எப்படித்தான் கழிந்தது ?

மணக்கால் அய்யம்பேட்டை | 5:05 PM | Best Blogger Tips


 எப்படி தான் கழிந்தது காலங்கள் | Poongaatru | பூங்காற்று

எப்படித்தான் கழிந்தது ?
       என் காலங்கள்

 இந்த நீண்ட பயணம், 
 எனக்குத் தெரியவே 
       இல்லை ! 

        என்ன பெற்றேன் ?
        என்ன இழந்தேன் ?
        ஏன் இழந்தேன் ?

எனக்குத் 
      தெரியவே 
      இல்லை ! 

கடந்தது சிறு பிராயம், 
       போயே போனது 
       இளமை.

       முதுமை எப்போது 
       வந்து சேர்ந்தது ?
YouTube
 எனக்குத் 
       தெரியவே
       இல்லை ! 

நேற்று வரை
       மகனாக இருந்தேன்,
       எப்போது மாமனார்
       ஆனேன் ?

 எனக்குத் 
       தெரியவே
       இல்லை


தகப்பனாய் இருந்த 
      நான் எப்போது
      தாத்தாவாகவும்,
      பாட்டனாகவும்
      மாறினேன் ?
No photo description available.



 எனக்குத் 
      தெரியவே
      இல்லை ! 

ஒருவர் சொல்கிறார்,
       'அவருக்கு 
       வயசாகிடுச்சு' 

       என்று,

இன்னொருவர் 
       சொல்கிறார், 
       ' அவர் இன்னும் 
        கெத்துதான்'
 
        என்று !
No photo description available.
 

No photo description available. No photo description available.

இதில் எதுதான்
      உண்மை ?

எனக்குத் 
      தெரியவே
      இல்லை ! 

முதலில் பெற்றோர் 
       பேச்சைக் கேட்டேன்,

       அப்புறம் மனைவி 
       பேச்சைக் கேட்டேன்,

        அப்புறம் பிள்ளைகள்
        பேச்சைக் கேட்டேன்,
No photo description available.No photo description available.
        என் பேச்சை நான்
        எப்போதுதான் 
        பேசினேன் ?


 எனக்குத் 
       தெரியவே
       இல்லை ! 

மனைவி சொல்கிறாள்,      
      ' இப்போதாவது 
        புரிந்து
        கொள்ளுங்கள் '

        என்று.

என்ன 
     புரிந்து கொள்வது ?

என்ன 
       புரியாமல் போனது ?

ஏனோ தெரியவில்லை,
எனக்குத் 
       தெரியவே 
       இல்லை! 

நெஞ்சம் சொல்கிறது, 
      ' நான் இன்னும்
        வாலிபன் '

        என்று,

வயதோ சொல்கிறது, 
      ' நீ ஒரு ஏமாளி '
        என்று,


இந்தக் 
      குழப்பத்திலேயே
      எப்போது என்
      முட்டிகள் 
      தேய்ந்து
போயின ?

 எனக்குத் 
      தெரியவே 
      இல்லை ! 
No photo description available.
 நரைத்துப்போன
      தலைமுடி, 
      தொங்கிப் போன
      கன்னங்கள்,
      மூக்கின் மேல் 
      கண்ணாடி ...

எப்போது
      மாறியது 
      என் முகம் ?

 எனக்குத் 
      தெரியவே
      இல்லை ! 

காலம் மாறியது, 
நானும் மாறினேன்,

மாறிப்போனது 
       என் நண்பர்கள்
       கூட்டமும் !

No photo description available.No photo description available.

   

 No photo description available.No photo description available.

   எத்தனை பேர் 
       விடுபட்டனர் ?

       எத்தனை பேர்    
       மிச்சமிருக்கின்றனர் ?

 எனக்குத் 
     தெரியவே
     இல்லை! 

நேற்று வரை 
      நண்பர்களுடன்
      அரட்டையடித்துக்
      கொண்டிருந்தேன் !

எப்போது 
      'முதியோர்' 
       (Senior Citizen) 
       வரிசையில் 
       வந்து நின்றேன்?

 எனக்குத் 
      தெரியவே
      இல்லை ! 

மருமகள், மருமகன், 
      பேரன், பேத்திகள்
      என
      மகிழ்ச்சி 
      பொங்கியது.

ஆனால் 
       இந்த ஏழை
       வாழ்க்கையின் 
       உதடுகள் 
       எப்போது

       புன்னகைத்தன ?

 எனக்குத் 
     தெரியவே 
     இல்லை ! 

மனம் குளிர வாழுங்கள் 
       அன்பு நண்பர்களே ;

அப்புறம்
      வருத்தப்பட்டுச் 
      சொல்லாதீர்
கள்.



       முழு வாழ்க்கையும் 
       எப்போது கடந்து

       போனது ? என்று.

       ' எனக்குத் தெரியவே
         இல்லையே ! ' 
         என்று 🤝💐💚 

 

🙏🌹நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 No photo description available.🌷 🌷🌷 🌷