நமது பிரபஞ்சம் 'பெருஅழிவினில்' (Big Crunch) அழிந்து போகக் கூடியதொரு சாத்தியமும் ஏற்படலாம். அவ்வாறானதொரு நிலையில் நமது பிரபஞ்சத்திலுள்ள சகல உயிரினங்களும் அழிந்து போக வேண்டிய நிலையேற்படும். உண்மையில் அவ்வாறானதொரு நிலையில் உயிரினம் தப்புவதற்கேதாவது சாத்தியமுண்டா? ஒரு நிலையில் அதற்கான சாத்தியங்களும் இருக்கத்தான் செய்கின்றன. விரிந்து கொண்டிருக்கும் நமது பிரபஞ்சத்தைப் போல பல பிரபஞ்சங்கள் நாம் வாழும் இதே கணத்தில், நமது பிரபஞ்சத்துக்கு வெளியில் விரிந்து கொண்டிருந்தால், அப்பிரபஞ்சங்களுக்கும் நமது பிரபஞ்சத்துக்குமிடையில் ஒரு பாதையொன்றினை அமைப்பதற்குரிய சாத்தியமொன்றிருந்தால் அவ்விதமானதொரு தப்பிப்பிழைத்தலுக்கும் சாத்தியமொன்றுண்டு. இதுபோன்ற பலவிடயங்களை விபரிக்கவும், வினாக்களுக்கு விடையளிக்கவும் இயற்பியல் விஞ்ஞானிகள் ஆராய்ந்து கொண்டிருக்கும் கோட்பாடுகளை விபரிக்கும் நூலிது.
முக்கியமாக பரிமாணங்களை மீறிச் சிந்திப்பதன் மூலம், முப்பரிமாண உலகை மீறிப் பல்பரிமாண உலகில் வைத்து இப்பிரபஞ்சத்தில் நடைபெறும் நிகழ்வுகளை ஆய்வதன் மூலம் மிகவும் இலகுவாக தற்போது முடியாதுள்ள விடயங்களைச் சாத்தியமாக்க முடிகிறது.

                        அவ்விதமான பல்பரிமாண வெளியே 'ஹைபர் ஸ்பேஸ்' அல்லது' 'அதிவெளி'. பல்பரிமாணங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் இயற்கையின் நான்கு அடிப்படை விசைகளான ஈர்ப்பு, மின்காந்த, பலமான மற்றும் பலஹீனமான கதிரியக்க விசைகளையெல்லாம் ஒரு தத்துவத்தின் கீழ் விபரிக்க முடிகிறது. மேற்படி நான்கு விசைகளும் ஒன்றேயென்பதை காந்தவிசையினையும், மின்விசையினையும் ஒன்றுபடுத்த முடிந்ததைப் போல ஒன்றுபடுத்த முடிகிறது. அதே போல் நம்முப்பரிமாண உலகில் வெறுமையாகக் காட்சியளிக்கும் வெற்றிடமானது உண்மையில் வெற்றிடமேயில்லை. ஐந்தாவது பரிமாணத்தில் அதிரும் இயல்புகளைக் கொண்டது. நம் பரிமாணங்களை மீறிய நிலையில், ஐந்தாவது பரிமாணத்தில் அதிரும் இயல்பினைக் கொண்டது ஒளி. இவ்விதமான ஐந்தாவது பரிமாணத்தில் அதிரும் ஒளியால் இயல்பாகவே , அப்பரிமாணத்தில் அதிர்ந்து கொண்டிருக்கும் வெற்றிடத்தில் பயணிக்க முடிகிறது. (நாம் வாழும் முப்பரிமாண உலகுடன், நேரத்தையும், இன்னுமொரு 'பரப்பு சம்பந்தமான பரிமாணமொன்றி'னையும் - Spatial Dimension -கூட்டுவதால் ஏற்படுவதே ஐந்தாவது பரிமாணம். இவ்விதமானதொரு ஐம்பரிமாண உலகில், வெளியில் மின்காந்த அலையான ஒளியினையும், ஈர்ப்பு விசையினையும் மிகவும் இலகுவாகவே ஒன்று படுத்த முடிகிறது. ஐன்ஸ்டைன் சூழலை மீறிச் சிந்தித்து வெளிநேரப் பிரபஞ்சம் பற்றிய தனது கோட்பாடுகளை அறிவித்து நவீன இயற்பியலைப் புரட்சிகரமாக்கினார்.

                         ஐன்ஸ்டைனின் வழியில் பல்பரிமாணங்களை அடிப்படையாக வைத்துச் சிந்திப்பதன் மூலமே ஐன்ஸ்டனால் முடியாமல்போன அடிப்படை விசைகளை ஒன்றிணைத்தலென்னும் கோட்பாட்டினைச் சாத்தியமாக்க முடியுமென்கிறார் மிஷியோ ஹகு இந்நூலில்.
நமது பிரபஞ்சம் அழியும் பட்சத்தில் இன்னுமொரு பிரபஞ்சத்துக்குத் தப்பிச் செல்ல முடியுமா போன்ற கேள்விகளுக்கெல்லாம் 'புழுத்துளை' (Wormhole) போன்ற கோட்பாடுகள் மூலம் விடைகாண நவீன அறிவுலகம் முயல்வதை விபரிக்கும் இந்நூல் அறிவுத் தாகமெடுத்து அலையும் உள்ளங்களைக் களிகொள்ளச் செய்துவிடும் நூல்களில் முக்கியமானதொன்று. பல்பரிமாணங்களைக் கொண்டு நம்மிருப்பை விபரித்த முதலாவது கோட்பாடான 'கழுசா-கிளெயின்' (Kaluza-Klein) தத்துவம் தொடக்கம், பொருளானது பத்துப் பரிமாண வெளியில் அதிரும் நுண்ணிய சிறுஇழைகளால் ஆனதென விபரிக்கும் 'சுப்பர் ஸ்ரிங்' (Super String) தத்துவம்வரை பல்வேறு விடயங்களைப் பற்றி விபரிக்கும் இந்நூல் 'காலத்தினூடு பயணித்தல்' (Time Travel) பற்றியும், 'ஜோர்ஜ் பேர்ன்ஹார்ட் ரீமா'னின் (George Bernhard Riemann) உயர்பரிமாணக் கோட்பாடுகள் பற்றியும், அதுவரை கணித உலகில் ஆயிரக்கணக்கான வருடங்களாகக் கோலோச்சிக் கொண்டிருந்த யூகிளிட்டின் கேத்திரகணிதத்தை (Geometry) எவ்விதம் 'ரீமானி'ன் நவீன நாற்பரிமாண கேத்திரகணிதக் கோட்பாடுகள் ஆட்டங்காண வைத்தன என்பது பற்றியும், விசை பற்றிய சேர்.ஐசாக் நியூட்டனின் 'விசை' பற்றிய கோட்பாடுகளை எவ்விதம் 'ரீமா'னின் கோட்பாடுகள் கேத்திரகணிதக் கோட்பாடுகளால் விளக்கி வைத்தன என்பது பற்றியும், இத்தகைய சாதனைகளையெல்லாம் எவ்விதம் 'ரீமான்' உளவியல், பொருளியல் பிரச்சினைகளுக்கு மத்தியில் சாதித்தார் என்பது பற்றியும் ஆராய்கிறது. மிகவும் பிரமாண்டமான தொலைவுகளை உள்ளடக்கிய பிரபஞ்சத்தினை மிகவும் குறுகிய நேரத்தில் கடப்பதற்கு, அதனை நமது அன்றாடப் பயணங்களிலொன்றாக மாற்றுவதற்குரிய வழிவகைகள் உள்ளனவா, நமது பிரபஞ்சம் அழியும் பட்சத்தில் இன்னுமொரு பிரபஞ்சத்துக்குத் தப்பிச் செல்ல முடியுமா போன்ற கேள்விகளுக்கெல்லாம் 'புழுத்துளை' (Wormhole) போன்ற கோட்பாடுகள் மூலம் விடைகாண நவீன அறிவுலகம் முயல்வதை விபரிக்கும் இந்நூல் அறிவுத் தாகமெடுத்து அலையும் உள்ளங்களைக் களிகொள்ளச் செய்துவிடும் நூல்களில் முக்கியமானதொன்று.

சாதனையாளரின் பார்வையில் பிரபஞ்சம்.

Picture
                              அலெக்ஸாண்டர் பிரிட்மென் இரவு நேரங்களில் அண்ணாந்து விரிந்து கிடக்கும் ஆகாயத்தைப் பாருங்கள். கோடிக் கணக்கில் பரந்து கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களை, கிரகங்களை உபகிரகங்களைக் கவனியுங்கள். அதே சமயம் இன்னும் ஒன்றையும் மனதிலே ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு செக்கனும் பிரமாண்டமானதொரு வேகத்தில் விரிந்து கொண்டிருக்கும் பிரபஞ்சமொன்றின் சிறியதொரு கோணத்தில் விரைந்து கொண்டிருக்கும் சிறியதொரு கோளொன்றில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதே அது. நெஞ்சினைப் பிரமிக்க வைத்து விடுகின்றதல்லவா! அப்படியானால் நம்மால் ஏனிந்த வேகத்தை உணர முடியவில்லை? மூடியதொரு புகையிரதத்தினுள் இருக்குமொருவருக்கு எவ்விதம் புகையிரதம் வேகமாகச் செல்வது தெரியாதோ அது போன்றதொரு நிலையில் தான் எம்முடைய நிலையும். பூமியைச் சுற்றிப் படர்ந்திருக்கும் வாயு மண்டலம்தான் எம்மை மூடிய புகையிரத்தைனைப் போல் இக்கோளினை வைத்திருக்கின்றது. அதனால் தான் எம்மால் எமது வேகத்தைக் கூட உணர முடியாமலிருக்கின்றது. இன்னும் ஒரு காரணம் - எம்மைச் சுற்றியுள்ள சுடர்களுக்கும், கிரகங்களுக்குமிடையிலான தொலைவு மிக மிக அதிகமானது. இத் தொலைவும் எமது வேகத்தினை உணரமுடியாதிருப்பதற்கு இன்னுமொரு காரணம். புகைவண்டியினுள் விரையும் ஒருவருக்கு அருகில் தெரியும் காட்சிகள் வேகமாகச் செல்வது போலும், மிகத் தொலைவிலுள்ள காட்சிகள் ஆறுதலாக அசைவது போலவும் தெரிவதற்கு அடிப்படைக் காரணம் தொலைவு தான்.இவ்விதம் எல்லையற்றுப் பரந்து கிடக்கும் இப்பிரபஞ்சம் பற்றி அறிவதன மூலம் மனிதர்கள் தம் பிறப்பின் காரணத்தின் சூத்திரத்தை அறிவதற்கு முயன்று கொண்டிருக்கின்றார்கள். அரிஸ்டாட்டில், கலிலியோ, நியூட்டன் , ஐன்ஸ்டைனென்று பிரபஞ்சம் பற்றிய கோட்பாடுகள் மேலும் மேலும் வளர்ச்சியடைந்து வந்துள்ளன. வந்து கொண்டிருக்கின்றன.   

                      இந்த வகையில்தான் 'அலெக்ஸாண்டர் பிரிட்மென்'னுடைய (Alexander Friedman) (1920) பிரபஞ்சம் பற்றிய கருத்துகளையும் பார்க்க வேண்டும். ஐன்ஸ்டைனின் கணித சூத்திரங்களை ஆராய்ந்து கொண்டிருந்த பிரிட்மான் பிரபஞ்சத்தின் உருவ அமைப்பு பற்றிய கோட்பாடுகளை விபரித்தார். அலெக்ஸாண்டர் பிரிட்மான் பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளின் அளவு பற்றி ஆராய்ந்தார். இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளானது வெளியை வளைக்கும் தன்மை படைத்தது. எனவே இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளின் அளவு பற்றி ஆராய்ந்த பிரிட்மான் 'இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளின் மொத்த அளவானது இப்பிரபஞ்சத்திற்கு ஒரு வடிவினை, உருவ அமைப்பினை உருவாக்கும் அளவுக்குப் போதுமானது' என எடுத்துக் காட்டினார்.இவரது கருத்துப்படி பிரபஞ்சத்தின் உருவ அமைப்பானது மூன்று விதமாகக் காணப்படுவதற்குச் சாத்தியமுள்ளது. இவற்றை அவர் முறையே 'மூடிய பிரபஞ்சம்', 'திறந்த பிரபஞ்சம்', 'தட்டையான பிரபஞ்சம்' என மூன்றாகப் பிரித்தார். 'மூடிய பிரபஞ்சம்' என்றாலென்ன? அது எப்படியிருக்கும்? மூடிய பிரபஞ்சத்திற்கு உதாரணமாக ஒரு கோளத்தின் அமைப்பையே குறிக்கலாம். கோளமொன்றின் வடிவம் எவ்விதம் வளைந்து காணப்படுகிறதோ அவ்விதமே இப்பிரபஞ்சமும் வளைந்து மூடிய நிலையில் இருப்பதற்குச் சாத்தியங்களுள்ளன. உண்மையில் ஒருவர் இவ்வகையான மூடிய பிரபஞ்சத்தில் நேர் கோட்டில் பயணம் செய்வாரென்றால் மீண்டும் தனது தொடக்க இடத்துக்கே வந்து விடுவார். இவ்வகையான நிலையினை நமது பூமியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை மிகவும் இலகுவாக விளங்கி விடும். உதாரணமாகப் பூமியின் மேற்பரப்பில் ஓரிடத்திலிருந்து பயணத்தைத் தொடங்குமொருவர் நேராக நடந்து செல்வாரேயானல் மீண்டும் தனது தொடக்குப் புள்ளிக்கே வந்து விடுவாரல்லவா? அது போல் தான் 'மூடிய பிரபஞ்சத்தி'னுள் பயணிப்பவரின் நிலையும்.
இவ்விதமாக நமது பிரபஞ்சத்தின் வடிவம் பற்றியும், அதன் வடிவம் இங்கு காணப்படும் பொருளின் அடர்த்தி பற்றியும், அது சம்பந்தமாகத் தொடரும் ஆய்வு பற்றியும் பார்த்தோம். இதே சமயம் நமது பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய ஆய்வுகளும் தொடரத்தான் செய்கின்றன.

Via (சித்தர்கள்) angelinmery