
இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனை கண்டு பிரான்ஸ் நாட்டு சுற்றுபயணி வியப்பு, விமான நிலையம் முதல் டீக்கடை வரை எல்லாமே டிஜிட்டல் மயம் என ஆச்சரியம் :
செய்தி
உண்மையில் எல்லா முன்னேறிய நாடுகள் என சொல்லபடும் நாடுகளை விட இந்தியாவில்தான் இணைய வழி பயன்பாடுகளும் டிஜிட்டல் பண பரிவர்தனையும் அதிகம், 10 கோடி, 20 கோடி மக்கள் தொகை கூட இல்லா தேசங்களே இதில் தடுமாறும் போது மோடி அரசு நிச்சயம் பெரும் சாதனை செய்திருக்கின்றது
140 கோடி மக்கள் உள்ள மாபெரும் நாட்டில் எல்லா இடமும் டிஜிட்டல் பரிவர்த்னை என்பது இன்னொரு அரசுக்கு சாத்தியமே இல்லை, மோடியினை ஏன் உலக நாடுகள் கொண்டாடுகின்றன என்றால் இதற்காகத்தான்
இதனால் தேசம் காணும் நன்மைகள் சில உண்டு
முதலாவது மக்களின் எளிய பயன்பாடு, பணம் அதிகம் புழங்காது சில்லறை குழப்பம் வராது மிக முக்கியமாக பாகிஸ்தான் போன்ற நாடுகளும் உள்ளூர் துரோகிகளும் கள்ள நோட்டை புழக்கத்தில் விட முடியாது
இரண்டாவது இந்த முறை வருவதற்கு முன்பு சாலையோர கடைகள், நடமாடும் கடைகள் இன்னும் பல வகை வணிகங்களின் பணம் கணக்கில் வராது இதனால் வருமான வரிமுதல் கள்ளபதுக்கல் வரை பெரும் சிக்கல் இருந்தது இப்போது எல்லாமும் முறையாக வரிக்குள் வருகின்றன பண பதுக்கலுக்கு வழியில்லை
இதனால் அரசுக்கும் வரிவசூல் கணக்கு எளிதாகின்றது வியாபாரிகளும் பெரிய குழப்பம் செய்யமுடியாது என்பதால் வரியினை கட்டியே தீரவேண்டும், இதனால் அரசின் வருமானம் கொழிகின்றது
உலகின் மூன்றாம் பொருளாதார பலம் கொண்ட நாடாக எப்படி உருவானோம் என்றால் இப்படித்தான், மோடி அரசின் ஒவ்வொரு திட்டமும் இப்படி ஆழமானவை, பெரும் நோக்கம் கொண்டவை. மாபெரும் பொருளாதார யுகத்தை அவர் திறந்து வைத்திருக்கின்றார்
இப்போதைக்கு கருப்பு பணம் வியாபரத்தில் புழங்குவதில்லை இப்போது அது ரியல் எஸ்டேட் உள்ளிட்ட இன்னபிற தொழில்களில் முடங்கி கிடக்கின்றது, இக்கோஷ்டிகளுக்கு வருமான வரியுமில்லை அவர்களை கேள்வி கேட்க யாருமில்லை, இந்த சர்ச் பாதர்கள் பாஸ்டர்கள் போல் அவர்கள் தனி காட்டு ராஜாக்கள்,
முறையான கட்டுபாடுகள் ஏதுமில்லை
இந்த கோஷ்டிகளையும் இவர்களை போல் சில தொழில்களையும் முறைபடுத்தினால் போதும் எளிதாக உலகின் முதல் பொருளாதார நாடாக தேசம் உருவெடுக்கும் அக்காலம் விரைவில் வரும் என எதிர்பார்ப்போம்
பாரதத்தை மோடி பல வழிகளில் எப்படியெல்லாம் மேம்படுத்தியிருகின்றார் என்பதற்கு அந்நிய நாட்டு பயணியே சாட்சி, உலகில் இந்நாட்டை அந்த அளவு உயர்த்தியிருக்கின்றார், அந்த மாமனிதனைத்தான் உலகம் அறியாத தமிழகத்தை தாண்டாத சில பதர்கள் குற்றம் சொல்லி கொண்டிருக்கின்றன, அவைகளும் விரைவில் உண்மையினை அறிந்து மோடியின் அருமையினை உணர்ந்து கொள்ளட்டும் என பிரார்த்திப்போம்

