சிலை கடத்தல் விஷயத்தில் ஏகப்பட்ட மர்மங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:55 | Best Blogger Tips
Image may contain: 1 person, closeup


தமிழகத்தில் சிலை கடத்தல் விஷயத்தில் ஏகப்பட்ட மர்மங்கள் இருக்கும் போல தோன்றுகிறது..!


சென்னை ஹைகோர்ட்டே பொன்.மாணிக்கவேல் தொடர ஆணையிட்ட பிறகும், அதிமுக அரசு அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை போகும் மர்மம் என்ன..?


அப்படி என்ன அத்தியாவசியம்..? பொன்.மாணிக்கவேல் என்ன known criminalலா..?


கோர்ட்டை மீறி ஒன்றும் செய்ய முடியவில்லை என்று ஆனதும், இப்போது மாணிக்கவேலின் கீழே பணிபுரியும் சில போலீஸ் அதிகாரிகள் அவரைப் பற்றி புகார்..!


இதுவரை போலீஸ் வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை..! சினிமாவில்தான் இப்படியெல்லாம் காட்ட முடியும். நிஜத்தில், ஒரு போலீஸ்காரன் தன் மேலதிகாரி பத்தாவது மாடியில் இருந்து குதி என்று ஆர்டர் இட்டால் உடனே யோசிக்காமல் குதிக்க வேண்டும்..! Obedience cannot be diluted for whatever reason என்பதே போலீஸ் விதி..!


அப்படி இருக்க, சில sub-ordinates தம் சுப்பீரியரான மாணிக்கவேலைப் பற்றி கம்ப்ளெயிண்ட் கொடுப்பதும், அதை மீடியாவிடம் விலாவாரியாக பேசுவதும்..... என்னய்யா நடக்கிறது..?


தமிழ்நாடு மீள முடியாத ஒரு பெரிய ஆபத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது..!


ஒன்றை கவனியுங்கள் : பொன்.மாணிக்கவேல் விஷயத்தில், திமுக, தமிழக அரசை குறை கூறவே இல்லை.! அது கோர்ட்டுக்குப் போகவில்லை..!


பொன்.மாணிக்கவேல் தொடர்வதில் திமுகவிற்கும் விருப்பமில்லை என்பது வெளிப்படை..!


சில விவகாரங்களில் மட்டும் திமுக -அதிமுகவிடையே புரிந்துணர்வு இருக்கிறது..! கோயில் சிலை கடத்தல்கள் மேட்டர் அதில் ஒன்று..!


இதைப் புரிந்து கொள்வது கஷ்டமில்லை :
திராவிட அரசியல்வாதிகள் ஒருத்தனுக்கும் உண்மையான கடவுள் நம்பிக்கை கிடையாது..!



பணத்தின் மேல் மட்டுமே அவர்கள் எல்லோருக்குமே அதிக நம்பிக்கை..!


பக்தியோடு கோயில் உண்டியல்களில் காணிக்கை இடும் நாமெல்லாம் முட்டாள்கள்..! அந்தப் பணமெல்லாம் போவது கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கு...


நன்றி பேஸ்புக் Sethu Aravind