உலகில் ஒரே ஒருநாடு மட்டும்தான் கொரோனாவினை

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:56 | Best Blogger Tips

அமெரிக்கா தன் தடுப்பூசியுடன் கொரோனாவுடன் பெரும் போராட்டம் நடத்துகின்றது, அவர்கள் மருந்தும் அவர்களை தாண்டி வரவில்லை

ரஷ்ய தடுப்பூசிகள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு கொடுக்கபடவில்லை, சீன தடுப்பூசியினை அவர்களே நம்பவில்லை

பைசர் நிறுவணத்தின் கொரானா தடுப்பூசி பிரிட்டனுக்கு செல்ல கூடாது என போர்கொடி தூக்குகின்றன ஐரோப்பிய யூனியன் நாடுகள்

உலகெல்லாம் மானிட நேயம் பேசும் அவர்களின் உண்மையான சுயரூபம் இதுதான்

இன்றைய உலகில் ஒரே ஒருநாடு மட்டும்தான் கொரோனாவினை மிக அழகாக கையாண்டு வெற்றி கண்டு, கொரோனா தடுப்பு மருந்திலும் வெற்றிபெற்று உலகெல்லாம் வழங்குகின்றது

18 நாளில் மில்லியன் கணக்கான மருந்தினை அது மானிட சேவை என்ற வகையில் உலகெல்லாம் வழங்கி கொண்டிருக்கின்றது


.நா பெருமன்றம் மோடியின் இந்தியாவின் மகத்தான சேவையினை வாழ்த்தி பாராட்டி கொண்டிருக்கின்றது

உலகெல்லாம் இருந்து மருந்துக்கு கையேந்த பாரதம் அதனை அள்ளி அள்ளி கொடுத்து கொண்டிருக்கின்றது

சீனா நோய்பரப்பிய நாடு ஆனால் இந்தியா நோயில் இருந்து உலகை விடுவித்துகொண்டிருக்கும் நாடு என்ற வரிகள் உலகின் ஒவ்வொரு மூலையிலும் உச்சரிக்கபடுகின்றது


"விளக்கு வைத்தால் கொரோனா தீருமா" என பகுத்தறிவில் கேள்வி கேட்டு கிண்டல் செய்த ஒரு பயலையும் காணவில்லை

மக்களின் மிகபெரிய ஆத்மபலத்தில் தேசம் இச்சாதனையினை செய்திருக்கின்றது, ஆம் இதெல்லாம் மனோபலத்தால் நிகழ்ந்த மாபெரும் சாதனைகள்

மோடி என்பவர் இந்தியாவுக்கு மட்டுமல்ல இப்பொழுது உலகுக்கே வழிகாட்டும் விளக்காக திகழ்கின்றார், உலகம் அதை அமைதியொடு கைதட்டி ஒப்புகொள்கின்றது

கடந்த வருடம் ஏப்ரல் 3ம் தேதி பாரத தேசமெங்கும் விளக்கேற்ற சொன்னார் மோடி, தேசமும் அதை பின்பற்றி ஏற்றிவைத்து வழிபட்டது

இதோ அடுத்த ஏப்ரல் 3ம் தேதி வருவதற்குள் இந்தியாவில் இருந்து கொரோனா முற்றிலும் ஒழியும் அதைவிட முக்கியமாக உலகெல்லாம் மருந்து இங்கிருந்து செல்கின்றது

இது இந்திய திருநாட்டின் மகத்தான வெற்றி என்பதில் சந்தேகமில்லை, இதனை நிச்சயம் கொண்டாட வேண்டும், தேசத்தின் தலைமகன் சொன்னபடி தேசம் அவன் தலமையில் சாதித்தது என்பதை உலகுக்கு நிச்சயம் சொல்லத்தான் வேண்டும்

இந்த ஏப்ரல் 3ம் தேதி மாபெரும் வெற்றி தீபம் ஏற்றி நிற்க தயாராகின்றது தேசம்....


_*ஜெய் ஹிந்த்*_


நன்றி இணையம்