தேவைப்படாத வார்த்தைகளை

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:14 | Best Blogger Tips

 


பிரபல நிற்வாகம் ஒன்றின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. விமான நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி வாடகைவண்டி ஒன்றை பிடித்து... உடனே விமான நிலையம் போகுமாறு ஓட்டுனரிடம் சொன்னார்!

இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னால் சென்ற மகிழ்வுந்து ஒன்று திரும்புவதற்கான செய்கை எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட ஒரு கணம் நிலை தடுமாறிய வாடகைவண்டி ஓட்டுனர் உடனே அவசரமாய் நிருத்தம் செய்து சரியாக முன்சென்ற மகிழ்வுந்தை இடிக்காமல் நிறுத்தினார்!

அந்த வாகனத்திலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களை கன்னா பின்னாவென்று நாகூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான்! இந்த வாகன ஓட்டியோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் வெறும் ஒரு புன்னகையை மட்டும்சிந்திவிட்டு குழந்தைபோல் கைகளை காட்டுகிறார்!

அவர் அப்படி செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒருவரை எதிர்ப்பு செய்வது போல இல்லை.

ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்லஅவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்..?”

என்று அதிகாரி ஓட்டுனரிடம் கேட்டார்.

அதற்கு அவர் சொன்னார்!

இப்படிப்பட்ட மனிதர்களுக்குகுப்பை வண்டிஎன்று பெயர்!

பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள்!

மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும், வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்கும்! அது போன்ற குப்பைகள் சேரச்சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை.

*சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள்*.

அதை நாம் தனிப்பட்டதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும்! அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது.


நம்ம பேர்தான் கெட்டுப்போகும்…!!”

என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணுக்கத்தை அறிந்து வியந்துவிட்டார்!

இதில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி என்னவென்றால் வாழ்க்கையில் *வெற்றி பெற்ற சாதனையாளர்கள்* எவரும் இந்த குப்பைவண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள *அனுமதிக்கவே மாட்டார்கள்* என்பது தான் ! !

அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ *காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ, அல்லது வன்சொற்கள் வீசினாலோ* பதிலுக்கு நீங்களும் வார்த்தை யுத்தத்தில் இறங்காது வெறும் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள்*.

*நீதி:* *தேவைப்படாத வார்த்தைகளை/பேச்சை தவிர்ப்பது வெற்றிக்கான/நல்வாழ்விற்கான சுருக்கப்பாதையாய் அமையும்!!!!!*

 

நன்றி இணையம்