காதலுக்கும், கல்யாணத்துக்கும் நிறைய வித்யாசம் இருக்கு.....

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:30 | Best Blogger Tips
காதலுக்கும், கல்யாணத்துக்கும் நிறைய வித்யாசம் இருக்கு.....
சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.
நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள்.
பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல்.
இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம்
உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல்.
அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம்
காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது.
டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள்.
எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள்.
நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள்.
உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல்.
ஆறிப்போன பார்சல் தான் கல்யாணம்
நவீன காரில் நெடுஞ்சாலைப் பயணம் காதல்.
கல்யாணம் என்பது பழைய வண்டியில் கரடுமுரடு சாலைப் பயணம்
உலகத்தையே மறந்திருப்பவர்கள் காதலர்கள்.
ஒருவரையொருவர் மறந்திருப்பவர்கள் தம்பதிகள்.
காதலிக்கும்போது ஊர் விஷயங்களைப் பற்றி காதலர்கள் பேசுவார்கள்.
திருமணத்திற்குப் பிறகு இவர்களைப் பற்றி ஊரே பேசும்.
குழந்தைகளின் செல்லக் கொஞ்சல் காதல்.
அவர்களின் முரட்டுப் பிடிவாதம் கல்யாணம்.
ஒவ்வொன்றையும் கேட்டுவிட்டு செய்வது காதல்.
செய்துவிட்டு தெரிவிப்பது கல்யாணம்.
எல்லா தவறுகளையும் ரசிப்பவள் காதலி.
எல்லா செயல்களையும் குறைசொல்பவள் மனைவி.
அவர் இல்லாத இடம் நரகமாக இருக்கும்.
கல்யாணத்திற்குப் பின் அவர் இல்லாத இடமே சொர்க்கம் என்றிருக்கும்.
பல மணி நேர தொலைபேசி உரையாடல்.
திருமணத்திற்குப் பின்பும் தான், அவரவர் நண்பர்களுடன்.
போட்டி போட்டுக்கொண்டு விட்டுக் கொடுப்பார்கள்.
போட்டி போட்டுக் கொண்டு சண்டை போடுவார்கள்.