எந்த நோய்க்கு என்ன சாப்பாடு?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:50 | Best Blogger Tips

Photo: எந்த நோய்க்கு என்ன சாப்பாடு?

உஷ்ணத்தை மாயமாக்கும் மாங்காய் பானகம்! 
"அக்னி நட்சத்திரத்தைக் கடந்துவிட்ட பிறகும்கூட, 'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்பு விலகியபாடில்லை. எங்கள் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருக்கும் வயோதிகர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதிலிருந்தே இதைத் தெரிந்து கொள்ள முடிகிறது'' என்று சொல்லும் 'டயட்டீஷியன்' கிருஷ்ணமூர்த்தி, முதலில் அதன் பாதிப்புகளைப் பற்றி பேசுகிறார். அதைக் கேட்டு முடித்த பிறகு, உஷ்ணத் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்கான உணவுகளைப் பார்ப்போம். 

"கோடையில் வரும் 'ஹீட் ஸ்ட்ரோக்', அதிகம் பாதிப்பது வயதானவர்களைத்தான். வெப்பத்தின் காரணமாக... உடம்பு சூடாகி, மூளையின் செயல்பாடு குறையும். அதிகமாக வியர்த்து, மயக்கநிலைக்கு கொண்டு சென்றுவிடும். நினைவுகூட தப்பலாம். ரத்த அழுத்த நோயானது, உஷ்ண உடம்பு இருப்பவர்களை எளிதில் தாக்கும்.
பாலைக் காய்ச்சி, உடனே ஃப்ரிட்ஜில் வைக்காமல், ஆற வைத்துதானே வைப்போம். அதுபோல்தான், வெளியில் சென்றுவிட்டு, திரும்பியவுடன் பத்து நிமிடம் ரிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டும். குளிர்ச்சியாக எதைக் குடித்தாலும், இருமல், சளி உடனடியாக ஒட்டிக் கொண்டுவிடும். 'கசகசவென்று இருக்கிறது. ஒரு குளியல் போட்டால் தேவல' என்றபடி உடனடியாக குளிப்பதும் தவறு. அதுவும் நோயில் கிடத்திவிடும்.
வியர்வை அதிகம் சுரப்பதால், அதிகம் உப்பு சேர்த்துக் கொள்ளலாம். வயதானவர்களைப் பொறுத்தவரை, காலை பத்து மணி முதல் நான்கு மணி வரை வெளியில் செல்வதை ஒட்டுமொத்தமாக தவிர்ப்பது நல்லது."
என்ன, டயட்டீஷியன் சொன்னதைஎல்லாம் உள்வாங்கிவிட்டீர்கள்தானே? இதோ... உங்களுக்கான ரெசிபிகள்..! 

தர்பூசணி கீர்

தேவையானவை: தர்பூசணி துண்டுகள் - ஒரு கப், சர்க்கரை - 75 கிராம், கன்டென்ஸ்டு மில்க் - 5 டேபிள்ஸ்பூன், தேங்காய்ப் பால் பவுடர் - 3 டேபிள்ஸ்பூன் (அ) தேங்காய்ப் பால் - ஒரு சிறிய கப், குங்குமப்பூ - சிறிதளவு, பால் க்ரீம் - ஒரு சிறிய கப்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில், பால், தேங்காய்ப் பால் பவுடர் இரண்டையும் சேர்த்துக் கலக்குங்கள். அது திக்காகிவிடும். பிறகு, தர்பூசணி தவிர, மற்ற எல்லாவற்றையும் அதில் சேருங்கள். கடைசியாக தர்பூசணியைச் சேர்த்துக் கலக்குங்கள். சற்றே நீர்த்து வரும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து, காலை பதினோரு மணி வாக்கில் சாப்பிடலாம்.

மாங்காய் எலுமிச்சை பானகம்

தேவையானவை: மாங்காய் - 1, கருப்பட்டி வடிகட்டிய கரைசல் - 2 கப், சுக்குப்பொடி - அரை டீஸ்பூன், துருவிய எலுமிச்சை தோல் - அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 3 துளி.

செய்முறை: மாங்காயைத் தோலுடன் துருவிக் கொள்ளவும். கருப்பட்டி கரைசலில் எலுமிச்சை தோல் துருவல், மாங்காய் துருவல், சுக்குப் பொடி சேர்த்து, எலுமிச்சைச் சாறு விட்டு நன்கு கலக்கினால், பானகம் தயார்.
மதியம் சாப்பிட்டு முடித்ததும் அரை மணி நேரத்துக்குப் பிறகு, இதை அருந்தலாம். மாலை ஆறு மணிக்கு மேல் குடிப்பது நல்லதல்ல.

மாம்பழ தயிர் சாதம்

தேவையானவை: வடித்த சாதம் - 2 கப், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, மாம்பழ கூழ் - 50 கிராம், தயிர், உப்பு - தேவையான அளவு, காய்ச்சிய பால் - ஒரு சிறிய கப், எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: சாதத்துடன் எல்லாவற்றையும் கலந்து, எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டவும். இந்த தயிர்சாதத்தை மதிய நேரம் சாப்பிடலாம்.
ரெசிபிகளைப் படித்துப் பார்த்த, 'டயட்டீஷியன்' கிருஷ்ணமூர்த்தி, "மூன்றுமே, உஷ்ண நோய்களை விரட்டும் உன்னத ரெசிபிகள்தான். தர்பூசணி கீர் நல்ல எனர்ஜியை தரும். அதிக அளவு நீர்ச்சத்தும், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, விட்டமின், மினரல்ஸ் எல்லாம் கிடைத்துவிடும். கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் மட்டும், கொழுப்பு நீக்கப்பட்ட பாலை காய்ச்சி சேர்த்துக் கொள்ளலாம். சர்க்கரை நோய் இருப்பவர்கள், தர்பூசணிக்கு பதிலாக கிர்ணிப்பழம் சேர்த்து 'திக்'காக செய்து சாப்பிடவேண்டும்.

மாங்காய், நாக்கில் எச்சிலை ஊற வைத்துக் கொண்டே இருப்பதால், தாகம் எடுக்காது. கருப்பட்டி ஜீரணத்தைக் கொடுக்கும். எலுமிச்சை தோலில் பைஃபர், விட்டமின், மினரல்ஸ் இருப்பதால், உச்சிவெயிலுக்கு ஏற்ற உற்சாக பானம்தான் மாங்காய்-எலுமிச்சை பானகம்.

அதேபோல், மாம்பழத்தில் பீட்டா கரோட்டின், பாலில் கொழுப்பு, தயிரில் புரதம், விட்டமின்-சி, கார்போஹைட்ரேட் இருப்பதால், மாம்பழ தயிர் சாதத்தில் எல்லாச் சத்துக்களுமே கிடைத்துவிடுகிறது. உடலை குளிர்ச்சியாக்கி, நல்ல எதிர்ப்பு சக்தியையும் தரும்'' என்று சொன்னார்.

அல்சரை அடித்துவிரட்ட கடுகு- தேங்காய் பச்சடி ! 

'ஒபிசிட்டி எனும் அதீத உடல்பருமன் நோய் உள்ளவர்களுக்கு இந்த இந்த உணவுகள்... நீரிழிவு எனும் சர்க்கரை குறைபாடுள்ளவர்களுக்கு இந்த இந்த உணவுகள்...'என்று கடந்த இதழ்களில் விரிவாகப் பார்த்தோம். இனி, அல்சர் எனப்படும் வயிற்றுப் பிரச் னையில் சிக்கியிருப்போருக்கு குணமளிக்கும் உணவு வகைகள் என்னென்ன... அவற்றைத் தயாரிப்பது எப்படி என்பது பற்றியெல்லாம் பார்க்கலாம்... 

அல்சர் பற்றிய சில விஷயங்களை அசைபோட்டபடியே!

'எண்சாண் உடம்புக்கு வயிறே பிரதானம்' என்ற நிலைதான் இன்று உருவாகியிருக்கிறது. வாய்க்கு ருசியாக இருக்கிறது என்று வக்கணையாக வாங்கி சாப்பிடும் உணவுகளில் ஏதேனும் பிரச்னை என்றால், வயிற்றுப் பகுதிதான் முதலில் பாதிப்புக்கு உள்ளாகும். அத்தகைய பிரச்னைகளில் தலையாயது அல்சர்!

'வயிற்றுப் புண் எனப்படும் இந்த அல்சர் எப்படி வருகிறது... ஏன் ஏற்படுகிறது?' என்பது பற்றி சென்னை, அரசு பொதுமருத்துவமனையின் இரைப்பை மற்றும் குடல் சார்ந்த அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் சந்திரமோகன் இங்கே பேசுகிறார்.

"எப்பவும் 'கபகப'னு எரியுது. பசியா இருக்குமோனு நெனச்சு சாப்பிட்டாலும், எரிச்சல் குறைய மாட்டேங்குது. அப்பப்ப, வாந்தி வேற வந்து இம்சைப்படுத்துது. உடல் எடையும் குறைஞ்சிடுச்சு. எதையுமே ருசியா சாப்பிடமுடியல. வயித்து வலியால சுருண்டு போயிடறேன்' இப்படி அலறி துடிப்பவர்களில் பெரும்பாலானோர் அல்சரால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். 

பெரும்பாலானவர்கள், அந்த நேர வலியிலிருந்து தப்பித்துக் கொள்ள கண்ணில் படும் மருந்துக் கடையில் வலி நிவாரணிகளை வாங்கி விழுங்கிவிட்டு வேறு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.இதுபோன்ற மாத்திரைகள் அந்த நேரத்துக்கு வலியைக் குறைக்குமே தவிர, நிரந்தரத் தீர்வை ஒருபோதும் தராது. அதுமட்டுமல்ல... பக்க விளைவாக வயிற்றில் புண்கள் அதிகரித்து, முற்றிய அல்சரில் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு அந்த வலி நிவாரணிகளே கூட ஒரு காரணியாகிவிடக்கூடும்.
மற்றொரு காரணம், டென்ஷன், கவலையால் மனம் பாதிக்கப்படும்போது, இரைப்பையில் மிக அதிகமாக அமிலம் சுரந்து அல்சரில் கொண்டுவிடும். 

அல்சர் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாகக் கருதப்படுவது, 'ஹெச் பைலோரை' (H Pylori) என்ற நுண்கிருமிதான். இது ஒரு வகையான பாக்டீரியா. உணவுப் பொருட்கள், தண்ணீர் மற்றும் மூச்சுக் காற்று மூலமாகவும் பரவலாம்.

இரைப்பை மற்றும் சிறுகுடலின் ஆரம்பப் பகுதியான 'டியோடினம்'என்ற பகுதியில்தான் அல்சர் உருவாகும். இந்த வகை வயிற்றுப் புண்ணுக்கு 'பெப்டிக் அல்சர்' என்று பெயர். நாம் உண்ணும் உணவு இரைப்பைக்கு சென்று அமிலங்களால் சூழப்பட்டு தாக்குதல் நடத்தும். தொட்டால் விரல் வெந்துவிடும் அளவுக்கு வீரியமான அமிலம் என்றாலும், இரைப்பையின் சுவர்கள் வலுவாக இருப்பதால், அமிலங்களால் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால், இரைப்பையில் சுரக்கக்கூடிய அமிலத்தின் அளவு அதிகமாகும்போது, இரைப்பையின் சுவர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகும். இந்த இடத்தில் புண்கள் உருவாகி அல்சரில் கொண்டுவிடும். 
'வந்திருப்பது அல்சர்தானா... புண் எந்த அளவுக்கு பரவியிருக்கிறது... ஹெச் பைலோரை கிருமித்தொற்று இருக்கிறதா?' என்பதையெல்லாம் எண்டோஸ்கோபி பரிசோதனை மூலம் கண்டுபிடித்துவிடலாம். 

முன்குடலில் அடைப்பு ஏற்படுதல், குடலில் ஓட்டை விழுதல், ரத்தவாந்தி போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவரீதியாகவும், எண்டோஸ்கோபி மூலமாகவும் சிகிச்சை அளிக்கலாம். 

எண்டோஸ்கோபி சிகிச்சை அளித்தும் சரியாகவில்லையெனில், அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு.
வயிற்றில் புண் வந்து ஆறும்போது, அது தழும்பாக மாறும். இதனால், முன்குடலில் அடைப்பு ஏற்பட்டுவிடும். சாப்பிட்ட உணவும் இரைப்பையைவிட்டு முன்குடலுக்கு போகாது. எப்போதும் வயிறு 'திம்'என்று இருக்கும். இதையே சிலர், 'சாப்பிட்ட உணவு சரியா செரிமானம் ஆகல. வாயுத் தொல்லையா இருக்குமோ?' என்று நினைப்பார்கள். 

இப்படி அடைப்பு ஏற்படும்போதெல்லாம் வாந்தியுடன் கூடிய புளித்த ஏப்பம் வரும். பொதுவாக நாம் உட்கொள்ளும் உணவு இரண்டரை முதல் நான்கு மணி நேரத்துக்குள் சிறுகுடலுக்கு போய்விடும். ஆனால், அடைப்பு இருப்பவர்களுக்கு உணவு சிறுகுடலுக்கு போகாமல் இரைப்பையிலேயே தங்கிவிடும். இதனால், வயிற்று எரிச்சல் மேலும் அதிகமாகும். 

வயிற்றில் உள்ள புண்ணும் அதிகமாகி, வாந்தி எடுக்கும்போது ரத்தம் கலந்து வரும். சமயங்களில் குடல் புண்ணில் ஓட்டையும் ஏற்படலாம். அல்சர் ஆயுட்கால வியாதி அல்ல. பழக்க வழக்கங்கள், உணவுக் கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் இரண்டே வாரத்தில் முற்றிலும் குணமாக்கிவிட முடியும். 

அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள், காரம், புளிப்பு, எண்ணெய் போன்ற அதிகமாக அமிலம் சுரக்கும் உணவுகளைத் தவிர்த்தால்... அல்சரை அறவே ஒழித்துவிடலாம்'' என்றார் டாக்டர் சந்திரமோகன்.

அல்சரைக் குணப்படுத்தும் அற்புதமான உணவு ரெசிபிகளை இங்கே தருகிறார் செஃப் ஜேக்கப். 

கடுகு-தேங்காய் பச்சடி

தேவையானவை: கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன் (10 கிராம்), தேங்காய் துருவல் - அரை மூடி (100 கிராம்), தயிர் - ஒரு கப் (100 மில்லி), சுக்குப்பொடி - ஒரு சிட்டிகை, சின்ன வெங்காயம் - 2, உப்பு - ஒரு சிட்டிகை. 

செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி லேசாக வதக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், கடுகு, சுக்குப் பொடி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இந்த விழுதில், நன்றாக அடித்த தயிரைச் சேர்த்து, தேவையான உப்பு போட்டு கலக்கவும். இதை வெறுமனே சாப்பிடலாம். இட்லி, சப்பாத்தி போன்ற டிபன் அயிட்டங்களுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

வெஜிடபிள் அவியல் கூட்டு

தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட், சௌசௌ, சுரைக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம் சேர்ந்தது - ஒரு கப், தயிர் - அரை கப் (50 மில்லி), சர்க்கரை - ஒரு டீஸ்பூன் (5 கிராம்), தேங்காய் - கால் கப் (25 கிராம்), பயத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, தேங்காய் எண்ணெய் - 5 மில்லி

செய்முறை: வெங்காயத்தைத் தவிர மற்ற காய்கறிகளை சர்க்கரை சேர்த்து, தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்கவும். தேங்காயை அரைத்துக் கொள்ளவும்.பயத்தம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும் கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும், வேக வைத்த காய்கறி கலவையைப் போட்டுக் கொதிக்க விடவும். அரைத்த தேங்காயைச் சேர்த்து, கொதித்ததும் பருப்பு, உப்பு சேர்த்து இறக்கவும். கடைசியில் தயிர் சேர்த்துக் கிளறவும்.
இதை சாதத்துடன் சேர்த்துக்கொள்ளலாம். டிபன் அயிட்டங்களுடனும் சேர்த்துச் சாப்பிடலாம்.

இந்த ரெசிபிகள் பற்றி 'டயட்டீஷியன்'கிருஷ்ணமூர்த்தி என்ன சொல்கிறார்?

''செஃப் சொல்லியிருக்கும் இரண்டு ரெசிபியிலுமே தயிர் மற்றும் தேங்காய் சேர்க்கப்பட்டிருப்பதால், உட லில் நன்மை செய்யும் பாக்டீரியா வளர்வதற்கு உதவி யாக இருக்கும். வீரியமிக்க புண்களையும் ஆற்றக்கூடிய அருமருந்தான தேங்காய் எண்ணெயும் சேர்க்கப்படு வதால், வயிற்று எரிச்சல் குணமாகும். கடுகு சேர்த்திருப்பதால், புரதம், கால்ஷியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளும் கிடைத்துவிடும். உணவு எளிதாக ஜீரணமும் ஆகிவிடும்'' என்றார் டயட்டீஷியன்.உஷ்ணத்தை மாயமாக்கும் மாங்காய் பானகம்!
"அக்னி நட்சத்திரத்தைக் கடந்துவிட்ட பிறகும்கூட, 'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்பு விலகியபாடில்லை. எங்கள் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருக்கும் வயோதிகர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதிலிருந்தே இதைத் தெரிந்து கொள்ள முடிகிறது'' என்று சொல்லும் 'டயட்டீஷியன்' கிருஷ்ணமூர்த்தி, முதலில் அதன் பாதிப்புகளைப் பற்றி பேசுகிறார். அதைக் கேட்டு முடித்த பிறகு, உஷ்ணத் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்கான உணவுகளைப் பார்ப்போம்.

"கோடையில் வரும் 'ஹீட் ஸ்ட்ரோக்', அதிகம் பாதிப்பது வயதானவர்களைத்தான். வெப்பத்தின் காரணமாக... உடம்பு சூடாகி, மூளையின் செயல்பாடு குறையும். அதிகமாக வியர்த்து, மயக்கநிலைக்கு கொண்டு சென்றுவிடும். நினைவுகூட தப்பலாம். ரத்த அழுத்த நோயானது, உஷ்ண உடம்பு இருப்பவர்களை எளிதில் தாக்கும்.
பாலைக் காய்ச்சி, உடனே ஃப்ரிட்ஜில் வைக்காமல், ஆற வைத்துதானே வைப்போம். அதுபோல்தான், வெளியில் சென்றுவிட்டு, திரும்பியவுடன் பத்து நிமிடம் ரிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டும். குளிர்ச்சியாக எதைக் குடித்தாலும், இருமல், சளி உடனடியாக ஒட்டிக் கொண்டுவிடும். 'கசகசவென்று இருக்கிறது. ஒரு குளியல் போட்டால் தேவல' என்றபடி உடனடியாக குளிப்பதும் தவறு. அதுவும் நோயில் கிடத்திவிடும்.
வியர்வை அதிகம் சுரப்பதால், அதிகம் உப்பு சேர்த்துக் கொள்ளலாம். வயதானவர்களைப் பொறுத்தவரை, காலை பத்து மணி முதல் நான்கு மணி வரை வெளியில் செல்வதை ஒட்டுமொத்தமாக தவிர்ப்பது நல்லது."
என்ன, டயட்டீஷியன் சொன்னதைஎல்லாம் உள்வாங்கிவிட்டீர்கள்தானே? இதோ... உங்களுக்கான ரெசிபிகள்..!

தர்பூசணி கீர்

தேவையானவை: தர்பூசணி துண்டுகள் - ஒரு கப், சர்க்கரை - 75 கிராம், கன்டென்ஸ்டு மில்க் - 5 டேபிள்ஸ்பூன், தேங்காய்ப் பால் பவுடர் - 3 டேபிள்ஸ்பூன் (அ) தேங்காய்ப் பால் - ஒரு சிறிய கப், குங்குமப்பூ - சிறிதளவு, பால் க்ரீம் - ஒரு சிறிய கப்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில், பால், தேங்காய்ப் பால் பவுடர் இரண்டையும் சேர்த்துக் கலக்குங்கள். அது திக்காகிவிடும். பிறகு, தர்பூசணி தவிர, மற்ற எல்லாவற்றையும் அதில் சேருங்கள். கடைசியாக தர்பூசணியைச் சேர்த்துக் கலக்குங்கள். சற்றே நீர்த்து வரும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து, காலை பதினோரு மணி வாக்கில் சாப்பிடலாம்.

மாங்காய் எலுமிச்சை பானகம்

தேவையானவை: மாங்காய் - 1, கருப்பட்டி வடிகட்டிய கரைசல் - 2 கப், சுக்குப்பொடி - அரை டீஸ்பூன், துருவிய எலுமிச்சை தோல் - அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 3 துளி.

செய்முறை: மாங்காயைத் தோலுடன் துருவிக் கொள்ளவும். கருப்பட்டி கரைசலில் எலுமிச்சை தோல் துருவல், மாங்காய் துருவல், சுக்குப் பொடி சேர்த்து, எலுமிச்சைச் சாறு விட்டு நன்கு கலக்கினால், பானகம் தயார்.
மதியம் சாப்பிட்டு முடித்ததும் அரை மணி நேரத்துக்குப் பிறகு, இதை அருந்தலாம். மாலை ஆறு மணிக்கு மேல் குடிப்பது நல்லதல்ல.

மாம்பழ தயிர் சாதம்

தேவையானவை: வடித்த சாதம் - 2 கப், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, மாம்பழ கூழ் - 50 கிராம், தயிர், உப்பு - தேவையான அளவு, காய்ச்சிய பால் - ஒரு சிறிய கப், எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: சாதத்துடன் எல்லாவற்றையும் கலந்து, எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டவும். இந்த தயிர்சாதத்தை மதிய நேரம் சாப்பிடலாம்.
ரெசிபிகளைப் படித்துப் பார்த்த, 'டயட்டீஷியன்' கிருஷ்ணமூர்த்தி, "மூன்றுமே, உஷ்ண நோய்களை விரட்டும் உன்னத ரெசிபிகள்தான். தர்பூசணி கீர் நல்ல எனர்ஜியை தரும். அதிக அளவு நீர்ச்சத்தும், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, விட்டமின், மினரல்ஸ் எல்லாம் கிடைத்துவிடும். கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் மட்டும், கொழுப்பு நீக்கப்பட்ட பாலை காய்ச்சி சேர்த்துக் கொள்ளலாம். சர்க்கரை நோய் இருப்பவர்கள், தர்பூசணிக்கு பதிலாக கிர்ணிப்பழம் சேர்த்து 'திக்'காக செய்து சாப்பிடவேண்டும்.

மாங்காய், நாக்கில் எச்சிலை ஊற வைத்துக் கொண்டே இருப்பதால், தாகம் எடுக்காது. கருப்பட்டி ஜீரணத்தைக் கொடுக்கும். எலுமிச்சை தோலில் பைஃபர், விட்டமின், மினரல்ஸ் இருப்பதால், உச்சிவெயிலுக்கு ஏற்ற உற்சாக பானம்தான் மாங்காய்-எலுமிச்சை பானகம்.

அதேபோல், மாம்பழத்தில் பீட்டா கரோட்டின், பாலில் கொழுப்பு, தயிரில் புரதம், விட்டமின்-சி, கார்போஹைட்ரேட் இருப்பதால், மாம்பழ தயிர் சாதத்தில் எல்லாச் சத்துக்களுமே கிடைத்துவிடுகிறது. உடலை குளிர்ச்சியாக்கி, நல்ல எதிர்ப்பு சக்தியையும் தரும்'' என்று சொன்னார்.

அல்சரை அடித்துவிரட்ட கடுகு- தேங்காய் பச்சடி !

'ஒபிசிட்டி எனும் அதீத உடல்பருமன் நோய் உள்ளவர்களுக்கு இந்த இந்த உணவுகள்... நீரிழிவு எனும் சர்க்கரை குறைபாடுள்ளவர்களுக்கு இந்த இந்த உணவுகள்...'என்று கடந்த இதழ்களில் விரிவாகப் பார்த்தோம். இனி, அல்சர் எனப்படும் வயிற்றுப் பிரச் னையில் சிக்கியிருப்போருக்கு குணமளிக்கும் உணவு வகைகள் என்னென்ன... அவற்றைத் தயாரிப்பது எப்படி என்பது பற்றியெல்லாம் பார்க்கலாம்...

அல்சர் பற்றிய சில விஷயங்களை அசைபோட்டபடியே!

'எண்சாண் உடம்புக்கு வயிறே பிரதானம்' என்ற நிலைதான் இன்று உருவாகியிருக்கிறது. வாய்க்கு ருசியாக இருக்கிறது என்று வக்கணையாக வாங்கி சாப்பிடும் உணவுகளில் ஏதேனும் பிரச்னை என்றால், வயிற்றுப் பகுதிதான் முதலில் பாதிப்புக்கு உள்ளாகும். அத்தகைய பிரச்னைகளில் தலையாயது அல்சர்!

'வயிற்றுப் புண் எனப்படும் இந்த அல்சர் எப்படி வருகிறது... ஏன் ஏற்படுகிறது?' என்பது பற்றி சென்னை, அரசு பொதுமருத்துவமனையின் இரைப்பை மற்றும் குடல் சார்ந்த அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் சந்திரமோகன் இங்கே பேசுகிறார்.

"எப்பவும் 'கபகப'னு எரியுது. பசியா இருக்குமோனு நெனச்சு சாப்பிட்டாலும், எரிச்சல் குறைய மாட்டேங்குது. அப்பப்ப, வாந்தி வேற வந்து இம்சைப்படுத்துது. உடல் எடையும் குறைஞ்சிடுச்சு. எதையுமே ருசியா சாப்பிடமுடியல. வயித்து வலியால சுருண்டு போயிடறேன்' இப்படி அலறி துடிப்பவர்களில் பெரும்பாலானோர் அல்சரால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

பெரும்பாலானவர்கள், அந்த நேர வலியிலிருந்து தப்பித்துக் கொள்ள கண்ணில் படும் மருந்துக் கடையில் வலி நிவாரணிகளை வாங்கி விழுங்கிவிட்டு வேறு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.இதுபோன்ற மாத்திரைகள் அந்த நேரத்துக்கு வலியைக் குறைக்குமே தவிர, நிரந்தரத் தீர்வை ஒருபோதும் தராது. அதுமட்டுமல்ல... பக்க விளைவாக வயிற்றில் புண்கள் அதிகரித்து, முற்றிய அல்சரில் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு அந்த வலி நிவாரணிகளே கூட ஒரு காரணியாகிவிடக்கூடும்.
மற்றொரு காரணம், டென்ஷன், கவலையால் மனம் பாதிக்கப்படும்போது, இரைப்பையில் மிக அதிகமாக அமிலம் சுரந்து அல்சரில் கொண்டுவிடும்.

அல்சர் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாகக் கருதப்படுவது, 'ஹெச் பைலோரை' (H Pylori) என்ற நுண்கிருமிதான். இது ஒரு வகையான பாக்டீரியா. உணவுப் பொருட்கள், தண்ணீர் மற்றும் மூச்சுக் காற்று மூலமாகவும் பரவலாம்.

இரைப்பை மற்றும் சிறுகுடலின் ஆரம்பப் பகுதியான 'டியோடினம்'என்ற பகுதியில்தான் அல்சர் உருவாகும். இந்த வகை வயிற்றுப் புண்ணுக்கு 'பெப்டிக் அல்சர்' என்று பெயர். நாம் உண்ணும் உணவு இரைப்பைக்கு சென்று அமிலங்களால் சூழப்பட்டு தாக்குதல் நடத்தும். தொட்டால் விரல் வெந்துவிடும் அளவுக்கு வீரியமான அமிலம் என்றாலும், இரைப்பையின் சுவர்கள் வலுவாக இருப்பதால், அமிலங்களால் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால், இரைப்பையில் சுரக்கக்கூடிய அமிலத்தின் அளவு அதிகமாகும்போது, இரைப்பையின் சுவர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகும். இந்த இடத்தில் புண்கள் உருவாகி அல்சரில் கொண்டுவிடும்.
'வந்திருப்பது அல்சர்தானா... புண் எந்த அளவுக்கு பரவியிருக்கிறது... ஹெச் பைலோரை கிருமித்தொற்று இருக்கிறதா?' என்பதையெல்லாம் எண்டோஸ்கோபி பரிசோதனை மூலம் கண்டுபிடித்துவிடலாம்.

முன்குடலில் அடைப்பு ஏற்படுதல், குடலில் ஓட்டை விழுதல், ரத்தவாந்தி போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவரீதியாகவும், எண்டோஸ்கோபி மூலமாகவும் சிகிச்சை அளிக்கலாம்.

எண்டோஸ்கோபி சிகிச்சை அளித்தும் சரியாகவில்லையெனில், அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு.
வயிற்றில் புண் வந்து ஆறும்போது, அது தழும்பாக மாறும். இதனால், முன்குடலில் அடைப்பு ஏற்பட்டுவிடும். சாப்பிட்ட உணவும் இரைப்பையைவிட்டு முன்குடலுக்கு போகாது. எப்போதும் வயிறு 'திம்'என்று இருக்கும். இதையே சிலர், 'சாப்பிட்ட உணவு சரியா செரிமானம் ஆகல. வாயுத் தொல்லையா இருக்குமோ?' என்று நினைப்பார்கள்.

இப்படி அடைப்பு ஏற்படும்போதெல்லாம் வாந்தியுடன் கூடிய புளித்த ஏப்பம் வரும். பொதுவாக நாம் உட்கொள்ளும் உணவு இரண்டரை முதல் நான்கு மணி நேரத்துக்குள் சிறுகுடலுக்கு போய்விடும். ஆனால், அடைப்பு இருப்பவர்களுக்கு உணவு சிறுகுடலுக்கு போகாமல் இரைப்பையிலேயே தங்கிவிடும். இதனால், வயிற்று எரிச்சல் மேலும் அதிகமாகும்.

வயிற்றில் உள்ள புண்ணும் அதிகமாகி, வாந்தி எடுக்கும்போது ரத்தம் கலந்து வரும். சமயங்களில் குடல் புண்ணில் ஓட்டையும் ஏற்படலாம். அல்சர் ஆயுட்கால வியாதி அல்ல. பழக்க வழக்கங்கள், உணவுக் கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் இரண்டே வாரத்தில் முற்றிலும் குணமாக்கிவிட முடியும்.

அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள், காரம், புளிப்பு, எண்ணெய் போன்ற அதிகமாக அமிலம் சுரக்கும் உணவுகளைத் தவிர்த்தால்... அல்சரை அறவே ஒழித்துவிடலாம்'' என்றார் டாக்டர் சந்திரமோகன்.

அல்சரைக் குணப்படுத்தும் அற்புதமான உணவு ரெசிபிகளை இங்கே தருகிறார் செஃப் ஜேக்கப்.

கடுகு-தேங்காய் பச்சடி

தேவையானவை: கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன் (10 கிராம்), தேங்காய் துருவல் - அரை மூடி (100 கிராம்), தயிர் - ஒரு கப் (100 மில்லி), சுக்குப்பொடி - ஒரு சிட்டிகை, சின்ன வெங்காயம் - 2, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி லேசாக வதக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், கடுகு, சுக்குப் பொடி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இந்த விழுதில், நன்றாக அடித்த தயிரைச் சேர்த்து, தேவையான உப்பு போட்டு கலக்கவும். இதை வெறுமனே சாப்பிடலாம். இட்லி, சப்பாத்தி போன்ற டிபன் அயிட்டங்களுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

வெஜிடபிள் அவியல் கூட்டு

தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட், சௌசௌ, சுரைக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம் சேர்ந்தது - ஒரு கப், தயிர் - அரை கப் (50 மில்லி), சர்க்கரை - ஒரு டீஸ்பூன் (5 கிராம்), தேங்காய் - கால் கப் (25 கிராம்), பயத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, தேங்காய் எண்ணெய் - 5 மில்லி

செய்முறை: வெங்காயத்தைத் தவிர மற்ற காய்கறிகளை சர்க்கரை சேர்த்து, தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்கவும். தேங்காயை அரைத்துக் கொள்ளவும்.பயத்தம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும் கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும், வேக வைத்த காய்கறி கலவையைப் போட்டுக் கொதிக்க விடவும். அரைத்த தேங்காயைச் சேர்த்து, கொதித்ததும் பருப்பு, உப்பு சேர்த்து இறக்கவும். கடைசியில் தயிர் சேர்த்துக் கிளறவும்.
இதை சாதத்துடன் சேர்த்துக்கொள்ளலாம். டிபன் அயிட்டங்களுடனும் சேர்த்துச் சாப்பிடலாம்.

இந்த ரெசிபிகள் பற்றி 'டயட்டீஷியன்'கிருஷ்ணமூர்த்தி என்ன சொல்கிறார்?

''செஃப் சொல்லியிருக்கும் இரண்டு ரெசிபியிலுமே தயிர் மற்றும் தேங்காய் சேர்க்கப்பட்டிருப்பதால், உட லில் நன்மை செய்யும் பாக்டீரியா வளர்வதற்கு உதவி யாக இருக்கும். வீரியமிக்க புண்களையும் ஆற்றக்கூடிய அருமருந்தான தேங்காய் எண்ணெயும் சேர்க்கப்படு வதால், வயிற்று எரிச்சல் குணமாகும். கடுகு சேர்த்திருப்பதால், புரதம், கால்ஷியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளும் கிடைத்துவிடும். உணவு எளிதாக ஜீரணமும் ஆகிவிடும்'' என்றார் டயட்டீஷியன்.
 
 
நன்றி FB ஆரோக்கியமான வாழ்வு