வெள்ளைப் பூண்டு 30 மருத்துவ குணமும் சமையலில் சேர்த்துக் கொள்ளும் பக்குவமுறையும்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 12:45 | Best Blogger Tips
நாம் தினசரி சமையலில் பூண்டை அளவாக பயன்படுத்தினாலே போதும் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்பது எவ்வளவு பேருக்குத் தெரியும்

நான் பூண்டு மருத்துவத்தை பற்றி சொல்ல வில்லை அதை சொன்னால்
கட்டுரை விரிவாக போய்விடும் (வேற எத சொல்ற என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது ) பூண்டைதினமும் சாப்பிட்டால் எது எதை விட்டு பாதுகாக்கும்
என்று மட்டும் தான் சொன்னேன்

1)
நோய் எதிர்ப்புசக்தியை அதிகறிக்கிறது,

2)
இரத்தத்தில் வெள்ளணுத்திறனின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது,

3)
உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது

4)
இரத்தத்தை தூய்மை படுத்துகிறது,

5)
மாரடைப்பு மற்றும் இதய நோயின் தாக்குதல் ஏற்படாமல் தடுக்கிறது,

6)
உடல் பருமன் குறைக்க உறுத்துணை புரிகிறது( HDL = LDL ),

7)
உடலில் நல்ல கொலாஸ்டிரல் HDL உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.

8)
இரத்த குழாய்களில் LDL கொழுப்பு படிந்து அடைக்காமல் தடுக்கும்

9)
சிறுநீர் தாராளமாக பிரிய வகைச்செய்கிறது,

10)
வாயுத்தொல்லையை ஏற்படாமல் தடுக்கிறது,

11)
அஜீரணக் கோளாறுகளை ஏற்படாமல் தடுக்கிறது,

12)
புளிப்பு சேருவதால் உண்டாகும் வயிற்று எரிச்சலைபோக்குகிறது,

13)
வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது.

14)
நன்கு பசியைத் தூண்டும்.

15)
குடலில் உள்ள புழுக்களை அகற்றுகிறது

16)
மலச்சிக்கலைப் போக்கி மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.

17)
வியர்வையை பெருக்கி கழிவுகளி வெளியேற்றுகிறது,

18)
பித்தம் ஏற்படாமல் தடுக்கிறது,

19)
ஒற்றைத்தலைவலியை போக்குகிறது,

20)
மாதவிடாய்க் கோளாறுகளை தடுக்கிறது

21)
கருப்பையை வலுப்படுத்தும்.

22)
சோர்வை போக்கி உடற் சக்தியை அதிகப்படுத்துகிறது,

23)
மூளையை பலம்பெறச் செய்கிறது

24)
சளித்தொல்லையில் இருந்து பாதுகாக்கிறது,

25)
தண்டுவட உறையழற்சிக்கும் சிறந்த மருந்தாகிறது,

26)
தாய்ப்பாலை விருத்தி செய்ய செய்கிறது,

27)
கைகால் மூட்டுவலி மற்றும் முடக்கு வாதம் ஏற்படாமல் தடுக்கிறது,

28)
தாதுவை விருத்தி செய்யும். விந்துவைக் கெட்டிப்படுத்தும்.

29)(
சக்கரை) நீரழிவைக் கட்டுப்படுத்த உதவுகிறது,

30)
தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.

பூண்டை உபயோகப்படுத்தும் முறை :-

1)
பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே நல்லது.

2)
நாட்டுப்பூண்டையே அதிகமாக பயன்படுதுங்கள்.சைனா பூண்டை விட
நாட்டுப்பூண்டிலேயே அதிக சத்து உள்ளது

3)
பூண்டை மறைமுகமான விதத்தில் பூண்டு ஊறுகாய், பூண்டு மாத்திரை
போன்ற வடிவில் சாப்பிடுவதை விட நேரடியாக சாப்பிடுவதே நல்லது

4)
பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது.அதிகளவில்
பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும்.

5)
பூண்டின் காரம் போக சிறிது மோர் அருந்தலாம் இல்லை என்றாலும்
ஒன்றும் பாதிப்பிலை

6)
அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல ரோம்பவும்
அதிகமாக சேர்த்துக் கொல்லாதீர்கள்

7)
தினசரி ஒரு நபருக்கு ஆறு பல்லு விதம் கணக்கிட்டு சேர்த்துக்
கொள்ளுங்கள்

இனி விரிவாக பார்போம்:-

1,2)
நோய் எதிர்ப்புசக்தியை அதிகறிக்கிறது, இரத்தத்தில் உள்ள வெள்ளை
அணுக்களின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது:-
பூண்டில் உள்ள சல்பர் கிருமிகளை அளிக்க வல்லது. இது இரண்டு வகையான ஆண்டி பயாடிக்சைஸ உற்பத்தி செய்கிறது. இதன் மூலம் உடலைத் தாக்கும் 15 வகையான பாக்டீரியாக்களை அழித்து .இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை பாதுகாத்து நோய் எதிர்ப்புசக்தியை அதிகறிக்கிறது


3,4,5)
உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது,இரத்தத்தை தூய்மை படுத்துகிறது மாரடைப்பு மற்றும் இதய நோயின் தாக்குதல் ஏற்படாமல் தடுக்கிறது:-
இரத்தத்தில் கலந்துள்ள கொலஸ்ட்டிராலை கரைத்து வெளியேற்றும் தன்மை பூண்டுக்கு உண்டு. மேலும் இரத்தத்தின் கடினத் தன்மையைக் குறைத்து ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற வேதிப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.இதனால் இரத்த அழுத்தம் நீங்கி, ரத்தம் சீராக ஓட ஏதுவாகிறது.

6,7,8)
உடல் பருமன் குறைக்க உறுத்துணை புரிகிறது( HDL = LDL ),உடலில் நல்ல கொலாஸ்டிரல் HDL உருவாக பூண்டின் பங்கு மகத்தானது, இரத்த குழாய்களில் LDL கொழுப்பு படிந்து அடைக்காமல் தடுக்கும்:-
பூண்டில் உள்ள சல்பர்,மற்றும் குளோரின் நமது மூளையில் உள்ள பிட்யூட்டரி என்ற சுரப்பியைத் தூண்டிவிட்டு கொழுப்புச் சத்தையும், கார்போஹைட்ரேட் சத்தையும் ஜீரணிக்க உதவுகிறது கெட்ட கொழுப்பை ( LDL)குறைத்து நல்ல கொழுப்பை(HDL)அதிகரிக்கிறது


9,10,11,12,13,14,15,16,17)
சிறுநீர் தாராளமாக பிரிய வகைச்செய்கிறது, வாயுத்தொல்லையை ஏற்படாமல் தடுக்கிறது,அஜீரணக்கோளாறுகளை ஏற்படாமல் தடுக்கிறது,புளிப்பு சேருவதால் உண்டாகும் வயிற்று எரிச்சலை போக்குகிறது,வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும்,குடலில் உள்ள புழுக்களை அகற்றுகிறது மலச்சிக்கலைப் போக்கி மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும். வியர்வையை பெருக்கி கழிவுகளை வெளியேற்றுகிறது:-
நமது சுவையான உணவு முறையில் வாயு பதார்த்தங்களே அதிகமாக
இடம்பிடிக்கின்றன.இதனால் மலச்சிக்கல் உண்டாகி வாய்வு உண்டாகி
அஜீரணக்கோளாறு புளிப்பு வயிற்று பொறுமல் வயிற்று எரிச்சல் போன்றவை உண்டாகி பாடாய் படுத்தும் தினமும் உணவில் பூண்டை சேர்த்து வந்தால் இவை அனைத்தையும் தடுத்து குடலில் உள்ள புழுக்களை அகற்றி பசியைத் தூண்டும்


8,19)
பித்தம் ஏற்படாமல் தடுக்கிறது,ஒற்றைத் தலைவலியை போக்குகிறது:-
பித்தம் மற்றும் ஒற்றைத்தலைவலிக்கு பூண்டே கைகண்ட மருந்து நம் முன்னோர்கள் சொல்லிவைத்து இருகின்றனர்

20)
மாதவிடாய்க் கோளாறுகளை தடுக்கிறது:-
பூண்டில் உள்ள சல்பர் மற்றும் ஆண்டி ஆக்ஸ்டன்ஸ் கருப்பையை வலுவாகி மாதவிடாய்க் கோளாறுகளை கட்டுப்படுத்துகிறது


21,22)
மூளையை பலம்பெறச் செய்கிறதுசோர்வை போக்கி உடற் சக்தியை அதிகப்படுத்துகிறது:-
பூண்டில் உள்ள விட்டமின் B மற்றும் K உடலுக்கு தேவையான சக்தியை சீராக செம்மை படுத்தி பலம் பெற செய்கிறது.