திருவள்ளுவரை தெய்வமாக வணங்கும் கேரளத்தினர்:

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:00 | Best Blogger Tips
திருவள்ளுவரை தெய்வமாக வணங்கும் கேரளத்தினர்:

தனது இரண்டடி பாடல் மூலம் உலகிற்கே பல அறிய கருத்துகளையும் ஆழ்ந்த சிந்தனைகளையும்  தந்த தெய்வ புலவர் என அனைவராலும் அழைக்கப்படும் திருவள்ளுவரை தமிழகத்தில் தெய்வமாக வணங்குபவர்கள் வெகு சிலரே. நமது அண்டை மாநிலமான கேரளாவில் திருவள்ளுவரை தெய்வமாக வணங்குகின்ற ஒரு மதத்தினர் உள்ளார்கள் என்பதும் திருவள்ளுவருக்கு இவர்கள் கோயில் அமைத்துள்ளனர் என்பதும் ஆச்சரியமான செய்தி. சில வருடங்களுக்கு முன் ஒரு நாளிதழில் கண்ட இந்த செய்தி உண்மையில் ஆச்சரியத்தை  தருகின்றது.

இவர்களை  'சனாதான' மதத்தினர் என அனைவராலும் அழைக்கப் படுகின்றனர். திருவள்ளுவரை கடவுளாக கொண்டு உள்ள இதனை 'சமாதான மதம்' எனவும்  அழைக்கப்படுகிறது.  இவர்கள் வள்ளுவருக்கு கேரள மாநிலத்தில் 16 இடங்களில் கோயில்கள் அமைத்து இவரை வழிப்படுகின்றனர். இக்கோவில்களில்  முறையானப்படி  தினசரி வழிப்பாட்டையும்  நடத்தி வருகின்றனர்.   இவற்றில்  மிகவும் பிரசித்திப்பெற்ற  திருவள்ளுவர் கோயில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள காஞ்சூர் தட்டம்படி என்ற ஊரில்  உள்ளதாகும்.
மற்ற அனைத்து கோவில்களிலும் இந்த மதத்தினர் இவரை அவர்களின் முறைப்படி வணங்கி வழிபாட்டு வருகின்றனர். 

திருவள்ளுவருக்கென இம்மாநிலத்தில் முதல்முதலாக கோயில் கட்டியவர் சிவானந்தர் என்பவர் தான். இவர் 1979-ம்  ஆண்டு மார்ச் 1-ம் தேதி  இடுக்கி மாவட்டத்தில் உள்ள சேனாபதி என்ற ஊரில் அமைத்தார்.

கேரள மாநிலத்தில் உள்ள இந்த அனைத்து கோயில்களிலும் ஆண்டுதோறும் திருவிழாக்கள் வெகு விமர்சையாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவானது  மலையாள மாதமான கும்பத்தில் 17,18 ஆகிய தேதிகளில் சிறப்பாக கொண்டாடுகின்றனர். அவர் பிறந்த தமிழகத்தில்  இவருக்கென எந்த திருவிழாக்களும் தனியாக கொண்டாடப்படுவத்தில்லை.

இவர்களின் அனைத்து செயல்களும் வள்ளுவரை முன்னிறுத்தியே செய்யப்படுகின்றது. இந்த சனாதான மதத்தினரின் திருமணங்களும்  வள்ளுவரின் கோயில்களில் எளிமையான முறையில் நடத்துகின்றனர். இதன் போது மணமகன், மணமகள் கழுத்தில் தாலிக்கட்டுவதோ அல்லது  மோதிரம் மாற்றுவதோ செய்வதில்லை. இவர்கள் மணமக்களின் கைகளை இணைத்து வைத்து இவர்களின் திருமணத்தை எளிமையாக நடத்தி முடிக்கின்றனர். ஆடம்பர மண்டபமோ மற்றும் ஊர்வலங்களோ ஏதுமில்லை. வள்ளுவரின் எழுத்தினை போலவே அவர்களின் திருமணத்தையும் பிறருக்கு எடுத்து கூறும் வகையில்  எளிமையாக கொண்டாடுகின்றனர்.தனது இரண்டடி பாடல் மூலம் உலகிற்கே பல அறிய கருத்துகளையும் ஆழ்ந்த சிந்தனைகளையும் தந்த தெய்வ புலவர் என அனைவராலும் அழைக்கப்படும் திருவள்ளுவரை தமிழகத்தில் தெய்வமாக வணங்குபவர்கள் வெகு சிலரே. நமது அண்டை மாநிலமான கேரளாவில் திருவள்ளுவரை தெய்வமாக வணங்குகின்ற ஒரு மதத்தினர் உள்ளார்கள் என்பதும் திருவள்ளுவருக்கு இவர்கள் கோயில் அமைத்துள்ளனர் என்பதும் ஆச்சரியமான செய்தி. சில வருடங்களுக்கு முன் ஒரு நாளிதழில் கண்ட இந்த செய்தி உண்மையில் ஆச்சரியத்தை தருகின்றது.

இவர்களை 'சனாதான' மதத்தினர் என அனைவராலும் அழைக்கப் படுகின்றனர். திருவள்ளுவரை கடவுளாக கொண்டு உள்ள இதனை 'சமாதான மதம்' எனவும் அழைக்கப்படுகிறது. இவர்கள் வள்ளுவருக்கு கேரள மாநிலத்தில் 16 இடங்களில் கோயில்கள் அமைத்து இவரை வழிப்படுகின்றனர். இக்கோவில்களில் முறையானப்படி தினசரி வழிப்பாட்டையும் நடத்தி வருகின்றனர். இவற்றில் மிகவும் பிரசித்திப்பெற்ற திருவள்ளுவர் கோயில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள காஞ்சூர் தட்டம்படி என்ற ஊரில் உள்ளதாகும்.
மற்ற அனைத்து கோவில்களிலும் இந்த மதத்தினர் இவரை அவர்களின் முறைப்படி வணங்கி வழிபாட்டு வருகின்றனர்.

திருவள்ளுவருக்கென இம்மாநிலத்தில் முதல்முதலாக கோயில் கட்டியவர் சிவானந்தர் என்பவர் தான். இவர் 1979-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி இடுக்கி மாவட்டத்தில் உள்ள சேனாபதி என்ற ஊரில் அமைத்தார்.

கேரள மாநிலத்தில் உள்ள இந்த அனைத்து கோயில்களிலும் ஆண்டுதோறும் திருவிழாக்கள் வெகு விமர்சையாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவானது மலையாள மாதமான கும்பத்தில் 17,18 ஆகிய தேதிகளில் சிறப்பாக கொண்டாடுகின்றனர். அவர் பிறந்த தமிழகத்தில் இவருக்கென எந்த திருவிழாக்களும் தனியாக கொண்டாடப்படுவத்தில்லை.

இவர்களின் அனைத்து செயல்களும் வள்ளுவரை முன்னிறுத்தியே செய்யப்படுகின்றது. இந்த சனாதான மதத்தினரின் திருமணங்களும் வள்ளுவரின் கோயில்களில் எளிமையான முறையில் நடத்துகின்றனர். இதன் போது மணமகன், மணமகள் கழுத்தில் தாலிக்கட்டுவதோ அல்லது மோதிரம் மாற்றுவதோ செய்வதில்லை. இவர்கள் மணமக்களின் கைகளை இணைத்து வைத்து இவர்களின் திருமணத்தை எளிமையாக நடத்தி முடிக்கின்றனர். ஆடம்பர மண்டபமோ மற்றும் ஊர்வலங்களோ ஏதுமில்லை. வள்ளுவரின் எழுத்தினை போலவே அவர்களின் திருமணத்தையும் பிறருக்கு எடுத்து கூறும் வகையில் எளிமையாக கொண்டாடுகின்றனர்.