சுதேசி இயக்கம் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:05 | Best Blogger Tips
சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், யாத்திரைக் குழு ஒருங்கிணைப்பாளருமான திரு. இராம. நம்பி நாராயணன் அவர்கள் கேள்வி பதில்:

சுதேசி ஜாக்ரன் மஞ்ச் இயக்கத்தின் குறிக்கோள் பற்றி சிறிது விளக்கமாக சொல்லுங்களேன்?

1991 ல் புதிய பொருளாதார கொள்கை செயலாக்கத்திற்கு வந்த பொழுது அதனால் வரும் ஆபத்துகளை எதிர் நோக்க வேண்டும் என்ற நோக்கத்தில், சுதந்திர போராட்ட காலத்தில் இருந்த அதே சுதேசிய உணர்வை துண்ட வேண்டும் என்ற சிந்தனையில் சிறந்த சிந்தனைவாதியும் தேசபக்தருமான திரு தேங்கடி அவர்களினால் உருவாக்கப்பட்டது தான் சுதேசி விழிப்புணர்வு இயக்கம்.

1947 க்கு முன்பு நமது பொருளாதாரத்தை இங்கிலாந்து முடிவு செய்தது. 1947 க்கு பின் சுதந்திரம் பெற்று இருந்தாலும் கூட நமது ஆட்சி காலங்களில் சோஸலிச பித்தின் காரணமாக நமது பொருளாதாரத்தை ரஷ்யா முடிவு செய்ய நாம் அனுமதித்தோம். USSR என்ற ரஷ்யா 15 நாடுகளாக சிதறுண்ட பொழுது கூட நாம் நமது வேர்களை தேடாமல் மீண்டும் நமது பொருளாதாரத்தை முடிவு செய்யும் பணியை முதலாளித்துவ நாடுகளிடம் ஒப்படைத்து விட்டோம். ஆக இன்று வரை இந்திய பொருளாதாரத்தை இந்தியர்கள் முடிவு செய்யவில்லை. இந்த இழிவான நிலையை அகற்ற வேண்டும். நமது பொருளாதாரத்தை நாம் தான் முடிவு செய்ய வேண்டும் என்பது தான் சுதேசி விழிப்புணர்வு இயத்தின் முக்கியமான குறிக்கோள்.

இந்த விழிப்புணர்வு இயக்கத்தின் பணிகள் என்ன?

சுதேசி இயக்கம் மக்களிடையே சுதேசி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. எல்லா துறைகளிலும் இந்தியர்கள் தங்கள் முத்திரையை பதிக்க வேண்டும் என்ற சிந்தனையை விதைத்து வருகிறது. இந்தியர்களால் உற்பத்தியில் உலகத்தோடு போட்டி போட முடியும் என்பதை ஆதாரத்தோடு எடுத்து காட்டி வருகிறது. இன்று இருக்கும் சூழலில் பொருளாதார முன்னேற்றம் என்றால் மேற்கத்திய நாடுகள் தான் என்ற அடிமை சிந்தனையை மாற்றி சுய தர்மம், சுய மரியாதை, சுய தொழில், சுய பாஷை, சுய ராஷ்ட்ரம், சுய ராஜ்யம் என்று சுய சார்ப்பான ஆறு கருத்துகளை மக்களிடையே எடுத்து செல்கிறது. இதற்கு அவசியம் என்ன என்று கேட்டால் சுதர்மத்தை எடுத்து செல்வதும் சுய மரியாதையை மீட்பதும் தான்.

சுதேசி என்ற கோட்பாடு ஒரு தனியான கோட்பாடு அல்ல. தனியான பொருளாதார கோட்பாடு அல்ல. சமூக பொருளாதார கோட்பாடு தான் சுதேசி. ஆகவே சமூகங்களிடையே ஒருங்கிணைப்பையும் செய்து வருகிறது. சுதேசி என்பது உற்பத்தியாளர் வியாபாரிகள் நுகர்வோர் மூவரும் இணக்கமாக பணி செய்தால் தான் வெற்றி பெறக் கூடிய கோட்பாடு. எனவே இந்த மூவரிடமும் ஒருவரை ஒருவர் புரிந்து செயலாற்ற தகுந்த களம் அமைத்து வருகிறது சுதேசி இயக்கம்.
 
 
சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், யாத்திரைக் குழு ஒருங்கிணைப்பாளருமான திரு. இராம. நம்பி நாராயணன் அவர்கள் கேள்வி பதில்:

சுதேசி ஜாக்ரன் மஞ்ச் இயக்கத்தின் குறிக்கோள் பற்றி சிறிது விளக்கமாக சொல்லுங்களேன்?

1991 ல் புதிய பொருளாதார கொள்கை செயலாக்கத்திற்கு வந்த பொழுது அதனால் வரும் ஆபத்துகளை எதிர் நோக்க வேண்டும் என்ற நோக்கத்தில், சுதந்திர போராட்ட காலத்தில் இருந்த அதே சுதேசிய உணர்வை துண்ட வேண்டும் என்ற சிந்தனையில் சிறந்த சிந்தனைவாதியும் தேசபக்தருமான திரு தேங்கடி அவர்களினால் உருவாக்கப்பட்டது தான் சுதேசி விழிப்புணர்வு இயக்கம்.

1947 க்கு முன்பு நமது பொருளாதாரத்தை இங்கிலாந்து முடிவு செய்தது. 1947 க்கு பின் சுதந்திரம் பெற்று இருந்தாலும் கூட நமது ஆட்சி காலங்களில் சோஸலிச பித்தின் காரணமாக நமது பொருளாதாரத்தை ரஷ்யா முடிவு செய்ய நாம் அனுமதித்தோம். USSR என்ற ரஷ்யா 15 நாடுகளாக சிதறுண்ட பொழுது கூட நாம் நமது வேர்களை தேடாமல் மீண்டும் நமது பொருளாதாரத்தை முடிவு செய்யும் பணியை முதலாளித்துவ நாடுகளிடம் ஒப்படைத்து விட்டோம். ஆக இன்று வரை இந்திய பொருளாதாரத்தை இந்தியர்கள் முடிவு செய்யவில்லை. இந்த இழிவான நிலையை அகற்ற வேண்டும். நமது பொருளாதாரத்தை நாம் தான் முடிவு செய்ய வேண்டும் என்பது தான் சுதேசி விழிப்புணர்வு இயத்தின் முக்கியமான குறிக்கோள்.

இந்த விழிப்புணர்வு இயக்கத்தின் பணிகள் என்ன?

சுதேசி இயக்கம் மக்களிடையே சுதேசி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. எல்லா துறைகளிலும் இந்தியர்கள் தங்கள் முத்திரையை பதிக்க வேண்டும் என்ற சிந்தனையை விதைத்து வருகிறது. இந்தியர்களால் உற்பத்தியில் உலகத்தோடு போட்டி போட முடியும் என்பதை ஆதாரத்தோடு எடுத்து காட்டி வருகிறது. இன்று இருக்கும் சூழலில் பொருளாதார முன்னேற்றம் என்றால் மேற்கத்திய நாடுகள் தான் என்ற அடிமை சிந்தனையை மாற்றி சுய தர்மம், சுய மரியாதை, சுய தொழில், சுய பாஷை, சுய ராஷ்ட்ரம், சுய ராஜ்யம் என்று சுய சார்ப்பான ஆறு கருத்துகளை மக்களிடையே எடுத்து செல்கிறது. இதற்கு அவசியம் என்ன என்று கேட்டால் சுதர்மத்தை எடுத்து செல்வதும் சுய மரியாதையை மீட்பதும் தான்.

சுதேசி என்ற கோட்பாடு ஒரு தனியான கோட்பாடு அல்ல. தனியான பொருளாதார கோட்பாடு அல்ல. சமூக பொருளாதார கோட்பாடு தான் சுதேசி. ஆகவே சமூகங்களிடையே ஒருங்கிணைப்பையும் செய்து வருகிறது. சுதேசி என்பது உற்பத்தியாளர் வியாபாரிகள் நுகர்வோர் மூவரும் இணக்கமாக பணி செய்தால் தான் வெற்றி பெறக் கூடிய கோட்பாடு. எனவே இந்த மூவரிடமும் ஒருவரை ஒருவர் புரிந்து செயலாற்ற தகுந்த களம் அமைத்து வருகிறது சுதேசி இயக்கம். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நன்றி விஜய பாரதம்