பிரம்மோஸ் ஏவுகணை ! இந்தியன் டா !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:08 | Best Blogger Tips
ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் 290 கி.மீ. தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணையை இந்தியா தன் வசம் கொண்டுள்ளது. இந்த ஏவுகணைகளை உள்ளடக்கிய புதிய படைப் பிரிவை பாகிஸ்தானை ஒட்டிய வடக்கு ராணுவ மண்டத்திலும் இந்தியா சேர்த்துள்ளது.

பிரம்மோஸ் ஏவுகணைப் பிரிவு முதலில் சீன எல்லையை ஒட்டிய கிழக்கு ராணுவ மண்டத்தில் தான் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் இப்போது இன்னொரு பிரம்மோஸ் ஏவுகணைப் பிரிவு உருவாக்கப்பட்டு பாகிஸ்தான் எல்லையை கண்காணிக்கும் ராணுவத்தின் மேற்கு மண்டல பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த இரு பிரம்மோஸ் ஏவுகணைப் பிரிவுகளும் எந்த ராணுவ மையத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றன என்பது ரகசியமாகும்.

இதன்மூலம் இந்தியா நினைத்தால் எந்த நேரத்திலும் அதிவேகத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகளை நமது அண்டை நாடுகளை நோக்கி செலுத்த முடியும்.


சமீபத்தில் இந்த அதிரடிப்படைகள் சீன அத்துமீறலுக்காக தயார் நிலையில் பிரம்மோஸ் படைகளும், விமானப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல், அதிரடி மலையேரும் வீரகளையும் குவிக்கத்தொடங்கியதற்க்கு பிறகுதான் அவர்கள் தீடீரென்று பின் வாங்கினார்கள் என்பது எத்தனைபேருக்கு தெரியும். அப்போது இது ராணுவ ரகசியம். ஆனால் இப்போது வெளிச்சத்திற்க்கு வந்துள்ளது. சரி நாம் விஷயத்திற்க்கு வருவோம்.

இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து உருவாக்கிய இந்த பிரம்மோஸ் ஏவுகணையால் 290 கி.மீயையும் தாண்டி தாக்குதல் நடத்த முடியும். ஆனால், சர்வதேச ஏவுகணை கட்டுப்பாடு சட்டங்களுக்கு உட்பட்டு அதன் தாக்குதல் தூரம் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிரம்மபுத்திரா நதியையும் ரஷ்யாவின் மாஸ்க்வா நதியையும் இணைத்துத் தான் பிரம்மோஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிரம்மோஸ் ஏவுகணையை நீர் மூழ்கிக் கப்பல்களில் பயன்படுத்தும் வகையிலும் அதில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விஞ்ஞானி ஏ.சிவதாணுபிள்ளை தலைமையிலான நிபுணர் குழு இந்த பிரமோஸ் ஏவுகணையை தயாரித்துள்ளது.

தற்போது இந்த ஏவுகணையை தரையில் இருந்தும் விமானத்தில் இருந்தும் ஏவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரேடார்களின் கண்களில் இருந்து தப்ப, இந்த ஏவுகணை குறைந்த உயரத்தில் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து வெறும் 10 மீட்டர் உயரத்தில் 2.8 மேக் வேகத்தில், அதாவது ஒலியைவிட 3 மடங்கு வேகத்தில், பறந்து சென்று தாக்கும் திறன் கொண்டது பிரம்மோஸ்.

அடுத்த கட்டமாக தரை, நீர்மூழ்கி கப்பல், விமானம் ஆகியவற்றில் இருந்து ஒலியைக் காட்டிலும் 5 மடங்கு வேகத்தில் (ஹைபர்சோனிக்) சென்று தாக்கக் கூடிய பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரிக்கும் ஆராய்ச்சியில் இந்தியாவும் ரஷ்யாவும் கூட்டாக ஈடுபட்டு உற்ப்பத்தியும் தொடங்கியுள்ளது.

வெற்றி இந்தியாவிற்க்கே!!!!
ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் 290 கி.மீ. தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணையை இந்தியா தன் வசம் கொண்டுள்ளது. இந்த ஏவுகணைகளை உள்ளடக்கிய புதிய படைப் பிரிவை பாகிஸ்தானை ஒட்டிய வடக்கு ராணுவ மண்டத்திலும் இந்தியா சேர்த்துள்ளது.

பிரம்மோஸ் ஏவுகணைப் பிரிவு முதலில் சீன எல்லையை ஒட்டிய கிழக்கு ராணுவ மண்டத்தில் தான் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் இப்போது இன்னொரு பிரம்மோஸ் ஏவுகணைப் பிரிவு உருவாக்கப்பட்டு பாகிஸ்தான் எல்லையை கண்காணிக்கும் ராணுவத்தின் மேற்கு மண்டல பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த இரு பிரம்மோஸ் ஏவுகணைப் பிரிவுகளும் எந்த ராணுவ மையத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றன என்பது ரகசியமாகும்.

இதன்மூலம் இந்தியா நினைத்தால் எந்த நேரத்திலும் அதிவேகத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகளை நமது அண்டை நாடுகளை நோக்கி செலுத்த முடியும்.


சமீபத்தில் இந்த அதிரடிப்படைகள் சீன அத்துமீறலுக்காக தயார் நிலையில் பிரம்மோஸ் படைகளும், விமானப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல், அதிரடி மலையேரும் வீரகளையும் குவிக்கத்தொடங்கியதற்க்கு பிறகுதான் அவர்கள் தீடீரென்று பின் வாங்கினார்கள் என்பது எத்தனைபேருக்கு தெரியும். அப்போது இது ராணுவ ரகசியம். ஆனால் இப்போது வெளிச்சத்திற்க்கு வந்துள்ளது. சரி நாம் விஷயத்திற்க்கு வருவோம்.

இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து உருவாக்கிய இந்த பிரம்மோஸ் ஏவுகணையால் 290 கி.மீயையும் தாண்டி தாக்குதல் நடத்த முடியும். ஆனால், சர்வதேச ஏவுகணை கட்டுப்பாடு சட்டங்களுக்கு உட்பட்டு அதன் தாக்குதல் தூரம் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிரம்மபுத்திரா நதியையும் ரஷ்யாவின் மாஸ்க்வா நதியையும் இணைத்துத் தான் பிரம்மோஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிரம்மோஸ் ஏவுகணையை நீர் மூழ்கிக் கப்பல்களில் பயன்படுத்தும் வகையிலும் அதில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விஞ்ஞானி ஏ.சிவதாணுபிள்ளை தலைமையிலான நிபுணர் குழு இந்த பிரமோஸ் ஏவுகணையை தயாரித்துள்ளது.

தற்போது இந்த ஏவுகணையை தரையில் இருந்தும் விமானத்தில் இருந்தும் ஏவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரேடார்களின் கண்களில் இருந்து தப்ப, இந்த ஏவுகணை குறைந்த உயரத்தில் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து வெறும் 10 மீட்டர் உயரத்தில் 2.8 மேக் வேகத்தில், அதாவது ஒலியைவிட 3 மடங்கு வேகத்தில், பறந்து சென்று தாக்கும் திறன் கொண்டது பிரம்மோஸ்.

அடுத்த கட்டமாக தரை, நீர்மூழ்கி கப்பல், விமானம் ஆகியவற்றில் இருந்து ஒலியைக் காட்டிலும் 5 மடங்கு வேகத்தில் (ஹைபர்சோனிக்) சென்று தாக்கக் கூடிய பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரிக்கும் ஆராய்ச்சியில் இந்தியாவும் ரஷ்யாவும் கூட்டாக ஈடுபட்டு உற்ப்பத்தியும் தொடங்கியுள்ளது.

வெற்றி இந்தியாவிற்க்கே!!!!