#ஜம்மு_காஷ்மீர்_சில_முக்கிய_புள்ளி_விவரங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:49 | Best Blogger Tips

நாம் அனைவரும் அவசியம் அறிய வேண்டியவை.
01. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நிலப்பரப்பில் காஷ்மீர் வெறும் 15%, ஜம்மு 26%, லடாக் மட்டும் 59%.
02. மொத்த ஜனத்தொகை 1.25 கோடி. சுமார் 86,000 சதுர கிமீ பரப்பளவு. அதில் 85% இஸ்லாமியர்கள்.
03. காஷ்மீரில் உள்ள 69 இலட்சம் பேரில் 55 இலட்சம் பேர் காஷ்மீரி மொழியும், மீதம் உள்ள 14 இலட்சம் பேர் உருது மொழியும் பேசுகின்றனர்.
04. ஜம்முவில் உள்ள 53 இலட்சம் பேர் டோக்ரி, பஞ்சாபி, ஹிந்தியும், லடாக்கில் உள்ள 3 இலட்சம் பேர் லடாக்கி மொழியும் பேசுகின்றனர்.
05. காஷ்மீரில் 7. 5 இலட்சம் பேர் குடியுரிமை இல்லாமல் சட்டவிரோதமாகப் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவி வசிக்கின்றார்கள்.
06. ஜம்மு காஷ்மீரில் தேசியத்துக்கு ஆதரவாக 15 மதங்கள் அடங்கிய சிறுபான்மை சமூகங்கள் உள்ளன. இதில் ஷியா முஸ்லீம்கள் 12% ,டோக்ராஸ் காஷ்மீர் பண்டிட்கள், சீக்கியர், பெளத்தர்கள், குஜ்ஜார் முஸ்லீம்கள்(14%), கிறிஸ்த்தவர்கள், பஹாடி முஸ்லீம்கள்(8%) இப்படி 45% சிறுகுழுக்கள் தேசியத்துக்கு ஆதரவாக பாரதத்தோடு தொடர்ந்து இணைந்திருக்க விரும்புகின்றனர்.
07. ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 22 மாவட்டங்கள் இருக்கின்றன. இவற்றுள் 5 மாவட்டங்களைச் சார்ந்தவர்கள் மட்டுமே பிரிவினை வாதத்திற்கு ஆதரவாக உள்ளனர்.
08. பெயரிட்டுச் சொன்னால் ஶ்ரீநகர், ஆனந்த் நாக், பாரமுல்லா, டோதா, புல்வாமா ஆகிய ஐந்து மாவட்ட மக்கள் தான் பிரிவினையை ஆதரிக்கின்றனர்.
09. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் இந்த 5 மாவட்டங்களில் வசிக்கும் 15% சுன்னி பிரிவு இஸ்லாமியர்கள் மட்டுமே பிரிவினைக்கு ஆதரவாக வன்முறையை அரங்கேற்றுகிறார்கள்.
10. மீதமுள்ள 17 மாவட்ட மக்கள் பிரிவினைக்கு எதிராகவும், பயங்கரவாதிகளுக்கு எதிராகவும், தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆதரவாகவும் உள்ளனர்.
11. 90% முஸ்லீம்கள் வசிக்கும் பூஞ்ச், காஷ்மீர் ஆகிய இருமாவட்டங்களின் சரித்திரத்திலேயே இதுவரை பிரிவினைக்கு ஆதரவாக எந்த வித போராட்டமும் முன்னெடுக்கப்படவில்லை.
12. மொத்தத்தில் சுமார் 31% மக்கள் மட்டுமே பாரதத்திற்கு எதிராகப் பிரிவினையை ஆதரிக்கின்றனர். மீதமுள்ள 69% மக்கள் பிரிவினையை உறுதியாக எதிர்ப்பதோடு, பாரதத்தோடு இணைந்திருக்கவே விரும்புகின்றனர்.
13. வெறும் 15% சுன்னி முஸ்லீம்களின் பிரிவினைவாதப் போராட்டத்தை எதோ ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீர் மக்களும் போராடுவதாக ஒரு மாயத் தோற்றத்தைச் சில ஊடகங்கள் முன் வைக்கின்றன. இது முழுக்க முழுக்க தேசவிரோத செயல்.
14. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்களும் கூட இன்று பாரதத்தோடு இணைய விரும்புகின்ற சூழ்நிலையில் தேசவிரோத, போலி, பாகிஸ்தான் ஆதரவு ஊடகங்களை நாம் புறக்கணிக்க வேண்டும்.
#நன்றி: ஜனம் டி.வி