உலகிற்கு இந்தியாவின் கொடை.......

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:46 | Best Blogger Tips



விஞ்ஞானங்களைப்பொறுத்தவரை சிந்தனைக்கு எட்டாத காலத்திலிருந்தே இந்தியா விஞ்ஞானிகளை படைத்திருக்கிறது.விகாரமாக காது,மூக்கு இவைகளை சரி செய்வதற்கான ரசாயணங்களை கண்டுபிடித்தன் மூலம் இந்தியா நவீன மருத்துவத்திற்கு கூட தன் கொடையை அளித்துள்ளது என்று கூறுகிறார் விஞ்ஞானி சர் வில்லியம் ஹண்டல்.

கணிதத்துறையிலும் அது தன் கொடையை அளித்துள்ளது.அல்ஜீப்ரா,ஜிய
ோமிட்ரிக்,வான இயல்,நவீன விஞ்ஞானம் விரும்பும் கலவை கணிதம்(mixed mathematics) போன்றவைகளெல்லாம் இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டவை.zero(0) வை கண்டு பிடித்தது .

இந்தியா..மற்ற அறிஞர்கள் ஒத்துக்கொள்வது போல் தத்துவத்தில் நாங்கள் எப்போதும் உச்சத்திலேயே இருக்கிறோம்.ஏழு ஸ்வரங்களுடன் கூடிய இசையை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியது நாங்களே.

ஜரோப்பாவில் இசை 11ம் நுாற்றாண்டில் தான் வந்தது.ஆனால் கி.மு 350 ல் இசை இந்தியாவில் உச்சத்தில் இருந்தது.மொழியை எடுத்துக்கொண்டால் எல்லா ஐரோப்பிய மொழிகளுக்கும் அடிப்படையாக இருப்பது சமஸ்கிருதமே.இலக்கியத்தை எடுத்துக்கொண்டால் இந்தியாவின் இலக்கியங்கள் தரம் வாய்ந்தவை.ஈசாப்பின் கதைகளை உலகிற்கு கொடுத்தது இந்தியாவே. பழைய நுாலிலிருந்து ஈசாப் அதை எழுதிக்கொண்டார்.

யஞ்சு மற்றும் சாயம் இந்தியாவின் கண்டுபிடிப்பு, பல்வேறுவிதமான ஆபரணங்களை செய்வதில் இந்தியா முதலிடத்தில் இருந்தது.sugerசர்க்கரை போன்ற வார்த்தைகள் கூட இந்தியர்களுடையது. சதுரங்கம்,சீட்டு, தாயம் போன்றவை இந்தியாவின் கண்டுபிடிப்பு. ஒவ்வொரு துறையிலும் இந்தியா முன்னேறி இருந்நதால் தான் ஐரோப்பியர்கள் இந்தியாவை நாடி வரநேர்ந்தது. அதன் விளைவாகத்தான் அமெரிக்கா கண்டு பிடிக்கப்ட்டது.நல்வாழ்த்து
க்களே இந்தியா உலகத்திற்கு விடுக்கும் முதல் செய்தி.தீமைக்கு பதிலாக நன்மை செய் என்ற கருத்தை முதலில் உருவாக்கியதே இந்தியா தான்.இந்திய மக்களின் ஒழுக்கம் சிறப்பு வாய்ந்தது.கருணைமிக்க இனம் ஒருபோதும் அழிவதில்லை,எனவே இந்தியா வெற்றி பெறவே செய்யும்.


-----சுவாமி விவேகானந்தர்.......




Via  மக்கள் சேவையே மகேசன் சேவை