எதிர்கொள்ளும் பக்குவம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:29 | Best Blogger Tips
Photo: நாம் இருக்கும் இடம், பழகும் நண்பர்கள், நம் எண்ணங்கள், நம் கண்ணில் படும் காட்சிகள், நாம் கேட்கும் சொற்கள் இவை அனைத்துயும் உற்றுக் கவனித்தால் அவைகளுக்குள் தொடர்பு இருப்பதை அறிந்து கொள்ள முடியும். ஆனால் அதற்குப் பயிற்சி அவசியம். நடக்கும் எந்த விஷயமாக இருந்தாலும் அதை நம் வாழ்வோடு இணத்து தொடர்புபடுத்திப் பார்த்து பழக வேண்டும். அவ்வாறு பழகி வரவர நம்மை அறியாமல் நம் வாழ்வில் எதுவும் நடந்துவிட முடியாது என்ற நிலைக்கு வந்துவிடலாம். அதனால் என்ன லாபம்?  நடப்பது நடந்தே தீருமல்லவா ? என்று கேட்டால். நடக்கும். ஆனால் அதை எதிர்கொள்ளும் பக்குவம் அடையலாம், சில விஷயங்களை அறிவால் வென்று அதன் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ளலாம். அதனால் நம் வாழ்வின் போக்கை நாம் நிர்ணயிக்க முடியும். இது ஒரு பெரும் திறன். இது எப்படி சாத்தியம் ? என்றால், கண்ணாடியானது நமது உருவத்தைப் பிரதிபலிப்பதைப் போல புற நிகழ்ச்சிகள் அக உணர்வைப் பிரதிபலிக்கின்றன. பலநாள் கழித்து வரப்போகும் நல்ல செய்தியையோ, கெட்ட செய்தியையோ புற நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனிப்பவர்களால் தெரிந்து கொள்ள முடியும். பெரிய விஷயங்களில் அக உணர்ச்சியைப் புற நிகழ்ச்சிகள் பிரதிபலிப்பதை உணர ஆரம்பித்து, எல்லா நிகழ்ச்சிகளையும் அது போல புரிந்து கொள்ள ஆரம்பித்து நாளாவட்டத்தில் மிகச் சிறிய நிகழ்ச்சிகளுக்கும் அது போல விளக்கம் தெரிய வந்தால், ஒரு வகையில் யோகத்தை முழுமையாகப் புரிந்து கொண்டதற்குச் சமம். 

நம் சூழ்நிலையின் ஒரு பகுதியே நாம். உதாரணமாக ஒரு மரத்தில் உள்ள பூ மணக்கிறது. காய், கனிகள் ருசியாக இருக்கின்றன. ஆனால் ருசி ஒன்றுக் கொன்று மாறுபடுகிறது. இலை பச்சையாக இருக்கிறது. பட்டை காய்ந்து போய் இருக்கிறது. மரம் ஒன்றான போதிலும் இவையல்லாம் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபடுகின்றன. ஒரு மைக்கிராஸ்கோப்பின் அடியில் பூ, காய், கனி, இலை, பட்டை இவற்றின் சிறு பகுதிகளை வைத்துப் பாருங்கள், அவற்றின் அடிப்படை அமைப்பு எல்லாம் ஒன்று போல இருக்கும். மேலும் சொல்லப் போனால் மரமும் அது வாழும் மண்ணும் ஒன்றே. மரம் ஒரே இடத்தில் இருக்கிறது. மனிதன் நடமாடுகிறான். மரத்தையும், மனிதனையும் உற்பத்தி செய்தது மண். எனவேமண்ணும், அது உற்பத்தி செய்த மரமும், மனிதனும் அடிப்படையில் ஒன்றே. இது போல நம் அக உணர்வுகளும், புற நிகழ்ச்சிகளும் ஒன்றே. அக உணர்வுகளையே புற நிகழ்ச்சிகள் என்கிறோம். நமக்கு வெளியே ஒன்று நடக்கப் போவதை நாம் முன்னதாகவே உணர்கிறோம். ஆனால் அதை தெரிந்து கொள்ளக் கூடிய நுட்பமான உணர்வு மையம் நமக்கு வேலை செய்யாத காரணத்தால் அதாவது நாம் அதை உபயோகப்படுத்தாமல் விட்டுவிட்ட காரணத்தால் நம்மால் அந்த உணர்வைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அகமும், புறமும் ஒன்றே. நமக்குதான் அது வேறுபாடாகத் தெரிகிறது. இரண்டும் ஒரு பெரிய சூழ்நிலையின் பகுதிகளே. அகத்தில் இருப்பதே புறத்தில் தெரிகிறது. அகத்தை உணர முடியாதவன், புறத்தைப் பார்த்து அகத்தை உணர்ந்து கொள்ளலாம். அவ்வாறு மேன்மை அடைந்த மகான்கள் நிறைய பேர் உண்டு.நாம் இருக்கும் இடம், பழகும் நண்பர்கள், நம் எண்ணங்கள், நம் கண்ணில் படும் காட்சிகள், நாம் கேட்கும் சொற்கள் இவை அனைத்துயும் உற்றுக் கவனித்தால் அவைகளுக்குள் தொடர்பு இருப்பதை அறிந்து கொள்ள முடியும். ஆனால் அதற்குப் பயிற்சி அவசியம். நடக்கும் எந்த விஷயமாக இருந்தாலும் அதை நம் வாழ்வோடு இணத்து தொடர்புபடுத்திப் பார்த்து பழக வேண்டும். அவ்வாறு பழகி வரவர நம்மை அறியாமல் நம் வாழ்வில் எதுவும் நடந்துவிட முடியாது என்ற நிலைக்கு வந்துவிடலாம். அதனால் என்ன லாபம்? நடப்பது நடந்தே தீருமல்லவா ? என்று கேட்டால். நடக்கும். ஆனால் அதை எதிர்கொள்ளும் பக்குவம் அடையலாம், சில விஷயங்களை அறிவால் வென்று அதன் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ளலாம். அதனால் நம் வாழ்வின் போக்கை நாம் நிர்ணயிக்க முடியும். இது ஒரு பெரும் திறன். இது எப்படி சாத்தியம் ? என்றால், கண்ணாடியானது நமது உருவத்தைப் பிரதிபலிப்பதைப் போல புற நிகழ்ச்சிகள் அக உணர்வைப் பிரதிபலிக்கின்றன. பலநாள் கழித்து வரப்போகும் நல்ல செய்தியையோ, கெட்ட செய்தியையோ புற நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனிப்பவர்களால் தெரிந்து கொள்ள முடியும். பெரிய விஷயங்களில் அக உணர்ச்சியைப் புற நிகழ்ச்சிகள் பிரதிபலிப்பதை உணர ஆரம்பித்து, எல்லா நிகழ்ச்சிகளையும் அது போல புரிந்து கொள்ள ஆரம்பித்து நாளாவட்டத்தில் மிகச் சிறிய நிகழ்ச்சிகளுக்கும் அது போல விளக்கம் தெரிய வந்தால், ஒரு வகையில் யோகத்தை முழுமையாகப் புரிந்து கொண்டதற்குச் சமம்.

நம் சூழ்நிலையின் ஒரு பகுதியே நாம். உதாரணமாக ஒரு மரத்தில் உள்ள பூ மணக்கிறது. காய், கனிகள் ருசியாக இருக்கின்றன. ஆனால் ருசி ஒன்றுக் கொன்று மாறுபடுகிறது. இலை பச்சையாக இருக்கிறது. பட்டை காய்ந்து போய் இருக்கிறது. மரம் ஒன்றான போதிலும் இவையல்லாம் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபடுகின்றன. ஒரு மைக்கிராஸ்கோப்பின் அடியில் பூ, காய், கனி, இலை, பட்டை இவற்றின் சிறு பகுதிகளை வைத்துப் பாருங்கள், அவற்றின் அடிப்படை அமைப்பு எல்லாம் ஒன்று போல இருக்கும். மேலும் சொல்லப் போனால் மரமும் அது வாழும் மண்ணும் ஒன்றே. மரம் ஒரே இடத்தில் இருக்கிறது. மனிதன் நடமாடுகிறான். மரத்தையும், மனிதனையும் உற்பத்தி செய்தது மண். எனவேமண்ணும், அது உற்பத்தி செய்த மரமும், மனிதனும் அடிப்படையில் ஒன்றே. இது போல நம் அக உணர்வுகளும், புற நிகழ்ச்சிகளும் ஒன்றே. அக உணர்வுகளையே புற நிகழ்ச்சிகள் என்கிறோம். நமக்கு வெளியே ஒன்று நடக்கப் போவதை நாம் முன்னதாகவே உணர்கிறோம். ஆனால் அதை தெரிந்து கொள்ளக் கூடிய நுட்பமான உணர்வு மையம் நமக்கு வேலை செய்யாத காரணத்தால் அதாவது நாம் அதை உபயோகப்படுத்தாமல் விட்டுவிட்ட காரணத்தால் நம்மால் அந்த உணர்வைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அகமும், புறமும் ஒன்றே. நமக்குதான் அது வேறுபாடாகத் தெரிகிறது. இரண்டும் ஒரு பெரிய சூழ்நிலையின் பகுதிகளே. அகத்தில் இருப்பதே புறத்தில் தெரிகிறது. அகத்தை உணர முடியாதவன், புறத்தைப் பார்த்து அகத்தை உணர்ந்து கொள்ளலாம். அவ்வாறு மேன்மை அடைந்த மகான்கள் நிறைய பேர் உண்டு.
 
Via FB மௌனத்தின் குரல்