உங்கள் தோல்வி துவண்டு போக அல்ல

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:32 | Best Blogger Tips

உங்கள் தோல்வி துவண்டு போக அல்ல..
......................................................................

நாம் சில வேளையில் வெற்றி பெறுகின்றோம்.சில சமயங்களில் தோல்வி அடைகின்றோம்.இவை இரண்டும் நிந்தரமானாது அல்ல.

இரவும்,பகலும் போல இவை இரண்டும் மாறி,மாறித்தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் வந்து போகிறது.

வெற்றி கிடைத்தால் மிகவும் பூரிப்பு அடைகின்றோம்.

தோல்வி அடைந்தால் மிகவும் துவண்டு போய் விடுகின்றோம்.

எந்த தோல்வியும் துவண்டு போவதற்காக அல்ல.. நமது வழியை மாற்றி, நம்மை ஒரு நல்ல லட்சியத்தை நோக்கி பயணிக்க வைக்க என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மகாத்மா காந்தி, வழக்கறிஞராக படித்து பட்டம் பெற்றிருந்தால், ஒரு பத்து பேருக்கு தெரிந்த வழக்கறிஞராக மட்டுமே இருந்திருப்பார்.

ஆனால், வெள்ளையர்கள் அவரை ரயிலில் இருந்து இறக்கிவிட்ட ஒரு சம்பவத்தால் அவர் வாழ்க்கைப் பயணம் தடம் மாறியது.

அதனால் அவர் உலகம் அறிய ஒரு மா மனிதராக திகழ்ந்தார்.

நமக்கு ஒரு கதவு மூடப்பட்டால், நம்மருகே மற்றொரு கதவு திறந்திருக்கிறது என்று அர்த்தம்.

ஆனால், பலரும், மூடியே கதவருகே அமர்ந்து அழத்தான் செய்கிறார்களேத் தவிர,

திறந்திருக்கும் கதவை கவனிப்பதே இல்லை.

ஒரு தோல்வி தந்த அனுபவத்தைக் கொண்டு, நமது வாழ்க்கையை இன்னும் எவ்வாறு சிறப்பாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.

நாம் அதிகம் விரும்பும் ஒன்றை நாம் இழப்பதற்குக் காரணம்,

நம்மை அதிகம் விரும்பும் ஒன்று நமக்காக காத்திருக்கிறது என்பதால்தான்.


தோல்வி அடையும் போது துவண்டு விடாமல், நமக்கிருக்கும் திறமை மீது நம்பிக்கை வைத்து, மற்றொரு நல்ல வழியை பின்பற்றி, லட்சியத்தை அடைய முயற்சியுங்கள்.

தோல்விதான் நமக்கிருக்கும் திறனை வெளிப்படுத்தும் கருவி என்பதை உணருங்கள். நீங்கள் விரும்பியதே கிடைத்துவிட்டால், உங்கள் மனத் திடம் வெளிப்படாது.

உங்கள் மீதான நம்பிக்கை பயனற்றுப் போகும்.

உங்களைப் பற்றி உங்கள் தோல்வியில்தான் நீங்கள் முழுமையாக அறிய முடியும்.

தோல்வி என்பது வெற்றியின் முதற்படி என்ற பழமொழி பொய்யல்ல.

ஒரு வெற்றியை பெற்றவர்கள், அந்த படிகட்டிலேயே அமர்ந்துவிடுவார்கள்.

தோல்வியினால், அடுத்தடுத்த படிகட்டுகளை அடைந்து உச்சத்தை எட்டுபவர்கள்தான் அதிகமாக வெற்றி அடைகின்றார்கள்.

எந்த தோல்வியும், நிரந்தரமல்ல.

ஒரு கதவு மூடினால், அதனருகில் இருக்கும் மற்றொரு கதவை பலம் கொண்டு திறவுங்கள்.

நீங்கள் பயணிக்கும் பாதை லட்சியத்தை எட்டுவதாக இருக்கும்

உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி
அன்பு நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்...

இன்றைய நாள் தங்களுக்கு உற்சாகமும்,

உத்வேகமும் தரும் நாளாக அமையட்டும்..

"" இன்றைய சிந்தனை "" நாம் சில வேளையில் வெற்றி பெறுகின்றோம்.சில சமயங்களில் தோல்வி அடைகின்றோம்.இவை இரண்டும் நிந்தரமானாது அல்ல.

இரவும்,பகலும் போல இவை இரண்டும் மாறி,மாறித்தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் வந்து போகிறது.

வெற்றி கிடைத்தால் மிகவும் பூரிப்பு அடைகின்றோம்.

தோல்வி அடைந்தால் மிகவும் துவண்டு போய் விடுகின்றோம்.

எந்த தோல்வியும் துவண்டு போவதற்காக அல்ல.. நமது வழியை மாற்றி, நம்மை ஒரு நல்ல லட்சியத்தை நோக்கி பயணிக்க வைக்க என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மகாத்மா காந்தி, வழக்கறிஞராக படித்து பட்டம் பெற்றிருந்தால், ஒரு பத்து பேருக்கு தெரிந்த வழக்கறிஞராக மட்டுமே இருந்திருப்பார்.

ஆனால், வெள்ளையர்கள் அவரை ரயிலில் இருந்து இறக்கிவிட்ட ஒரு சம்பவத்தால் அவர் வாழ்க்கைப் பயணம் தடம் மாறியது.

அதனால் அவர் உலகம் அறிய ஒரு மா மனிதராக திகழ்ந்தார்.

நமக்கு ஒரு கதவு மூடப்பட்டால், நம்மருகே மற்றொரு கதவு திறந்திருக்கிறது என்று அர்த்தம்.

ஆனால், பலரும், மூடியே கதவருகே அமர்ந்து அழத்தான் செய்கிறார்களேத் தவிர,

திறந்திருக்கும் கதவை கவனிப்பதே இல்லை.

ஒரு தோல்வி தந்த அனுபவத்தைக் கொண்டு, நமது வாழ்க்கையை இன்னும் எவ்வாறு சிறப்பாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.

நாம் அதிகம் விரும்பும் ஒன்றை நாம் இழப்பதற்குக் காரணம்,

நம்மை அதிகம் விரும்பும் ஒன்று நமக்காக காத்திருக்கிறது என்பதால்தான்.


தோல்வி அடையும் போது துவண்டு விடாமல், நமக்கிருக்கும் திறமை மீது நம்பிக்கை வைத்து, மற்றொரு நல்ல வழியை பின்பற்றி, லட்சியத்தை அடைய முயற்சியுங்கள்.

தோல்விதான் நமக்கிருக்கும் திறனை வெளிப்படுத்தும் கருவி என்பதை உணருங்கள். நீங்கள் விரும்பியதே கிடைத்துவிட்டால், உங்கள் மனத் திடம் வெளிப்படாது.

உங்கள் மீதான நம்பிக்கை பயனற்றுப் போகும்.

உங்களைப் பற்றி உங்கள் தோல்வியில்தான் நீங்கள் முழுமையாக அறிய முடியும்.

தோல்வி என்பது வெற்றியின் முதற்படி என்ற பழமொழி பொய்யல்ல.

ஒரு வெற்றியை பெற்றவர்கள், அந்த படிகட்டிலேயே அமர்ந்துவிடுவார்கள்.

தோல்வியினால், அடுத்தடுத்த படிகட்டுகளை அடைந்து உச்சத்தை எட்டுபவர்கள்தான் அதிகமாக வெற்றி அடைகின்றார்கள்.

எந்த தோல்வியும், நிரந்தரமல்ல.

ஒரு கதவு மூடினால், அதனருகில் இருக்கும் மற்றொரு கதவை பலம் கொண்டு திறவுங்கள்.

நீங்கள் பயணிக்கும் பாதை லட்சியத்தை எட்டுவதாக இருக்கும்

உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி
அன்பு நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்...

இன்றைய நாள் தங்களுக்கு உற்சாகமும்,

உத்வேகமும் தரும் நாளாக அமையட்டும்..

"" இன்றைய சிந்தனை ""