கொரோனாவுக்கு தீர்வு சொல்வது போல் மகாபாரதத்தில்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:33 | Best Blogger Tips

 


கொரோனாவுக்கு தீர்வு சொல்வது போல் மகாபாரதத்தில் உள்ள முக்கிய நிகழ்வு!

அது என்ன தெரியுமா...🤔🤔🤔

எல்லா பிரச்சனைக்கும் மகாபாரதத்தில் தீர்வு உள்ளன. அதை உணர்த்தும் வகையில் இந்த பதிவில், தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கையாக வீட்டிலேயே அமைதியாக இருக்க வேண்டும். வெளியே யாரும் வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் தொற்று நோயாக திகழும், கொரோனா வைரஸ் காரணமாக, உலகின் பல்வேறு நாடுகள், ஊரடங்கு உத்தரவும், வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என கட்டளை விதித்துள்ளது. இதன் மூலம் வைரஸ் கட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்ற சம்பவம் மகாபாரதத்தில் உள்ளது, அதன் நீதி தான் தற்போது உலகமெங்கும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு என்பதை உணர்வோம்...

மகாபாரதப் போர் மிக தீவிரமாக நடைபெற்று வந்தது. அப்போது அஸ்வத்தாமனின் தந்தையான துரோணாச்சாரியார் கொல்லப்பட்டார். இதனால் கடும் கோபமடைந்த அசுவத்தாமன் மிகவும் பயங்கரமான ஆயுதமானநாராயண அஸ்திரத்தைபாண்டவர்கள் மீது செலுத்த ஆயத்தமானான்.

நாராயண அஸ்திரத்தின் சிறப்புகள்

மிகவும் சக்தி வாய்ந்த நாராயண அஸ்திரத்துக்கு, யாராலும் பதிலடி கொடுக்க முடியாத அளவு சக்தி வாய்ந்தது.


இந்த ஆயுதம் சாதாரண மக்களை கொல்லாமல், கையில் ஆயுதம் ஏந்திய போர் புரியக்கூடிய வீரர்களை ஒட்டுமொத்தமாக அளிக்கக் கூடிய வல்லமை வாய்ந்தது. அதுமட்டுமில்லாமல் போர் புரியும் எண்ணத்துடன் இருந்தாலே அவர்களை கொல்லும் திறன் மிக்கது.

அஸ்வத்தாமன் நாராயண அஸ்திரத்தைப் பயன்படுத்த நினைத்த போது, பாண்டவரின் பக்கபலமாக இருந்த கிருஷ்ணா பரமாத்மா, பாண்டவர்களுக்கு ஒரு கட்டளையிட்டார். எல்லா வீரர்களும் தங்கள் கையில் வைத்திருக்கும் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, கைகளை கட்டி அமைதியாக நில்லுங்கள். போரிடும் எண்ணமும், எதிரிகளை அழிக்க நினைக்கும் எண்ணமும் மனதில் இருந்து நீக்கி சாந்தமாக அமைதியாக இருக்க வேண்டும் என கட்டளையிட்டார்.

அப்படி யாரேனும் போர் புரியும் எண்ணத்தோடு இருந்தால் கண்டிப்பாக நாராயண அஸ்திரம், அவர்களை அழிக்கும். அதனால் அமைதியாக இருக்க போர் வீரர்களுக்கு கிருஷ்ணர் உத்தரவிட்டார்.

கிருஷ்ணரின் உத்தரவை அறியாத அஸ்வத்தாமன், நாராயண அஸ்திரத்தை செலுத்தினான். யாரும் போரிடும் எண்ணத்தோடு இல்லாததால் அமைதியாக இருந்ததால், நாராயண அஸ்திரத்திற்கு உண்டான நேரம் காலாவதியானது. அதனால் அந்த அஸ்திரத்தின் வீரியம் குறைந்து அமைதியானது. இதன்மூலம் பாண்டவர்களின் சேனை காக்கப்பட்டது.

நீதி

எல்லா நேரங்களிலும் இயல்பான நிலை இருக்காது.எல்லா நிலையிலும் போர் வெற்றியை தராது. சிலநேரம் இயற்கையின் கோபத்தை தவிர்க்க, நாம் அமைதியாக கைகட்டி இருந்தே ஆகவேண்டிய சூழல் உள்ளது.

அதை பிரதிபலிக்கும் விதமாக தான், கொரோனா வைரஸும் தற்போது வேகமாக பரவுவதை தடுக்க, மக்கள் கண்டிப்பாக வீடுகளில் இருக்கவேண்டுமென அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாராயண அஸ்த்திரமும் அதற்கான நேரம் முடிந்ததும் அமைதியானது போல், கொரோனா வைரஸின், நாம் அமைதியாக வீட்டில் இருக்க, அதன் பரவும் வேகம் நின்று, மக்கள் சாதாரண நிலைக்கு திரும்ப முடியும் என்பதை உணர வேண்டும்.

கிருஷ்ணரை போல் அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறினால் அழிவு நமக்கு நிச்சயம்.

 

நன்றி இணையம்