🌹🌿பிரதோஷ காலத்தில் நந்தி தேவரின் இந்த 108 போற்றிகளை நாம் பாடுவோம்…..🌿🌹

மணக்கால் அய்யம்பேட்டை | 11:23 AM | Best Blogger Tips

 May be an image of temple and text that says "士 பறறு்ணையாவ மற் பற்று அண் ணாமலை யாரே"

 
இனிய பிரதோஷ நாயகனே எல்லா பிற தோஷங்களிலிருந்தும் அனைவரையும் காத்தருள்வாய் 🌺☘️

🌹 🌿 *பிரதோஷ நந்தி 108 108 போற்றி*

🌹 🌿 ஓம் அன்பின் வடிவே போற்றி
ஓம் அறத்தின் உருவே போற்றி
ஓம் அகிலத்தைக் காப்பாய் போற்றி
ஓம் அரனுக்குக் காவலனே போற்றி
ஓம் அரியாய்வந்து அமர்ந்தவனே போற்றி
ஓம் அம்பலக் கூத்தனே போற்றி
ஓம் ஆலயத்தின் முன் இருப்பாய் போற்றி
ஓம் இருளை ஒழிப்பவனே போற்றி
ஓம் இடபமே போற்றி
ஓம் இடர்களைத் தடுப்பவனே போற்றி

🌹 🌿 ஓம் இகாபரசுகம் அளிப்பவனே போற்றி
ஓம் ஈகை உடையவனே போற்றி
ஓம் உலக ரட்சகனே போற்றி
ஓம் உபதேச காரணனே போற்றி
ஓம் ஊக்க முடையவனே போற்றி
ஓம் எருது உருவம் கொண்டவனே போற்றி
ஓம் எங்களுக்கு வரம் தருபவனே போற்றி
ஓம் ஏவல்களை ஒழித்தவனே போற்றி
ஓம் ஐயன் பால் அமர்ந்த வனே போற்றி
ஓம் ஒப்பில்லாதவனே போற்றி
May be an image of flute and temple
🌹 🌿 ஓம் ஓங்கார வடிவானவனே போற்றி
ஓம் ஒளடதமாய் இருப்பவனே போற்றி
ஓம் கணநாயகனே போற்றி
ஓம் கஷ்டங்களைப் போக்குவாய் போற்றி
ஓம் கல்யாண மங்களமே போற்றி
ஓம் கலைகள் பலதெரிந்தோய் போற்றி
ஓம் கற்பகத் தருநிழல் அமர்ந்தாய் போற்றி
ஓம் கஸ்தூரி நிறம் ஒளி அணிந்தாய் போற்றி
ஓம் கவலைகளை ஒழிக்கும் வல்லவனே போற்றி
ஓம் காலனுக்கும் காவலனே போற்றி

🌹 🌿 ஓம் கிரிவல்லயன் துணையே போற்றி
ஓம் கீர்த்திகள் பல பெற்றாய் போற்றி
ஓம் குணநிதியே போற்றி
ஓம் குற்றம் களைவாய் போற்றி
ஓம் கூத்தனுக்கு மத்தளம் அடித்தாய் போற்றி
ஓம் கோலங்கள் பல செய்வாய் போற்றி
ஓம் கைலாச வாகனனே போற்றி
ஓம் கந்தனைக் கையால் அமர்த்தினாய் போற்றி
ஓம் காலமெல்லாம் ஈசன் சிந்தனையே போற்றி
ஓம் பஞ்சாக்ஷர ஜெபம் செய்பவனே போற்றி

🌹 🌿 ஓம் பஞ்சலிங்கத்தில் ஒருவன் ஆனாய் போற்றி
ஓம் பரமசிவன் தன்மை தெரிந்தோய் போற்றி
ஓம் பார்வதிக்கும் வாகனமாய் நின்றாய் போற்றி
ஓம் பிரதோஷ காலம் உடையவனே போற்றி
ஓம் பிறவிப் பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பிஞ்ஞகன் ஏவல் செய்வாய் போற்றி
ஓம் புகழ்கள் பல பெற்றோய் போற்றி
ஓம் பூத கணங்களுக்குத் தலைவனே போற்றி
ஓம் பூத பிசாசுகளை அடக்குவாய் போற்றி
ஓம் மகாதேவனே போற்றி
May be an image of temple
🌹 🌿 ஓம் மகிமை பல செய்வாய் போற்றி
ஓம் மஹேஸ்வரன் தூதனே போற்றி
ஓம் மங்கள நாயகனே போற்றி
ஓம் மதோன் மத்தம் தடுப்பாய் போற்றி
ஓம் மஞ்சள் மகிமை கொடுப்பாய் போற்றி
ஓம் மணங்கள் செய்காரணனே போற்றி
ஓம் மந்திர மகிமை உனக்கே போற்றி
ஓம் அகிலமெல்லாம் உன் அருள் போற்றி
ஓம் தட்சனுக்கு உபதேசம் செய்தாய் போற்றி
ஓம் தண்டங்களின் மேல் அமர்ந்தாய் போற்றி

🌹 🌿 ஓம் தன்மை களெல்லாம் அறிந்தோய் போற்றி
ஓம் தயாபரன் அருள் பெற்றவனே போற்றி
ஓம் தஞ்ச மென்றவர்க்கருள் செய்வாய் போற்றி
ஓம் நஞ்சுண்டவனை நாயகனாய் அடைந்தாய் போற்றி
ஓம் நாக நந்தனின் நயனம் தெறிந்தவனே போற்றி
ஓம் நாதமும் பிந்துவும் ஆனாய் போற்றி
ஓம் பழமும் சுவையும் நீயே போற்றி
ஓம் பண்புகள் பல செய்வாய் போற்றி
ஓம் பாரெல்லாம் உன்புகழ் போற்றி
ஓம் பிறவிப் பிணி அறுப்பாய் போற்றி

🌹 🌿 ஓம் அடியவர்க்கெல்லாம் அன்பே போற்றி
ஓம் ஆண்டவனிடம் அன்பு கொண்டாய் போற்றி
ஓம் ஆதாரசக்தி மயம் பெற்றாய் போற்றி
ஓம் சிவனின் வாகனம் ஆனாய் போற்றி
ஓம் இன்னல் தீர்க்கும் இறைவனே போற்றி
ஓம் நீண்ட கொம்புடையவனே போற்றி
ஓம் நீலாயதாட்சி அருள் பெற்றாய் போற்றி
ஓம் நீலகண்டன் முன் நின்றாய் போற்றி
ஓம் வேதங்களை காலாய் உடையவனே போற்றி
ஓம் வேள்விக்குத் தலைவனே போற்றி

🌹 🌿 ஓம் வித்யா காரணனே போற்றி
ஓம் விவேகம் எனக்குத் தருவாய் போற்றி
ஓம் விண்ணுலகம் செல்லும் வழியே போற்றி
ஓம் வில்வத்தின் மகிமையே போற்றி
ஓம் விஸ்வே உன் வல்லமையே போற்றி
ஓம் வேல்உடையவனே போற்றி
ஓம் மகா காளனே போற்றி
ஓம் மக்கள் பேறு தருவாய் போற்றி
ஓம் மாயைகளை அகற்றுவாய் போற்றி
ஓம் வெள்ளை நிறம் உடையாய் போற்றி

🌹 🌿 ஓம் உலகம் அறிந்த உத்தமனே போற்றி
ஓம் உன்மகிமை உலகமெல்லாம் போற்றி
ஓம் ஊஞ்சல் ஆட்டுபவனே போற்றி
ஓம் ஊடலுக்குதவியனே போற்றி
ஓம் உபதேசம் பெற்றவனே போற்றி
ஓம் உலகுக்கு அருள்வாய் போற்றி
ஓம் பிழைகள் பொறுப்பாய் போற்றி
ஓம் பிள்ளையார் சோதரனே போற்றி
ஓம் மாயை ஏடுக்கும் மாடாய் நின்றாய் போற்றி
ஓம் மாமன்னநம் உன்பனி செய்வார் போற்றி

🌹🌿ஓம் மகாதேவன் கருணையே போற்றி
ஓம் பரப்பிரம்மமே போற்றி
ஓம் விண்ணோர்க்கு அரிய மருந்தே போற்றி
ஓம் கண்டனின் வாகனமானாய் போற்றி
ஓம் சிவனின் பாதியை சுமந்தாய் போற்றி
ஓம் கையிலையின் காவலனே போற்றி
ஓம் மக்கள் குறைதீர்ப்பாய் போற்றி
ஓம் பிரதோஷ நாயகனே போற்றி போற்றி…

🌺அகிலம் காக்கும் அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே சிவ லோக நாதனே சிவமே என் வரமே .☘️🌺

சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவனே சரணாகதி 🌺

🌺அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதம் பணிந்து இன்றைய விடியலை மனமுவந்து நமக்கு அளித்த இனிய ஈசனுக்கு நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரங்கள் 🙏🙏🙏🌺

🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺

🙇அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி ஷிவானி கௌரி🦜
 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 No photo description available.  🌷 🌷🌷 🌷

 

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில்- நாச்சியாரக சேவை

மணக்கால் அய்யம்பேட்டை | 10:44 AM | Best Blogger Tips

 

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில்

நம்பெருமாள்
திருஅத்யயன
வைகுந்த ஏகாதசி பெருவிழா
பகல் பத்து 
பத்தாம் திருநாள்
அர்ஜுன மண்டபத்தில் 

சௌரிக் சாயக் கொண்டை சாற்றி; 
அதில் கலிங்கத்துராய், சூர்ய - சந்திர வில்லை ; சிகப்பு கல் நெற்றி பட்டை ; முத்து பட்டையை பக்க வாட்டில் கொண்டையில் அணிந்து 
காதில் வைர மாட்டல் - தோடு - ஜிமிக்கி ; 
வலது திருமூக்கில் மூக்குத்தி அணிந்து; 

திருமேனியில் பங்குனி உத்திர பதக்கம்; தாயார் வைரத்திருமாங்ஙல்யம் ; 
தொங்கல் பதக்கம்; வரிசையாக அடுக்கு பதக்கங்கள்; பெரிய பவழ மாலை; காசு மாலை; 2 வட‌முத்து மாலை; 
வலது திருக்கையில் - தங்க கோலக்கிளி ; 
இடது திருக்கையில் - வரிசையாக வில்வ பத்ரம், தாயத்து சரங்கள், வளையல், பவழ கடிப்பு , வில்வ பத்ர தொங்கல் சாற்றி; 

திருவடியில் - சதங்கை , தண்டை அணிந்து ; 

பின் சேவையாக - பின்னல் ஜடை - அதன்மேல் ஜடை தாண்டா; திருமுடியில் கல் இழைத்த ராக்கொடி; ஜடைக்கு மேல் - நாகம் வைத்த கல் இழைத்த ஜடை தாண்டா; புஜ கீர்த்தி; கச்சு எடுத்து கட்டி - அதில் அரைச் சலங்கை தொங்க விட்டுக் கொண்டு; ரங்கூன் அட்டிகை; ஒட்டியாணம் அணிந்து; 


வெண் பட்டு அணிந்து - வலது திருவடியை மடித்து அமர்ந்தும்- இடது திருவடியை , திருக்கை தாங்க அமர்ந்தும் 
அதி அற்புதமாக நாச்சியாரக சேவை சாத்திக்கிறார் ...







நன்றி இணையம்

#பெருமாளுக்கு 18 லுங்கிகள் மாற்றப்படும் வினோத வழிபாடு

மணக்கால் அய்யம்பேட்டை | 10:38 AM | Best Blogger Tips

 May be an image of temple and crowd

#பெருமாளுக்கு 18 லுங்கிகள் மாற்றப்படும் வினோத வழிபாடு:
எங்கே? ஏன் தெரியுமா?

காவிரியே விரஜா நதி. அரங்கநாதரின் இருப்பிடமே வைகுந்தம். பரவாசுதேவப் பரம்பொருள் ஸ்ரீரங்கநாதர். 


விமானம் ஓம் எனும் பிரணவம். அதன் அழகான கலசங்களே வேதங்கள். பள்ளிகொண்ட பெருமாளின் தோற்றமே பிரணவ மந்திரம் ஆகும்.
108 திவ்ய தேசங்களில் தலையாயது. 


பெரிய கோயில், பூலோக வைகுண்டம், போக மண்டபம் எனப் போற்றப்பெறும் திருவரங்கமே தலைசிறந்தது என்பதால் வைணவத்தில் கோயில் என்றாலே திருவரங்கம்தான். 


இக்கோயில் ஒன்றல்ல, இரண்டல்ல, பல சிறப்புகளை உடையது.

ஆசியாவிலேயே உயர்ந்த 236 அடி கோபுரம். பரப்பளவு 156 ஏக்கர்.
கோபுரங்கள் 21,
திருச்சுற்றுகள் 7,
திருச்சுற்றுகளின் மொத்த
நீளம் 14 கி மீ. உள்துணைக் கோயில்கள் 42, துணைக் கோயில்கள் 8 உடையது.
ஒரு சுற்று சுற்றினால் இரண்டு கி.மீ. சுற்றிய பலன் கிடைக்கும்.

ராமாயணக் கால பழைமையான கோயில். சிலப்பதிகாரமும், நாலாயிர திவ்யப்பிரபந்தமும் திருவரங்கம் பெருமை பேசுவது.

ஸ்ரீராமன் வழிபட்ட கோயில்.
நாற்புறமும் ஸ்ரீராமர் சன்னிதி உடைய ஆலயம்.
பட்டர்பிரான், பிள்ளை லோகாச்சாரியார், பெரிய நம்பி வாழ்ந்த தலம். மூலவர் பெரிய பெருமாள், ‌உத்ஸவர் நம்பெருமாள். ஆண்டாளை மணக்க பல்லக்கு அனுப்பி தம்மோடு ஒன்றச் செய்த பெருமாள்.

எல்லா தலங்களிலும் நிற்கும் கோலமுடைய ஆண்டாளை, இங்கு அமர்ந்த கோலத்தில் கொண்டையின்றி கிரீடத்துடன் தரிசிக்கலாம். மதுரகவி ஆழ்வாரின் அம்மா மண்டபத்தின் கீழ்புறம் உள்ள நந்தவனத்தில் இருந்தே இன்றும் பெருமாளுக்கும், தாயாருக்கும் துளசி, துளசி மாலைகள் செல்கின்றன.

இக்கோயில் பெருமாள் 7 செல்வ நாச்சியார்களுடன் விளங்குகிறார்.
அவர்கள் ஸ்ரீரங்க நாச்சியார், ஸ்ரீதேவி, பூதேவி, சோழவல்லி, சேரகுலவல்லி, ஆண்டாள், துலுக்க நாச்சியார் ஆகியோர் ஆவர்.

ஸ்ரீராமனே பெருமாள். அவராலே வழிபடப்பெற்ற அரங்கன் ஆதலால் பெரிய பெருமாள்.
கோயில் பெரிய கோயில். கோபுரம் பெரிய கோபுரம். 


கருடன் மிகப் பெரிய கருடன். 


ஜீயர் பெரிய ஜீயர். 


உரையாசிரியர் பெயர் பெரியவாச்சான் பிள்ளை. திருமதில்களே பெரிய திருமதில்கள்.
தாயாரோ பெரிய பிராட்டி. 


தளிகைகளோ பெரிய அவசரம்.
இசைக்கருவி பெரிய மேளம்.
ஆழ்வார்களின் மங்களாசாசனங்கள் பெரிய மங்களாசாசனம்கள். 


அதாவது 11 ஆழ்வார்கள், 247 பாக்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.

மார்கழி மாதம் முதல் நாள் முதல் மார்கழி இருபதாம் நாள் வரை நடைபெறும் திருஅத்யயன வைகுண்ட ஏகாதசி மகோத்ஸவம் எனப்படும் மார்கழி திருநாளே திருவரங்கத்து விழாக்களில் தலையாய விழா. 


ஐந்து மாறுபட்ட பூக்களால் கட்டப்பட்ட அழகிய மாலையை நித்தம் பெருமாள் சூடிக் களைவார்.

பவித்ரோத்ஸவத்தின்போது பெருமாள் 365 பூணூல் அணிந்திருப்பார். 


பங்குனி மட்டையடி சேவை அன்று இரவு சேர்த்தியில் 18 லுங்கிகளை பெருமாளுக்கு மாற்றுவர். 


விழாக்களுக்குப் பெயர்போன திருவரங்க பெருமாளை நாள்தோறும், வருடந்தோறும் தரிசிப்பது பேரின்ப பெருநிலையைத் தரும். 


இந்த மார்கழியில் பெருமாள் புகழ் பாடி புண்ணியம் பல பெறுவோம்...


🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
#ஓம்_நமோநாராயணய
 

 

நன்றி இணையம் 

இந்திய குடியரசின் தலைவரே ஜனாதிபதி ஒரு பார்வை

மணக்கால் அய்யம்பேட்டை | 10:35 AM | Best Blogger Tips

No photo description available. 

இந்திய குடியரசின் தலைவரே ஜனாதிபதி
ஒரு பார்வை

இந்தியக் குடியரசுத் தலைவரே இந்தியாவின் முதல் குடிமகன்.. நாட்டின் தலைவர்.... மற்றும் இந்திய ராணுவப் படைகளான காலாட்படை, கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் தளபதி..

இவரின் மாதச் சம்பளம்: ₹5,00,000 (5 லட்சம் ரூபாய்).
​ஜனாதிபதியின் சம்பளத்திற்கு வருமான வரி கிடையாது...

மேலும் விருந்தோம்பல் படி (Hospitality Allowance), அலுவலகச் செலவுகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் புதுப்பிப்பதற்கான படிகளும் உண்டு...

இவரின் அதிகாரப்பூர்வ பணிகளுக்காக மேற்கொள்ளும் பயணச் செலவுகள் மற்றும் வாகன வசதிகள் அனைத்தும் அரசு பார்த்துக் கொள்ளும்...
டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம்: செய்தித்தாள் பையனிலிருந்து குடியரசுத்  தலைவர் வரை- கலியுகத்தில் கடவுளின் அவதாரத்திற்குக் குறையாது! - என் ...
மேலும் இந்தியக் குடியரசுத் தலைவர் மாளிகையான "ராஷ்டிரபதி பவன் "உலகின் மிகப்பெரிய குடியிருப்பு மாளிகைகளில் ஒன்றாகும்.
ராஷ்டிரபதி பவன் | வரலாறு, கட்டிடக்கலை, வருகை நேரம்.|
சுமார் 330 ஏக்கர்.. மொத்தம் 340 அறைகள் ...4 மாடிக் கட்டிடம்....தரைப்பகுதி மட்டும் 2 லட்சம் சதுர அடி.....இந்த மாளிகைக்குள் இருக்கும் தாழ்வாரங்களின் நீளம் மட்டும் சுமார் 2.5 கிலோமீட்டர்....
டெல்லியில் ராஷ்டிரபதி பவன் | Expedia.co.in
இதில் ஜனாதிபதியின் குடும்பத்தினருக்கான அறைகள், விருந்தினர் தங்கும் அறைகள்..அலுவலக அறைகள் மற்றும்....
அமைச்சர்கள் பதவியேற்பு மற்றும் முக்கிய விழாக்கள் நடக்கும் "அசோகா ஹால்"
பத்ம விருதுகள் போன்ற கௌரவங்களை வழங்கும் "தர்பார் ஹால்"
வெளிநாட்டுத் தலைவர்களுக்கு விருந்தளிக்கும் உணவுக் கூடம் "பேங்க்வெட் ஹால்"..... சுமார் 190 ஏக்கர் பரப்பளவில் உள்ள முகலாயத் தோட்டம் தற்போது அமிர்த உதயன்......etc

இந்த மாளிகையைப் பராமரிக்கவும், ஜனாதிபதியின் அலுவலகப் பணிகளுக்காகவும் சுமார் 750 முதல் 800 பணியாளர்கள்....

சுமார் 28 சமையல்காரர்கள்.... மற்றும் 50-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள்... 245 பேர் நிர்வாக மற்றும் அரசியல் பணி...180-க்கும் மேற்பட்ட தோட்டக்காரர்கள் உள்ளனர்.
List of President of India from 1950 to 2024, Complete List
இந்தியக் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்பவர்களுக்கு ஒரு பிரம்மாண்ட கருப்பு நிற மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் 600 w 221 புல்மென் கார்ட் காரும்,..
குடியரசுத் தலைவர் இந்தியாவின் பிரதிநிதியாக மேற்கொள்ளும் பயணங்களுக்கு லிமோஷன் (limousine) காரும்...

இந்தியக் குடியரசுத் தலைவர் விடுமுறை நாட்களைக் கழிக்க இந்தியாவிலேயே இன்னும் இரு பங்களாக்கள்....
ராஷ்டிரபதி நிலைய ஹைதராபாத்தில் பகல் பயணம் - 163 ஆண்டுகால பாரம்பரியத்தை  ஆராய்தல் - சோஷியல் மஹாராஜ்
தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் நகரத்தில் "ராஷ்டிரபதி நிலையம்".....( குளிர்கால வாசஸ்தலம் )
Lok Bhavan, Shimla - Wikipedia
இமாச்சலப்பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில் ஒரு சொகுசு பங்களா... ( கோடைகால வாசஸ்தலம் )

ஜனாதிபதிக்கு பிரிட்டிஷ் காலத்து மரபுகளையும், நவீன காலத் தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கிய உலகின் மிகக் கடுமையான மற்றும் நேர்த்தியான பாதுகாப்பு வழங்கப்படுகிறது

ஜனாதிபதியின் மெய்க்காப்பாளர்கள் (President's Bodyguard - PBG)
இது இந்திய ராணுவத்தின் மிகப்பழமையான மற்றும் உயரடுக்கு குதிரைப்படைப் பிரிவாகும்.

இந்தப் பிரிவில் சேர வீரர்கள் குறைந்தது 6 அடி உயரம்...பாராசூட் மூலம் குதிக்கும் பயிற்சியும் பெற்ற கமாண்டோக்கள்...

டெல்லி காவல்துறை மற்றும் ராணுவம்
ஜனாதிபதி மாளிகையை சுற்றிப் பல அடுக்கு பாதுகாப்பு இருக்கும்:

வான்வழித் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க ராணுவத்தின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் ரேடார்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும்.

தற்போது ஜனாதிபதி Mercedes-Maybach S600 Pullman Guard வாகனத்தைப் பயன்படுத்துகிறார்.
இது குண்டு துளைக்காதது (Bullet-proof)... வெடிகுண்டுத் தாக்குதல்கள் மற்றும் ரசாயனத் தாக்குதல்களைத் தாங்கும் திறன் கொண்டது. இதன் டயர்கள் சேதமடைந்தாலும் தொடர்ந்து வேகமாகச் செல்ல முடியும்.

ஜனாதிபதியின் கார் செல்லும் போது முன்னும் பின்னும் ஜாமர்கள் (Jammers), ஆம்புலன்ஸ் மற்றும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு வாகனங்கள் தொடரும்.

பயண நடைமுறைகள் (Tour Protocol)
ஜனாதிபதி ஒரு மாநிலத்திற்குச் செல்கிறார் என்றால்:

அவர் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பே பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்வார்கள்.

அவர் தங்கும் இடம் ஒரு கோட்டையாக மாற்றப்படும்.
...அவர் செல்லும் பாதையில் போக்குவரத்து முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும்.....
.
ஜனாதிபதிக்கு வழங்கப்படும் உணவு மிகக் கடுமையான சோதனைக்குப் பிறகே வழங்கப்படும்.
அவர் வெளியில் எங்கும் விருந்துகளுக்குச் சென்றால், அங்குள்ள உணவை முதலில் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் பரிசோதித்த பின்னரே ஜனாதிபதிக்கு வழங்கப்படும்.

ஜனாதிபதி எங்கு சென்றாலும், அவருடன் ஒரு பிரத்யேக மருத்துவக் குழு மற்றும் அவசரச் சிகிச்சை வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ் எப்போதும் அணிவகுப்பில் இருக்கும். அவரது ரத்த வகையைச் சேர்ந்த ரத்தப் பைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.

ஜனாதிபதி என்பவர் இந்தியாவின் முதல் குடிமகன் என்பதால், அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு என்பது வெறும் ஒரு நபருக்கானது அல்ல; அது நாட்டின் இறையாண்மைக்கான பாதுகாப்பு....

இவர்களின் ஓய்வுக்குப் பிறகு மாதம் ₹ 2.50/- லட்சம் ரூபாய் ஓய்வூதிய தொகை..வாடகை இல்லா சொகுசு பங்களா,... இலவச மருத்துவ சிகிச்சை....இலவச ரயில் மற்றும் இலவச விமான பயணம்... அரசு வாகனம்.....

அவர் காலத்திற்குப் பிறகு அவரது கணவன் அல்லது மனைவிக்குப் பாதி ஓய்வூதியத் தொகை... வாழ்நாள் முழுக்க இலவசமாக மருத்துவச் சிகிச்சை.. அரசு தரப்பிலிருந்து ஒரு சொகுசு பங்களா......ஒரு தொலைப்பேசி இணைப்பு மற்றும் ஒரு அரசு வாகனமும் வழங்கப்படுகிறது...

மேலும் ஜனாதிபதியின் வீடான ராஷ்டிரபதி பவனில் அற்புதமான ஒரு அருங்காட்சியகம் உண்டு.....; 'கதை சொல்லும் அருங்காட்சியகம்' (Story-telling Museum) என்று அழைக்கப்படுகிறது...

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய பொருட்கள் மற்றும்
வெளிநாட்டுத் தூதர்கள் மற்றும் அதிபர்கள் இந்திய ஜனாதிபதிக்கு வழங்கிய விலைமதிப்பப்பற்ற கலைப்பொருட்கள், சிலைகள் மற்றும் நினைவுப் பரிசுகள்.

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய குதிரை வண்டிகள் (Horse-drawn buggies) மற்றும் பழமையான மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள்...

டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் வாசித்த புத்தகங்கள், அவர் வாசித்த வீணை மற்றும் அவரது தனிப்பட்ட பொருட்கள்...

பிரிட்டிஷ் காலத்து ஓவியங்கள் மற்றும் ராஷ்டிரபதி பவன் கட்டப்பட்ட வரலாற்றைக் காட்டும் புகைப்படங்கள்.

இந்த அருங்காட்சியகத்தில் 'ஹாலோகிராம்' (Hologram) தொழில்நுட்பம் மூலம் முன்னாள் ஜனாதிபதிகள் நம்மிடம் பேசுவது போன்ற ஒரு தத்ரூபமான உணர்வை உண்டாக்குகிறார்கள்...

மேலும்,3D முறையில் சுதந்திரப் போராட்டக் காட்சிகள்...

ஆண்டு முழுவதும் எல்லோரும் காணலாம்... இங்குள்ள அமிர்த உதயன்' (தோட்டம் )பிப்ரவரி- மார்ச் மாதங்களில் பார்வையிடலாம்..

பாரதத்தின் முதல் குடிமகனின் தகவல்கள் எல்லாம் சுவாரசியமானது தான்...

 

🌹உலக அதிசயம் என்றால்_என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | 10:23 AM | Best Blogger Tips

 May be an image of temple

 


ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம்.
நம் தமிழ்நாட்டின் நெல்லையப்பர் கோவிலில் கல் தூணை தட்டினால்
 
" ச, ரி, க, ம, ப, த, நி " என்கிற ஏழு
இசை சப்த ஸ்வரங்கள் ஒலிக்கும் கல்லுக்குள் 7-ஸ்வரங்களை வைத்தார்களே அது உலக
அதிசயம்.
 
திருப்பூரில் உள்ள குண்டடம்_வடுக நாத பைரவர் கோவிலில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை இந்த மாதத்தில் இந்தந்த வடிவத்தில் இந்த விதமான Positions-ல் தான் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
 
கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள். அது உலக அதிசயம்.
அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட இந்த அதிசய சிற்பங்களை அவர்களால் சிதைக்க முடியவில்லை.
 
இன்றும் நிறைய கோவில்களில்
குறிப்பிட்ட ஒரு தேதி, நேரத்தில் பூ மாலை போல் வந்து சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும். 
 
அப்ப
எவ்ளவு துல்லியமாக Measurement செய்து ஆலயங்களை கட்டி இருப்பார்கள் என்று பாருங்கள். சில கோவில்களில் தினமுமே சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது பூ மாலை
போல் வந்து விழும். 
 
வட சென்னையில் உள்ள வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி, சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் எவ்ளவு ஆண்டுகள்
 
பழமையான லிங்கம் தெரியுமா...? ஐயாயிரம் ஆண்டுகள்...... இது உலக அதிசயம்.
மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், தஞ்சை பெரியகோவில் சிற்ப, கட்டிட வேலைபாடுகளில் உள்ள அதிசயங்களை பற்றி முழுமையாக நமக்கு தெரியவேண்டுமென்றால்
அதற்கு இந்த ஒரு பிறவி போதாது.
 
ஓசோன் 20-ம் நூற்றாண்டில் கண்டு
பிடிக்கப்பட்ட படலம். 700 ஆண்டுகளு க்கு முன்பே மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம், அதை நாம் எவ்வாறு பாதுக்காக்க வேண்டும் என்று அனைத்தும் அங்கே வைக்கப்பட்டு உள்ளது. அது உலக அதிசயம். 
 
யாழி என்கிற மிருகத்தின் சிலை பல பழங்கால கோவில்களில் இருக்கும்.
 
டைனோசர் போல்.அதுவும் உலகில் வாழ்ந்து அழிந்த மிருகம் என்று சொல்கிறார்கள். சில பழங்கால கோவில்களில் உள்ள யாழிசிலை யின் வாயில் ஒரு உருண்டை
இருக்கும். அந்த உருண்டையை நாம்
உருட்டலாம். ஆனால் ஆயிரம் குன்பூ வீரர்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும். யாழிவாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ முடியாது.
 
அது உலக அதிசயம்.
 
இன்று தாஜ்மஹாலை விட மிகப் பெரிய மார்பிள் கட்டிடங்கள் உலகில் உருவாகி விட்டது. இன்று ஒரு வல்லரசு நாடு நினைத்தால். ஆயிரம் தாஜ் மஹாலை உருவாக்க முடியும். ஆனால் கல்லுக்குள் 7-ஸ்வரங்களை வைக்கும் அந்த வித்தையை எந்த நாட்டு கொம்பனாலும் செய்ய முடியாது.
 
வாயில் உள்ள உருண்டையை உருட்டலாம். ஆனால் எடுக்க முடியாது .இந்த வித்தையை இன்று
எந்த வல்லரசாலும் செய்ய முடியாது.
 
மிகப்பெரிய பிரம்மாண்ட கற்கோவில் களை அழகிய கலை வேலைபாடு களோடு உருவாக்குவது, இதை எந்த உலக வல்லரசாலும் செய்ய முடியாதது.
 
அது போல் ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம். கோவில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்கது. அக்கோவிலில் உள்ள
கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு
தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது. அன்றைய ராணிகளுக்காகவே
கட்டப்பட்ட கிணறு அது.
 
அது போல் அக்கோவிலில் உள்ள கருவறையில் சுவர்களில் மரகதகற்கள் பதித்துள்ளனர். அதனால் வெளியே வெயில் அடித்தால் உள்ளே குளிரும்.
 
வெளியே மழை பெய்தால் உள்ளே
கதகதப்பாக இருக்கும்.அது போல் கோவில் மேற்கூரையில் ஒரு ஆள்
பதுங்கும் உயரத்தில் பாதுகாப்பு பெட்டகம்உள்ளது. 
 
போர் காலத்தில் ஆயுதங்களும் படைவீரர்களும் பதுங்கும் வகையில்
கட்டியுள்ளார் நமது ராஜேந்திர சோழர்.
 
மறதமிழரின் கட்டிடகலையை வாழ்த்துவோம்.தமிழர் பண்பாட்டை போற்றி பாதுகாப்போம்.
 
நமது முன்னோா்களின் திறமையையும்.
கலைநயத்தையும் போற்றி... தலைவணங்குவோம்.🙏
 
இம்மண்ணில் தமிழராய் பிறந்தமைக்கு பெருமிதம் கொள்வோம்.
 
🙏நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி .
 
 உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹
 
சிவாய நம🙇 சிவமே ஜெயம் ‌ சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்.
 

Thanks to  ஈசனிடம் யாசகி ஷிவானி கௌரி

திருவாசகம்

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 No photo description available.  🌷 🌷🌷 🌷

 

 

"HARD CHOICES" விதி என்று எண்ணுவதா .... அல்லது இதற்கு வேறு ஏதேனும்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:28 AM | Best Blogger Tips

  Vladimir Putin, person, Russian president, creative geometric portrait art,  Russian Federation, HD wallpaper | Peakpx

 முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளின்டன் .
"HARD CHOICES" என்ற ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார் .


அதில் அவர் ஒரு ஆச்சரியமான விபரத்தை தெரிவித்துள்ளார் .
May be an image of text
 இரண்டாவது உலகப் போர் ஆரம்பித்து சில வாரங்களுக்கு பிறகு ....


ஒரு ரஷ்ய வீரருக்கு வீட்டுக்கு செல்ல விடுமுறை கிடைக்கிறது.
விடுமுறையை கழிக்க ஊருக்குச் சென்ற வீரருக்கு....


ஊருக்குள் நுழையும் போதே அதிர்ச்சி காத்திருக்கிறது .


அவரது ஊர் எதிரிகளால் குண்டு வீசப்பட்டு....
பிணங்கள் குவியலாக ராணுவ வண்டியில் கிடத்தப்பட்டு இருந்தது.


பல நூற்றுக் கணக்கில் கிடந்த சடலங்கள்....
கூட்டுக் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட தயார் நிலையில் இருந்தன .


சடலங்களின் முன்னால் அந்த ராணுவ வீரர் சிறிது நேரம் நின்றார் .
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcR_RnT_StWQAOaT6sXcrtp9Qrabv6bdCN--YA&s
 ஒரு பெண்ணின் பாதத்தில் இருந்த காலணிகளை அவர் திடீரென கவனித்தார் .


முன்பொருநாள் தனது மனைவிக்காக வாங்கி வந்த காலணிகள் போல தெரிந்தன.
உடனே வீட்டுக்கு ஓடினார் .


வீட்டில் யாரும் இல்லை
வேகமாக திரும்பி வந்து வாகனத்தில் இருந்த அந்த உடலை பரிசோதித்தார்
அது அவரது மனைவியே தான்
அதிர்ச்சி அடைந்த அவர் பொதுக் கல்லறையில்
மனைவியை புதைக்க விரும்பவில்லை என்றும்
தனிக் கல்லறையில் புதைக்க விரும்புவதாகக் கூறி....


உடலை தன்னிடம் தருமாறு வேண்டினார்.
அனுமதி கிடைத்தது.

வாகனத்திலிருந்து உடலை வெகு சிரமத்துடன் வெளியே எடுக்கும் போது....


மனைவி இன்னும் உயிருடன் இருப்பதை பார்த்து அதிர்ந்தார


உடனே அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்!


அங்கு தேவையான சிகிச்சை மேற்கொள்ளப் பட்டு .....
மீண்டும் உயிர் பெற்றாள் அந்த வீரரின் மனைவி.

இந்த விபத்து நடந்த சில வருடங்களுக்குப் பிறகு....
கிட்டத்தட்ட உயிருடன் புதைக்கப்பட இருந்த அந்த மனைவி....கர்ப்பமுற்றாள்.


ஆண் குழந்தை பிறந்தது.
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQmIXAbuDp0vvyKBPSU3WnGutwYk7B03SP8Qg&s
 பிரசவம் பார்த்தவர்கள் பையனுக்கு பெயர் சூட்டினர்.
பெயர் என்ன தெரியுமா ?
"விளாடிமிர் புடின்"
எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதா இந்தப் பெயர் ?
இவர்தான் தற்போதைய ரஷ்ய அதிபர் .
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcS3-jwTBst5rPT-eUOBnWaIE_8UyrVJHkeTPw&s
 சவக்குழிக்கு போயிருக்க வேண்டிய தன்னுடைய தாயிடம் இருந்து
அதிர்ஷ்டவசத்தால் கருவில் திருவாகி
இவ்வுலகில் அவதரித்து

இன்று உலகை ஆட்டிப்படைக்கும் சக்திகளில் ஒருவராக திகழ்கிறார் .
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSutj33A_fYthw3QIDAFKSeAPslwAkBTR59iQ&s
 இந்த சேதியை
விதி என்று
எண்ணுவதா ....
அல்லது இதற்கு வேறு ஏதேனும் பெயர் சூட்டுவதா....
எதுவும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்......

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 May be an image of tree  🌷 🌷🌷 🌷