I'm Sorry ! மிகச்சாதாரண காரணங்கள் என நினைக்கப்படும் சம்பவங்களே பெரிய பெரிய முடிவுகளுக்கு ஆதாரமாய் அமையும்.. ஜாக்கிரதை..

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:59 | Best Blogger Tips
நான் பார்த்தவரைக்கும் மனதார தங்களுடைய தவறுகளை ஒத்துக்கொள்வோர் மிக மிகக் குறைவுனு சத்தியமே செய்யலாம்.

ஏனோ தெரியல... இந்தப் பழக்கம் மட்டும் பெரும்பாலானவர்களிடம் இருக்குறதே இல்ல.. 

ஒரு தப்பு பண்ணிட்டோம்னா, அதை செய்யும்போது இருக்குற தைரியம், ஒத்துக்கும்போது இருக்குறது கிடையாது. 

யாராவது சுட்டிக்காட்டினாலும் வீண் வாக்குவாதம் செய்கிறார்களே ஒழிய பணிந்து போகும் பழக்கம் இருப்பதே இல்ல.

 தன்மேல் குறை சொல்லிட்டாங்களே.. என்று ஆதங்கப்படுறவங்களே இங்கு அதிகம். இதில் அவர் இவர் என்று பாரபட்சம் இல்லாம நான் உட்பட பல சமயங்கள்ல வாக்குவாதம் செய்ததுண்டு. 

என் நட்பு வட்டாரங்களில் இது மாதிரி பலரைப் பார்த்திருக்கேன். ஏதாவது தவறு செஞ்சிருந்து, அதை சுட்டிக்காட்டிய சந்தர்ப்பங்களில், அவங்களோட வாக்குவாதங்கள் முற்றிப்போய் பிரிவு வரைக்கும் கொண்டுவந்து விட்டிருக்குது. 

வாதம் எந்த விளிம்புக்குப் போனாலும்கூட “நீ சொல்றதும் சரிதான்.. இது என்னுடைய தவறுதான். மன்னிச்சிடு“ என்ற வார்த்தை வாயிலிருந்து வரவே வராது.

ஒரு சிலர் இருப்பார்கள்.. ”ஆமா.. தப்புதான் பண்ணிட்டேன். அதுக்கு இப்ப என்னாங்குற??“ என்று தெனாவெட்டா கேட்பாங்க.

காதைச் சேர்த்து அறையலாம் போல கோவம் வரும். இதற்குப் பெயர் ஒத்துக்கொள்வதில்லை. திமிர்.. “தான்“ என்ற அகம்பாவம்.. இது பிரிவுகளை இன்னும் அதிகமாக்குமே தவிர குறைக்க வழி செய்யாது.

இவர்களையெல்லாம் மிஞ்சும் வகைல ஒரு சிலர் இருப்பாங்க.. தங்களோட தவறினை யார் சுட்டிக் காட்டுகிறார்களோ அவங்களோட, என்னைக்கோ ஒருநாள் பண்ணின தவறை.. அதுவும் முடிந்த போன ஒரு விஷயத்தை தோண்டித் துருவி “அன்னைக்கு அப்படி செஞ்சியே.. நீ மட்டும் பெரிய ஒழுங்கா??” என்று திரும்ப கேள்வி எழுப்பித் தப்பிக்கப் பார்ப்பாங்க.

தவறு செஞ்சிருந்தா, அது சுட்டிக்காட்டப்படும்போது அதை ஏற்றுக்கொண்டு ஒத்துக்கொள்வதில் என்னா ஆகப்போகுது??? தலையில் இருக்கும் கிரீடம் கழன்று கீழ விழுந்துடும்போல..

நண்பர்களுக்குள்ள, நேசிக்கிறவங்களுக்குள்ள இந்த மாதிரி ஈகோ பார்ப்பது, யாருக்கும் பணிய மாட்டேன்.. நான் செய்வது சரியே.. என்பது போன்ற மனோபாவங்கள்  ரொம்பவே திருத்திக்கொள்ளவேண்டிய விஷயம். 

நாளாக நாளாக இது விரிசலை கொண்டு வந்துடும். நானா நீயா“னு போட்டி வந்து ஒரு வித சலிப்பைக் கொண்டுவரலாம்.

மிகச்சாதாரண காரணங்கள் என நினைக்கப்படும் சம்பவங்களே பெரிய பெரிய முடிவுகளுக்கு ஆதாரமாய் அமையும்.. ஜாக்கிரதை..
நான் பார்த்தவரைக்கும் மனதார தங்களுடைய தவறுகளை ஒத்துக்கொள்வோர் மிக மிகக் குறைவுனு சத்தியமே செய்யலாம்.

ஏனோ தெரியல... இந்தப் பழக்கம் மட்டும் பெரும்பாலானவர்களிடம் இருக்குறதே இல்ல..

ஒரு தப்பு பண்ணிட்டோம்னா, அதை செய்யும்போது இருக்குற தைரியம், ஒத்துக்கும்போது இருக்குறது கிடையாது.

யாராவது சுட்டிக்காட்டினாலும் வீண் வாக்குவாதம் செய்கிறார்களே ஒழிய பணிந்து போகும் பழக்கம் இருப்பதே இல்ல.

தன்மேல் குறை சொல்லிட்டாங்களே.. என்று ஆதங்கப்படுறவங்களே இங்கு அதிகம். இதில் அவர் இவர் என்று பாரபட்சம் இல்லாம நான் உட்பட பல சமயங்கள்ல வாக்குவாதம் செய்ததுண்டு.

என் நட்பு வட்டாரங்களில் இது மாதிரி பலரைப் பார்த்திருக்கேன். ஏதாவது தவறு செஞ்சிருந்து, அதை சுட்டிக்காட்டிய சந்தர்ப்பங்களில், அவங்களோட வாக்குவாதங்கள் முற்றிப்போய் பிரிவு வரைக்கும் கொண்டுவந்து விட்டிருக்குது.

வாதம் எந்த விளிம்புக்குப் போனாலும்கூட “நீ சொல்றதும் சரிதான்.. இது என்னுடைய தவறுதான். மன்னிச்சிடு“ என்ற வார்த்தை வாயிலிருந்து வரவே வராது.

ஒரு சிலர் இருப்பார்கள்.. ”ஆமா.. தப்புதான் பண்ணிட்டேன். அதுக்கு இப்ப என்னாங்குற??“ என்று தெனாவெட்டா கேட்பாங்க.

காதைச் சேர்த்து அறையலாம் போல கோவம் வரும். இதற்குப் பெயர் ஒத்துக்கொள்வதில்லை. திமிர்.. “தான்“ என்ற அகம்பாவம்.. இது பிரிவுகளை இன்னும் அதிகமாக்குமே தவிர குறைக்க வழி செய்யாது.

இவர்களையெல்லாம் மிஞ்சும் வகைல ஒரு சிலர் இருப்பாங்க.. தங்களோட தவறினை யார் சுட்டிக் காட்டுகிறார்களோ அவங்களோட, என்னைக்கோ ஒருநாள் பண்ணின தவறை.. அதுவும் முடிந்த போன ஒரு விஷயத்தை தோண்டித் துருவி “அன்னைக்கு அப்படி செஞ்சியே.. நீ மட்டும் பெரிய ஒழுங்கா??” என்று திரும்ப கேள்வி எழுப்பித் தப்பிக்கப் பார்ப்பாங்க.

தவறு செஞ்சிருந்தா, அது சுட்டிக்காட்டப்படும்போது அதை ஏற்றுக்கொண்டு ஒத்துக்கொள்வதில் என்னா ஆகப்போகுது??? தலையில் இருக்கும் கிரீடம் கழன்று கீழ விழுந்துடும்போல..

நண்பர்களுக்குள்ள, நேசிக்கிறவங்களுக்குள்ள இந்த மாதிரி ஈகோ பார்ப்பது, யாருக்கும் பணிய மாட்டேன்.. நான் செய்வது சரியே.. என்பது போன்ற மனோபாவங்கள் ரொம்பவே திருத்திக்கொள்ளவேண்டிய விஷயம்.

நாளாக நாளாக இது விரிசலை கொண்டு வந்துடும். நானா நீயா“னு போட்டி வந்து ஒரு வித சலிப்பைக் கொண்டுவரலாம்.

மிகச்சாதாரண காரணங்கள் என நினைக்கப்படும் சம்பவங்களே பெரிய பெரிய முடிவுகளுக்கு ஆதாரமாய் அமையும்.. ஜாக்கிரதை..
 
Thanks to FB Thannambikkai