ஆரோக்கிய ஜீஸ் வகைப் பானங்கள் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:34 | Best Blogger Tips
Photo: ஆரோக்கிய ஜீஸ் வகைப் பானங்கள் 

தோடை, எலுமிச்சை, லைம், நாரத்தை, பாஸன் வகைகள்

ஒருவர் பருகுவதற்கு பொதுவாக ஒரு பழம் போதுமாக இருக்கும். இருந்தாலும் விருப்பத்திற்கு ஏற்ப சாற்றைப் பிழிந்து எடுத்து ஒரு கப் தண்ணீர் விட்டுக் கலக்கி, வடித்து 2 ரீ ஸ்பூன் சர்க்கரை அல்லது சிறிது உப்பு கலந்து செய்து கொள்ளுங்கள். சுவை சேர்க்க விரும்பினால் எலுமிச்சை, லைம் இரண்டிற்கும் இஞ்சிச் சாறு சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த வகை பானங்களை குளிரூட்டியில் வைத்துப் பருகிக் கொள்ளலாம்.

பப்பாளி - 2 பெரிய துண்டுகள், மாம்பழம் -1, விளாம்பழம் -1 , வாழைப்பழம் - 2, பட்டர் புருட் - 1, கொய்யாப்பழம் - 1, சப்போட்டா - 1,2, அண்ணாமுண்ணாப் பழம் விதைகள் நீக்கி -1, நாவல்பழம் விதைகள் அகற்றி - 1/2 கப்.

இவ்வகைப் பழங்களுக்கு ஒரு கப் பால் கலந்து மிக்ஸியில் அடித்து எடுத்துக் கொள்ளுங்கள். விளாம்பழம், கொய்யாப்பழம் விதைகள் இருப்பதால் வடித்து எடுக்க வேண்டும். விருப்பத்திற்கும் பழத்தின் இனிப்புக்கும் ஏற்ப சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள்.
சில துளி எஸன்ஸ் வகைகள் இவ்வகைப் பானங்களில் சேர்த்துக் கொள்ளலாம். (வனிலா, லெமன், ஸ்டோபரி, பைன்அப்பிள், ரோஸ், ஆமென்ட்)

அப்பிள் - 1, அன்னாசி - பெரிய 2 துண்டுகள், திராட்சை - 1/2 கப், பியர்ஸ் - 1, மாதுளை - 1/2 கப், தக்காளி - 1-2, தற்பூசணி - 1 கப், வெள்ளரிப்பழம் - 1 கப்,

இவற்றில் வேண்டியதைத் தேர்ந்தெடுத்து மிக்ஸியில் அடித்தெடுத்து சீனி சேர்த்து பிரிட்ஜில் வைத்து எடுத்துக் கொள்ளலாம்.
அன்னாசி ஜீசில் பரிமாறு முன் chop செய்த அன்னாசிக் கலவை சேர்த்து, மேலே வனிலா ஐஸ்கிரீம் ஒரு ஸ்கூப் போட்டால் சுவை தித்திக்கும்.
அப்பிள் ஜீசுக்கு chop செய்த அப்பிள் தூவிவிட மேலே மிதந்து நின்று வாவா என்று அழைக்கும்.
உங்கள் விருப்பம் போன்று ஏனைய ஜீஸ்களையும் அலங்கரித்துக் கொள்ளுங்கள்.

பால் பொருட்களிலிருந்து தயாரிக்கக் கூடிய பானங்கள் சில

பால் - பாதாம். முந்திரிகைப் பருப்புகளை ஊற வைத்துக் கலந்து, சர்க்கரை சேர்த்து அருந்திக் கொள்ளலாம். பருப்புகளை பாலுடன் மிக்ஸியில் அடித்ததெடுத்தும் உங்கள் விருப்பம் போல் அருந்திக் கொள்ளுங்கள்.

லசி - 1/2 கப் தயிருடன் 1/2 கப் தண்ணீர் விட்டு அடித்தெடுத்து சர்க்கரை சேர்த்து பிரிட்ஸில் வைத்து எடுங்கள்.

மோர் - 1/2 கப் தயிருடன் 1 கப் தண்ணீர் விட்டு அடித்து, மேலே வரும் வெண்ணையை எடுத்துவிட வேண்டும். பின்பு சிறிதளவு உப்புக் கலக்கி அருந்திக் கொள்ளலாம். வாய்க்கு இதமாக வேண்டுமானால் சிறியதாகக் கொத்திய மாங்காய், வெள்ளரி, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய். மல்லித்தளை, கறிவேற்பிலை விரும்பியவற்றைக் கலந்து கொண்டால் சூப்பராக இருக்கும்.

இளநீர்- நேரிடையாகவே அருந்திக் கொள்ளுங்கள். இளநீருடன் இருக்கும் தேங்காய் வழுக்கலையும் சேர்த்து சில துளி எலுமிச்சம் சாறும் கலந்து குடித்தால் செம ரேஸ்ட்தான்.

பனம் நுங்கு - நேரிடையாக சுவைக்க சுவைக்க விரும்பிய அளவு அருந்திக் கொள்ளக் கூடியது. பிரிட்ஸில் வைத்தும் அருந்திக் கொள்ளலாம்.
கரும்புச் சாறு - சிறிதாக வெட்டிய கரும்புத் துண்டுகள் தேவையான அளவு எடுத்துக் கொண்டு மிக்ஸியில் அடித்து எடுத்து, வடித்து அருந்திக் கொள்ளுங்கள். கருப்பஞசாறைக் கண்டால் ஈயும் இளித்துக் கொண்டு வந்துவிடும். கவனமாக மூடி வையுங்கள்.

பதநீர்(கருப்பணி) - நேரடியாகவே பருகி கொள்ளக் கூடியது. அதிலுள்ள சுண்ணாம்புச் சத்திற்கு சுவை ஊட்ட சிறியதாக வெட்டிய மாங்காய்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.
பதநீரில் பச்சையரிசி போட்டு அவிய வைத்து கருப்பணிக் கஞ்சியாகவும் பருகிக் கொள்ளலாம்.

சர்க்கரைத் தண்ணீர் - எலும்மிச்சம்பழம், வெல்லம், அத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பழத்தீர்த்தம் - இளநீர் பாலுடன் மாம்பழம், வாழைப்பழம், எலுமிச்சை, மாதுளை, பேரீச்சு, விளாம்பழம் இவற்றுடன் வெல்லம் கலந்து கரைத்துக் கொண்டால் மிக்ஸ் புருட் பானம் தயாராகிவிடும்.

சாதக்கஞ்சி - சாதம் அவிந்து தடிப்பாக வரும்போது வடித்தெடுத்து உப்புச் சேர்த்து அருந்தலாம். ருசிக்கு தேங்காயப் பாலும் ஒரு மேசைக்கரண்டி சாதமும் சேர்த்துக் கொள்ளலாம்.

தெளிந்த பழம் சோற்று நீர் - ஒரு கப் எடுத்து உப்பு, தயிர், வெங்காயம், ஊறுகாய், பச்சைமிளகாய் சேர்த்துக் கொண்டால் சுவையாக இருக்கும்.

கசப்பு இல்லாத, உடலுக்கு ஹெல்தியான பானங்கள்

மல்லித்தழை, புதினாத்தழை இரண்டையும் தனித்தனியாகவோ சேர்த்தோ ஒரு கப் தண்ணீர் விட்டு அடித்து எடுத்து, உப்பு, மிளகுதூள், லைம் ஜீஸ் கலந்து அருந்துவது ஹெல்த்தியானது.

கரட அல்லது பீட்ரூட்- சிறிதாக வெட்டி ஒரு கப் எடுத்து உப்பு, மிளகுதூள், அல்லது ஒரு கப் பால் சீனி சேர்த்தும் அருந்திக் கொள்ளலாம்.

வெள்ளரிப் பிஞ்சு - பிஞ்சு வெள்ளரிக்காயாக எடுத்து ஒரு கப் தண்ணீர் விட்டு அடித்து எடுத்து, உப்பு, மிளகு. இஞ்சிச்சாறு கலந்து அருந்திக் கொள்ளுங்கள்.

நெல்லிக்காய் - 3,4 எடுத்து விதையை நீக்கி ஒரு கப் தண்ணீர் விட்டு அடித்து உப்பு சேர்த்துக் கொண்டால் புளிப்பு சுவையுடன் இருக்கும்.

தினமும் நாம் அருந்தும் தண்ணீரிலேயே ஒரு நாளுக்கு ஒன்றாக சீரகம், தனியா, துளசி இலைகள், கற்பபூரவெள்ளி இலைகள் சேர்த்து ஊறவிட்டு நேரடியாக பருகிக் கொள்ளலாம். சுவைக்கு எதுவும் சேர்க்க வேண்டியதில்லை. இவைகள் உடலுக்கு குளிர்மை தரக் கூடியன. தண்ணீர்த் தாகத்தையும் தணிக்கும்.

தேயிலை, கோப்பி, கொக்கோ வகைப் பானங்கள் அருந்த விருப்பமுடையவராக இருந்தால் இவ்வகைப் பானங்களில் ஏதாவது ஒன்றை நாளுக்கு இரண்டு தடவைக்கு மேல் அருந்துவதைத் தவிர்த்துக் கொண்டால் உடல ஆரோக்கியம் நல்ல நிலையில் இருப்பதை நீங்களே உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

சர்பத், பலூடா போன்ற கலரிங் கலந்து செயயும் பானங்களைத் தவிர்த்துவிடுவது நன்மை தரக் கூடியதாக இருக்கும்.
தோடை, எலுமிச்சை, லைம், நாரத்தை, பாஸன் வகைகள்

ஒருவர் பருகுவதற்கு பொதுவாக ஒரு பழம் போதுமாக இருக்கும். இருந்தாலும் விருப்பத்திற்கு ஏற்ப சாற்றைப் பிழிந்து எடுத்து ஒரு கப் தண்ணீர் விட்டுக் கலக்கி, வடித்து 2 ரீ ஸ்பூன் சர்க்கரை அல்லது சிறிது உப்பு கலந்து செய்து கொள்ளுங்கள். சுவை சேர்க்க விரும்பினால் எலுமிச்சை, லைம் இரண்டிற்கும் இஞ்சிச் சாறு சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த வகை பானங்களை குளிரூட்டியில் வைத்துப் பருகிக் கொள்ளலாம்.

பப்பாளி - 2 பெரிய துண்டுகள், மாம்பழம் -1, விளாம்பழம் -1 , வாழைப்பழம் - 2, பட்டர் புருட் - 1, கொய்யாப்பழம் - 1, சப்போட்டா - 1,2, அண்ணாமுண்ணாப் பழம் விதைகள் நீக்கி -1, நாவல்பழம் விதைகள் அகற்றி - 1/2 கப்.

இவ்வகைப் பழங்களுக்கு ஒரு கப் பால் கலந்து மிக்ஸியில் அடித்து எடுத்துக் கொள்ளுங்கள். விளாம்பழம், கொய்யாப்பழம் விதைகள் இருப்பதால் வடித்து எடுக்க வேண்டும். விருப்பத்திற்கும் பழத்தின் இனிப்புக்கும் ஏற்ப சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள்.
சில துளி எஸன்ஸ் வகைகள் இவ்வகைப் பானங்களில் சேர்த்துக் கொள்ளலாம். (வனிலா, லெமன், ஸ்டோபரி, பைன்அப்பிள், ரோஸ், ஆமென்ட்)

அப்பிள் - 1, அன்னாசி - பெரிய 2 துண்டுகள், திராட்சை - 1/2 கப், பியர்ஸ் - 1, மாதுளை - 1/2 கப், தக்காளி - 1-2, தற்பூசணி - 1 கப், வெள்ளரிப்பழம் - 1 கப்,

இவற்றில் வேண்டியதைத் தேர்ந்தெடுத்து மிக்ஸியில் அடித்தெடுத்து சீனி சேர்த்து பிரிட்ஜில் வைத்து எடுத்துக் கொள்ளலாம்.
அன்னாசி ஜீசில் பரிமாறு முன் chop செய்த அன்னாசிக் கலவை சேர்த்து, மேலே வனிலா ஐஸ்கிரீம் ஒரு ஸ்கூப் போட்டால் சுவை தித்திக்கும்.
அப்பிள் ஜீசுக்கு chop செய்த அப்பிள் தூவிவிட மேலே மிதந்து நின்று வாவா என்று அழைக்கும்.
உங்கள் விருப்பம் போன்று ஏனைய ஜீஸ்களையும் அலங்கரித்துக் கொள்ளுங்கள்.

பால் பொருட்களிலிருந்து தயாரிக்கக் கூடிய பானங்கள் சில

பால் - பாதாம். முந்திரிகைப் பருப்புகளை ஊற வைத்துக் கலந்து, சர்க்கரை சேர்த்து அருந்திக் கொள்ளலாம். பருப்புகளை பாலுடன் மிக்ஸியில் அடித்ததெடுத்தும் உங்கள் விருப்பம் போல் அருந்திக் கொள்ளுங்கள்.

லசி - 1/2 கப் தயிருடன் 1/2 கப் தண்ணீர் விட்டு அடித்தெடுத்து சர்க்கரை சேர்த்து பிரிட்ஸில் வைத்து எடுங்கள்.

மோர் - 1/2 கப் தயிருடன் 1 கப் தண்ணீர் விட்டு அடித்து, மேலே வரும் வெண்ணையை எடுத்துவிட வேண்டும். பின்பு சிறிதளவு உப்புக் கலக்கி அருந்திக் கொள்ளலாம். வாய்க்கு இதமாக வேண்டுமானால் சிறியதாகக் கொத்திய மாங்காய், வெள்ளரி, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய். மல்லித்தளை, கறிவேற்பிலை விரும்பியவற்றைக் கலந்து கொண்டால் சூப்பராக இருக்கும்.

இளநீர்- நேரிடையாகவே அருந்திக் கொள்ளுங்கள். இளநீருடன் இருக்கும் தேங்காய் வழுக்கலையும் சேர்த்து சில துளி எலுமிச்சம் சாறும் கலந்து குடித்தால் செம ரேஸ்ட்தான்.

பனம் நுங்கு - நேரிடையாக சுவைக்க சுவைக்க விரும்பிய அளவு அருந்திக் கொள்ளக் கூடியது. பிரிட்ஸில் வைத்தும் அருந்திக் கொள்ளலாம்.
கரும்புச் சாறு - சிறிதாக வெட்டிய கரும்புத் துண்டுகள் தேவையான அளவு எடுத்துக் கொண்டு மிக்ஸியில் அடித்து எடுத்து, வடித்து அருந்திக் கொள்ளுங்கள். கருப்பஞசாறைக் கண்டால் ஈயும் இளித்துக் கொண்டு வந்துவிடும். கவனமாக மூடி வையுங்கள்.

பதநீர்(கருப்பணி) - நேரடியாகவே பருகி கொள்ளக் கூடியது. அதிலுள்ள சுண்ணாம்புச் சத்திற்கு சுவை ஊட்ட சிறியதாக வெட்டிய மாங்காய்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.
பதநீரில் பச்சையரிசி போட்டு அவிய வைத்து கருப்பணிக் கஞ்சியாகவும் பருகிக் கொள்ளலாம்.

சர்க்கரைத் தண்ணீர் - எலும்மிச்சம்பழம், வெல்லம், அத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பழத்தீர்த்தம் - இளநீர் பாலுடன் மாம்பழம், வாழைப்பழம், எலுமிச்சை, மாதுளை, பேரீச்சு, விளாம்பழம் இவற்றுடன் வெல்லம் கலந்து கரைத்துக் கொண்டால் மிக்ஸ் புருட் பானம் தயாராகிவிடும்.

சாதக்கஞ்சி - சாதம் அவிந்து தடிப்பாக வரும்போது வடித்தெடுத்து உப்புச் சேர்த்து அருந்தலாம். ருசிக்கு தேங்காயப் பாலும் ஒரு மேசைக்கரண்டி சாதமும் சேர்த்துக் கொள்ளலாம்.

தெளிந்த பழம் சோற்று நீர் - ஒரு கப் எடுத்து உப்பு, தயிர், வெங்காயம், ஊறுகாய், பச்சைமிளகாய் சேர்த்துக் கொண்டால் சுவையாக இருக்கும்.

கசப்பு இல்லாத, உடலுக்கு ஹெல்தியான பானங்கள்

மல்லித்தழை, புதினாத்தழை இரண்டையும் தனித்தனியாகவோ சேர்த்தோ ஒரு கப் தண்ணீர் விட்டு அடித்து எடுத்து, உப்பு, மிளகுதூள், லைம் ஜீஸ் கலந்து அருந்துவது ஹெல்த்தியானது.

கரட அல்லது பீட்ரூட்- சிறிதாக வெட்டி ஒரு கப் எடுத்து உப்பு, மிளகுதூள், அல்லது ஒரு கப் பால் சீனி சேர்த்தும் அருந்திக் கொள்ளலாம்.

வெள்ளரிப் பிஞ்சு - பிஞ்சு வெள்ளரிக்காயாக எடுத்து ஒரு கப் தண்ணீர் விட்டு அடித்து எடுத்து, உப்பு, மிளகு. இஞ்சிச்சாறு கலந்து அருந்திக் கொள்ளுங்கள்.

நெல்லிக்காய் - 3,4 எடுத்து விதையை நீக்கி ஒரு கப் தண்ணீர் விட்டு அடித்து உப்பு சேர்த்துக் கொண்டால் புளிப்பு சுவையுடன் இருக்கும்.

தினமும் நாம் அருந்தும் தண்ணீரிலேயே ஒரு நாளுக்கு ஒன்றாக சீரகம், தனியா, துளசி இலைகள், கற்பபூரவெள்ளி இலைகள் சேர்த்து ஊறவிட்டு நேரடியாக பருகிக் கொள்ளலாம். சுவைக்கு எதுவும் சேர்க்க வேண்டியதில்லை. இவைகள் உடலுக்கு குளிர்மை தரக் கூடியன. தண்ணீர்த் தாகத்தையும் தணிக்கும்.

தேயிலை, கோப்பி, கொக்கோ வகைப் பானங்கள் அருந்த விருப்பமுடையவராக இருந்தால் இவ்வகைப் பானங்களில் ஏதாவது ஒன்றை நாளுக்கு இரண்டு தடவைக்கு மேல் அருந்துவதைத் தவிர்த்துக் கொண்டால் உடல ஆரோக்கியம் நல்ல நிலையில் இருப்பதை நீங்களே உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

சர்பத், பலூடா போன்ற கலரிங் கலந்து செயயும் பானங்களைத் தவிர்த்துவிடுவது நன்மை தரக் கூடியதாக இருக்கும்.
 
 
நன்றி FB ஆரோக்கியமான வாழ்வு