நினைத்தது நடக்கும் வரை

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:38 | Best Blogger Tips

நினைத்தது நடக்கும் வரை
அறிவே பெரிதாகத் தெரியும் .
நினைத்தது நடக்காத வரை
நம்பிக்கையே பெரிதாகத்
தெரியும்!
எதிர்பாராதது நடந்து விட்டால் தெய்வம் பெரிதாகத் தெரியும் !
எதிர்பார்த்தது இடறப் பட்டால் ஞானம் பெரிதாகத் தெரியும் !
திறமை செயல் இழந்து போகும் போது ஊழ்வினை பெரிதாகத் தெரியும் !
பெரிதாகத் தெரிந்தது எல்லாமே சிறிதாகும் போது உன்னை உனக்கு தெரியும் !
உன்னை உனக்குள் தெரியும் போது கடவுள் உன்னிடம் பெரிதாகத் தெரிவார்!அன்பே சிவம்.

 நன்றி இணையம்