தொலைக்காட்சிப்பெட்டி பற்றிய தகவல்கள் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:25 | Best Blogger Tips
தொலைக்காட்சிப்பெட்டி  பற்றிய தகவல்கள்:-

இன்று டி.வி. என்று அழைக்கப்படும் படக்காட்சி பெட்டி உலக மக்களின் அன்றாட வாழ்வில் பெரும் பங்கு வகிக்கிறது. உலகின் எந்த ஒரு இடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் போன்றவற்றை நாம் நம் வீட்லிருந்தே டி.வி. மூலம் கண்டு மகிழலாம்.

                ரேடியோ, டெலிபோன் மூலம் நாம் வெகு தூரத்திலிருந்து வரும் ஒலியைக் கேட்கிறோம். ஒலியை தூரத்திலிருந்து ஒலிபரப்ப முடியுமானால்,ஏன் படத்தையும் ஒளிபரப்ப முடியாது? என்ற சிந்தனை மூலம் டெலிவிஷன் உருவாக்கப்பட்டது. இதில் மின்காந்த அலைகள் மூலம் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகிறது.

                ஜார்ஜ் காரே என்ற அமெரிக்கர் முதலில் இத்துறையில் சில ஆய்வுகள் செய்தார். 1875 - ஆம் ஆண்டு ஒரு கருவியை உருவாக்கி அதில் லென்ஸ் வழியாக ஒளிக்கதிர்களை அனுப்பி மின் அலையாக்கினார்.

                1884 - ல் பால் நிப்கோவ் ஒரு கருவியை உருவாக்கினார். அதில் ஒரு டிஸ்கும், 24 துளைகளும் இருந்தன. இதன் மூலம் படத்தினை கொஞ்ச தூரம் அனுப்பினார்.

                டெலிவிஷனை முதலில் கண்டறிந்த பெருமை (Baird) பெயர்ட் என்பவரைச் சாரும். நிப்கோவ்வின் ஆய்வு பெயர்ட்க்கு டெலிவிஷன் கண்டுபிடிக்க தூண்டுகோலாக இருந்தது. பெயர்ட் கண்டுபிடித்த டெலிவிஷனில் ஒரு டிஸ்கும், அதன்பின் லென்சும் பொருத்தப்பட்டது. 1920 - ல் டெலிவிஷன் வழியாக இவர் அசையும் பிம்பங்களை திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பினார்.

                1928 - ல் அலெக்சாண்டர்சன் டெலிவிஷன் செட்டை உருவாக்கி ஒரு நாடகத்தைப் படம்பிடித்து டெலிவிஷன் வழியாக ஒளிபரப்பினார். பெயர்ட் வியாபார ரீதியில் டெலிவிஷன் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அடித்தளமிட்டார்.

                1930 - ல் பல தனியார் நிறுவனங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முன்வந்தன. அதில் முக்கியமானது லண்டனிலுள்ள பிரிட்டிஸ் பிராட்காஸ்டிங் கம்பெனி (BBC). அவர்கள் 1932 - ல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினார்கள்.

                பின் பெயர்ட் கலர் டெலிவிஷன்களை அறிமுகப்படுத்தினார். டெலிவிஷனில் இரு குழாய்களைப் பொருத்தி ஒன்றில் மெர்குறியும்,ஹீலியமும் அடைத்து பச்சை, நீல நிறங்களையும், ஒன்றில் நியான் வாயுவை அடைத்து சிவப்பு நிறத்தையும் உருவாக்கினார். இதன் மூலம் கலர் டெலிவிஷன் உருவானதுஇன்று டி.வி. என்று அழைக்கப்படும் படக்காட்சி பெட்டி உலக மக்களின் அன்றாட வாழ்வில் பெரும் பங்கு வகிக்கிறது. உலகின் எந்த ஒரு இடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் போன்றவற்றை நாம் நம் வீட்லிருந்தே டி.வி. மூலம் கண்டு மகிழலாம்.

ரேடியோ, டெலிபோன் மூலம் நாம் வெகு தூரத்திலிருந்து வரும் ஒலியைக் கேட்கிறோம். ஒலியை தூரத்திலிருந்து ஒலிபரப்ப முடியுமானால்,ஏன் படத்தையும் ஒளிபரப்ப முடியாது? என்ற சிந்தனை மூலம் டெலிவிஷன் உருவாக்கப்பட்டது. இதில் மின்காந்த அலைகள் மூலம் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகிறது.

ஜார்ஜ் காரே என்ற அமெரிக்கர் முதலில் இத்துறையில் சில ஆய்வுகள் செய்தார். 1875 - ஆம் ஆண்டு ஒரு கருவியை உருவாக்கி அதில் லென்ஸ் வழியாக ஒளிக்கதிர்களை அனுப்பி மின் அலையாக்கினார்.

1884 - ல் பால் நிப்கோவ் ஒரு கருவியை உருவாக்கினார். அதில் ஒரு டிஸ்கும், 24 துளைகளும் இருந்தன. இதன் மூலம் படத்தினை கொஞ்ச தூரம் அனுப்பினார்.

டெலிவிஷனை முதலில் கண்டறிந்த பெருமை (Baird) பெயர்ட் என்பவரைச் சாரும். நிப்கோவ்வின் ஆய்வு பெயர்ட்க்கு டெலிவிஷன் கண்டுபிடிக்க தூண்டுகோலாக இருந்தது. பெயர்ட் கண்டுபிடித்த டெலிவிஷனில் ஒரு டிஸ்கும், அதன்பின் லென்சும் பொருத்தப்பட்டது. 1920 - ல் டெலிவிஷன் வழியாக இவர் அசையும் பிம்பங்களை திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பினார்.

1928 - ல் அலெக்சாண்டர்சன் டெலிவிஷன் செட்டை உருவாக்கி ஒரு நாடகத்தைப் படம்பிடித்து டெலிவிஷன் வழியாக ஒளிபரப்பினார். பெயர்ட் வியாபார ரீதியில் டெலிவிஷன் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அடித்தளமிட்டார்.

1930 - ல் பல தனியார் நிறுவனங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முன்வந்தன. அதில் முக்கியமானது லண்டனிலுள்ள பிரிட்டிஸ் பிராட்காஸ்டிங் கம்பெனி (BBC). அவர்கள் 1932 - ல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினார்கள்.

பின் பெயர்ட் கலர் டெலிவிஷன்களை அறிமுகப்படுத்தினார். டெலிவிஷனில் இரு குழாய்களைப் பொருத்தி ஒன்றில் மெர்குறியும்,ஹீலியமும் அடைத்து பச்சை, நீல நிறங்களையும், ஒன்றில் நியான் வாயுவை அடைத்து சிவப்பு நிறத்தையும் உருவாக்கினார். இதன் மூலம் கலர் டெலிவிஷன் உருவானது.
 
 
Via Karthikeyan Mathan