*உறவு முறைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:13 | Best Blogger Tips
Image result for *உறவு முறைகள்*
*அண்ணன் , தம்பி, அக்கா, தங்கை*,
*சின்ன அண்ணன், பெரிய அண்ணன்*, *சின்ன அக்கா*, 
*
பெரிய அக்கா*
*சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான்,*
*மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார்,*
*தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு,* 
*
பெரியப்பா பையன்*,
*
பெரியப்பா பொண்ணு*
*அத்தை பையன்*, 
*
அத்தை பொண்ணு*, *மாமன் பொண்ணு,* *மாமன் பையன்,*
இது போன்ற வார்த்தைகள் எல்லாம் *2050* மேல் யாருடைய காதிலும் விழாது, யாரும் கூப்பிடவும் மாட்டார்கள்,
*அகராதியில் இருந்து கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும்*....
காரணம், 
*
ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு* என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான்!
*அப்படி இருக்கும் போது இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்?*
*பெண்கள் வயதுக்கு வந்ததும் சீர்வரிசை செய்யவோ*, *பந்தல் போடவோ*, *முதல் புடவை எடுத்துத்தரவோ*, 
*
எந்த தாய்மாமனும் இருக்கப்போவது இல்லை*!
*திருமணத்தின் போது அரசாணைக்கால் நட*
*
எந்த அண்ணனும் இருக்கப்போவதில்லை*..
*மாப்பிள்ளைக்கு மோதிரம் போட எந்த தம்பியும் இருக்கப்போவதில்லை,*
*குழந்தைக்கு மோட்டை போட யார் மடியில் உட்கார வைப்பார்கள்?*
கட்டிக்கொடுத்த பெண்ணுக்கு எதாவது பிரச்சனை என்றால் *அண்ணனும் தம்பியும்* பறந்து செல்வார்கள், 
இனி யார் போவார்?
*ஒவ்வொரு பெண்ணும், சொந்தபந்தம் ஏதுமின்றி* 
*
ஆறுதலுக்கு ஆள் இன்றி தவிக்க போகிறார்கள்* ....!!!!
ஒவ்வொரு ஆணும்
தன் கஷ்டநஷ்டங்களில் பங்குகொள்ள அண்ணன் தம்பி யாருமின்றி அவதிப்பட போகிறார்கள்....!!
*அப்பா அம்மாவை தவிர எந்த உறவுகளும் இருக்கப்போவதில்லை*,!!
அந்த ஒரு குழந்தையும் 
வெளியூருக்கோ 
இல்லை தனிக்குடித்தனமோ சென்றுவிட்டால் 
*
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு* என்று வளர்த்தவர்கள்.
எல்லாம் வயதான காலத்தில், *ஏனென்று கேட்க நாதியற்று* முதியோர் இல்லத்திலோ இல்லை அந்த ஒரு 
*
குழந்தைக்காக கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக கிடப்பார்கள்*!
*உறவுகளின்* உன்னத மதிப்பை உணராமல் *பொருளாதார முன்னேற்றத்தை* மட்டுமே குறிக்கோளாக கொண்டு ...!!!!
*ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம்* என சோம்பேறித்தனப்பட்டு
*
எந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும்* ....!!!!!
அத்தனைபேருக்கும் 
இதே நிலைதான் !
உடல்நிலை சரியில்லாமல்
*மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டால்* ஓடோடி வந்து பார்க்க உறவுகள் வேண்டாமா?!!!! 
! 
*
சின்னச்சின்ன விஷயங்களுக்காக*
எனக்கு உனக்கு என்று சண்டைபோடும் அதே குழந்தைகள் தான்..!!!
வயதான காலத்தில் அப்பா அம்மாவுக்கு எதாவது ஒன்று என்றால்...!!
*யாராவது ஒருவர்* நான் நீ என்று ஓடிவருவார்கள்!!!!!
கணவன் குடும்பம் குழந்தை என்று உயிரைவிட்ட பெண்கள் கூட ...!!!! 
*
பெற்றோருக்கு ஒன்று என்றால்* அத்தனையும் தூக்கியெறிந்துவிட்டு *முதலில் வந்து நிற்பார்கள்*!!!!!
ஒரே ஒரு முறை உங்கள் *கடைசி* காலத்தை நினைத்துபாருங்கள்!
*பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை!* !
ஆனால் *உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடி வைத்திருந்தாலும் *அனாதைதான்* என்பதை மறந்துவிடக்கூடது! !!!!
கார் பங்களா வசதி வாய்ப்புகளுடன் 
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு ... !!!என்ற பெயரில்
*உறவுகளற்ற ஒரு அனாதையைப்போல்* வளர்ப்பதற்கும்,....
வயதான காலத்தில் நாதியற்று சாவதற்குமா இவ்வளவு பாடுபட்டு 
*
ஓடி ஓடி சம்பாதிக்கிறீர்கள்*?????
*அகம் முகம் மலர்ந்த நட்பே..*!! + சொந்தங்களே!!!!
தங்களின்..!!! *எதிர்கால வாழ்வில்.* .!!!
*நாளைய நட்சத்திரங்களாக மிளிரும் மழலை செல்வங்களான*..!!!
*குழந்தைகளை* ...!!!
அனைத்து ..!!!
*உறவு முறை இல்லங்களில்* நடைபெறும் ..!!!!!!
சுபகாரியங்களுக்கும்
அழைத்துச்சென்று 
*
இன்னென்னார் இன்னென்ன உறவு.*.!!
என 
*
மழலைகளின் மனதில் பதிய வைப்போமா*..???? அன்புடன் தமிழன்..

 நன்றி இணையம்