** வரலாறு ஒரு பாடம் **

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:11 | Best Blogger Tips
** வரலாறு ஒரு பாடம் **

இந்திய சுதந்திரத்திற்கு முன் (1946), நிகழ்ந்த, மத கலவரங்களில், 
மிக கொடிய, மோசமான கலவரம், கல்கத்தா மற்றும் நவகாளி கலவரங்கள்.
சுமார் 30,000 பேர் இந்த நகரத்தில், வன்முறைக்கு பலியாகி இருக்க கூடும் என்கின்றனர். 

சாமானிய மனிதர்கள் கையில் துப்பாக்கி, கதி, கோடாரி போன்ற ஆயுதங்களுடன், தெருவில் கும்பல் கும்பலாக வேட்டையாடிய அந்த கொடூர நாட்கள், கல்கத்தாவின் நினைவுகளில் அழியாத ரத்த கறையாகவே இருக்கிறது.. 

*
இந்த தேசத்தின் சுதந்திர வரலாறு நமக்கு சுட்டி காட்டும் உண்மை என்னவென்றால், மதகலவரங்கள் எப்போதுமே திட்டமிட்டே உருவாக்க படுகின்றன.  
இந்த கலவரங்களால் அதிகம், பாதிப்புக்கு உள்ளாவது சாமானிய மக்களே. அதிலும் குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் மிக கொடிய துயரங்களை அனுபவிக்கிறார்கள். 

மதம் மக்களிடையே சகிப்புத்தன்மையும், அன்பையும் பகிர்ந்து தருவதற்கு மாற்றாக, கொலை வெறியை வளர்த்து விடுகிறது என்றால், அதை வழி  நடத்துபவர்களின் செயல்களில்தான் தவறு இருக்கிறது. 

கல்கத்தா, நவகாளி கலவரங்களில் பலியான அப்பாவி மக்களின் கருகிய உடல்கள் நம்மிடம் யாசிப்பது என்னன்வேன்றால், மதத்தின் பெயரால் மனித உயிர்களை பலி கொடுக்காதீர்கள் என்பதை மட்டுமே. 
அதை மறந்தால், நடமாடும் சடலங்களாகவே  நாம் கருதப்படுவோம். 

**
தகவல் மற்றும் விரிவான கட்டுரைக்கு S.ராமகிருஷ்ணன் எழுதும்  "எனது இந்தியா" தொடர், ஜூனியர் விகடன்  ( today junior vikatan )..  please read.. இந்திய சுதந்திரத்திற்கு முன் (1946), நிகழ்ந்த, மத கலவரங்களில்,
மிக கொடிய, மோசமான கலவரம், கல்கத்தா மற்றும் நவகாளி கலவரங்கள்.
சுமார் 30,000 பேர் இந்த நகரத்தில், வன்முறைக்கு பலியாகி இருக்க கூடும் என்கின்றனர்.

சாமானிய மனிதர்கள் கையில் துப்பாக்கி, கதி, கோடாரி போன்ற ஆயுதங்களுடன், தெருவில் கும்பல் கும்பலாக வேட்டையாடிய அந்த கொடூர நாட்கள், கல்கத்தாவின் நினைவுகளில் அழியாத ரத்த கறையாகவே இருக்கிறது..

*
இந்த தேசத்தின் சுதந்திர வரலாறு நமக்கு சுட்டி காட்டும் உண்மை என்னவென்றால், மதகலவரங்கள் எப்போதுமே திட்டமிட்டே உருவாக்க படுகின்றன.
இந்த கலவரங்களால் அதிகம், பாதிப்புக்கு உள்ளாவது சாமானிய மக்களே. அதிலும் குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் மிக கொடிய துயரங்களை அனுபவிக்கிறார்கள்.

மதம் மக்களிடையே சகிப்புத்தன்மையும், அன்பையும் பகிர்ந்து தருவதற்கு மாற்றாக, கொலை வெறியை வளர்த்து விடுகிறது என்றால், அதை வழி நடத்துபவர்களின் செயல்களில்தான் தவறு இருக்கிறது.

கல்கத்தா, நவகாளி கலவரங்களில் பலியான அப்பாவி மக்களின் கருகிய உடல்கள் நம்மிடம் யாசிப்பது என்னன்வேன்றால், மதத்தின் பெயரால் மனித உயிர்களை பலி கொடுக்காதீர்கள் என்பதை மட்டுமே.
அதை மறந்தால், நடமாடும் சடலங்களாகவே நாம் கருதப்படுவோம்.

**
தகவல் மற்றும் விரிவான கட்டுரைக்கு S.ராமகிருஷ்ணன் எழுதும் "எனது இந்தியா" தொடர், ஜூனியர் விகடன் ( today junior vikatan )..