விவசாயிகளிடம் கூறியது என்ன? ஊடகங்கள் பரப்புவது என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:07 | Best Blogger Tips

 


பாரதப் பிரதமர் மோடி விவசாயிகளிடம் கூறியது என்ன? ஊடகங்கள் பரப்புவது என்ன?

தெய்வமே நற்காரியம் செய்வதிலிருந்து பின்வாங்காத தன்மையை கொடு

செய்தது விவசாயிகளுக்காக செய்வது தேசத்திற்காக

என் உழைப்பில் குறை வைத்தது இல்லை

இனியும் வைக்கமாட்டேன் உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன் நன்றி

நாட்டுமக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்னுடைய தவத்தில் ஏதேனும் குறை இருக்கிறதா? என்பது எனக்கு தெரியவில்லை.

பாரதப் பிரதமர் மோடி 3 மூன்று வேளாண் சட்டம் குறித்து பேசியதில், பலவற்றை மறைத்து விட்டு இங்குள்ள முன்கள ஊடகங்கள், பத்திரிக்கையாளர்கள், நெறியாளர்கள், நடிகர்கள், என பலர் அவரை கேலி, கிண்டல், செய்து வருகின்றனர்.


ஆனால் பிரதமர் மோடி கூறியது என்ன?

ஊடகங்கள் சொல்வது என்ன?

பாரதப் பிரதமர் கூறியது.

மூன்று விவசாயச் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம் என்பதை இன்று முழு நாட்டிற்கும் சொல்ல வந்துள்ளேன்.

இம்மாத இறுதியில் தொடங்கும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில், இந்த மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்வதற்கான அரசியலமைப்பு செயல்முறையை முடிப்போம்.

எங்கள் அரசு, விவசாயிகளின் நலனுக்காக,

குறிப்பாக சிறு விவசாயிகளின் நலனுக்காக,

நாட்டின் விவசாய உலகின் நலனுக்காக,

கிராம ஏழைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக, முழு நேர்மையுடன், அர்ப்பணிப்புடன் விவசாயிகளுக்காக இந்த சட்டம் நல்ல நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டது.

அத்தகைய புனிதமான, முற்றிலும் தூய்மையான, விவசாயிகளின் நலன் சார்ந்த விஷயத்தை,

எங்களால் முயன்றும் சில விவசாயிகளுக்கு விளக்க முடியவில்லை.

விவசாயப் பொருளாதார வல்லுநர்கள், விஞ்ஞானிகள், முற்போக்கு விவசாயிகள், ஆகியோரும் விவசாயச் சட்டங்களின் முக்கியத்துவத்தை அவர்களுக்குப் புரியவைக்க தங்களால் இயன்ற வரை முயற்சி செய்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையில் சிலமாற்றங்கள் செய்ய முன்வந்தோம்,

2 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்கவும் நாங்கள் தயாராகவும் இருந்தோம்.

வேளாண் சட்டங்களை ஆதரித்த பலருக்கும் நன்றி.

தூய்மையான எண்ணத்துடன் கொண்டுவரப்பட்ட சட்டத்தை சில விவசாயிகளுக்கு புரியவைக்க முடியவில்லை.

ஒரு குறிப்பிட்ட விவசாயிகள் தான் இச்சட்டத்தை எதிர்த்தனர் அவர்களும் எங்களுக்கு முக்கியம்.

நாட்டுமக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்

தூய்மான இதயத்தோடு சொல்கிறேன்

நமது கடுமையான முயற்சியில் கூட ஏதாவது சில குறைகள் இருந்திருக்கலாம்.

விளக்கின் ஒளி போன்ற உண்மையை சில விவசாய சகோதரர்களுக்கு புரியவைக்க முடியவில்லை.

3 வேளாண் சட்டமும் வாபஸ் பெற முடிவு

போராட்ட களத்தில் இருக்கும் அனைத்து விவசாயிகளும் வீடுதிரும்புங்கள்,

உங்கள் நிலங்களுக்கு திரும்புங்கள்,

உங்கள் குடும்பத்தாரை போய் பாருங்கள்.

இன்று விவசாயத்துறை தொடர்பான மற்றுமொரு முக்கிய தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளது.

ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை அதாவது இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க, நாட்டின் மாறி வரும் தேவைகளை மனதில் கொண்டு பயிர் முறையை அறிவியல் ரீதியாக மாற்ற வேண்டும்.

எம்.எஸ்.பி ( குறைந்த பட்ச ஆதார விலை) மிகவும் பயனுள்ளதாகவும் வெளிப்படையாகவும் மாற்ற, எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற அனைத்து விஷயங்களிலும் முடிவுகளை எடுக்க ஒரு குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில், மத்திய அரசு, மாநில அரசுகள், விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் பொருளாதார நிபுணர்கள், பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள்.

தெய்வமே நற்காரியம் செய்வதிலிருந்து பின்வாங்காத தன்மையை கொடு

செய்தது விவசாயிகளுக்காக செய்வது தேசத்திற்காக

என் உழைப்பில் குறை வைத்தது இல்லை

இனியும் வைக்கமாட்டேன் உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன் நன்றி

 

நன்றி இணையம்