உலகின் பெரிய சாப்பாடுகூடத்தில் உணவு பரிமாறிய மோடி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:46 | Best Blogger Tips

நம்முடைய கோயில்களில் நடைபெறும் அன்னதானங் களை போலசீக்கியர்களின் வழி பாட்டு தலமான குருத் வராக்களில் அன்னதானம நடப்பது உண்டு.ஏனென்றால். வழிபாட்டுக்கு வருபவர்கள் பசியுடன் செல்லக் கூடாது என்பதே குருத்வாராக்களின் முக்கிய நோக்கம்.
மோடி உணவு பரிமாறுகிறாரே பொற்கோயிலில் உள்ள இந்த கிச்சன் தான் உலகத்திலேயே பெரிய கிச்சன் என்கி றா ர்கள் . இங்கு வரும் பக்தர்களுக்கு உணவு அளிப்பதற் காக இரவு பகலாக செயல்படுகிறது இங்கு ஜாதி, மதம், இனப் பாகுபாடு இல்லாமல் யார் வேண்டுமானாலும் பசித்த நேரத்தில் இங்கு வந்து உணவு அருந்திச் செல்லாம். ' குரு கா லாங்கர் ' என்று அழைக்கிறார்கள்.
ஏழை, பணக்காரன் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் சமமாக தரையில் அமர்ந்து உணவு அருந்த வேண்டுமென்பதுதான் இங்குள்ள கட்டுப்பாடு தினமும் ஒரு. லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பொற்கோயிலில் உணவு அருந்துகிறார்கள்.
இந்த கிச்சனில் தினமும் 1500 கிலோ அரிசி உணவு தயாரிக்கப்படுகிறது. கூடவே 2 ஆயிரம் கிலோ காய்கறி கள் பயன்படுத்தி கூட்டு வைக்கப்படுகிறது. அதோடு 12 ஆயிரம் கிலோ கோதுமை மாவு பயன்படுத்தி ரொட்டிகள் சுடப்படுகிறது..அது தவிர 13 ஆயிரம் கிலோ பருப்பு வகை கள் கொண்டும் குழம்பு தயாரிக்கப்படுகிறது.
இந்த கிச்சனில் தினமும் 2 லட்சம் ரொட்டிகளை சுட்டு எடுக்க முடியும். ஒரு மணி நேரத்தில் இங்குள்ள ரொட்டி சுடும் இயந்திரம் 25 ஆயிரம் ரொட்டிகளை சுட்டு தள்ளி விடும் . தினமும் 100 கேஸ் சிலிண்டர்கள் காலியாகிற தாம் அதோட 5 ஆயிரம் கிலோ கரியும் உணவு சமைப்பத ற் காக பயன்படுத்தப்படுகின்றன. தினமும் 5000 லிட்டர் பால், ஆயிரம் கிலோ சர்க்கரை, 500 கிலோ வெண்ணெய் பயன்படுத்தி கீர் தயாரிக்கப்படுகிறது
மிகப் பெரிய பெரிய அண்டாக்களில் உணவு சமைக்கப்படு கின்றன. கிச்சனில் இரு உணவுக் கூடங்கள் உள்ளன. ஒவ்வொரு கூடத்திலும் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் வரை சாப்பிட முடியும்.ஒருவர் எத்தனை முறை வேண்டு மானாலும் வாங்கி வயிராற உண்ணலாம்.சூப்பர்ல இதுக்காகவே பொற்கோவிலுக்கு ஒரு தடவையாவது
போய் வயிறார சாப்பிட்டுவிட்டு வர வேண்டும்.
உலகிலேயே 24 மணி நேரமும் இயங்கும் ஒரே கிச்சன் இதுவாகத்தான் இருக்கும். ஷிப்ட் முறையில் உணவு தயாரிப்பு நடந்து கொண்டே இருக்கிறது. உணவு பரிமாறும் பணியில் தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபடுகின்றனர்.
இந்த கிச்சனில் 450 நிரந்தர ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
இது தவிர ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்களு ம் பணியில் இருப்பார்கள். சப்பாத்தி உருட்டுவது, காற்கறி நறுக்குவது போன்ற பணிகளில் இங்கு தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபடுகிறார்கள் .இவர்களேகளே மக்கள் சாப்பிட்ட பிளேட்டுகளை கழுவுகின்றனர். ஒரு நாளில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் சாப்பாடு தட்டுக்கள் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் தம்ளர்களை இவர்கள் கழுவுகி றார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..
இதற்க்கான செலவை ஒவ்வொரு வாரமும் ஒரு சீக்கிய குடும்பமோ அல்லது பல குடும்பங்களோச் சேர்ந்து ஏற்றுக் கொள்கிறது. பாரம்பரியமாக இது தொடர்கிறது. .

 நன்றி இணையம்