சிறந்த இயற்கை மருந்து தேங்காய்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:59 PM | Best Blogger Tips

தேங்காயில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. புரதச்சத்து, நார்சத்து, கால்சியம் என உடலுக்கு தேவையான அனைத்து மருத்துவச் சத்துக்களும் உள்ளதாக தேங்காய் விளங்குகிறது.

தேங்காயை வெறும் வாயில் மென்று திண்பதினால் வாய் புண், எரிச்சலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். நம் உடலின் சூட்டை தணிப்பதோடு மட்டுமல்லாமல், தோலை மிருதுவாக்கவும் தேங்காய் பயன்படுகிறது.

தேங்காய் எண்ணெய் கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்த மருந்து என கூறலாம். இது பல்வேறு நோய்களை தீர்க்கும் அருமருந்தாக உள்ளது.

பெண்கள் கூந்தலுக்கு சிறந்த கண்டீஷ்னராகவும் தேங்காய் பாலை பயன்படுத்தலாம். வாரம் இருமுறை தலையில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து குளிப்பதனால் தலைமுடி உதிர்வது குறைவதோடு மிருதுவாகவும், சருமம் பளபளப்பாகவும் காட்சியளிக்கும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் சொறி, சிரங்கு, படை போன்ற தோல் வியாதிகளில் இருந்து நிவாரணம் பெற தேங்காய் எண்ணெய் மிகவும் பயன் படுகின்றது.

துளசி இலையில் மருத்துவப் பயன்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:44 PM | Best Blogger Tips


துளசி இலையில் மருத்துவப் பயன்கள்
 

குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். 

உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். 

துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி  வியர்வை நாற்றத்தைத் தவிர்க்கலாம்.

குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.

துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்றாக‌ அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் தோல் வியாதிகள் மறையும். 

சிறுநீர்க் கடுப்பு குணமாக்கும் தன்மை துளசி நீருக்கு உள்ளது
 
துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. 

துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.
குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம்.

உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம்.

துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வியர்வை நாற்றத்தைத் தவிர்க்கலாம்.

குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.

துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்றாக‌ அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் தோல் வியாதிகள் மறையும்.

சிறுநீர்க் கடுப்பு குணமாக்கும் தன்மை துளசி நீருக்கு உள்ளது

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.

துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.

சிதம்பர ரகசியம்! பகுதி-1

மணக்கால் அய்யம்பேட்டை | 4:37 PM | Best Blogger Tips
சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல்குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்."

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).

(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

"சுமை தாங்கிக் கல்"

மணக்கால் அய்யம்பேட்டை | 4:35 PM | Best Blogger Tips


அந்தக் காலத்துல பொம்பளைங்களுக்குப் பிரசவம் பார்க்கணும்னா மாட்டு வண்டியிலதான் கூட்டிட்டுப் போவாங்க. அப்படிக் கூட்டிட்டுப் போகும்போது சிலர் இறந்திடுவாங்க.. அவங்க நினைவாகத்தான் இந்த 'சுமை இறக்கிக் கல்’லை நட்டு வைப்பாங்க. அது ஏன் இவ்வளவு உயரமா இருக்குன்னா வீட்டுக்குத் தேவையான பொருட்களைப் பக்கத்து ஊர் சந்தையில் இருந்து வாங்கிட்டு வருவாங்க. நடந்தே வரணும்கிறதால, தலையில் வைச்சுக்கொண்டு வருவாங்க. அப்படி வரும்போது களைப்பா இருக்குன்னு இறக்கி வைக்க முடியாது. ஆள் இல்லாதப் பாதையில, இறக்கி வெச்சா திரும்பத் தூக்கி தலையில் வைக்க ஆள் இருக்க மாட்டாங்க. அந்த மாதிரி சமயத்துல இந்தக் கல்லுல சுமையை இறக்கிவெச்சுட்டு, யார் உதவியும் இல்லாம நாமளே தூக்கி தலையில் வெச்சுக்கலாம். அதான் இதை ’சுமை இறக்கிக் கல்’னு கூப்பிடுறாங்க''
"சுமை தாங்கிக் கல்"
------------------------------

அந்தக் காலத்துல பொம்பளைங்களுக்குப் பிரசவம் பார்க்கணும்னா மாட்டு வண்டியிலதான் கூட்டிட்டுப் போவாங்க. அப்படிக் கூட்டிட்டுப் போகும்போது சிலர் இறந்திடுவாங்க.. அவங்க நினைவாகத்தான் இந்த 'சுமை இறக்கிக் கல்’லை நட்டு வைப்பாங்க. அது ஏன் இவ்வளவு உயரமா இருக்குன்னா வீட்டுக்குத் தேவையான பொருட்களைப் பக்கத்து ஊர் சந்தையில் இருந்து வாங்கிட்டு வருவாங்க. நடந்தே வரணும்கிறதால, தலையில் வைச்சுக்கொண்டு வருவாங்க. அப்படி வரும்போது களைப்பா இருக்குன்னு இறக்கி வைக்க முடியாது. ஆள் இல்லாதப் பாதையில, இறக்கி வெச்சா திரும்பத் தூக்கி தலையில் வைக்க ஆள் இருக்க மாட்டாங்க. அந்த மாதிரி சமயத்துல இந்தக் கல்லுல சுமையை இறக்கிவெச்சுட்டு, யார் உதவியும் இல்லாம நாமளே தூக்கி தலையில் வெச்சுக்கலாம். அதான் இதை ’சுமை இறக்கிக் கல்’னு கூப்பிடுறாங்க''

நரம்புத் தளர்வை நீக்கும் துவர்ப்பு சுவை..!

மணக்கால் அய்யம்பேட்டை | 4:29 PM | Best Blogger Tips



மலச்சிக்கல் நீங்க:

மலச்சிக்கல் நோயின் ஆரம்ப அறிகுறி என்கின்றனர் மருத்துவர்கள். மலச்சிக்கலை போக்கினாலே நோய்களின் கோரப் பிடியின்றி நாம் வாழலாம்.

அன்றாடம் நாம் உண்ணும் உணவில் துவர்ப்புத் தன்மை அதிகம் சேர்ந்திருந்தால் மலச்சிக்கல் ஏற்படாது. உண்ட உணவு எளிதில் ஜீரணமாகும். இதனால்தான் நம்முன்னோர்கள் உணவுக்குப் பின் தாம்பூலம் தரிக்கும் பழக்கம் கொண்டிருந்தனர். இதனால் ஜீரண சக்தி அதிகரித்து மலச்சிக்கலைப் போக்கும் தன்மையை அறிந்து அவற்றைப் பயன்படுத்தினர்.

இரத்தம் சுத்தமடைய:

துவர்ப்புச் சுவைக்கு இரத்தத்தை சுத்தப்படுத்தும் குணம் உண்டு.

மேலும் சிறுநீரகத்தில் படிந்திருக்கும் உப்புப் படிவங்களை கரைப்பதும் துவர்ப்பு சுவையே. துவர்ப்பு வியர்வை பெருக்கியாக உள்ளது. உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்ற இந்த துவர்ப்பு பயன்படுகிறது.

பித்த அதிகரிப்பு நீங்க:

பித்த அதிகரிப்பால் வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் போன்றவை உண்டாகும். இந்த பித்த அதிகரிப்பை குறைக்கும் தன்மை துவர்ப்புச் சுவைக்கு உண்டு.

வாயுத் தொல்லை நீங்க:

இன்றைய நவீன காலத்தில் உணவு என்பது ஏதோ உயிர்வாழ என்று நினைத்து அவசர கதியில் தயாரித்த உணவுகளை சாப்பிட்டு அவசர அவசரமாக சென்றுகொண்டிருக்கின்றனர். இதனால் வயிற்றில் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு, அதனால் அபானவாயு சீற்றமாகி குடலில் புண்களை ஏற்படுத்திவிடும். இவர்கள் துவர்ப்பு சுவை கொண்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

நரம்புகள் பலப்பட:

அதிக மன அழுத்தம், வேலைப்பளு காரணமாக சிலருக்கு நரம்பு தளர்வு உண்டாகிறது. இதனால் இளம் வயதிலேயே சிலர் வயதான தோற்றத்திற்கு ஆளாகின்றனர். இந்த நரம்புத் தளர்வை நீக்கும் குணம் துவர்ப்பு சுவைக்கு உண்டு.

இரத்தக் கொதிப்பைக் குறைக்க:

இரத்தக் கொதிப்பால் ஏற்படும் இருதய நோய்களை குறைக்க துவர்ப்பு சுவை மிகவும் நல்லது. உடலுக்குத் தேவையான அளவு துவர்ப்புச் சுவை கிடைப்பதால் இரத்தக் கொதிப்பு குறையும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:

துவர்ப்பு சுவை நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும். தினமும் நாம் சாப்பிடும் உணவில் துவர்ப்புச் சுவைகொண்ட பொருட்களை அதிகம் சேர்ப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இயற்கையாகவே மூலிகைகள், காய்கள், கனிகளில் உள்ள விதைகள், தோல் முதலியவை துவர்ப்பு சுவை கொண்டவை. எந்த ஒரு சுவை உள்ள உணவுகளை சாப்பிட்டாலும் அதற்கு மாற்று மருந்தாக துவர்ப்புச் சுவை உள்ள பொருட்களை சாப்பிடுவது நல்லது.

உதாரணமாக திராட்சையில் இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை உண்டு. ஆனால் அதன் மேல் உள்ள தோலும், உள்ளே உள்ள விதைகளும் துவர்ப்புச் சுவை உடையவை.

துவர்ப்புச் சுவை மற்ற சுவைகளினால் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும். எனவே தினமும் துவர்ப்புச் சுவையுள்ள உணவை சாப்பிட்டுவந்தால் ஆரோக்கியமாக வாழலாம்
நரம்புத் தளர்வை நீக்கும் துவர்ப்பு சுவை..!

மலச்சிக்கல் நீங்க:

மலச்சிக்கல் நோயின் ஆரம்ப அறிகுறி என்கின்றனர் மருத்துவர்கள். மலச்சிக்கலை போக்கினாலே நோய்களின் கோரப் பிடியின்றி நாம் வாழலாம்.

அன்றாடம் நாம் உண்ணும் உணவில் துவர்ப்புத் தன்மை அதிகம் சேர்ந்திருந்தால் மலச்சிக்கல் ஏற்படாது. உண்ட உணவு எளிதில் ஜீரணமாகும். இதனால்தான் நம்முன்னோர்கள் உணவுக்குப் பின் தாம்பூலம் தரிக்கும் பழக்கம் கொண்டிருந்தனர். இதனால் ஜீரண சக்தி அதிகரித்து மலச்சிக்கலைப் போக்கும் தன்மையை அறிந்து அவற்றைப் பயன்படுத்தினர்.

இரத்தம் சுத்தமடைய:

துவர்ப்புச் சுவைக்கு இரத்தத்தை சுத்தப்படுத்தும் குணம் உண்டு.

மேலும் சிறுநீரகத்தில் படிந்திருக்கும் உப்புப் படிவங்களை கரைப்பதும் துவர்ப்பு சுவையே. துவர்ப்பு வியர்வை பெருக்கியாக உள்ளது. உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்ற இந்த துவர்ப்பு பயன்படுகிறது.

பித்த அதிகரிப்பு நீங்க:

பித்த அதிகரிப்பால் வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் போன்றவை உண்டாகும். இந்த பித்த அதிகரிப்பை குறைக்கும் தன்மை துவர்ப்புச் சுவைக்கு உண்டு.

வாயுத் தொல்லை நீங்க:

இன்றைய நவீன காலத்தில் உணவு என்பது ஏதோ உயிர்வாழ என்று நினைத்து அவசர கதியில் தயாரித்த உணவுகளை சாப்பிட்டு அவசர அவசரமாக சென்றுகொண்டிருக்கின்றனர். இதனால் வயிற்றில் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு, அதனால் அபானவாயு சீற்றமாகி குடலில் புண்களை ஏற்படுத்திவிடும். இவர்கள் துவர்ப்பு சுவை கொண்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

நரம்புகள் பலப்பட:

அதிக மன அழுத்தம், வேலைப்பளு காரணமாக சிலருக்கு நரம்பு தளர்வு உண்டாகிறது. இதனால் இளம் வயதிலேயே சிலர் வயதான தோற்றத்திற்கு ஆளாகின்றனர். இந்த நரம்புத் தளர்வை நீக்கும் குணம் துவர்ப்பு சுவைக்கு உண்டு.

இரத்தக் கொதிப்பைக் குறைக்க:

இரத்தக் கொதிப்பால் ஏற்படும் இருதய நோய்களை குறைக்க துவர்ப்பு சுவை மிகவும் நல்லது. உடலுக்குத் தேவையான அளவு துவர்ப்புச் சுவை கிடைப்பதால் இரத்தக் கொதிப்பு குறையும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:

துவர்ப்பு சுவை நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும். தினமும் நாம் சாப்பிடும் உணவில் துவர்ப்புச் சுவைகொண்ட பொருட்களை அதிகம் சேர்ப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இயற்கையாகவே மூலிகைகள், காய்கள், கனிகளில் உள்ள விதைகள், தோல் முதலியவை துவர்ப்பு சுவை கொண்டவை. எந்த ஒரு சுவை உள்ள உணவுகளை சாப்பிட்டாலும் அதற்கு மாற்று மருந்தாக துவர்ப்புச் சுவை உள்ள பொருட்களை சாப்பிடுவது நல்லது.

உதாரணமாக திராட்சையில் இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை உண்டு. ஆனால் அதன் மேல் உள்ள தோலும், உள்ளே உள்ள விதைகளும் துவர்ப்புச் சுவை உடையவை.

துவர்ப்புச் சுவை மற்ற சுவைகளினால் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும். எனவே தினமும் துவர்ப்புச் சுவையுள்ள உணவை சாப்பிட்டுவந்தால் ஆரோக்கியமாக வாழலாம்

நட்ஸ்.....

மணக்கால் அய்யம்பேட்டை | 3:18 PM | Best Blogger Tips

அக்ரூட் பருப்பு

என்ன சத்து?

வால்நட்ஸ் எனப்படும் இந்த அக்ரூட் பருப்பிலும் ஏராளமான வைட்டமின் "" சத்து நிறைந்துள்ளது. மேலும், புரதம், கால்சியம்,மக்னீசீயம், ஜிங்க், கார்போஹைட்ரேட், உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு இதில் உள்ளது.

எத்தனை சாப்பிடலாம்?

தினம் இரண்டு அல்லது மூன்று.

என்ன பலன்?

சருமத்துக்கு நல்லது.
உடலில் எடையை பாலன்ஸ் செய்யும், கொலஸ்ட்ராலை குறைக்கும்.


பாதாம் பருப்பு

என்ன சத்து?

முதுமையை தடுக்கும் வைட்டமின் "" பாதாமில் அதிக அளவில் அடங்கியுள்ளது. புரதம், கொழுப்பு, மக்னீஷியம், பொட்டாஷியம் மற்றும் கால்ஷியம் இதில் உள்ளது. இதைத் தவிர, சோடியம், வைட்டமின்கள் பி1, பி2, பி3 மற்றும் நியாசின் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.

எத்தனை சாப்பிடலாம்?

சிறுவர்கள் 10 முதல் 12 பாதாம் பருப்புகளை சாப்பிடலாம்என்கிறார்கள் நிபுணர்கள். பெரியவர்கள் இரண்டு அல்லது மூன்று சாப்பிடலாம். நீரில் அல்லது பாலில் ஊற வைத்தும் சாப்பிடலாம்.

என்ன பலன்?

சருமம் பொலிவடையும்.
தலைமுடி மற்றும் நகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.


பிஸ்தா:

என்ன சத்து?

புரதம், கொழுப்பு, பாஸ்பரஸ், கால்ஷியம் மற்றும் வைட்டமின் மற்றும் சி அதிகம் உள்ளது.

எத்தனை சாப்பிடலாம்?

தினமும் நான்கு அல்லது ஐந்து சாப்பிடலாம்.

என்ன பலன்?

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது.


முந்திரி பருப்பு :

என்ன சத்து?

செலீனியம்,மக்னீசியம்,பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

எத்தனை சாப்பிடலாம்?

நான்கு அல்லது ஐந்து சாப்பிடலாம்.

என்ன பலன்?

உடல் உறுதியாகும்.
எலும்புகளுக்கு நல்லது.
பற்கள் உறுதியாகும்
சருமத்துக்கு நல்லது

தென்மேற்கு பருவ மழை ( Southwest monsoon Rains )

மணக்கால் அய்யம்பேட்டை | 2:58 PM | Best Blogger Tips

தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று இந்தியாவில் சூன் முதல் செப்டம்பர் வரை 4 மாதங்கள் வீசும் பருவப் பெயர்ச்சிக் காற்று ஆகும். கோடை காலத்தில் தார் பாலைவனம் மற்றும் அதைச்சுற்றியுள்ள இந்தியாவின் வட, நடுப்பகுதிகள் சூடாவதால் அங்கு குறைந்த காற்றழுத்தம் உண்டாகிறது
அதை ஈடு செய்ய ஈரப்பதம் மிக்க காற்று இந்தியாவின் இந்தியப் பெருங்கடலின் தென் மேற்கு பக்கத்திலிருந்து அப்பகுதியை நோக்கி வீசுகிறது.
இந்தக் காற்று இமயமலைகளில் முட்டி மேலெழுந்து தீபகற்ப இந்தியாவில் மழை மேகங்களை குவிக்கிறது.
இம்மேகங்கள் இமயமலையைத் தாண்டமுடியாத நிலையில் மேலே எழுகின்றன.
இதனால் வெப்பம் குறைந்து மழையாகப் பெய்கிறது.
சூன் 1 ஆம் தேதி கேரளத்தின்முனையில் துவங்கும் இப்பருவ மழை படிப்படியாக முன்னேறி கடலோரக் கருநாடகாவில் சூன் முதல்வாரத்திலும் மும்பைமற்றும் கொங்கண் கடற்கரைப் பகுதிகளில் சூன் இரண்டாம் வாரத்திலும் துவங்குகின்றன.
அரபிக்கடல் கிளை மேற்குத் தொடர்ச்சி மலையைத் தாக்கி கேரளாவிலிருந்து மேற்குத்தொடர்ச்சி மலையின் மேற்குப் பகுதியில் வழிநடத்தப்பட்டு கருநாடகம்,கொங்கண் மற்றும் குசராத் வரை கடலோரப் பகுதிகளுக்கு மழை தருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கில் உள்ள நிலப்பகுதிகள் மலையினால் தடுக்கப்படுவதால் அவ்வளவு மழை பெறுவதில்லை.
இவை மழை மறைவுப் பகுதிகள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்தியாவின் பெரும்பகுதிகள் இந்த மழையினால் பயனடைகின்றன.
இப்பருவ மழைத் துவங்க சிறிது கால தாமதம் ஏற்பட்டாலும் அது இந்திய விவசாயத்தையும் பொருளியலையும் பாதிக்கிறது.
மழை மறைவுப் பகுதிகளிலும் மேற்கிலிருந்து கிழக்காக ஓடும் ஆறுகளால் நீர் வரப்பெற்று விவசாயம் தழைக்கிறது.
தென்மேற்கு பருவ மழை.
Southwest monsoon Rains.
+
தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று இந்தியாவில் சூன் முதல் செப்டம்பர் வரை 4 மாதங்கள் வீசும் பருவப் பெயர்ச்சிக் காற்று ஆகும். கோடை காலத்தில் தார் பாலைவனம் மற்றும் அதைச்சுற்றியுள்ள இந்தியாவின் வட, நடுப்பகுதிகள் சூடாவதால் அங்கு குறைந்த காற்றழுத்தம் உண்டாகிறது. 
அதை ஈடு செய்ய ஈரப்பதம் மிக்க காற்று இந்தியாவின் இந்தியப் பெருங்கடலின் தென் மேற்கு பக்கத்திலிருந்து அப்பகுதியை நோக்கி வீசுகிறது.
இந்தக் காற்று இமயமலைகளில் முட்டி மேலெழுந்து தீபகற்ப இந்தியாவில் மழை மேகங்களை குவிக்கிறது. 
இம்மேகங்கள் இமயமலையைத் தாண்டமுடியாத நிலையில் மேலே எழுகின்றன. 
இதனால் வெப்பம் குறைந்து மழையாகப் பெய்கிறது. 
சூன் 1 ஆம் தேதி கேரளத்தின்முனையில் துவங்கும் இப்பருவ மழை படிப்படியாக முன்னேறி கடலோரக் கருநாடகாவில் சூன் முதல்வாரத்திலும் மும்பைமற்றும் கொங்கண் கடற்கரைப் பகுதிகளில் சூன் இரண்டாம் வாரத்திலும் துவங்குகின்றன. 
அரபிக்கடல் கிளை மேற்குத் தொடர்ச்சி மலையைத் தாக்கி கேரளாவிலிருந்து மேற்குத்தொடர்ச்சி மலையின் மேற்குப் பகுதியில் வழிநடத்தப்பட்டு கருநாடகம்,கொங்கண் மற்றும் குசராத் வரை கடலோரப் பகுதிகளுக்கு மழை தருகிறது. 
மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கில் உள்ள நிலப்பகுதிகள் மலையினால் தடுக்கப்படுவதால் அவ்வளவு மழை பெறுவதில்லை. 
இவை மழை மறைவுப் பகுதிகள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்தியாவின் பெரும்பகுதிகள் இந்த மழையினால் பயனடைகின்றன. 
இப்பருவ மழைத் துவங்க சிறிது கால தாமதம் ஏற்பட்டாலும் அது இந்திய விவசாயத்தையும் பொருளியலையும் பாதிக்கிறது. 
மழை மறைவுப் பகுதிகளிலும் மேற்கிலிருந்து கிழக்காக ஓடும் ஆறுகளால் நீர் வரப்பெற்று விவசாயம் தழைக்கிறது.

மார்க்கெட் கேபிடலைசேஷன் என்றால் என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:53 PM | Best Blogger Tips
What Is Market Capitalization
சென்னை: பங்குச் சந்தையில் மார்க்கெட் கேபிடலைசேஷன் என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படும். பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் இந்த வார்த்தையை பற்றி கண்டிப்பாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

மார்க்கெட் கேபிடலைசேஷன் என்றால் ஒரு நிறுவனத்தின் அவுட்ஸ்டாண்டிங் பங்குளை அந்த நிறுவன பங்கினுடைய தற்போதைய விலையை வைத்து பெருக்கிக் கிடைப்பதாகும்.
எடுத்துக்காட்டாக ஒரு நிறுவனம் பங்குகள் மூலம் ரூ.300 கோடி முதலீட்டை வைத்திருக்கிறது என்று எடுத்துக் கொள்வோம். இந்த ரூ.300 கோடி முதலீடு, 3 கோடி பங்குகளிலிருந்து கிடைத்தது என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் அந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் பேஸ் வேல்யூ ரூ.100 ஆகும். எனவே அந்த நிறுவனத்தின் அவுட்ஸ்டாண்டிங் பங்குகள் 3 கோடி ஆகும்.
அந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.100 ஆகும். அப்படியானால் அந்த நிறுவனத்தின் மார்க்கெட் கேபிடலைசேஷன் ரூ.300 கோடியாகும்.
மார்க்கெட் கேபிடலைசேஷனை எவ்வாறு கணக்கிடுவது?

ஒரு நிறுவன பங்கின் தற்போதைய சந்தை விலையை அந்த நிறுவனத்தின் அவுட்ஸ்டாண்டிங் பங்குகளோடு பெருக்கி கிடைக்கும் தொகையே மார்க்கெட் கேபிடலைசேஷன் ஆகும்.
இந்தியாவில் ஐடிசி, ரிலையன்ஸ், ஓஎன்ஜிசி, ஹெச்டிஎப்சி வங்கி போன்ற நிறுவனங்களின் மார்க்கெட் கேபிடலைசேஷன் மிகவும் அதிகமாக இருக்கின்றன. அதிகமான மார்க்கெட் கேபிடலைசேஷனை வைத்திருக்கும் நிறுவனங்கள் லார்ஜ் கேப் நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மேற்சொன்ன அனைத்து நிறுவனங்களும் லார்ஜ் கேப் நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவனங்களின் பங்குகளின் விலையும் மிக அதிகமாக இருக்கும். பங்குகளில் தொழில் ரீதியாக முதலீடு செய்வோர், லார்ஜ் கேப் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதையே பெரிதும் விரும்புவர்.

பங்குகளில் மிட் கேபிடலைசேஷன் பங்குகள் அல்லது ஸ்மால் கேபிடலைசேஷன் பங்குகள் என்ற பிரிவுகளும் உள்ளன. இந்த பங்குகள் குறைந்த மார்க்கெட் கேபிடலைசேஷனைக் கொண்டிருக்கும். லார்ஜ் கேப் பங்குகளைவிட இந்த மிட் மற்றும் ஸ்மால் கேபிடலைசேஷன் பங்குகள் மிகவும் வேகமாக கைமாறக்கூடியவை.
 
ஏனெனில் இந்த பங்குகளில் ஏற்படும் விலை மாற்றம், அவற்றில் முதலீடு செய்தவர்களுக்கு அதிகமான லாபத்தையோ அல்லது பெரிய இழப்பையோ ஏற்படுத்தும்.

பங்குகளின் விலைகளில் மாற்றம் ஏற்படும்போது, அல்லது நிறுவனம் போனஸ் வழங்கும் போது, அல்லது ஏதாவது சரியான காரணம் இருக்கும் போது, அல்லது அந்த நிறுவனம் வேறொரு நிறவனத்தோடு இணைக்கப்படும் போது அல்லது அந்த நிறுவனத்தை வேறொரு நிறுவனம் வாங்கும் போது மார்க்கெட் கேபிடலைசேஷனில் மாற்றம் ஏற்படும். இந்த முதலீட்டாளர்கள் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏