
வங்கக்கடல் நாயகன் 
நாவாய் நாயகன் 

சுதேசசெம்மல் 

***அது வெறும் இரு கப்பல்கள் பயணித்த
கடல் அல்ல ***
***ஒரு அடிமைப்பட்ட தேசத்தின் கனவுகள்
பயணித்த கடல் ****
காற்று எங்கும் தேசியகொடிகள் 


விண்எங்கும் ஒரே முழக்கம் 


அந்த முழக்கம் வெறும் கோஷம் அல்ல ***
ஆங்கிலேய அடிமைத்தனத்தின்
சங்கிலிகளை உடைத்து எறிந்த
பொருளாதார சுதந்திரத்தின் முதல்
#இடிமுழக்கம் 
****
தன் சொத்துக்களையும்
தன் சுகங்களையும்
தன் குடும்பத்தின் நிம்மதியையும் கூட
தியாகம் செய்து 


****இந்தியன் தன் சொந்தக்கப்பலில்
பயணம் செய்து 

****தன் சுயசார்பு பொருளாதாரத்தினை
மேம்படுத்த வேண்டும் 

என்று #பொருளாதாரபபுரட்சி
செய்த மாமனிதர் பெரியவர். வ. உ. சி
அவர்கள் 


இன்று நாம் சுதந்திரமாய் வாழ ****
நூறாண்டுகள் கடந்தாலும்
#சுதேசி என்னும் தாரகமந்திரம் **
#சுயம்புவாக நம் உள்ளங்களில் ****
பீடு நடைபோட்டு உலக அரங்கில்
#பெரியவர் வ. உ. சி அவர்களின் பெயரை
புகழோடு நிலைநிறுத்திக்கொண்டு
இருக்கிறது 

இன்று சுதந்திரகாற்றை 
சுகமாய்
சுவாசிக்கும் சமயம்....
ஒரு கணம் அந்த கடலின் நாயகனை
நினைப்போம் 


அந்தக்கப்பல்களை நினைப்போம் 

அதற்காக தன் வாழ்நாளையே
அர்ப்பணித்த அந்த #தியாகத்திருவுருவத்தை
தலைவணங்கி போற்றுவோம் 


நாவாய் சங்கம் அமைத்து
நலமாய் கப்பல் விட்டு
நாமெல்லாம் சுதந்திரம் பெற
நாளெல்லாம் வியர்வை சிந்திய
வாழ்க
பாட்டன் புகழ் 

வாழ்க
வாழ்கவே 

சி. மாணிக்கவல்லி. MBA..
29 ஆகஸ்ட் 26
