கோவிலுக்குள் செல்லும்போது மணி அடித்துவிட்டு வணங்குவது ஏன் தெரியுமா?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:10 | Best Blogger Tips
Image result for கோவிலுக்குள் செல்லும்போது மணி அடித்துவிட்டு வணங்குவது ஏன் தெரியுமா?Image result for மணி அடித்துவிட்டு வணங்குவது ஏன் தெரியுமா?
கோவிலில் அடிக்கும் மணி ஓசைக்கும், மனிதர்களின் மூளைக்கும் இடையே தொடர்பு உள்ளது என சாஸ்திரத்தில் நமது முன்னோர்கள் கூறியிருக்கின்றனர்.
கோவிலுக்கு செல்லும் அனைவரும் மணி அடிப்பது ஏன்?
பூஜை செய்யும் போது பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக உள்ள மணி ஓசையின் பின் ஒரு அறிவியல் நுண்ணறிவும் இருக்கிறது. கோவில் மணி அடித்துவிட்டு வணங்கினால், தங்களின் வேண்டுதலை கடவுள் காது கொடுத்து கேட்பார் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் அது உண்மை அல்ல.
ஆகம சாஸ்திரங்களின் படி, கோவில் மணியில் இருந்து வெளிப்படும் ஓசை எதிர்மறை சக்திகளை விரட்டி, மனதிற்கும், உடலுக்கும் நேர்மறை சக்தியை அதிகரிக்க செய்து, நல்ல ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது.
கோவில் மணியின் ஓசை மனிதனின் மூளை செயற்திறனை மேலோங்க செய்கிறது என்று அறிவியலில் ஒரு பின்னணி இருக்கிறது.
கோவில் மணியின் ஓசை தனித்துவமாக கேட்பது ஏன்?
கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியில் ஒரு தனித்துவமாக இருக்கும் அதற்கு கோவில் மணிகளில் உள்ள கேட்மியம், துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்ற உலோகங்கள் தான் காரணமாகும்.
கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியானது, மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒரு சமநிலைக்கு கொண்டு வர உதவுகின்றது.
கோவில் மணியில் இருந்து வெளிப்படும் சத்தம் உடலில் நேர்மறை ஆற்றல் மற்றும் மூளையில் செயற்திறனை அதிகரிக்கச் செய்து, விழிப்புணர்வை மேம்படுத்தி, மனதிற்கு நிறைவான அமைதி மற்றும் நிம்மதியை அளிக்கிறது.
என்றும் இறைப்பணியில் என்றும் உங்கள் அன்புள்ள
https://www.facebook.com/images/emoji.php/v8/fc6/1/16/1f6a9.png🚩🕉S.Krishna Kumar 🕉https://www.facebook.com/images/emoji.php/v8/fc6/1/16/1f6a9.png🚩
பாரத் மாதா கீ ஜெய்https://www.facebook.com/images/emoji.php/v8/fc6/1/16/1f6a9.png🚩🕉