கொரோனாவுக்கு தீர்வு சொல்வது போல் மகாபாரதத்தில்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:33 AM | Best Blogger Tips

 


கொரோனாவுக்கு தீர்வு சொல்வது போல் மகாபாரதத்தில் உள்ள முக்கிய நிகழ்வு!

அது என்ன தெரியுமா...🤔🤔🤔

எல்லா பிரச்சனைக்கும் மகாபாரதத்தில் தீர்வு உள்ளன. அதை உணர்த்தும் வகையில் இந்த பதிவில், தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கையாக வீட்டிலேயே அமைதியாக இருக்க வேண்டும். வெளியே யாரும் வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் தொற்று நோயாக திகழும், கொரோனா வைரஸ் காரணமாக, உலகின் பல்வேறு நாடுகள், ஊரடங்கு உத்தரவும், வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என கட்டளை விதித்துள்ளது. இதன் மூலம் வைரஸ் கட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்ற சம்பவம் மகாபாரதத்தில் உள்ளது, அதன் நீதி தான் தற்போது உலகமெங்கும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு என்பதை உணர்வோம்...

மகாபாரதப் போர் மிக தீவிரமாக நடைபெற்று வந்தது. அப்போது அஸ்வத்தாமனின் தந்தையான துரோணாச்சாரியார் கொல்லப்பட்டார். இதனால் கடும் கோபமடைந்த அசுவத்தாமன் மிகவும் பயங்கரமான ஆயுதமானநாராயண அஸ்திரத்தைபாண்டவர்கள் மீது செலுத்த ஆயத்தமானான்.

நாராயண அஸ்திரத்தின் சிறப்புகள்

மிகவும் சக்தி வாய்ந்த நாராயண அஸ்திரத்துக்கு, யாராலும் பதிலடி கொடுக்க முடியாத அளவு சக்தி வாய்ந்தது.


இந்த ஆயுதம் சாதாரண மக்களை கொல்லாமல், கையில் ஆயுதம் ஏந்திய போர் புரியக்கூடிய வீரர்களை ஒட்டுமொத்தமாக அளிக்கக் கூடிய வல்லமை வாய்ந்தது. அதுமட்டுமில்லாமல் போர் புரியும் எண்ணத்துடன் இருந்தாலே அவர்களை கொல்லும் திறன் மிக்கது.

அஸ்வத்தாமன் நாராயண அஸ்திரத்தைப் பயன்படுத்த நினைத்த போது, பாண்டவரின் பக்கபலமாக இருந்த கிருஷ்ணா பரமாத்மா, பாண்டவர்களுக்கு ஒரு கட்டளையிட்டார். எல்லா வீரர்களும் தங்கள் கையில் வைத்திருக்கும் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, கைகளை கட்டி அமைதியாக நில்லுங்கள். போரிடும் எண்ணமும், எதிரிகளை அழிக்க நினைக்கும் எண்ணமும் மனதில் இருந்து நீக்கி சாந்தமாக அமைதியாக இருக்க வேண்டும் என கட்டளையிட்டார்.

அப்படி யாரேனும் போர் புரியும் எண்ணத்தோடு இருந்தால் கண்டிப்பாக நாராயண அஸ்திரம், அவர்களை அழிக்கும். அதனால் அமைதியாக இருக்க போர் வீரர்களுக்கு கிருஷ்ணர் உத்தரவிட்டார்.

கிருஷ்ணரின் உத்தரவை அறியாத அஸ்வத்தாமன், நாராயண அஸ்திரத்தை செலுத்தினான். யாரும் போரிடும் எண்ணத்தோடு இல்லாததால் அமைதியாக இருந்ததால், நாராயண அஸ்திரத்திற்கு உண்டான நேரம் காலாவதியானது. அதனால் அந்த அஸ்திரத்தின் வீரியம் குறைந்து அமைதியானது. இதன்மூலம் பாண்டவர்களின் சேனை காக்கப்பட்டது.

நீதி

எல்லா நேரங்களிலும் இயல்பான நிலை இருக்காது.எல்லா நிலையிலும் போர் வெற்றியை தராது. சிலநேரம் இயற்கையின் கோபத்தை தவிர்க்க, நாம் அமைதியாக கைகட்டி இருந்தே ஆகவேண்டிய சூழல் உள்ளது.

அதை பிரதிபலிக்கும் விதமாக தான், கொரோனா வைரஸும் தற்போது வேகமாக பரவுவதை தடுக்க, மக்கள் கண்டிப்பாக வீடுகளில் இருக்கவேண்டுமென அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாராயண அஸ்த்திரமும் அதற்கான நேரம் முடிந்ததும் அமைதியானது போல், கொரோனா வைரஸின், நாம் அமைதியாக வீட்டில் இருக்க, அதன் பரவும் வேகம் நின்று, மக்கள் சாதாரண நிலைக்கு திரும்ப முடியும் என்பதை உணர வேண்டும்.

கிருஷ்ணரை போல் அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறினால் அழிவு நமக்கு நிச்சயம்.

 

நன்றி இணையம்

''#மரியாதை_கேட்டு_பெறுவது_அல்ல ..''

மணக்கால் அய்யம்பேட்டை | 4:54 PM | Best Blogger Tips

 






"மரியாதை" என்னும் சொல் சமுதாயத்தில் மக்கள் சரளமாக பயன்படுத்தும் சொல்..மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு, உனக்கு மரியாதை இருக்கிறதா? மரியாதையாக நடந்து கொள்.. மரியாதையாக வாங்கின பணத்தை திருப்பிக்கொடு.. இப்படிப்பல மக்கள் பேசுவை கேட்டு வருகின்றோம்.... ஆனால்

நிரந்தரமான மரியாதை என்பது பணத்தைக் கொண்டு வாங்கும் பொருள் அல்ல..

உண்மையான அன்பைப் பிறருக்குக் கொடுத்துப் பாருங்கள்.. அதுவே பல மடங்காக உங்களுக்கு தேடி வரும்..

அறிவு உங்களுக்கு அதிகாரத்தை வழங்கலாம்; குணம்தான் மரியாதையைப் பெற்றுத்தரும்இது மறைந்த நடிகர் புரூஸ் லீ சொன்ன வைர வாக்கியம்.

இயல்பாகவே நல்ல குணமுள்ள மனிதர்களுக்கு அவர்களுக்கான மரியாதை தானாகவே கிடைத்து விடும்.

இது ஒருபுறம் இருக்கட்டும்.

மரியாதை என்பது ஒருவழிப் பாதை அல்ல.இருவழிப் பாதை. அதாவது கொடுத்து பெறுவது. கேட்டுப் பெறுவதல்ல.இது புரிந்து விட்டால் எந்த இடங்களிலும் பிரச்னை என்பதே தோன்றாது..

உறவுகள் பலமாக இருப்பதற்கான அடிப்படையே பரஸ்பர நம்பிக்கையும், மரியாதையும்தான்ஒருவருக்கு மற்றொருவர் மரியாதை கொடுக்கத் தவறுவதுகூட விரிசலுக்குக் காரணமாகலாம்.

முதலில் உன்னை மதிக்கக் கற்றுக் கொள். அப்போதுதான் மற்றவர்களும் உன்னை மதிப்பார்கள்என்பது சீன அறிஞர் கன்ஃப்யூஷியஸின் பொன்மொழி.

தன்னை உணர்ந்தவர் வறட்டு கௌரவம் பார்க்க மாட்டார்; யாரிடமும் தனக்கான மரியாதையை கேட்டுப்பெறவும் மாட்டார்.

ஃபீல்டு மார்ஷல் சாம் மானக்ஷா (Sam Manekshaw) காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் சம்பவம் இது..... ஓர் இளம் ராணுவ அதிகாரி. அண்மையில்தான் லெப்டினன்ட்டாக (Lieutenant) பதவி உயர்வு பெற்று, அந்தப்படை முகாமுக்கு வந்து இருந்தார்.

இளம் வயதிலேயே தனக்கு இப்படி ஒரு பதவி கிடைத்ததில் அவருக்கு கொஞ்சம் செருக்கும், பெருமிதமும் இருந்தது. ராணுவத்தில் ஒரு நடைமுறை உண்டு.

தனக்கு மேல் இருக்கும் அதிகாரி வந்தால், வீரர்கள் அவருக்கு சல்யூட் அடிக்க வேண்டும். இது சம்பந்தப்பட்ட உயர்அதிகாரியின் பதவிக்குக் கொடுக்கப்படும் மரியாதை.

ஒருநாள் மாலை நேரம். அந்த இளம் ராணுவ அதிகாரி வழக்கம்போல ரவுண்ட்ஸுக்குப் போனார். படை முகாமில் எல்லாப் பணிகளும் முறையாக நடக்கிறதா? என்பதைக் கண் காணிக்கும் வேலை அது. மெதுவாக நடந்தார்.

ஓரிடத்தில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர் (Rifleman) ஒருவர், சீருடையில் பணியிலிருந்தார். நின்று கொண்டு இருந்த அவர், இளம் ராணுவ அதிகாரி வருவதை கவனிக்க வில்லை. அதனால் சல்யூட் அடிக்காமல் விட்டு விட்டார்.

அவரைக் கடந்து சென்ற லெப்டினன்ட்டுக்குக் கோபம் வந்து விட்டது. அந்த ராணுவ வீரரை அருகே அழைத்தார்.

`நான் வருகிறேன் தெரிஞ்சும் ஏன் எனக்கு சல்யூட் வைக்கலை?’’ என்று கேட்டார். அந்த ராணுவ வீரர் அப்பாவித்தனமாக உண்மையைச் சொல்லி விட்டார்.

ஆபீசர்..உண்மையிலேயே நீங்க வந்ததை நான் கவனிக்க வில்லை என்னை மன்னியுங்கள் என்றார்.

இளம் அதிகாரிக்கு இந்த பதில் மேலும் கோபத்தைத் தூண்டியது. வேண்டும் என்றே சல்யூட் அடிக்காம இருந்து விட்டு பொய் வேற சொல்றியா?’’

``இல்லை...’’சார் என்றார் அந்த ராணுவ வீரர்..

குறுக்கே பேசாதே.. உனக்கெல்லாம் தண்டனை

( punishment) கொடுத்தால்தான் புத்தி வரும்...’’

என்றவர் ஒரு கணம்யோசித்தார்...ம்..அதான் சரி... 1,000 தடவை சல்யூட் அடி!’’ என்றார்.

ராணுவ வீரர், சல்யூட் அடிக்க ஆரம்பித்தார்.

`ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து...’அப்போது யதேச்சையாக அந்த வழியாக தளபதி மானக்ஷா வந்தார்..

தளபதி மானக்ஷா. ராணுவ வீரர் சல்யூட் அடித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்தார். லெப்டினன்ட் மானக்ஷாவின் அருகே ஓடி வந்தார்.

`என்ன நடக்குது இங்கே?’’

லெப்டினன்ட் தனக்கு மரியாதை தராத வீரருக்கு தண்டனை கொடுத்துக் கொண்டு இருப்பதைச் சொன்னார்.

``ரொம்ப சரி. லெப்டினன்ட்... ஒரு இராணுவ வீரர்( soldier ) உனக்கு சல்யூட் வைத்தா நீ என்ன செய்ய வேண்டும் என்றார்.?’’

இளம் அதிகாரி வெளிறிய முகத்தோடு `பதிலுக்கு சல்யூட் வைக்க வேண்டும் சார் என்றார்’’

`அப்புறமென்ன...ஆகட்டும். நீயும் ஆயிரம் சல்யூட் அடி’’ என்று சொல்லி விட்டு மானக்ஷா போய் விட்டார்.

அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு அந்த முகாமில் இருந்தவர்கள் ஒரு ராணுவ வீரரும், லெப்டினன்ட்டும் மாறி மாறி சல்யூட் அடித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்!

ஆம்.,நண்பர்களே..,

அவரவர் நடந்து கொள்ளும் விதத்தில்தான் மதிப்பும், மரியாதை எல்லாம்

கிடைக்கும்.பதவி,

அதிகாரம் காட்டி மரியாதையை கேட்டு பெறுவது அல்ல.

மரியாதை என்பது தானாக தேடி வர வேண்டும்.அதை கேட்டு பெறக் கூடாது..

மரியாதை என்பது ஒருவர் நடந்து கொள்ளும் விதம் பேசும் மனப் பக்குவம் இவற்றை சார்ந்தது,

வயது,பதவி சார்ந்தது அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்..(ஆக்கம் உடுமலை சு.தண்டபாணி....)