தியானம் ஏன் எதற்கு எப்படி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:52 | Best Blogger Tips


🌴நம் அன்றாட வாழ்கையில் பல விதமான இடர்பாடுகளை சந்திக்கிறோம்.
🌴ஒவ்வொரு நாளும் சக மனிதர்களால் இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவிக்கிறோம்.
🌴ஏன் இப்படி என்றால் பிரபஞ்சம் அப்படித்தான் உருபெற்றுள்ளது. ஆம் நேர் எதிர் ஆற்றல்கள் இரண்டும் சேர்ந்தது தான் பிரபஞ்சத்தை இயக்குகின்றது.
🌴இவை இரண்டும் ஒரு புள்ளியில் இணைந்தால் அந்த இடத்தில் இயக்கம் இருக்காது. ஆம் இன்பதுன்பம் இரண்டும் இல்லையென்றால் பற்றற்ற நியூட்ரான் தளத்தில் மோன நிலையில் இருந்துவிடுவீர்கள்.
🌴அங்கு காலம் இடம் இருப்பு அனைத்தும் உறைந்துவிடும். அதுதான் இன்பதுன்பம் அற்ற பிறவா நிலை.
🌴நாம் இன்பம் ஏற்படும்போது வாழ்வை வரமாகவும், துன்பம் ஏற்படும்போது அதையே சாபமாகவும் பார்க்கிறோம்.
🌴இந்த நிலையை போக்க ஒரே வழி தியானம். ஆம் தியானத்தின் போது மட்டுமே மனம் மூலத்தில் ஒடுங்குகிறது.
🌴தியானம் பழக ஆசைப்படுபவர்கள் சில சின்ன விடயங்களை கடைபிடிக்க தவறிவிடுகிறார்கள்.
🌴நம் உடல் மற்றும் மனதை ஒரே மாதத்தில் நம் விருப்பத்திற்கு மாற்றியமைக்க முடியும்.
🌴ஆம் அதற்கான குறிப்புகள் இதோ. பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து தியானம் பழகுங்கள். இடத்தை மாற்றாதீர்கள். ஒருநாள் கூட தவறவிடாதீர்கள்.
🌴தடிமனான தடுப்பில் அமர்ந்து தியானியுங்கள். தினமும் ஒரே நேரத்தில் பழக மறக்காதீர்கள். படிப்படியாக நேரத்தை கூட்டுங்கள்.
🌴எந்த எண்ணம் வந்தாலும் பரவாயில்லை. ஆரம்பத்தில் நிறைய வரும் வரட்டும். அதைபற்றி கவலை கொள்ளாமல் வெருமனே மூச்சை கவனியுங்கள்.
🌴அவ்வப்போது கவனத்தை இழுத்துவந்து மூச்சில் நிறுத்துங்கள். ஒரு வாரத்தில் மெல்ல மெல்ல உங்களுக்குள் அமைதி பரவுவதை உணர்வீர்கள்.
🌴இரண்டு வாரத்தில் பிரபஞ்ச சக்தி உங்களுக்குள் பாய ஆரம்பத்திருக்கும். மூன்று வாரத்தில் உங்கள் முகம் பொலிவு பெற்றும் உங்களை சுற்றி நல்லதே நடப்பதையும் உணர்வீர்கள்.
🌴ஒரு மாதத்தில் நீங்கள் ஆழ்ந்த தியானநிலையை அடைந்திருப்பீர்கள். இவ்வளவுதான் தியானம். இது உங்களுக்கு நடக்கவில்லை எனில் நான் மேலே கூறியிருப்பதை நீங்கள் கடைபிடிக்கவில்லை என்றே அர்த்தம். வாழ்க வளமுடன்✋🏼
நன்றி
🍁 *யாஷி பிரசாத்* 🍁