
எப்படித்தான் கழிந்தது ?
என் காலங்கள் !
இந்த நீண்ட பயணம்,
எனக்குத் தெரியவே
இல்லை !
என்ன பெற்றேன் ?
என்ன இழந்தேன் ?
ஏன் இழந்தேன் ?
எனக்குத்
தெரியவே
இல்லை !
கடந்தது சிறு பிராயம்,
போயே போனது
இளமை.
முதுமை எப்போது
வந்து சேர்ந்தது ?
எனக்குத்
தெரியவே
இல்லை !
நேற்று வரை
மகனாக இருந்தேன்,
எப்போது மாமனார்
ஆனேன் ?
எனக்குத்
தெரியவே
இல்லை !
தகப்பனாய் இருந்த
நான் எப்போது
தாத்தாவாகவும்,
பாட்டனாகவும்
மாறினேன் ?
எனக்குத்
தெரியவே
இல்லை !
ஒருவர் சொல்கிறார்,
'அவருக்கு
வயசாகிடுச்சு'
என்று,
இன்னொருவர்
சொல்கிறார்,
' அவர் இன்னும்
கெத்துதான்'
என்று !

இதில் எதுதான்
உண்மை ?
எனக்குத்
தெரியவே
இல்லை !
முதலில் பெற்றோர்
பேச்சைக் கேட்டேன்,
அப்புறம் மனைவி
பேச்சைக் கேட்டேன்,
அப்புறம் பிள்ளைகள்
பேச்சைக் கேட்டேன்,

என் பேச்சை நான்
எப்போதுதான்
பேசினேன் ?
எனக்குத்
தெரியவே
இல்லை !
மனைவி சொல்கிறாள்,
' இப்போதாவது
புரிந்து
கொள்ளுங்கள் '
என்று.
என்ன
புரிந்து கொள்வது ?
என்ன
புரியாமல் போனது ?
ஏனோ தெரியவில்லை,
எனக்குத்
தெரியவே
இல்லை!
நெஞ்சம் சொல்கிறது,
' நான் இன்னும்
வாலிபன் '
என்று,
வயதோ சொல்கிறது,
' நீ ஒரு ஏமாளி '
என்று,
இந்தக்
குழப்பத்திலேயே
எப்போது என்
முட்டிகள்
தேய்ந்து போயின ?
எனக்குத்
தெரியவே
இல்லை ! 
நரைத்துப்போன
தலைமுடி,
தொங்கிப் போன
கன்னங்கள்,
மூக்கின் மேல்
கண்ணாடி ...
எப்போது
மாறியது
என் முகம் ?
எனக்குத்
தெரியவே
இல்லை !
காலம் மாறியது,
நானும் மாறினேன்,
மாறிப்போனது
என் நண்பர்கள்
கூட்டமும் !




எத்தனை பேர்
விடுபட்டனர் ?
எத்தனை பேர்
மிச்சமிருக்கின்றனர் ?
எனக்குத்
தெரியவே
இல்லை!
நேற்று வரை
நண்பர்களுடன்
அரட்டையடித்துக்
கொண்டிருந்தேன் !
எப்போது
'முதியோர்'
(Senior Citizen)
வரிசையில்
வந்து நின்றேன்?
எனக்குத்
தெரியவே
இல்லை !
மருமகள், மருமகன்,
பேரன், பேத்திகள்
என
மகிழ்ச்சி
பொங்கியது.
ஆனால்
இந்த ஏழை
வாழ்க்கையின்
உதடுகள்
எப்போது
புன்னகைத்தன ?
எனக்குத்
தெரியவே
இல்லை !
மனம் குளிர வாழுங்கள்
அன்பு நண்பர்களே ;
அப்புறம்
வருத்தப்பட்டுச்
சொல்லாதீர்கள்.
முழு வாழ்க்கையும்
எப்போது கடந்து
போனது ? என்று.
' எனக்குத் தெரியவே
இல்லையே ! '
என்று 🤝💐💚
🙏🌹நன்றி இணையம் 🌹🙏

