செய்வினை பாதிப்பை நீக்கும் சகஸ்ரலிங்க வழிபாடு!!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:55 | Best Blogger Tips


ஒரு கட்டிடத்தின் வரைபடத்தை நகல் எடுப்பது போல,ஒரு மனிதனின் பஞ்சபூத விகிதாச்சார நிலையை நகல் எடுத்து,அதில் மாற்றங்களை ஏற்படுத்தினால் அந்த மனிதனை நாம் எப்படி வேண்டுமானாலும் ஆட்டிப் படைக்கலாம்;இதுவே பில்லி,சூன்யத்தில் கையாளப்படும் வித்தைகளின் சூட்சும ரகசியம்;
இந்தத் தீவினைச் சக்திகளின் தாக்குதலை மனிதனின் மனமோ,உடலோ சமாளிக்க முடியாத நிலை தோன்றும் போதுதான்(தினமும் மந்திரஜபம் செய்யாமல் இருப்பது அல்லது வாரம் ஒரு முறை குலதெய்வம் கோவிலுக்குச் செல்லாமல் இருப்பது அல்லது மாதம் ஒருமுறையாவது அருகில் இருக்கும் சக்திவாய்ந்த ஆலயத்திற்குச் செல்லாமல் இருப்பது அல்லது மனவளக்கலைப் பயிற்சி செய்யாமல் இருப்பது),பலர் காரணமே இல்லாமல் கண்டுபிடிக்கமுடியாதபடி பல்வேறு உடல் உபாதைகளுடனோ,மன நோயாளிகளாகவோ, சித்த பிரம்மை பிடித்தவர்களாகவோ மாறி,இறுதியில் சுய நினைவு தோன்றாமலேயே மரணம் அடைந்துவிடுகின்றனர்;இத்தகைய கொடிய நிலையை ஏற்படுத்தக்ககூடியவையே பில்லி,சூன்யச் செயல்பாடுகள்;
தன்னை வழிபடுபவர்களின் தலைச்சுழி ரகசியத்தை மற்றொருவர் யாருமே நகல் எடுக்க முடியாதபடி,பாதுகாப்புக் கவசத்தை சூட்சுமமாகத் தந்து காப்பவரே திருவாசி சகஸ்ரலிங்க மூர்த்தி;
விழுப்புரம் அருகில் திருவக்கரை ஸ்ரீசந்திரசேகர மூர்த்தி, சென்னை அருகே சித்துக்காடு ஸ்ரீதாந்த்ரீஸ்வரர்,திருவாசி சகஸ்ரலிங்க மூர்த்தி போன்ற சிவலிங்கங்களை தொடர்ந்து முறைப்படி வழிபடுவர்களுக்கு செய்வினைத் துன்பங்கள் முழுமையாக விலகும்;
சகஸ்ரலிங்கம் என்பது ஒரு சிவலிங்கத்தினுள் 1000 சிறு சிவலிங்கங்களை செதுக்கியிருப்பர்;பிறகு,1000 சிவலிங்கங்களுக்கு தனித்தனியாக ப்ராணப்பிரதிஷ்டை செய்திருப்பர்;சித்தர் அல்லது சித்தர்களின் நேரடிச் சீடராகி குறிப்பிட்ட சைவ சித்தாந்த நிலையை எட்டியவர்களால் மட்டுமே சகஸ்ரலிங்கத்திற்கு ப்ராணப்ரதிஷ்டை செய்ய முடியும் என்பது சித்தர்களின் தலைவர் அகத்தியமகரிஷி தெரிவிக்கும் ஆகமவிதி ஆகும்;
இவைகளைத் தவிர,தமிழ்நாடு மற்றும் பாரததேசம் எங்கும் பல ஆலயங்களில் சகஸ்ரலிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன;உங்கள் ஊரில் அல்லது உங்கள் ஊருக்குப் பக்கத்து ஊரில் இருக்கும் சிவாலயத்தில் சகஸ்ர(1000)லிங்கம் இருக்கின்றதா? என்பதை ஒரு முறை கவனிக்கவும்;
சகஸ்ரலிங்க வழிபாட்டினை தகுதியுள்ள ஆத்மாக்களுக்குத்தான் உபதேசிக்க வேண்டும் என்றில்லை;முற்பிறப்புகளில் சகஸ்ரலிங்கம் வழிபாடு செய்தவர்களுக்கு மட்டுமே நினைவூட்டமுடியும்;
ஓம் அகத்தீசாய நமஹ