அன்பு கருணை மகிழ்ச்சி

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:58 | Best Blogger Tips

 


ஜெயலலிதா அம்மா இறந்தார்..

திரு. விவேக் இறந்தார், திரு. SPB இறந்தார், அவர்களிடம் இல்லாத பணமா?? ஆள் பழக்கமா?? அவர்களிடம் எல்லாம் இருந்தும், உயிரை காப்பாற்ற எந்த மருத்துவ பலமும், பண பலமும், ஆள் பலமும் முடியவில்லை..

மரணத்தை தினமும் பார்க்கிறோம், மரண செய்திகளை தினமும் கேட்கிறோம், அதிலிருந்து நாம் எதாவது கற்றுக் கொள்கிறோமா? என்றால் இல்லை.. மரணத்தை தழுவாத எந்த உயிரினமும் இல்லை..

எதை கொண்டு வந்தோம்? எதை கொண்டு செல்கிறோம்? வாழும் இந்த நிலையில்லாத, குறுகிய காலத்தில், எதை நோக்கி பயணிக்கிறோம்?? ,..

நான் தான் பெரியவன், உயர்ந்தவன் என்ற திமிர் ஆணவம் ஏன் ? வீம்பு வீராப்பு? வெட்டி கவுரவம்? சூழ்ச்சி? ஏன் வெறுப்பு? ஏன் பகை? ஏன் பொறாமை? ஏன் ஏமாற்றி பிழைப்பு? ஏன் கெடுதல் நினைத்து, கெடுதல் செய்வது ஏன்? ஏன் நம்பிக்கை துரோகம்? ஏன்? ஏன்? ஏன்?

இந்த அற்பமான வாழ்வில், நேற்றைய நாளைய, நடந்த நடக்கபோவதை நினைத்து கலங்காமல், வாழ்வில் நமக்கு ஏற்படும் நிகழ்வுகளை அப்படியே சமநிலையில் ஏற்றுக்கொண்டு, யாரையும் குறை கூறாமல், தன்னை ஒழுங்குபடுத்தி, எதையுமே எதிர்பார்க்காமல், அனைத்திலும் நேர்மறையான எண்ணம் கொண்டு,

அன்பு கருணை மகிழ்ச்சி கொண்டு கள்ளம்கபடமின்றி, யாரையும் திருப்திபடுத்த நினைக்காமல், யாருக்காகவும் போலியாக முகமுடி போடாமல், படைத்தவனுக்கு மட்டுமே பயந்து, அடுத்தவர்களை அறிய முயலாமல், தன்னை உணர்ந்து, படைத்த இறைவனை உணர்ந்து, வாழ்வை உணர்ந்து வாழ்வோம்..

என்றும் அன்புடன்

 


நன்றி இணையம்