தமிழன் என்று சொல்லடா

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:49 | Best Blogger Tips

 


மோடியை விரும்புவர்கள் பட்டியலில் ஒடிசா முதலிடம் தமிழகம் கடைசியிடம்_

ராகுலை விரும்புவர்கள் அதே பட்டியலில் தமிழகம் முதலிடம்-

ஜம்மு காஷ்மீர், மேற்குவங்காளம் போன்ற இஸ்லாமியர்கள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களில் கூட மோடியை விரும்புவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் -

ஆனால், ஒட்டுமொத்த இந்தியாவில் இருக்கக்கூடிய கோவில்களின் எண்ணிக்கையைவிட அதிகமான எண்ணிக்கையில் கோவில்களைக் கொண்டிருக்கும் தமிழகத்தில் -

உலகின் முதல் பத்து பெரிய கோவில்களில் ஆறு கோவில்களை தன்னகத்தே கொண்டிருக்கும் தமிழகத்தில் -

264 சிவாயங்களையும், 108 வைணவ ஸ்தலங்களில் 97 அமைந்திருக்கும் தமிழகத்தில் -

முருகரும், எம்பெருமான் இறையனாரும் கட்டிக்காத்த தமிழ்ச்சங்கங்கள் வளர்த்த தமிழகத்தில்-

தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவெண்பாவை, திருமுருகாற்றுப்படை இயற்றிய தமிழகத்தில்-

ஒளவையும், திருவள்ளுவநாயணாரும் வாழ்ந்த தமிழத்தில் -

கடவுளை குறிப்பாக ஹிந்து கடவுள்களை மட்டும் மற என்றும், ஹிந்து கோவில்கள் அசிங்கமானவை என்றும், ஸ்ரீரங்கநாதரையும், சிதம்பரம் நடராஜரையும் குண்டுவைத்து தகர்ப்பேன் என்றும், அடியே கள்ளி மீனாக்ஷி உனக்கு ஏதுக்கடி வைரமூக்குத்தி என்றும், ஆண்டாள் தாயாரை தேவதாசி என்றும், கந்தர் ஷஷ்டி கவசத்தை காம புத்தகம் என்றும் இழிவு செய்தவர்களையும் -

ஊழல் மட்டுமே செய்வதை அரசியல் நோக்காமக் கொண்டு ஏழேழு தலைமுறைகளுக்கும் சொத்து சேர்த்தவர்களையும் -

ஈழத்தில் இரண்டு லட்சம் தமிழர்களை கொன்றுகுவித்தவனையும் -

தமிழக மக்கள் கொண்டாடுகிறார்கள் என்றால்?-

தன்மானத் தமிழன், உலகிற்கே நாகரீகம் கற்றுக்கொடுத்த தமிழன், கடல்கடந்து பல தேசங்களை வென்றவன் தமிழன், கங்கை வரை படையெடுத்து பல மன்னர்களை வீழ்த்திய தமிழன் -

தங்கள் வாழ்நாட்களெல்லாம் கோவில்கள் கட்டுவதையும் அவற்றைப் பாதுகாப்பதிலுமே பெருமை கொண்ட தமிழன் -

காளையார்கோவில் கோபுரத்தைக் காப்பதற்கே தங்கள் இன்னுயிர்களை இழந்த மருதிருவர் வம்சம் வந்த தமிழன் -

இன்று 20 ரூபாய் டோக்கனுக்கு சுயேட்சைக்கு வாக்களிக்கிறான், 200 ரூபாய் பேட்டாவுக்கு திருடர்களுக்கு தோள்கொடுக்கிறான் -

நகைக்கடன், கல்விக்கடன், காலைக்கடன் ரத்து என்றும், இலவச TV , இலவச மிக்ஸி என்றும் ஏமாற்றுபவர்களை நம்பி காலடியில் தவம் கிடக்கிறான் -

13 வருட முதல்வர், ஆறரை ஆண்டுகள் பிரதமர், ஒரே ஒரு ஊழல் குற்றச்சாட்டுகூட இல்லாத மோடியை எதிர்த்து -

காந்தியின் பெயரை பொய் புனையாக சூட்டி 70 வருடங்களாக நாட்டைச் சுரண்டி இன்றுவரை குடும்பத்துடன் ஜாமீனில் இருக்கும், இரண்டு லட்சம் ஈழத்தமிழர்களை கொன்ற இத்தாலிய சோனியாவையும் -

ஐம்பது வருடங்களாக தமிழகத்தைச் சுரண்டி 45 TV சேனல்களையும் தமிழகத்தின் 50% சொத்துகளையும் வைத்திருக்கும் கருணா குடும்பத்தையும் நம்புகிறான்கள் என்றால்? -

தமிழன் என்றோர் இணமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு-

தமிழன் என்று சொல்லடா -

தலைகுனிந்து நில்லடா -

தேசப்பணியில் என்றும் -

.முத்துராமலிங்கம் -