அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில்
நம்பெருமாள்
திருஅத்யயன
வைகுந்த ஏகாதசி பெருவிழா
பகல் பத்து
பத்தாம் திருநாள்
அர்ஜுன மண்டபத்தில் 
சௌரிக் சாயக் கொண்டை சாற்றி;
அதில் கலிங்கத்துராய், சூர்ய - சந்திர வில்லை ; சிகப்பு கல் நெற்றி பட்டை ; முத்து பட்டையை பக்க வாட்டில் கொண்டையில் அணிந்து
காதில் வைர மாட்டல் - தோடு - ஜிமிக்கி ;
வலது திருமூக்கில் மூக்குத்தி அணிந்து; .jpeg)
திருமேனியில் பங்குனி உத்திர பதக்கம்; தாயார் வைரத்திருமாங்ஙல்யம் ;
தொங்கல் பதக்கம்; வரிசையாக அடுக்கு பதக்கங்கள்; பெரிய பவழ மாலை; காசு மாலை; 2 வடமுத்து மாலை;
வலது திருக்கையில் - தங்க கோலக்கிளி ;
இடது திருக்கையில் - வரிசையாக வில்வ பத்ரம், தாயத்து சரங்கள், வளையல், பவழ கடிப்பு , வில்வ பத்ர தொங்கல் சாற்றி; 
திருவடியில் - சதங்கை , தண்டை அணிந்து ;
பின் சேவையாக - பின்னல் ஜடை - அதன்மேல் ஜடை தாண்டா; திருமுடியில் கல் இழைத்த ராக்கொடி; ஜடைக்கு மேல் - நாகம் வைத்த கல் இழைத்த ஜடை தாண்டா; புஜ கீர்த்தி; கச்சு எடுத்து கட்டி - அதில் அரைச் சலங்கை தொங்க விட்டுக் கொண்டு; ரங்கூன் அட்டிகை; ஒட்டியாணம் அணிந்து;

வெண் பட்டு அணிந்து - வலது திருவடியை மடித்து அமர்ந்தும்- இடது திருவடியை , திருக்கை தாங்க அமர்ந்தும்
அதி அற்புதமாக நாச்சியாரக சேவை சாத்திக்கிறார் ...


.jpeg)
.jpeg)