நெத்தியடி....

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:29 | Best Blogger Tips
Image result for modi
UNGA மாநாடு.உலகநாட்டின் அத்தனை பிரதிநிதிகளும் கூடியிருந்தனர்.
இந்திய பிரதிநிதி தனது பேச்சை தொடங்கினார்.
'
நான் எனது காஷ்மீர்பற்றிய உரையை தொடங்குமுன் மிக மிக பழைய கதை ஒன்றை சொல்லிவிட்டு தொடங்குகிறேன்....
ஒருமுறை கஷ்யப முனிவர் (இவரது பெயரால்தான் அந்தப்பகுதி காஷ்மீர் என அழைக்கப் படுகிறது) அந்தப் பகுதியில் கண்டதும் குளிக்கத்தூண்டும் மிக அழகிய ஒரு ஏரியை கண்டார்.
உடனே ஆடைகளை அவிழ்த்து அங்கிருந்த ஒரு பாறையின் மேல் வைத்துவிட்டு ஏரியில் இறங்கி குளிக்க தொடங்கினார்..! குளித்துவிட்டு கரையேறி தனது துணிகளை தேடினார் அவரது துணிகளை காணவில்லை மேலும் அவை ஒரு பாகிஸ்தானியனால் திருடப்பட்டிருப்பதையும் கண்டார்'
உடனே... மாநாட்டுக்கு வந்திருந்த பாகிஸ்த்தானின் பிரதிநிதி கோபத்தில் துள்ளியெழுந்து... 
"
என்ன உளருகிறீர்கள்? அப்போதுதான் பாகிஸ்தான்
என ஒரு நாடே கிடையாதே" என்றார்...
உடனே இந்திய பிரதிநிதி புன்சிரிப்புடன் 
"
அவ்வளவுதாங்க கதை , இல்லாத பாக்கிஸ்தான் இப்போது எங்களிடம் காஷ்மீருக்கு உரிமை கோருகிறது...!! என்றார்.
கைதட்டல் காதைபிளந்தது.
போட்டோவிற்க்கும் பதிவிற்க்கும் சம்பந்தம் இல்லை

 நன்றி இணையம்