சிவராத்திரி சாபங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:00 | Best Blogger Tips

 


சிவராத்திரி சாபங்கள்

---------------------------------------

சிவராத்திரி பற்றி முக நூலில், பத்திரிகைகளில் பலதரப்பட்ட தகவல்கள் வந்தபடி/பதிந்தபடி இருக்கிறது,

மகாசிவராத்திரி அன்று நாம் செய்ய கூடாத சில நடைமுறை பழக்கத்தை பழக்கத்தை பற்றி தெரிந்து கொள்ளவே இன்று சித்தர்களின் குரலில் இந்த பதிவை தருகிறேன்....

நான் கடந்த வருடம் சிவராத்திரி அன்று சிவபெருமானை தரிசிக்க சிவன் கோவில் ஒன்றிற்கு சென்ற பொழுது ஒரு புரம் உணவு வழங்க பட்டு கொண்டுஇருந்தது. மக்கள் உணவுகளை உண்டு விட்டு கோவிலில் இலைகளை சிதறி கோவிலை அசுத்த படுத்தி கொண்டு இருந்தார்கள்.

மஹா சிவராத்திரி அன்று செய்ய கூடாத மிக முக்கியமான தவறு பக்தர்களுக்கு உணவு அளிப்பது. அடியார்கள், சிவாச்சாரியார்கள், கோவிலில் உள்ள குருக்கள் ஏன் இதை கவனித்து தானம் செய்பவர்களிடம் சொல்ல தவறுகிறார்கள் என்று புரிய வில்லை.

உண்மையில் சிவராத்திரி நமக்கு அருளப்பட்டது காரணம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்,

மனிதர்களுக்கு ரொம்ப முக்கியானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம், இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.


உணவையும் உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெற முடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும். வைகுண்ட ஏகாதேசியும் இந்த நோக்கம் தான்.

ஆனால் இன்று கோவிலில், நாளிதழ்களில் அவர்கள் பதிகிறார்கள்.

"மஹா சிவராத்திரி விழா" என்று...

ஒரு அன்பர் சொல்கிறார், இரவு மசாலா பால் என் உபயம். அடுத்தவர் தயிர் சாதம் என் உபயம். 12 மணிக்கு என்னுடைய உணவு என.. கோவில் என்ன சிற்றுண்டி கடையா? இப்படி பிரசாதம் என்று அவர்கள் பசியை வெல்ல உதவாமல் தரிசிக்க வரும் பக்தர்களை பசியாற்றி


மஹா சிவராத்திரி நோக்கத்தை கெடுத்து சாபத்தை பெறுகிறார்கள் என்ற காரணத்தை யார் தான் எடுத்து சொல்வது....

கோவில் நிர்வாகம் கண்டு கொள்வது இல்லை, மகாசிவராத்திரி அன்று அம்பாளே உணவு அருந்தாமல் இருக்கும் பொழுது நமக்கு ஏன் உணவு ..

மேலும் சிவ பெருமான் ஆரவாரத்தை விரும்பாதவர்,

ஏகாந்தம்; ஏகாந்தம்; ஏகாந்தம்.

முற்றிலும் அமைதி இவர் விரும்புவது. அமைதி, மஹா சிவராத்திரி அன்று சிவபுராணம், கோளறு பதிகம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜப் பத்து, பரமசிவன் ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம். தமிழில் திருமறைகளையும் ஓதலாம்.

சிவராத்திரியன்று பஞ்சாட்சர மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாள்களில் நூறு முறை பஞ்சாட்சரம் ஜெபித்த பலன் கிட்டும் என்கிறது சாஸ்திரம்.

ஆனால் பக்தர்களின் ஆரவாரம், கேளிக்கைகள், சப்தம் கோவிலை பிளக்கிறது. சிவராத்திரி விழாவாக மாறிக்கொண்டு இருக்கிறது.

இது இப்படி இருக்க ஆசிரமங்களில் எல்லாம் விடிய விடிய ஆட்டம், பாட்டம், ஒரே கொண்டாட்டம் பக்தி என்ற பேரில், ஏன் சாபத்தை இப்படி வாங்குகிறீர்கள்.

உண்மையில் ஆன்ம தரிசனம் தேடும் சிவ பித்தர்களுக்கு.....

மாலை 6 மணிக்குள் குளித்து விட்டு உணவு முடித்து விட்டு கோவிலுக்கு

செல்லுங்கள். பணியில் உள்ளவர்கள் பணியை முடித்து விட்டு குளித்து விட்டு

கோவிலுக்கு சென்று அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து சிவ சிந்தனைகள் செய்தலே போதுமானது,

மனதில் சொல்லவேண்டிய சிவலய மந்திரம்

"சிவாய நம ஓம்"

"சிவாய சிவ ஓம்"

"சிவாய வசி ஓம்"

"சிவ சிவ சிவ ஓம்"

அல்லது என் குரு மாபெரும் சிவயோகி எனக்கு உபதேசித்த அபூர்வ சிவ மந்திரம்

"ஓம்-சிவ-சிவ-ஓம்"

இப்படி செய்வது ஒரு விதம்,

மற்றது 9 லிங்க தரிசனம் ஒரே இரவில் தரிசிப்பது ஒரு விதம்,

சிவ பெருமான் ஆலகால விஷத்தை உட்கொண்டதால் அவரோட உடல் மிகவும் வெப்பமாக மாறி விடுவதாக ஐதீகம். அந்த வெப்பத்தைத் தணிப்பதற்காகவே அவருக்குப் பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம்.

தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது எண்ணற்ற பலன்களைக் கொடுக்கக் கூடியது,

முடிந்தால் இவைகளை கோவிலுக்கு உபயமாக தரலாம்,

இப்படி சரியாக எதுவும் செய்யாமல் இரவு முழுவதும் தொலைகாட்சி

பார்த்து கண்விழிப்பது, சும்மா நண்பர்களுடன் கோவிலை சுற்றி வருவது, கோவிலில் உணவு கொடுத்து புண்ணியம் சேர்கிறேன் என்று

செய்வது பலன் இல்லை...

"சிவராத்திரி" என்ற பெயர் வர காரணம் அம்பாள் தான், பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே - அதாவது "சிவராத்திரி" என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.

சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் - மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை; தங்களை (சிவனை)ப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்..

சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே "சிவராத்திரி" என வழங்கப்பட்டு, அனைவராலும் கொண்டாடப்படுகிறது. பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.

முடிந்தால் முறையாக வழிபாடு செய்யுங்கள்,

முடியவில்லை என்றால் அமைதியாக உங்கள் வீட்டில் இருங்கள்,

தவறுகளும், மாற்றுதலும் செய்யவேண்டாம்....

நன்றி

அகத்தியர்

திருமூலர்

காகபுஜண்டர் பெருமானின் அருளாசிகளுடன்

 

நன்றி இணையம்