மாநிலங்களவை உறுப்பினர்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:05 PM | Best Blogger Tips

http://tawp.in/r/1rwe
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஒன்றான மாநிலங்களவைக்குக் குறிப்பிட்ட அளவிலான உறுப்பினர்கள் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் அந்த மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இம்முறை கனேடிய செனட் மற்றும் ஜெர்மனி பந்தர்ஸ்ரேட் ஆகிய மன்றங்களின் தேர்ந்தெடுக்கும் முறைகளின்படி இங்கும் பின்பற்றபடுகின்றது. இதன் இருக்கைகள் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கேற்றார்போல் அதன் மக்கள் தொகை, பரப்பளவு இவற்றின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரிய மாநிலங்களுக்கு அதிக இடங்களும் சிறிய மாநிலங்களுக்குக் குறைவான இருக்கைகளும் சரிசம பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. 2006 இன்படி இதன் இருக்கைகள் கீழ்கண்டவாறு ஒதுக்கப்பட்டுள்ளது. அலுவலக இணையத்தளம்:

[தொகு] மாநிலம் வாரியாக மாநிலங்களவை உறுப்பினர்கள்

இந்தியாவிலுள்ள மாநிலம் வாரியாக மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கைப் பட்டியல்.
வ.எண். மாநிலம் இருக்கைகளின் எண்ணிக்கை குறிப்புகள்
1 ஆந்திரப் பிரதேசம் 18 ஆந்திரப்பிரதேச மாநிலங்களவை உறுப்பினர்கள்
2 அருணாச்சலப் பிரதேசம் 1 அருணாச்சலப் பிரதேச மாநிலங்களவை உறுப்பினர்கள்
3 அசாம் 7 அசாம் மாநிலங்களவை உறுப்பினர்கள்
4 பீகார் 16 பீகார் மாநிலங்களவை உறுப்பினர்கள்
5 சட்டீஸ்கர் 5 சட்டீஸ்கர் மாநிலங்களவை உறுப்பினர்கள்
6 கோவா 1 கோவா மாநிலங்களவை உறுப்பினர்கள்
7 குஜராத் 11 குஜராத் மாநிலங்களவை உறுப்பினர்கள்
8 அரியானா 5 அரியானா மாநிலங்களவை உறுப்பினர்கள்
9 இமாச்சலப் பிரதேசம் 3 இமாச்சலப் பிரதேசம் மாநிலங்களவை உறுப்பினர்கள்
10 ஜம்மு காஷ்மீர் 4 ஜம்மு காஷ்மீர் மாநிலங்களவை உறுப்பினர்கள்
11 ஜார்க்கண்ட் 6 ஜார்க்கண்ட் மாநிலங்களவை உறுப்பினர்கள்
12 கர்நாடகா 12 கர்நாடகா மாநிலங்களவை உறுப்பினர்கள்
13 கேரளா 9 கேரளா மாநிலங்களவை உறுப்பினர்கள்
14 மத்தியப் பிரதேசம் 11 மத்தியப் பிரதேசம் மாநிலங்களவை உறுப்பினர்கள்
15 மகாராஷ்டிரா 19 மகாராஷ்டிரா மாநிலங்களவை உறுப்பினர்கள்
16 மணிப்பூர் 1 மணிப்பூர் மாநிலங்களவை உறுப்பினர்கள்
17 மேகாலயா 1 மேகாலயா மாநிலங்களவை உறுப்பினர்கள்
18 மிசோரம் 1 மிசோரம் மாநிலங்களவை உறுப்பினர்கள்
19 நாகாலாந்து 1 நாகாலாந்து மாநிலங்களவை உறுப்பினர்கள்
20 தில்லி 3 தில்லி மாநிலங்களவை உறுப்பினர்கள்
21 நியமன உறுப்பினர்கள் 12 மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள்
22 ஒரிசா 10 ஒரிசா மாநிலங்களவை உறுப்பினர்கள்
23 புதுச்சேரி 1 புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர்கள்
24 பஞ்சாப் 7 பஞ்சாப் மாநிலங்களவை உறுப்பினர்கள்
25 இராஜஸ்தான் 10 இராஜஸ்தான் மாநிலங்களவை உறுப்பினர்கள்
26 சிக்கிம் 1 சிக்கிம் மாநிலங்களவை உறுப்பினர்கள்
27 தமிழ்நாடு 18 தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்கள்
28 திரிபுரா 1 திரிபுரா மாநிலங்களவை உறுப்பினர்கள்
29 உத்திரப் பிரதேசம் 31 உத்திரப் பிரதேசம் மாநிலங்களவை உறுப்பினர்கள்
30 உத்தர்காண்ட் 3 உத்தர்காண்ட் மாநிலங்களவை உறுப்பினர்கள்
31 மேற்கு வங்காளம் 16 மேற்கு வங்காளம் மாநிலங்களவை உறுப்பினர்கள்
32 மொத்தம் 245 -----
மொத்தம்: 245 [1]
  • தேர்தல்கள் மாநிலங்களுக்குள் இருக்கும் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களால் ஒற்றை மாற்றுதலுக்குரிய வாக்களிப்பு முறையில் கட்சிகள் பெற்றுள்ள பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் நடைபெறுகின்றன.

[தொகு] மேற்கோள்கள்

இந்திய மக்களவை உறுப்பினர்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:05 PM | Best Blogger Tips

  http://tawp.in/r/1rwf

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஒன்றான மக்களவைக்கு மாநிலம் வாரியாக மக்கள் தொகையின் அடிப்படையில் குறிப்பிட்ட மக்களவைத் தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களிலிருந்து மக்கள் வாக்குகள் அளித்து மக்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்கின்றனர். போட்டியிடும் வேட்பாளர்கள் அரசியல் கட்சி சார்ந்தவர்களாகவோ அல்லது அரசியல் கட்சியைச் சாராதவர்களாகவோ இருக்கின்றனர்.

பொருளடக்கம்

 [மறை

[தொகு] மக்களவை உறுப்பினர் இருக்கைகள்

இந்தியாவிலிருக்கும் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆட்சிப் பகுதிகளில் மக்களவைக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் (தொகுதிகள்) குறித்த விபரங்கள் கொண்ட அட்டவணை.
வ.எண். மாநிலம் அல்லது ஆட்சிப் பகுதி இருக்கைகளின் எண்ணிக்கை குறிப்புகள்
1 அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1 அந்தமான் நிக்கோபார் தீவுகள் மக்களவை உறுப்பினர்
2 ஆந்திரப் பிரதேசம் 42 ஆந்திரப்பிரதேச மக்களவை உறுப்பினர்கள்
3 அருணாச்சலப் பிரதேசம் 2 அருணாச்சலப் பிரதேச மக்களவை உறுப்பினர்கள்
4 அசாம் 14 அசாம் மக்களவை உறுப்பினர்கள்
5 பீகார் 39 பீகார் மக்களவை உறுப்பினர்கள்
6 சண்டிகர் 1 சண்டிகர் மக்களவை உறுப்பினர்
7 சட்டீஸ்கர் 12* சட்டீஸ்கர் மக்களவை உறுப்பினர்கள்
8 தாதர் மற்றும் நாகர் ஹவேலி 1 தாதர் மற்றும் நாகர் ஹவேலி மக்களவை உறுப்பினர்
9 டாமன் மற்றும் டையூ 1 டாமன் மற்றும் டையூ மக்களவை உறுப்பினர்
10 கோவா 2 கோவா மக்களவை உறுப்பினர்கள்
11 குஜராத் 26 குஜராத் மக்களவை உறுப்பினர்கள்
12 அரியானா 10 அரியானா மக்களவை உறுப்பினர்கள்
13 இமாச்சலப் பிரதேசம் 4 இமாச்சலப் பிரதேசம் மக்களவை உறுப்பினர்கள்
14 ஜம்மு காஷ்மீர் 6 ஜம்மு காஷ்மீர் மக்களவை உறுப்பினர்கள்
15 ஜார்க்கண்ட் 14 ஜார்க்கண்ட் மக்களவை உறுப்பினர்கள்
16 கர்நாடகா 28 கர்நாடகா மக்களவை உறுப்பினர்கள்
17 கேரளா 21* கேரளா மக்களவை உறுப்பினர்கள்
18 இலட்சத் தீவுகள் 1 இலட்சத்தீவு மக்களவை உறுப்பினர்
19 மத்தியப் பிரதேசம் 29 மத்தியப் பிரதேசம் மக்களவை உறுப்பினர்கள்
20 மகாராஷ்டிரா 48 மகாராஷ்டிரா மக்களவை உறுப்பினர்கள்
21 மணிப்பூர் 2 மணிப்பூர் மக்களவை உறுப்பினர்கள்
22 மேகாலயா 2 மேகாலயா மக்களவை உறுப்பினர்கள்
23 மிசோரம் 1 மிசோரம் மக்களவை உறுப்பினர்
24 நாகாலாந்து 1 நாகாலாந்து மக்களவை உறுப்பினர்
25 தில்லி 7 தில்லி மக்களவை உறுப்பினர்கள்
26 ஒரிசா 21 ஒரிசா மக்களவை உறுப்பினர்கள்
27 புதுச்சேரி 1 புதுச்சேரி மக்களவை உறுப்பினர்
28 பஞ்சாப் 13 பஞ்சாப் மக்களவை உறுப்பினர்கள்
29 இராஜஸ்தான் 25 இராஜஸ்தான் மக்களவை உறுப்பினர்கள்
30 சிக்கிம் 1 சிக்கிம் மக்களவை உறுப்பினர்
31 தமிழ்நாடு 39 தமிழ்நாடு மக்களவை உறுப்பினர்கள்
32 திரிபுரா 2 திரிபுரா மக்களவை உறுப்பினர்கள்
33 உத்திரப் பிரதேசம் 80 உத்திரப் பிரதேசம் மக்களவை உறுப்பினர்கள்
34 உத்தர்காண்ட் 5 உத்தர்காண்ட் மக்களவை உறுப்பினர்கள்
35 மேற்கு வங்காளம் 42 மேற்கு வங்காளம் மக்களவை உறுப்பினர்கள்
36 மொத்தம் 544 மொத்தமுள்ள 544 உறுப்பினர்களில் 542 உறுப்பினர்கள் தேர்தல் மூலமாகவும், 2 உறுப்பினர்கள் நியமனம் மூலமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

[தொகு] நியமன உறுப்பினர்கள்

  • மக்களவைக்கு நியமன உறுப்பினர்களாக ஆங்கிலோ இந்தியன் சமூகத்தவரிலிருந்து இருவர் நியமிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. பதினைந்தாவது மக்களவையிலும் ஆங்கிலோ இந்தியன் சமூகத்தவர் இருவர் மக்களவை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் ஒருவர் சட்டீஸ்கர் மாநிலத்திலிருந்தும், மற்றொருவர் கேரளா மாநிலத்திலிருந்தும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய ஆட்சிப் பணி

மணக்கால் அய்யம்பேட்டை | 2:55 PM | Best Blogger Tips

  http://tawp.in/r/19bf

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்திய ஆட்சிப் பணி (அ) இ.ஆ.ப, (ஐ.ஏ.எஸ்) (இந்தி: भारतीय प्रशासनिक सेवा பாரதீய பிரஷானிக்கா சேவா ) அனைத்து இந்திய பணிகளின் (குடியுரிமைப் பணியியல்) மூன்று பணிகளுள் ஒன்றாக, இந்திய அரசின் ஆட்சியல் பணியினை மேற்கொள்ளும் சிறப்பு அமைப்பாக இந்திய அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்டதாகும். ஏனைய இரண்டு பணிகள் இந்தியக் காவல் பணி (அ) இ. கா. ப மற்றும் இந்திய வனப் பணி (அ) இ. வ. ப ஆகும். இ ஆ ப அலுவலர்கள் இந்திய மாநில மற்றும் ஆட்சிப்பகுதி அரசுகளின் பணித்துறை ஆட்சி நடைபெறுவதற்கு உறுதுணை புரிகின்றனர். அரசின் செயலாட்சியர்களுக்கு உறுதுணையாக செயல்படுகின்றனர். ஒவ்வொரு வருடமும் இந்திய ஆட்சிப் பணிக்காக 60 முதல் 90 அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சுமார் 3,00,000 விண்ணப்பங்களில் குடியுரிமை தேர்வின் மூலம் இந்தியாவின் செயல் வல்லுனர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்தப் பணிக்கு பல்கலைக்கழகத்தின் ஏதாவது ஒரு இளநிலைப் பட்டம் குறைந்த அளவுக் கல்வித் தகுதியாக உள்ளது.

[தொகு] வரலாறு

இந்திய ஆட்சிப் பணியின் முன்னோடியாக இந்தியாவில் இருந்த அமைப்பு இந்தியக் குடியுரிமைப் பணி (கலெக்டர்-ஆட்சியர்) என்ற அமைப்பாக இந்தியா பிரித்தானியரின் காலனி ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் இருந்தது. இந்தியா விடுதலையடைந்த பின் இவ்வமைப்பு இந்திய ஆட்சிப் பணி என்று பெயர் மாற்றம் கண்டது.

[தொகு] தேர்வு மற்றும் பயிற்சிகள்

ஒருவர் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்து சேவைப் புரிய அவர் நடுவண் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பெறும் குடியுரிமைப் பணி தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இப்பொதுத்தேர்வு இந்தியக் காவல் பணி, பிரிவு ஏ மற்றும் பிரிவு பி நடுவண் அரசுப் பணிகளுக்கும் சேர்த்து நடத்தப்படுகின்றன. (இந்திய வனப் பணித் தேர்வு தனியாக நடுவண் அரசுத் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்றன).

[தொகு] தேர்வு நிலைகள்

  • இத் தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்பெறுகின்றன.
    • முதனிலை தேர்வு (preliminary) கொள்குறி வகைத் (புலனறிவு) தேர்வாக நடத்தப்படுகிறது.
    • முதனிலையில் தேறியவர்கள் இரண்டாம் நிலை முக்கியத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
    • இரண்டாம் நிலையில் (முக்கியத் தேர்வில்) தேறியவர்கள் மூன்றாவது தேர்வான நேர்காணல் தேர்வுக்கு புது தில்லிக்கு அழைக்கப்படுகின்றனர்.
  • முக்கியத் தேர்வில் தேர்வு எழுதுபவருக்கு கட்டாயப் பாடங்களான பொதுக்கல்வி, கட்டுரை மற்றும் கட்டாய மொழித் தாள் மற்றும் ஆங்கிலத் தாள் இவற்றைத் தவிர வேறு இரண்டு விருப்பப் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

[தொகு] தேர்வு நடைமுறை

இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகளின் மதிப்பீடு
தேர்வுகள் பாடம் கேட்கப்படும் கேள்விகள் ஒரு கேள்விக்கான மதிப்பெண் மொத்த மதிப்பெண்
முதனிலைத் தேர்வு பொதுப் பாடம் 150 1 150
விருப்பப் பாடம் 120 2.5 300
முதனிலைத் தேர்வு மொத்த மதிப்பெண் 450
முக்கியத் தேர்வு
(9 தாள்கள் கொண்டது)
விருப்பப் பாடம்-1 2 தாள்கள் தாள் ஒன்றுக்கு 300 ம.பெ 600
விருப்பப் பாடம்-2 2 தாள்கள் தாள் ஒன்றுக்கு 300 ம.பெ 600
பொதுப் பாடம் (பொது அறிவு) 2 தாள்கள் தாள் ஒன்றுக்கு 300 ம.பெ 600
கட்டுரை """" 200 200
ஆங்கிலம் தாள் (தகுதி வாய்ந்தனவாக)
கட்டாய மொழி (தகுதி வாய்ந்தனவாக)
மேற்கண்டத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலுக்கு முக்கியத் தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் அழைப்பாணைகள் மூலம் அழைக்கப்படுவர்
நேர்காணல் 300

[தொகு] பதவி உயர்வு இந்திய ஆட்சிப் பணி

இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வை நேரடியாக எதிர்கொண்டு அதில் வெற்றி பெற்று அரசுத் துறைகளின் பணிகளில் சேர்வது ஒரு வகையாக இருந்தாலும், அரசுத் துறைகளில் பணியாற்றி வருபவர்கள் பதவி உயர்வின் மூலம் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளாக மாநில அரசுகளின் வழியாகத் தரம் உயர்த்தப்படும் முறையும் இந்தியாவில் உள்ளது.

[தொகு] பத்தாம் வகுப்பு

இந்தப் பதவி உயர்வின் மூலம் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகத் தரம் உயர்த்தப்பட்டவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் கல்வித்தகுதி பத்தாம் வகுப்புதான். 1973 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப்பணிக்கான நான்காம் பிரிவுத் தேர்வின் மூலம் வருவாய்த்துறையில் பள்ளிப்பட்டு வட்டத்தில் இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்த இவர் படிப்படியாக துணை வட்டாட்சியர், வட்டாட்சியர், துணை ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் என பதவி உயர்வு பெற்று பல நிலைகளில் தமிழ்நாடு அரசுப் பணியில் 37 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.[1]


இந்திய வனப் பணி http://tawp.in/r/19bi

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்திய வனப் பணி (அ) இ.வ.ப, (ஐ.எப்.எஸ்) அனைத்து இந்திய பணிகளின் (குடியுரிமைப் பணியியல்) மூன்று பணிகளுள் ஒன்றாக, இந்திய அரசின் வனங்களைப் பாதுகாக்கும் பணியினை மேற்கொள்ளும் சிறப்பு அமைப்பாக இந்திய அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்டதாகும். ஏனைய இரண்டு பணிகள் இந்தியக் காவல் பணி (அ) இ. கா. ப மற்றும் இந்திய ஆட்சிப் பணி (அ) இ. ஆ. ப ஆகும். இ வ.ப பயிற்சி பெற்ற அலுவலர்கள் இந்திய மாநில மற்றும் ஆட்சிப்பகுதி அரசுகளின் ஆளுமைக்குட்பட்ட வனப்பகுதிகளை பாதுகாக்கவும், வனவுயிரனங்களை பராமரிக்கும் பொறுப்பினை மேற்கொள்வதற்கு உறுதுணை புரிகின்றனர். அரசின் வனஅமைச்சக செயலாட்சியர்களுக்கு உறுதுணையாக செயல்படுகின்றனர்.


[தொகு] வரலாறு

இந்திய வனப் பணி 1966 [1] ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்டது. பிரித்தானிய காலணி ஆளுமையின் கீழ் இந்தியா இருந்த காலகட்டத்தில் இது பேர்ரசின் வனத் துறை என்று 1864[1] பிரித்தானியரால் வடிவமைக்கப்பட்டிருந்து. அப்பொழுதய வனத்துறைத் தலைவராக (இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் பாரஸ்ட்) முனைவர் டியட்ரிச் பிரான்டீஸ் என்ற ஜெர்மானிய வன அலுவலர் தலைமையேற்றிருந்தார்.
1867[1] இல் பேரரசின் வனப்பணி என்ற அமைப்பை பேரரசின் வனத் துறையின்[1] கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரித்தானிய காலணி அரசாங்கமும் வனவளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தும் நோக்கத்தில் வனத்துறை செயலாட்சியர் மற்றும் வல்லுநர்களை உருவாக்கி வனவளர்ச்சியில் முன்னோடிகளாக இன்று நாம் பங்கெடுக்கும் அளவில் செயல்பட்டது என்பது மிகையாகாது.
அன்றைய காலகட்டத்தில் இதன் அலுவலர்கள் 1867[1] முதல் 1885 வரையில் ஜெர்மன் மற்றும் பிரான்சுகளில் பயிற்சி பெற்றனர். 1905 இல் கூப்பர் மலை, இலண்டன் மற்றும் குறிப்பிடத்தக்க கல்லூரிகளில் இதற்கான பயிற்சிகளைப் பெற்றனர்.
1905 முதல் 1926 வரையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இதற்கானப் பயிற்சியை வழங்கியது.
1927 முதல் 1932 வரையில் வன அலுவலர்கள் பேரரசின் வன ஆராய்ச்சி மையம் டேரடூனில் துவக்கப்பட்டு அதன் மூலம் பயிற்சியளித்த்து.இது கட்டமைக்கப்பட்டது 1906. அதன்பின் இந்திய வனக் கல்லூரி 1938 இல் டேராடூனில் துவக்கப்பட்டு வன அலுவலர்களுக்கு மிக சிறப்பானதொரு பயிற்சி அளிக்கப்பெற்று தேர்வு செய்யப்பட்டனர்.
தற்பொழுதய வனப் பணி இந்திய விடுதலைக்குப்பிறகு 1966 இல் இந்திய பணியியல் சட்டம் 1951[1] , இன் படி கட்டமைக்கப்பட்டு இந்திய வனப் பணி என்ற அமைப்பாக செயலாற்றி வருகின்றது.
இந்தியாவின் வனப் பரப்பளவு 6,35,400 ச.கி.மீ[1] வரை பரந்துள்ளது ஆகும். நாட்டின் 22.27 சதவீதம் வனப்பகுதியாகும். இதைப் பாதுகாக்கும் கடமை அரசுக்குள்ளதால் 1894 ல் உருவாக்கப்பட்ட வனப்பாதுக்காப்புக் கொள்கை 1952, மீண்டும் 1988 இல் திருத்தியமைக்கப்பட்டது.

[தொகு] தேர்வு மற்றும் பயிற்சிகள்

[தொகு] தேர்வு நடைமுறை

இந்திய வனப் பணித் தேர்வுகளின் மதிப்பீடு
தேர்வுகள் மதிப்பெண்
பொது ஆங்கிலம் தாள் 300
பொது அறிவுத் தாள் 300
மொத்த மதிப்பெண் 600
விருப்பத் தேர்வு-1 (14 பாடப்பிரிவுகளுள்) 200 ம.பெ
விருப்பத் தேர்வு-2(14 பாடப்பிரிவுகளுள்) 200 ம.பெ
விருப்பத் தேர்வு மொத்த மதிப்பெண் 400
மேற்கண்டத் தேர்வுகளில் தேர்வு பெற்றவர்கள் நேர்காணலுக்கு முக்கியத் தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் அழைப்பாணைகள் மூலம் அழைக்கப்படுவர்
நேர்காணல் 300

இந்தியக் காவல் பணி http://tawp.in/r/19ax

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்தியக் காவல் பணி

சென்னை மாநகரக் காவல் ரோந்து ஊர்தி
இந்தியக் காவல் பணி (இந்தியன் போலிஸ் சர்வீஸ்), பொதுவாக இந்தியக் காவல் என்று அழைக்கப்படும் (அ) இ.கா.ப அனைத்து இந்திய பணிகளின் (குடியுரிமைப் பணியியல்) மூன்று பணிகளுள் ஒன்றாக, மக்களின் பாதுகாப்பு பணியினை மேற்கொள்ளும் சிறப்பு அமைப்பாக இந்திய அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்டதாகும். ஏனைய இரண்டு பணிகள் இந்திய ஆட்சிப் பணி மற்றும் இந்திய வனப் பணி ஆகும்.
1947 இல் இந்தியா பிரித்தானியரிடமிருந்து விடுதலைப் பெற்ற பிறகு 1948 இல் பேரரசுக் காவல் (இம்பீரியல் போலிஸ்) என்றிருந்தப் பெயர் இந்தியக் காவல் பணி (இ.கா.ப) என்று பெயர் மாற்றம் கண்டது.

பொருளடக்கம்

 [மறை

[தொகு] தேர்வு மற்றும் பயிற்சிகள்

ஒருவர் இந்திய காவல் பணியில் சேர்ந்து சேவைப் புரிய அவர் மைய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பெறும் குடியுரிமைப் பணி தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இப்பொதுத்தேர்வு இந்திய ஆட்சிப் பணி, பிரிவு ஏ மற்றும் பிரிவு பி மைய அரசுப் பணிகளுக்கும் சேர்த்து நடத்தப்படுகின்றன. (இந்திய வனப் பணித் தேர்வு தனியாக மைய அரசுத் தேர்வாணையத்தால் நடத்தப்படுகிறது).

[தொகு] தேர்வு நிலைகள்

  • இத் தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்பெறுகின்றன.
    • முதனிலை தேர்வு (Preliminary Examination) கொள்குறி வகைத் (புலனறிவு) தேர்வாக நடத்தப்படுகிறது.
    • முதனிலையில் தேறியவர்கள் இரண்டாம் நிலை முக்கியத் தேர்வுக்கு (Main Examination) அனுமதிக்கப்படுகின்றனர்.
    • இரண்டாம் நிலையில் (முக்கியத் தேர்வில்) தேறியவர்கள் மூன்றாவது தேர்வான நேர்காணல் தேர்வுக்கு (Personality Test) புது தில்லிக்கு அழைக்கப்படுகின்றனர்.
  • முக்கியத் தேர்வில் தேர்வு எழுதுபவருக்கு கட்டாயப் பாடங்களான பொதுக்கல்வி, கட்டுரை மற்றும் கட்டாய மொழித் தாள் மற்றும் ஆங்கிலத் தாள் இவற்றைத் தவிர வேறு இரண்டு விருப்பப் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

[தொகு] தேர்வு நடைமுறை

இந்தியக் காவல் பணித் தேர்வுகளின் மதிப்பீடு
தேர்வுகள் பாடம் கேட்கப்படும் கேள்விகள் ஒரு கேள்விக்கான மதிப்பெண் மொத்த மதிப்பெண்
முதனிலைத் தேர்வு பொதுப் பாடம் 150 1 150
விருப்பப் பாடம் 1 120 2.5 300
முதனிலைத் தேர்வு மொத்த மதிப்பெண் 450
முக்கியத் தேர்வு
(9 தாள்கள் கொண்டது)
விருப்பத் தேர்வு-1 2 தாள்கள் தாள் ஒன்றுக்கு 300 ம.பெ 600
விருப்பத் தேர்வு-2 2 தாள்கள் தாள் ஒன்றுக்கு 300 ம.பெ 600
பொதுப் பாடம் 2 தாள்கள் தாள் ஒன்றுக்கு 300 ம.பெ 600
கட்டுரை """" 200 200
ஆங்கிலம் தாள் (தகுதி வாய்ந்தனவாக)
கட்டாய மொழி (தகுதி வாய்ந்தனவாக)
மேற்கண்டத் தேர்வுகளில் தேர்வு பெற்றவர்கள் நேர்காணலுக்கு முக்கியத் தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் அழைப்பாணைகள் மூலம் அழைக்கப்படுவர்
நேர்காணல் 300
( நன்றி  விக்கிப்பீடியா )

தமிழ்நாடு காவல்துறை பற்றி !

மணக்கால் அய்யம்பேட்டை | 2:37 PM | Best Blogger Tips

தமிழ்நாடு காவல்துறை http://tawp.in/r/21vh


தமிழ்நாடு காவல்துறை
தமிழக காவல் துறை
TN Police.JPG
வாய்மையே வெல்லும்
கட்டமைக்கப்பட்டது 1659[1]
மொத்தக் காவல் நிலையங்கள் 1452[2]
அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் 196[1]
மொத்த காவல் பணியாளர்கள் 88,672[1]
மொத்தக் காவல் பரப்பளவு 130058 ச.கி.மீ[1]
மொத்த மக்கள் தொகை 6.2 கோடிகள் 2001 கணக்கெடுப்பின்படி[1]
மொத்தக் காவல் மண்டலங்கள் 4[1]
மொத்த ஆணையரகம் 7[1]
மொத்தக் காவல் மாவட்டங்கள் 32[1]
இந்தியக் காவல் பணி அலுவலர்கள் 186 (31.03.2008)[2]
காவல்துறை தலைமை இயக்குநர் திரு.இராமஜனம் கூடுதல் பொறுப்பு இ.கா.ப.[3]
தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும், தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ், ஒரு தலைவரைக் (DGP) கொண்டு இயங்கும் அரசு சார்ந்த அமைப்பாகும். இது இந்தியாவில் ஐந்தாவது[1] பெரிய காவல்துறை ஆகும்.

[தொகு] வரலாறு

முதன் முதலில் இது மதராசு நகரக் காவல்துறைச் சட்டம் 1888 (The Madras City Police Act 1888) இற்கு ஏற்பத் துவக்கப்பட்டது. இச்சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் 1888, ஏப்ரல் 12 இலும், Governor-General -ன் ஒப்புதல் 1888, சூன் 26 இலும் வழங்கப்பட்டது. தொடக்கத்தில் ஒரு ஆணையாளரைக் கொண்டு உருவாக்கப்பட்ட இது சென்னை மாநகர எல்லை முழுமைக்குமாகத்தான் தன் செயல் எல்லையைக் கொண்டிருந்தது.

[தொகு] துறை அமைப்பு

படிமம்:TNPolice 40.jpg
தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் அலுவலகம்
தமிழ்நாடு காவல்துறையில் மொத்தம் 88,672 பேர் பணிபுரிகிறார்கள். தமிழ்நாடு காவல்துறை வடக்கு, மைய, மேற்கு மற்றும் தெற்கு என நான்கு காவல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒரு காவல் பொது ஆய்வாளர் (Inspector General of Police) தலைமையில் இயங்குகின்றன.
தமிழகத்தில் உள்ள 7 பெரிய நகரங்களான சென்னை, சென்னைப் புறநகர், மதுரை, கோயமுத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் காவல்துறை காவல் ஆணையாளர் (Commissioner of Police) தலைமையில் இயங்குகின்றது.
தமிழகம் 32 காவல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police) தலைமையில் இயங்குகின்றன. இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு துணை காவல் பொது ஆய்வாளர் (Deputy Inspector General of Police) மேற்பார்வை செய்கிறார்.
நகர்க் காவல்நிலையங்களில் காவல் ஆய்வாளர் (Inspector), துணைக் காவல் ஆய்வாளர் (Sub-Inspector), உதவியாளர் (A-2) மற்றும் காவலர்கள் (Constables) பணிபுரிகிறார்கள். தவிர காவலர்களில் எழுத்தர்களும் வண்டி ஓட்டுநர்களும் உள்ளனர்.

[தொகு] காவல் துறையின் பல்வேறு பிரிவுகள்


சென்னை மாநகரக் குதிரைப்படைக் காவலர் பிரிவு-காவல் பணி மேற்கொள்ளுதல் (மவுன்டட் கார்ட்
  1. சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு (Law and Order)
  2. ஆயுதம் அல்லது தமிழ்நாடு சிறப்புப் படை (Armed Police or Tamil Nadu Special Police)
  3. பொதுமக்கள் பாதுகாப்பு (Civil Defence and Home Guards)
  4. பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID)
  5. கடலோர காவல் துறை (Coastal Security Group)
  6. குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை (Crime Branch, CID)
  7. பொருளாதார சிறப்புப் பிரிவு (Economic Offences Wing)
  8. செயல்பாடு - தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி (Operations - T.N. Commando Force & Commando School)
  9. இரயில்வே காவல்துறை (Railways)
  10. சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் (Social Justice and Human Rights)
  11. சிறப்புப் பிரிவு - உளவு மற்றும் பாதுகாப்பு (Special Branch , CID including Security)
  12. குற்றப் பிரிவு (நுண்ணறிவு) (Co-Intelligence)
  13. போக்குவரத்துக் காவல் பிரிவு (Traffic)
  14. மதுவிலக்கு அமல் பிரிவு (Prohibition Enforcement Wing)
  15. குடிமையியல் பாதுகாப்புப் பிரிவு (Protection and Civil Rights)
  16. பயிற்சிப் பிரிவு (Training)

[தொகு] காவல்துறைப் பதவிகள்

தமிழ்நாட்டில் காவல்துறைப் பணியிலிருப்பவர்களுக்கென்று அவர்கள் அணிந்திருக்கும் சட்டையில் அவர்கள் பணிக்கேற்ற குறியீடுகள் இடம் பெற்றிருக்கின்றன. அது குறித்த அட்டவணை;
தமிழ்நாடு காவல்துறைப் பதவி மற்றும் குறியீடுகள்
பதவி பதவிச் சின்னம்
காவல்துறைத் தலைமை இயக்குனர் அசோகச் சின்னம்,அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைத் தலைவர் ஐந்துமுனை நட்சத்திரம் ஒன்று இதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைத் துணைத்தலைவர் அசோகச் சின்னம், அதன்கீழ் ஃ வடிவில் மூன்று நட்சத்திரங்கள், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைக் கண்காணிப்பாளர் அசோகச் சின்னம், அதன்கீழ் ஒரு நட்சத்திரம், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS அல்லது TPS எழுத்து
காவல்துறை இணைக் கண்காணிப்பாளர் அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து
காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து
ஆய்வாளர் மூன்று நட்சத்திரம் அதற்குக் கீழ் கருநீலம், சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்
உதவி ஆய்வாளர் இரண்டு நட்சத்திரம் அதற்குக் கீழ் சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்
தலைமைக் காவலர் சட்டையின் மேற்கையில் மூன்று பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்
முதல்நிலைக் காவலர் சட்டையின் மேற்கையில் இரண்டு பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்
இரண்டாம்நிலைக் காவலர் பட்டை எதுவுமில்லை.

[தொகு] தமிழகத்தில் குற்றங்கள்

தமிழகத்தில் கடந்த மூன்று வருடங்களாகக் குற்றங்கள் குறைந்து வருவதாகக் காவல்துறை தெரிவிக்கின்றது.

வ.எண் குற்றம் 2001 2002 2003 2004 2005 2006[2] 2007[2] 2008[2] 2009[2]
1 கொலை 1594 1647 1487 1389 1365 1273 1521 1630 1644
2 ஆதாயத்திற்காகக் கொலை 81 75 104 73 74 89 102 105 123
3 குழுக் கொள்ளை 158 178 95 72 73 95 88 100 97
4 வழிப்பறி 669 650 514 464 437 450 495 662 1144
5 வீட்டில் கொள்ளை 5957 5532 4849 4147 3738 3300 3717 3849 4221
6 திருட்டு 16940 18614 18213 17530 15851 13651 13217 15019 15712
7 மொத்தம் 25399 26696 25262 23675 21538 18859 19140 21365 22941

[தொகு] காவல்துறையில் பெண்கள்

இந்தியாவிலேயே தமிழக காவல்துறையில் தான் அதிக பெண் காவலர்கள் பணிபுரிகிறார்கள். தமிழக முதல்வராக ஜெயலலிதா (1991-1996) இருந்த போது பெண்களுக்கெதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கவும் பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தமிழ் நாடு முழுவதும் தொடங்கப்பட்டன. பின்னர் ஜெயலலிதா முதல்வராக (2003-2006) இருந்த போது பெண்கள் மட்டுமே உள்ள சிறப்பு பெண்கள் ஆயுதப்படை தொடங்கப்பட்டது

[தொகு] காவலர் பயிற்சிக் கல்லூரி

காவலர்களுக்குப் பயிற்சி அளிக்க காவலர் பயிற்சிக் கல்லூரி (Police training college) சென்னை அசோக்நகரில் அமைந்துள்ளது. இங்கு காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பயிற்சியில் அமர்த்தப்படுவார்கள். மேலும் காவல்துறை அதிகாரிகளுக்கான பயிற்சியும் இங்கு நடத்தப்படுகிறது.

[தொகு] விமர்சனங்கள்

தமிழ்நாடு காவல்துறை மீது மனித உரிமை மீறல்கள், நீதித்துறைக்கு அப்பாற்பட்ட கொலைகள், லஞ்ச ஊழல் பரவல், அரசியல்மயமாக்கம் என பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.[4][5][6]

சென்னை மாநகரக் காவல் http://tawp.in/r/19ag

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்நாடு காவல்துறை
சென்னை மாநகரக் காவல்
ChennaiPoliceLogo.gif
வாய்மையே வெல்லும்
கட்டமைக்கப்பட்டது 1659
மொத்தக் காவல் நிலையங்கள் 155
காவல்துறை தலைமை இயக்குநர் திரு இராமஜனம் கூடுதல் பொறுப்பு இ.கா.ப[1]
சென்னை மாநகர ஆணையர் திரு திரிபாதி  இ.கா.ப[2]













சென்னை மாநகரக் காவல் தமிழக காவல்துறையின் பிரிவாகவும் சட்ட அமலாக்கப் பிரதிநிதியாகவும் இந்திய மாநிலத்திலுள்ள தமிழகத்தின் தலை நகரமான சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளிலும் மக்களைப் பாதுகாக்கும் பணியினை மேற்கொள்கின்றது.
சென்னை மாநகரக் காவல் சென்னை மாநகர காவல்துறை தமிழக உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பெற்ற இரு ஆணையர்களின் (காவல் துறைத் தலைவர் படிநிலை-ஐ ஜி பி) ஆளுமையின் கீழ் செயல்படுகின்றது.
சென்னை மாநகரக் காவல் சென்னையில் 36 துணைப் பிரிவுகளாகவும் அப்பிரிவுகளின் கீழ் அடங்கும் 155 காவல் நிலையங்கள் (மகளிர் காவல்நிலையங்கள் உட்பட)[3][4]தனது சீர்மிகுப் பணியினை மேற்கொள்கின்றது.
சென்னை மாநகர காவல் மின்னணுப் பாதை மூலம் காவல் ஊழியர்களின் வழக்கமானப் பணியினை,செயல் திறன்களை அளவிடும் விதமாக இந்தியாவிலேயே முதன் முதலில் அறிமுகப்படுத்தியப் பெருமையைக் கொண்டது.


[தொகு] வரலாறு

1659 இல் சென்னை மதராஸ் பட்டணம் என்று எல்லோரும் அழைக்கும் விதத்தில் ஒரு மீனவ கிராமாமாக அமைந்திருந்த காலகட்டத்தில் பெட்ட நாய்க் என்பவரால் கடை நிலை ஊழியர்களைக் கொண்டு நகரத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில் ஒருக் குழுவாக அமைக்கப்பட்டது. இவர்களே நகரைப் பாதுகாக்கும் காவலர்களாக செயல்பட்டனர்,
1780 இல் அங்காடிகள், சரக்குகளின் மதிப்பீடுகளை கண்காணிக்கும் விதமாக காவல் துறை கண்காணிப்பாளர் என்ற பதவி அறிமுகப்படுத்தப்பட்டது. பின் ஏற்பட்ட இந்தியப் பிரிவினையால் இந்தியா பிரித்தானியர்களின் ஆளுமைக்குள்ளானபொழுது மதராஸ் காவல் என்று நவீனமாக்கப்பட்டது.

அந்தந்த ஆண்டின் கணக்கெடுப்பின்படி சென்னை மாநகரக்காவல்
காவல் நிலையங்கள் (பி.எஸ்) 90 [5][6] 2009 ஆண்டு தற்பொழுதய நிலவரம்
அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் (ஏ.டபுள்யு.பி.எஸ்} 35 [7][8] 2007 ஆண்டு நிலவரப்படி
புறக்காவல் நிலையங்கள் (ஒ.பி) 9[3] 2005-2006 ஆம் ஆண்டு நிலவரப்படி
காவல் எல்லைகள் (போலிஸ் லிமிட்) 220 ச.கி.மீ 2004 ஆம் ஆண்டு நிலவரப்படி
மக்கள் தொகை 70 இலட்சம் 2004 ஆம் ஆண்டு நிலவரப்படி

[தொகு] சென்னை மாநகரக் காவல் ஆணையரகம்

சென்னை மாநகரக் காவல் ஆணையரகம் சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது. இவ்வாணையரகத்தில் ஆணையராக காவல் துறைத் தலைவர் (ஐ.ஜி.பி-இன்ஸ்பெக்டர் ஜென்ரல் ஆப் போலிஸ்) படிநிலையில் பொருப்பேற்றுள்ள ஆணையரே சென்னை மாநகர காவல் துறையின் பொறுப்பாளார் ஆவார். இவரது கட்டுப்பாட்டின் கீழ் சென்னை மாநகரக் காவல்துறை இயங்கும். அவர் ஆளுமையின் கீழ் சென்னை மாநகரக் காவல்துறை செயல்படும். சென்னை மாநகரக் காவல் ஆணையரகம் தமிழக காவல்துறை இயக்குநரின் (டி.ஜி.பி- டைரக்டர் ஜென்ரால் ஆப் போலிஸ்) தலைமையில் ம்ற்றும் அவர் வழிகாட்டுதலின்படி இயங்குபவை ஆகும்.
அவருக்குத் துணையாக கூடுதல் காவல் துறை இயக்குநர் (ஏ.டி.ஜி.பி), கூடுதல் ஆணையர்கள் (ஏ.சி.ஒ.பி), இணை ஆணையர்கள் (ஜே.சி-ஜாயின்ட் கமிசனர்) மற்றும் துணை ஆணையர்கள் (டி.சி-டெபுட்டி கமிசனர்) செயல் புரிவர்.

[தொகு] சென்னை மாநகரக் காவல் துறை அமைப்பு



[தொகு] சாதனைகள்


சென்னை மாநகரக் காவல் ரோந்து ஊர்தி
சென்னை மாநகரக் காவல் தனது பணியினை மேலும் சிறப்பாக மேற்கொள்வதற்காக கூடுதலாக மஞ்சள் படை மற்றும் நீலப் படை என்ற இரு இருசக்கர வாகனப் படைப்பிரிவுகளும் , ரோந்து செல்லும் நான்கு சக்கர ஊர்திகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.
  • ஒவ்வொரு மஞ்சள் படையினரும் 2 ச கிமீ சுற்றளவில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரைக் காவல் பணியினை மேற்கொள்வர்.
  • ஒவ்வொரு நீலப் படையினரும் 2 ச கி மீ சுற்றளவில் இரவு 11 மணி முதல் காலை 6.30 மணி வரை இரவுப் பணியினை மேற்கொள்வர்.
  • ரோந்து ஊர்திகள் காவலர்களுடன் தினந்தோரும் சராசரியாக 3.2 ச.கி.மீ சுற்றளவில் காவல் பணியினை மேற்கொள்ளும்.
இப்படையினரின் வாகனங்கள் நவீன தரத்துடன் காவல்துறைச் சின்னங்கள் பொறிக்கப்பட்டு , எச்சரிக்கை ஒலி, ஒளிரும் சுழல் விளக்கு, பொது மக்களின் முகவரிகளை மின்னணு முறையில் அறியும் வகை, கம்பியில்லாத் தொடர்புக் கருவி போன்ற நவீன அமைப்புகளுடன் மக்களை வலம் வந்து பணியாற்றுகின்றன. காவல் துறை கட்டுப் பாட்டு அறையின் மக்கள் அழைப்புக்கு பிரதிச் செயல் நேரமாக 3 லிருந்து 4 நிமிட நேரமாக நிர்ணயிக்கப்பட்டு துரிதமாக மக்கள் பணியாற்றுகின்றது.

[தொகு] காவல் நிலையங்கள்

இந்தியக் காவல் பணி வரலாற்றின் முதன் முறையாக தமிழகத்தின் சென்னை மாநகரக் காவல் துறைக்கு ஹூன்டாய் ஊர்திகள் வழங்கப்பட்டன. சட்டம் ஒழுங்குப் பிரிவிற்காக 78 ஊர்திகளும், 21 ஊர்திகள் போக்குவரத்துக் காவல் பிரிவிற்காகவும் வழங்கப்பட்டன. மீதமுள்ள 4 ஊர்திகள் தமிழக முதல்வர் ஊர்தியின் பாதுகாப்பு ஊர்திகளாக செயல்படுகின்றன.