இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டே வாழுங்கள்.!*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:31 | Best Blogger Tips

 





*எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் கதவு சிறியது தான்.*

*எவ்வளவு பெரிய கதவாக இருந்தாலும் பூட்டு சிறியது தான்.*

*எவ்வளவு பெரிய பூட்டாக இருந்தாலும் சாவி சிறியது தான்.*

*இவ்வளவு சிறிய சாவியை வைத்து அவ்வளவு பெரிய வீட்டை திறந்து செல்கிறோம்.*

*வாழ்க்கையும் இதே மாதிரி தான்.*

*நமக்கு வரும் எவ்வளவு பெரிய பிரச்சனையா இருந்தாலும் அதன் தீர்வுக்கு ஒரு சிறிய மாற்றமோ, சிறிய தீர்மானமோ போதும்.*

*அதுவே அத்தனை பிரச்சினையைத் தீர்க்கும் சாவியாக அமைந்து விடும்.*

*சாவி இல்லாத பூட்டை மனிதன் உருவாக்குவதில்லை. தீர்வு இல்லாத பிரச்சினைகளை இறைவன் அனுமதிப்பதில்லை.*

*எந்த சூழ்நிலையிலும் இறைவனுக்கு நன்றி செலுத்திக்கொண்டே இருங்கள்.!*

*அவன் தான் இறைவன் பூமியில் உள்ள எல்லா உயிரினங்களுக்கு உணவு வழங்குகின்றான்.*

*உலகில் மனிதனாய்ப் பிறந்திட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கஷ்டங்கள்.*

*இறைவன் சிலரை வறுமையால் சோதிக்கின்றான்,*

*இன்னும் சிலரை நோய் நொடிகளால் சோதிக்கின்றான்,*

*இன்னும் சிலரைக் கடன் தொல்லைகளால் சோதிக்கின்றான்.*

*ஆக, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள்.*

*நாம் நினைத்து கொண்டிருக்கிறோம், நமக்கு மட்டும் தான் இவ்வளவு சோதனைகள் என்று, கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் புரிய வரும் மற்ற மனிதர்களும் நம்மைப் போன்றோ, நம்மை விட அதிகமாகவோ சோதனைக்குள்ளாக்கப் படுகிறார்கள் என்று.*

*இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.*

*நீங்கள் உங்களது குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து இருக்கின்றீர். எத்தனையோ பேர் தமது உறவுகளை இழந்து தவிக்கின்றனர்.*

*இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.*

*நீங்கள் உங்களது தொழிலை நோக்கி செல்கின்றீர். எத்தனையோ பேர் தொழில் இல்லாமல் அலைகின்றனர்.*

*இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.*

*நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் உலா வருகின்றீர். எத்தனையோ நோயாளிகள் அதைப் பெறுவதற்காக வேண்டி கோடிபணத்தைக் கொட்டியும் சுகமில்லாமல் தவிக்கின்றனர்".*

*இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.*

*நீங்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றீர். எத்தனையோ மனிதர்கள் மரணித்துவிட்டனர்.*

*இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.*

*நீங்கள் நீங்களாக இருக்கின்றீர். எத்தனையோ பேர் அவர்கள் உங்களைப் போல் இருக்க ஆசைப்படுகின்றனர்.*

*இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.*

*எந்நேரமும் மகிழ்ச்சியுடன் இருக்க பிறரை மகிழ்வியுங்கள்.!*

*இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டே இருங்கள்.!*

*இறைவனிடம் முழுமையாக சரணடைந்து விடுங்கள்.!*

*உங்கள் வாழ்க்கை வளமாகி விடும்.! சத்தியமான உண்மை.!*

 

 நன்றி இணையம்