ஜட்ஜ்ஸ்ருதி - டீ கடை மகள் ! வாழ்த்துக்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:05 | Best Blogger Tips
Image may contain: 2 people
சமாளிக்க முடியாமல் திணறினார்
அந்த இளம் பெண் !
அந்த பெண்ணைச் சுற்றி ஏராளமான நிருபர்கள் கூட்டம் !
கேள்வி மேல் கேள்வியாக தொடுத்தார்கள் தொலைக்காட்சி நிருபர்கள் ..!
.
அந்த பெண்ணின் பெயர் ஸ்ருதி ... வயது 24 ..!
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கோர்ட்டில் இப்போது ஜட்ஜ் ஆக இருக்கிறார் ...!
கோர்ட் வளாகத்துக்குள்தான் நிருபர்கள் சந்திப்பு !
.
அந்த நீதிபதிப் பெண்ணிடம் நிருபர்கள் கேட்ட கேள்வி :
இவ்வளவு இளம் வயதில் எப்படி மேடம் , இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தீர்கள் ? உங்கள் குடும்பம் மிகப் பெரிய செல்வாக்கு படைத்த குடும்பமா..?”
.
ஸ்ருதி சற்று நேரம் மௌனமாக இருந்தார்.
எதுவும் பேசவில்லை .
பின் அமைதியாக சொன்னார் : “இல்லை .. என் குடும்பம் மிக மிக எளிமையான குடும்பம் .. ஒரு சாதாரண கிராமத்து பெண் நான் ..!”
நிருபர்கள் அடுத்த கேள்வியை வீசினார்கள் : “ மேடம் ..உங்கள் குடும்பம் .... அம்மா அப்பா பற்றி சொல்லுங்களேன் ..?”
.
ஸ்ருதியிடம் மீண்டும் மௌனம் .
நிருபர்களுக்கு ஒன்றும் புரியவில்லை .
ஒருவேளை தாங்கள் கேட்டது ஜட்ஜ் ஸ்ருதிக்கு புரியவில்லையோ ..?
மேடம் .. நாங்கள் கேட்டதற்கு நீங்கள் இன்னும் பதில் சொல்....”
ஸாரி ..என்ன கேட்டீர்கள் ..?”
உங்கள் அப்பாஅம்மா ...?”
ஸ்ருதி நிருபர்களை உற்று நோக்கினார் . “ஒரு நிமிடம் என்னோடு வெளியே வர முடியுமா..? ப்ளீஸ்
நிருபர்கள் பதில் கேள்வி கேட்டார்கள் : “எங்கே மேடம்..? எங்கே வரச் சொல்கிறீர்கள்?”
.
ஸ்ருதி நடந்தபடியே நிருபர்களை திரும்பிப் பார்த்து சொன்னார் : “என் அப்பாவை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப் போகிறேன்..”
ஓஹோ”- நிருபர்கள் கேமராவை தயார் செய்தபடி ஸ்ருதியை பின் தொடர்ந்தார்கள் .
ஸ்ருதி வேகமாக நடந்தபடியே சொன்னார் : “என் அப்பா இந்த கோர்ட்டுக்குள்தான் இருக்கிறார் !”
நிருபர்களுக்கு ஒரே ஆச்சரியம் !
ஒரு நிருபர் கேட்டார் : “ ... உங்கள் அப்பாவும் நீதிபதியா மேடம்?”
இல்லை..”
இன்னொரு நிருபர் கேட்டார் : “சீனியர் வக்கீலா ..?”
இல்லை..”
.
வெகு வேகமாக நடந்து சென்ற ஸ்ருதி , கோர்ட் வளாகத்தின் ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கி நின்றார் .
நிருபர்களைப் பார்த்து கேட்டார் :
நாம் ஆளுக்கு ஒரு கப் டீ சாப்பிடலாமா ?”
நிருபர்களும் மரத்தடியில் ஒதுங்க ... சற்று தள்ளி நின்ற டீ விற்பவர் நிருபர்களை நோக்கி வந்தார் .
அவர் ஒவ்வொரு கப்பாக டீயை ஊற்றிக் கொடுக்க ... ஸ்ருதி தன் கையாலேயே அதை வாங்கி எல்லா நிருபர்களுக்கும் கொடுக்க ...
டீயை குடித்து முடித்த நிருபர்கள்மேடம் .. நாம் போகலாமா..?”
ஸ்ருதி நிருபர்களை நோக்கி கேட்டார் : “எங்கே..?”
நிருபர்கள் சற்றே குழம்பி ..
மேடம் ..உங்கள் அப்பாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பதாக ....”
ஸ்ருதி புன்னகைத்தார் : “...ஆமாம் ..அவரை உங்களுக்கு இன்னும் நான் அறிமுகப்படுத்தவில்லை அல்லவா..?.....ஓகே ...போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்”..என்று சொன்ன ஸ்ருதி புன்னகையோடு , சற்றுமுன் அவர்களுக்கு டீ கொடுத்த அந்த டீ விற்பவரை அழைத்தார் :
அப்பா ..இங்கே கொஞ்சம் வாங்க !”
.
திகைத்துப் போனார்கள் அத்தனை நிருபர்களும் !
.
ஸ்ருதி அந்த டீ விற்பவரின் அருகில் நின்று கொண்டு , நிருபர்களை நோக்கி பெருமையாக சொன்னார் : “ இவர்தான் என் அப்பா ...பல வருஷங்களாக டீக்கடை நடத்தி வருகிறார் . இதோ .. இந்தக் கோர்ட்டுக்கு எதிரேதான் எங்கள் டீக்கடை இருக்கிறது ... கோர்ட்டுக்கு உள்ளே வருபவர்களுக்கும் என் அப்பாதான் டீ விற்பனை செய்கிறார் .. இவரது கடும் உழைப்பினால்தான் கஷ்டப்பட்டு படித்து , இன்று இதே கோர்ட்டுக்குள் நான் ஜட்ஜ் ஆக இருக்கிறேன் ...!”
நிருபர்கள் இன்னும் திகைப்பு மாறாமல் நின்றார்கள் .
ஸ்ருதி அவர்களைப் பார்த்து புன்னகையோடு சொன்னார் : “ஓகே .. என் அப்பா மற்றவர்களுக்கு டீ வழங்க வேண்டும் .. நானும் சிலருக்கு தீர்ப்பு வழங்க வேண்டும் .. நான் வரட்டுமா ..?”
ஜட்ஜ் ஸ்ருதி கம்பீரமாக கோர்ட்டுக்குள் நடந்து சென்றார் .
அந்த தந்தை ஆனந்தக் கண்ணீரோடு அதைப் பார்த்து நின்றார் .
.
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே
.
(
நன்றி : Deccan Herald & india times)
- ஜோன் துரை